Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

நினைத்தால் நடக்கும்

$
0
0

raceபேசு மனமே பேசு / அத்தியாயம் 19

எந்த ஒரு விஷயத்திலாவது ‘எப்படியும் முடிப்பேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, காரியத்தை முடித்திருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால், ‘தன்னோடு பேசுதல்’ முறையை உங்களது பாணியில் நடத்து வெற்றி கண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதேபோல ‘குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து, பயந்து, தயங்கி ‘எங்கே நடக்கப் போகிறது?’ என்று தொடர்ந்து நினைத்து இருக்கிறீர்களா? முடிவில் ‘எதிர்பார்த்தது’ போலவே, நடக்காமல் போயிருக்கிறதா? இவ்வாறு நிகழ்ந்து இருந்தால், ‘தன்னோடு பேசுதலை’ எதிர்மறையாகப் பயன்படுத்தி, அதற்கான விளைவை சந்தித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஒரு ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டும் போட்டியாளர் வேலரி புரூமெல் கலந்து கொண்டார். அப்போதைய சோவியத் ரஷ்ய நாட்டின் சார்பில் அவர் கலந்து கொண்டார். இத்தாலியில் நடந்த அந்தப் போட்டியில், நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. பத்திரிகைகள், பார்வையாளர்கள், விளையாட்டு நிபுணர்கள் ஆகிய அனைவராலும்  எதிர்பார்க்கப்பட்ட வீரர் அமெரிக்காவின் நிக் ஜேம்ஸ்.

சூழ்நிலை புரூமெல்லிக்குக்கு எதிராக இருந்த விதத்தை அவரது வார்த்தைகளில் குறிப்பிடுவதனால், ‘இத்தாலியப் பத்திரிகைகள், போட்டி நடக்க வேண்டிய அன்று காலையில், நிக் ஜேம்ஸின் படத்தை மட்டுமே தாங்கி வந்தன.’ இது போதாதென்று நிக் ஜேம்ஸ் பேட்டியின்போது, ‘எனக்குரிய சாம்பியன் பட்டத்துக்கான தங்கப் பதக்கத்தை எடுத்துச் செல்லவே வந்தேன்’ என்று நம்பிக்கை பொங்க, உற்சாகமாகக் கூறியிருந்தார்.

போட்டி ஆரம்பித்தது. ஆரம்பித்தில் தாண்ட வேண்டிய உயரம் 203 செ.மீ.யில் துவங்கியது. பிறகு 209 ஆக உயர்த்தப்பட்டது. புரூமெல் தாண்டிய இரு சமயங்களிலும் கம்பம் விழுந்தது. ‘எனக்குள் அச்சம் பரவியது. யாரோ என் நெற்றியில் துப்பாக்கி வைத்திருப்பது போல உணர்ந்தேன். ஏதும் தோன்றாத நிலையில் கம்பத்தையே பார்த்துக் கொண்டிந்தேன்’ என்று புரூமெல் அப்போதைய தன் நிலையை பின்னாளில் விவரித்தார். இந்த பயம் அடிப்படையில்லாதது என்று அப்போதைய சூழ்நிலையை வைத்துச் சொல்ல முடியாது.

சோவியத் ரஷ்யாவை ஆண்டது கம்யூனிஸ்ட் கட்சி. அப்போதைய நிலவரப்படி, இது போன்ற விளையாட்டில் சந்திக்கும் தோல்விகள்கூட, நாட்டுக்கு செய்யும் துரோகங்களாக, மிக எளிதில் உருவகப்படுத்தப்படும் நிலை இருந்தது. சம்பந்தப்பட்ட வீரர் மேல், அரசின் சந்தேகம் விழுமானால், அவர் தன்னைப் பாதுகாக்க பத்திரிக்கை, நீதிமன்றம் என்று போக வழி இருக்கவில்லை. மாறாக, அவமானம் என்று அரசு முடிவு செய்யுமானால், தண்டனை நிச்சயம். இதையும் எண்ணியே வேலரி புரூமெல் அச்சத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

புரூமெல் என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் ஸ்தம்பித்து நின்றபோது, ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்டே அவரிடம் வந்து, ‘ஏதும் செயல்படாமல் இருக்காதே, வேகமாக வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்’ என்று ஆலோசனை கூறினார். இந்த உடற்பயிற்சியால், உடலின், மனத்தின் இயக்கங்கள் உயிர் பெற்றன. திடீரென்று தனக்குள் (பேசி) சொல்லிக்கொண்டார் புரூமெல். ‘மாட்டேன் விடமாட்டேன்’, ‘ஜெயித்தே தீருவேன்’ இந்த வேகத்திலேயே இரண்டாவது முறை ஓடித் தாண்டினார். இம்முறை, முன்பை விட எளிதாகத் தாண்ட முடிந்தாலும், கடைசி நேரத்தில், உடலில் கம்பம் பட்டு விழுந்தது.

அதே சமயம் நிக் ஜேம்ஸ், முதல் முயற்சியாக ஓடி வந்து தாண்டினார். முடியாமல் கம்பத்தோடு கீழே விழுந்தார். கோபத்துடன் தன்னையே திட்டிக் கொண்டு (பேசிக்கொண்டு) கைகளை உதறி, மிகுந்த எரிச்சலோடு அப்பால் சென்றார். ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்சேவின் முறை அடுத்ததாக வந்தது. அவர் அமைதியாக ஒரு நிமிடம் நின்று, நிதானப்படுத்திக் கொண்டு பின்னர் ஓடி வந்து தாண்டினார். அவர் தாண்டி விழுந்தவுடன், கம்பம் சிறிது நேரம் நடுங்கி, ஆனால் விழாமல் நின்றது. புரூமெல் யாரைக் கண்டு பயந்தாரோ, அந்த நிக் ஜேம்ஸின் முயற்சி இரண்டாவது முறையும் தோல்வியில் முடிந்தது.

இதைப் பார்த்த புரூமெல்லுக்கு, அமெரிக்க வீரர் போட்டியாளராகத் தெரியவில்லை. நிக் ஜேம்ஸ் தனது ஆர்வத்தை இழந்து விட்டதுபோல தோன்றினார். அவர் தன்னையே நொந்து கொள்வதும், ஆத்திரப்பட்டுக் கொண்டு முணுமுணுப்பதும்  அவரது முயற்சிகளை வீணாக்கின. புரூமெல்லின் முறை வந்தது.

நான் பயிற்சியின்போது பெற்ற அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை ஒருமுறை மனத்துக்குள் சொல்லிப் பார்த்தேன். ‘கால்களை முழுமையாகப் பயன்படுத்துவேன். சரியான சமயத்தில் உடலை மேலே எடுத்து எறிவேன்’ என்று புரூமெல், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு (தன்னோடு பேசிக்கொண்டு) ஓடி வந்து தாண்டினார். அவரது சகாவான விட்சேவுக்கு தங்கப் பதக்கமும், புரூமெல்லுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

சரியான சமயத்தில் தேவையான விதத்தில், ‘தன்னோடு பேசுதலை’ நிகழ்த்தினால், நினைத்ததை நடத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஒரு உதாரணம் தான் ரஷ்ய வீரர் வேலரி புரூமெல். அவருக்கான சூழ்நிலை விளையாட்டு. ஆனால் அதில் இருந்த பிரச்னைகள், சவால்கள் ஆகியன, சாதாரணமானவர்களின் பிரச்னைகளை ஒட்டியதுதான்.

வேலை செய்யும் இடத்தில், குறிப்பிட்ட நபரால் பெரும் பிரச்னை. என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த சமயத்தில், ‘என்ன செய்தாலும் அவன்தான் ஜெயிக்கப் போகிறான்’ என்கிற ரீதியிலான அணுகுமுறை எதிர்மறை அணுகுமுறையைச் சார்ந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், எதிர்மறை அபிப்பிராயங்களால், பிரச்னை தீராது. இது போன்ற சிந்தனைகளால் (தன்னோடு பேசுதலால்) நினைத்தது போலவே நடக்கும். அதாவது ‘காரியம் நடக்காது, நஷ்டம் ஏற்படும்’.

அதே போல ‘இன்னைக்கு எழுந்ததிலிருந்து நேரமே சரியில்லை’, ‘இருக்கிற வேலையைச் செய்யறத்துக்கே நேரம் போதவில்லை. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலை’ என்றோ…
‘என்னால, அவனை/அவளை/நண்பனை/தோழியை பொறுத்துக்கொள்ளவே முடியல. பேசவும் மனசில்லை. பேசாமல் இருக்கவும் முடியல’ என்றோ… இப்படியான சொற்றொடர்களை தொடர்ந்து சொல்லிக் கொள்வதன் மூலம், நமக்குப் பிடிக்காததை, அது நடந்து  விடுவதற்குச் சாதகமாக, நம்மையும் அறியாமல் ‘உதவி’ செய்கிறோம். இவற்றைச் சரியான விதத்தில் மாற்றி யோசித்தால், அதாவது பேசிக்கொண்டால் விளைவுகள் நல்லதாக இருக்கும்.

‘காலையில் எழுந்ததிலிருந்து என்னால், சவால்களைச் சரியாக சமாளித்து வெற்றி பெற முடிகிறது’ ‘இன்றைக்கு நேரமே சரியில்லை’ என்பதற்குப் பதிலாக, ‘இன்றைக்கு எல்லாமே நன்றாக இருந்தது. பிரச்னைகளைச் சமாளித்த விதம் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. நாளைக்கு இன்னும் நன்றாக இருக்கும்’

இவ்வாறெல்லாம் மாற்றிச் சொல்வதன் மூலம், இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, பிரச்னைகளை ஒதுக்குவது, மூடி மறைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதாக அர்த்தமாகாது. இதன் நோக்கம், பிரச்னைகளை உங்களுக்கு மேலே, உயரத்தில் நிறுத்திப் பார்ப்பதற்குப் பதில், உங்களை மேலே, உயரே நிறுத்திக் கொள்கிறீர்கள் அவ்வளவுதான். இவ்வாறு செய்தால்தான் நினைப்பதை நடத்திக்கொள்ள முடியும்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!