Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all 405 articles
Browse latest View live

பொலிவார் : விடுதலை வீரன்

$
0
0

bolivarபுரட்சி / அத்தியாயம் 15

தன் பயணங்களை முடித்துக்கொண்டு வெனிசூலா திரும்பியபோது இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டிருந்ததை பொலிவார் கண்டுகொண்டார். ஒரு பிரிவினர் ஸ்பெயினை ஆதரித்தனர். இன்னொரு பிரிவினர் ஸ்பெயினிடம் இருந்து விடுபடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சிகளைத் தொகுத்துக்கொண்டு ஸ்பெயினிடம் இருந்து வெனிசூலாவை விடுவிக்க செபாஸ்டியன் ஃபிரான்சிஸ்கோ மிராண்டா என்னும் ராணுவ ஜெனரல் ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் வெனிசூலாவின் வடக்குக் கரையை முற்றுகையிடும்போது அவர் தோற்கடிக்கப்பட்டார். ஜேம்ஸ் மாடிசன், தாமஸ் ஜெஃபர்சன் போன்ற அமெரிக்க அதிபர்களின் நண்பராக இருந்தவர் மிராண்டா. பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு ஜெனரலாகப் பங்கெடுத்தவர்.

லத்தின் அமெரிக்காவில் பரவிய புரட்சி அலைக்கு 1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ஓர் முக்கிய உந்துதலாகத் திகழ்ந்தது. இன்னொரு புரட்சி எங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் தீர்மானமாக இருந்த சமயம் அது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு உலகின் முக்கியச் சக்திகள் அனைத்துக்கும் இது ஒன்றே நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கை உணர்வையும்மீறி புரட்சி அலைகள் பரவின. அரசாங்கங்களின் செயலற்ற தன்மையை 1815க்குப் பிறகான தலைமுறை தீர்மானமான முறையில் வெளிப்படுத்தியது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘ஐரோப்பாவிலும் சரி உலகளவிலும் சரி, அடுத்தடுத்து பல இடங்களில் இவ்வளவு புரட்சிகள் நடைபெற்றது இதுவே முதல் முறை.’

சூழலையும் சூழலின் தேவையையும் புரிந்துகொண்ட பொலிவார் லத்தின் அமெரிக்காவின் விடுதலை ராணுவப் பாதையில் மட்டுமே சாத்தியப்படும் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தார். ஸ்பெயினின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து முதல்முறையாக பொலிவார் குரல் கொடுத்தபோது அவர் மேல்தட்டு கிரியோல்களின் நலன்களை மட்டுமே பிரதிபலித்தார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஸ்பெயினிடம் இருந்து விடுபடுவதுதான் நமக்கு லாபகரமானது என்று அவர் கணக்குப் போட்டார். இதே எண்ணத்தோடுதான் 1806ல் கிளர்ச்சியாளர்களின் ஒரு சிறு படையுடன் பொலிவார் இணைந்துகொண்டார்.

1808ம் ஆண்டு நெப்போலியன் ஸ்பெயின்மீது படையெடுத்து அரசர் ஏழாம் ஃபெர்டினாண்டைக் கைது செய்தபோது அதன் தாக்கம் வெனிசூலாவிலும் எதிரொலித்தது. தன்னையே பாதுகாத்துக்கொள்ள இயலாத ஒரு நாட்டிடம் இனியும் எதற்காக நாம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும்? விரக்தி, கோபம், வெறுப்பு அனைத்தும் ஒன்று திரண்டு உருசேர்ந்தன. ஸ்பெயினும் ஸ்பெயினால் நியமிக்கப்பட்ட வெனிசூலா ஜெனரலும் பலகீனமாக இருந்த தருணத்தை கிளர்ச்சியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். 19 ஏப்ரல் 1810 அன்று வெனிசூலா தாற்காலிக சுதந்தரப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இதன் பொருள், ஃபெர்டினாண்டை இன்னமும் அவர்கள் தங்கள் அரசாரகவே கருதினார்கள். ஆனால், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம் என்றனர்.

பொலிவார் விரும்பியது முழுமையான, நிபந்தனையற்ற சுதந்தரத்தை. பொலிவாரின் கருத்து பெரும்பாலானோரின் கருத்தாக மாறத் தொடங்கியபோது 5 ஜூலை 1811 அன்று முழுமையான சுதந்தரத்தை வெனிசூலா அதிகாரபூர்வமாக அறிவித்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன என்று பொலிவார் நினைத்த தருணத்தில் முடியாட்சிக்கு ஆதரவான குழுவினர் புதிதாக உருவான சுதந்தர அலையை அடக்கி ஒடுக்கினர். கிளர்ச்சியாளர்கள் வேட்டையாடப்பட்டனர். பொலிவார் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பிச்சென்றார்.

ஆனால் வரித்துக்கொண்ட லட்சியத்தில் இருந்த அவர் பின்வாங்கவில்லை. 1812ம் ஆண்டு நியுவா கிரானடா (புதிய ஸ்பெயின்) என்றழைக்கப்பட்ட கொலம்பியாவுக்கு வந்த பொலிவார் அங்கே ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார். உருவான படைக்கு அவரே தலைமை தாங்கவும் முன்வந்தார். பொலிவாருக்கு இப்போது சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்திருந்தன. படையை உருவாக்கினோம், போர் தொடுத்தோம், வென்றோம், சுதந்தரம் பெற்றோம் என்று எளிமையான நேர் வரிசையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கிவிடமுடியாது. துன்பங்களையும் தொடர் தோல்விகளையும் கடந்து தீர்மானமாகவும் திடமாகவும் போரிடவேண்டும். எது வந்தாலும், என்ன நடந்தாலும் ஓரடிகூடப் பின்னால் நகராமல், உயிர் போனால் பரவாயில்லை என்று உறுதிபூண்டு போராடினால் மட்டுமே லட்சியத்தை நெருங்கமுடியும். ஏனென்றால், சுதந்தரம் விலை மதிப்பற்றது. அதைச் சுலபத்தில் பெற்றுவிடமுடியாது.

பொலிவார் தனது நீண்ட பயணத்தைத் தொடங்கினார். வெனிசூலாவில் இருந்து பெருவுக்குப் பல ஆயிரம் மைல்களை குதிரையில் கடந்து செல்லவேண்டியிருந்தது. மீண்டும் பெருவில் இருந்து வெனிசூலா. மலைகளையும் கானகங்களையும் கடும் குளிரையும் கடக்கவேண்டும். ஓய்வு, உறக்கமின்றி குதிரைமீதே பழியாகக் கிடக்கவேண்டும். ஆனால் இத்தனைக்கு இடையில் பொலிவாருக்குப் படிக்கவும் சிந்திக்கவும் நேரம் கிடைத்தது ஆச்சரியமளிக்கக்கூடியது. முழுமுற்றான ராணுவப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதிலும், ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் பிரெஞ்சுத் தத்துவ வரலாறு குறித்தும் விடாமல் அவரால் படிக்கமுடிந்தது.

பொலிவாரின் படையில் அப்போது 200 வீரர்கள் இருந்தனர். ஸ்பானிஷ் படைகளோடு ஒப்பிட்டால் இது மிக மிகச் சிறிய எண்ணிக்கை. இருந்தாலும் பொலிவாரின் தலைமை இந்தப் படையை பல மடங்கு பலம் கொண்ட வலிமையான சக்தியாக மாற்றியது. அவ்வப்போது கிடைத்த சிறு சிறு வெற்றிகள் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்தன. இந்த வெற்றிகள் தந்த துணிச்சலில் மேலும் மூர்க்கத்துடன் அவர்கள் ஸ்பானியப் படைகளை எதிர்கொண்டு போரிட்டனர். பொலிவாரின் பெயரும் அவருடைய புகழும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. ஒரு முறை அவரும் அவருடைய சிறு படையும் 90 நாள்கள் பயணம் மேற்கொண்டு, 700 மைல்களைக் கடந்து, ஆறு யுத்தங்களில் பங்கேற்றார்கள். ராயல் படையின் ஆறு பிரிவுகளை பொலிவாரின் படைகள் அடித்து வீழ்த்தின. ஆகஸ்ட் 1813ல் பொலிவார் தனது பிறந்த மண்ணான காரகாஸுக்குள் நுழைந்தார். ஆரவாரத்துடன் அவரை வரவேற்ற மக்கள், ‘லிபரேட்டர்’ என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கினர்.

ஒரு கட்டத்தில், வெனிசூலாவும் நியுவா கிரானடாவும் பொலிவாரின் வசம் வந்து சேர்ந்தன. ஆனால் இந்த முறையும் சுதந்தரம் நீடிக்கவில்லை. 1815ல் பொலிவார் தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பியோடினார். மீண்டும் தன் படையைக் கட்டியெழுப்பினார். மீண்டும் போர்ப் பயிற்சிகள். மீண்டும் வெனிசூலாவுக்கு ஒரு பயணம். மீண்டும் ஒரு வெற்றி. கொண்டாடுவதற்குள் முடியாட்சிக்கு ஆதரவான ராணுவம் சீறிவரும். பொலிவார் தோற்கடிக்கப்படுவார். மீண்டும் தப்பியோட்டம்.

இந்தத் தொடர் படையெடுப்புகளும் தொடர் வெற்றிகளும் தோல்விகளும் பொலிவாரை மேலும் மேலும் உறுதியானவராக வளர்த்தெடுத்தன. கிரியோல்களின் நலன்களை முன்னிறுத்தி தன் போராட்டத்தைத் தொடங்கிய பொலிவார் இப்போது பரவலான மக்கள் நலன் நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருந்தார். முடியாட்சியிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல நோக்கம். காலனியாதிக்கத்தில் இருந்தும் நாடுகள் விடுபடவேண்டும். மட்டுமின்றி, விடுதலையோடு சமத்துவமும் தோன்றவேண்டும் என்று தன் லட்சியத்தை இப்போது விரிவாக்கிக்கொண்டிருந்தார் பொலிவார்.

வெறும் வார்த்தைகளுடன்கூடிய சம்பிரதாயமான முறையில் அல்ல, சட்டரீதியிலான சமத்துவத்தையே பொலிவார் முன்வைத்தார் என்கிறார் ஜான் லிஞ்ச். பொலிவார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஒருவனுடைய வர்க்கப் பின்னணி என்னவாக இருந்தாலும் சரி, அவனுடைய நிறமோ நம்பிக்கைகளோ எப்படியிருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்.’ பொலிவாரை ஒரு ஜனநாயகவாதி என்று கொள்ளமுடியும். அரசாங்கம் மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாடு கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் பொலிவார் விரும்பினார். ‘பெரும்பான்மை மக்களே ஆள்வதற்குத் தகுதியானவர்கள். அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் எந்தவொரு சர்வாதிகாரியும் ஆதிக்கவாதியாகவும் சுரண்டல்வாதியாகவும் கருதப்படுவார்.’

தென் அமெரிக்காவை ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக பொலிவார் உணர்ந்திருந்தார். தென் அமெரிக்கா இன்னமும் முழுமையான ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நடைமுறை உண்மைகளுக்கு ஏற்ப பொலிவார் தன் சிந்தனைகளிலும் திட்டங்களிலும் மாற்றம் செய்துகொண்டே இருந்தார். ‘பொலிவாருக்குள்ளே ஒரு யதார்த்தவாதியும் ஒரு கனவுலகவாதியும் பின்னிப் பிணைந்திருந்தான்’ என்கிறார் ஜான் லிஞ்ச்.

சுதந்தரத்துக்காகப் போராடிய ஒரே காரணத்துக்காக மக்களைச் சிறைபிடித்து கொன்றொழித்த எதிரிகளை பொலிவார் இரக்கமற்ற முறையில் வீழ்த்தினார். அந்த வகையில், நாடு பிடிப்பதற்காகப் போரிட்ட நெப்போலியனிடம் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகப் போரிட்ட பொலிவார் துல்லியமாக வேறுபட்டு நிற்கிறார். ஸ்பெயினை எதிர்த்து வேறு நாகரிகமான முறையில் போரிடுவது சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்தபிறகே பொலிவார் தன் குதிரைமீது ஆயுதத்துடன் ஏறி அமர்ந்தார்.

15 ஜூன் 1813 அன்று ட்ருஜிலோ என்னுமிடத்தில் பொலிவார் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ‘அமெரிக்காவின் (லத்தின் அமெரிக்காவின்) சுதந்தரத்துக்காகக் குரல் கொடுக்காத ஸ்பானியர்கள் எதிரிகளாக கருதப்படுவார்கள். தவறிழைக்காதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் எதிரிகள்தாம். அதே சமயம், தவறுகள் இழைத்திருந்தாலும் அமெரிக்கர்கள் எதிரிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.’ இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. பொலிவாருக்கு எதிரான படையிலும்கூட பெருமளவில் அமெரிக்கர்கள் திரண்டிருந்தனர். உதாரணத்துக்கு வெனிசூலாவிலேயே முடியாட்சியையும் ஸ்பெயினையும் ஆதரிக்கும் அமெரிக்கர்கள் இருந்தனர். யுத்த நியாயத்தின்படி, முடியாட்சிக்கு எதிரான யுத்தம் மூளும்போது அவர்களும் எதிரிகளாகத்தான் கருதப்படவேண்டும். ஆனால் பொலிவாரால் தன் சொந்த மக்களுக்கு எதிராகப் போரிட முடியவில்லை. அவர்கள் தவறான முடிவை எடுத்திருந்தபோதும் வரலாற்றுத் தவறுகள் இழைத்த போதிலும் அவர்கள்மீது ஆயுதத்தைத் திருப்ப முடியவில்லை. எனவே ட்ருஜிலோ பிரகடனம் ஸ்பானியார்டுகளையும் அமெரிக்கர்களையும் வகைப்படுத்தி பிரித்துக் காட்டியது. படை வீரர்கள் யாரை, எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தது. நடப்பது ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்குமான யுத்தம் என்று சுட்டிக்காட்டியது.

முறையாக பயிற்சியளிக்கப்பட்ட படை வீரர்கள், கெரில்லா வீரர்கள் ஆகிய இருவரோடும் இணைந்து பணியாற்றினார் பொலிவார். இவர்கள் சில சமயம் தமக்குள்ளும் மோதிக்கொண்டனர். அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே திசையில் செலுத்துவது கடினமான காரியம். பொலிவார் ஒரே சமயத்தில் படை வீரராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்ததால் இந்த அசாத்தியமான காரியம் சாத்தியப்பட்டது. இந்த இடத்தில் ஜான் லிஞ்சின் வர்ணனை பொருத்தமானது. ‘பொலிவார் அதிகாரத்தையும் சுதந்தரத்தையும் ஒரே சமயத்தில் கோரினார். அவர் ஆட்சி புரிய விரும்பினார். மற்றொரு பக்கம் விடுவிக்கவும் விரும்பினார். ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காகவே அவர் போரிடவேண்டியிருந்தது.’

அந்த வகையில், போர்க்களத்தைக் கடந்தும் பொலிவாரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன.

(அடுத்த பகுதி : பொலிவார் : புரட்சி வீரன்)

Share/Bookmark


எழுத்தும் பேச்சும்

$
0
0

Anne Franksபேசு மனமே பேசு / அத்தியாயம் 16

தன்னோடு பேசுதலின் அடுத்த வகை பேச்சையும் தாண்டியது. சிலருக்கு, ஒரே விஷயத்தைக் குறித்து, கோர்வையாக நினைக்கவோ, பேசவோ முடியாமல் போகலாம். ஆனால் உட்கார்ந்து எழுதுவது சாத்தியமான விஷயம்தான். நமக்குத் தேவையான அம்சங்களில் மாற்றம் காண விரும்பும் விஷயங்களைப் பற்றி தன்னோடு பேசுதல் முறையில் எவ்வாறு தயார் செய்கிறோம்? விஷயங்களைக் குறித்து, வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்து மனத்தில் பதித்துக் கொள்கிறோம். அதே போலவே எழுதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும், தனித்தனியாக நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதிக் கொள்ள வேண்டும். அதை தினமும் படிப்பதன் மூலம் நிச்சயம் நன்மை கிடைக்கும் என்பதை நீங்களே அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்.

பேச்சுக்கு இருக்கும் சக்தி, நிச்சயமாக எழுத்துக்கும் இருக்கிறது. அதாவது, அதற்கு மதிப்பளித்துப் படித்தோம் என்றால் அதற்கான விளைவு மனத்திலும் செயலிலும் உருவாகும். நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் இதுபோல எழுதிப் பார்த்துப் படிப்பது, அது போலவே நடந்து கொள்ள வைக்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் படையினரால் வேட்டையாடப்பட்ட எண்ணற்ற யூதர் குடும்பங்களில் பிராங்க் என்பவரது குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பம் மட்டும் எதனால், பல வருடங்களுக்கு பின்னரும் நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது? இதற்கும் காரணம், அந்தக் குடும்பத்திலேயே வயது சிறியவளான, ஆனி பிராங்க்தான். 7 – 8 வயதிருந்த அந்தச் சிறுமியின் குடும்பத்தினரும், மற்றும் சிலரும் தாங்கள் வசித்து வந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான ஜெர்மானியரால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களால் எந்த நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்தனர். இதே பயத்துடன், அவர்கள் இரண்டு வருடங்களாக மனத்தில் மிகுந்த நடுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். ஏழே வயதுள்ள சிறுமி எவ்வளவு உயிரோட்டமாக, சுறுசுறுப்பாக இருப்பாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், உயிருக்குப் பயந்து ஒரே அறையில் இரண்டு வருடங்கள் கழிக்க நேர்ந்தது ஆனிக்கு எந்த அளவுக்கு கடினமாக இருந்திருக்கும்?

தன் பொழுதைப் போக்க ஆனி டைரி எழுதி வந்தாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், மனத்தில் உற்சாகத்தை வளர்த்துக்கொண்டாள். இந்தத் தன்மை அவளது எழுத்துக்களில் வெளிப்பட்டது. அதில் ‘போர் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு முடிந்த பின், நான் இன்னும் உற்சாகமாக இருப்பேன்.’ என்றும், இன்னும் ஒவ்வொரு நாளும், ‘இன்றைக்கு நாள் நன்றாக விடிந்திருக்கிறது. மனத்தில் உற்சாகம் வருகிறது’ என்றெல்லாம் தினமும் எழுதி வந்திருக்கிறாள். அவளது டைரிக் குறிப்புகள் முழுவதுமே, மனத்துக்கு சந்தோஷத்தை அளிக்கும் விஷயங்களாக இருந்தன. இது தவிர, அவள் சேகரித்த சிறு, சிறு படங்கள் ஆகியவை கூட சிறு பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களாகவே இருந்தன.

உண்மை நிலை எப்படி இருந்தது என்றால், அவள் வசித்த அறை மிகவும் சிறியது. அதில் அவளுக்கான இடம் என்று எதுவுமே இல்லை. பெரியவர்கள் எப்போதுமே, எந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவோமோ என்ற விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டும், பயந்து கொண்டும் இருந்தனர். (முடிவும் அவ்வாறேதான் இருந்தது.) இந்த பயத்தை, ஆனி தனது மனத்துக்குள் பரவ விடாமல் இருந்தாள். இதைச் செய்ய முடிந்ததற்கும் காரணம், தன்னோடு பேசுதலில், எழுத்து வடிவ முறையைக் கையாண்டதுதான். இதன் மூலமாக உயிரோடு ஒளிந்திருந்த இரண்டு வருடங்களையும் அவள் உற்சாகமாகக் கழித்திருக்கிறாள். இருக்கக்கூடிய சூழ்நிலை, எப்படிப்பட்டதாக இருந்தாலும், நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நாம்தான் என்பதை ஆனி பிராங்க் வாழ்ந்து காட்டி விட்டுப் போயிருக்கிறாள்.

இது மட்டுமின்றி, எழுத்துகளுக்கு நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதையே ஒரு விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து ஒரு துறையாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனத்தில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள்.

அந்தந்த உணர்ச்சிகளின் பிடியில் மனம் இருக்கும்போது, நமது உடல் தசைகள், விரல்களின் அழுத்தம், இறுக்கம் ஆகியன எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பயிற்சிதான் என்றாலும் அந்த சமயத்திலும் கூட, உடல் இயக்கம், மனதோடு எந்த அளவுக்கு ஒன்றியிருக்கிறது என்பதை, நன்கு கவனித்தால் புரிந்து கொள்வீர்கள்.

எந்த ஒரு விஷயத்தில் குழப்பமாக இருந்தாலும், அதைக் குறித்து ஒரு முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். குழம்பிய நிலையில், எதை முன்னால் செய்வது, அதற்கு அடுத்த நிலையில் சந்திக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை பற்றிய பட்டியல்தான், முன்னுரிமை செயல் பட்டியல். இதை மானசீகமாகச் செய்ய முடியும். அதையே இன்னும் சுலபமாக மாற்றுவதற்கு எழுதியும் கூடப் பார்க்கலாம். மனத்திலே கோர்வையாக சிந்தனை உருவாக, எழுதிப் பார்த்துக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும்.

காலன் லிச் ஃபீல்ட் என்ற அமெரிக்க வர்த்தகர் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். 1942ம் ஆண்டில், அவர் இருந்த ஷாங்காய் பகுதியில், ஜப்பானியர்கள், படையெடுத்து உள்ளே வந்தனர். அந்தப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும், ஜப்பானியர்களின் பெயரில் மாற்றும் வேலையில் இறங்கினர். கையாண்ட சொத்துக்களை, ஜப்பானியர்கள் பெயரில் மாற்றுவதற்கு, அவர் உதவி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி அவ்வாறே செய்தார். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு அமைப்பின் பங்குப் பத்திரங்கள் இருந்தன. அவற்றுக்கும், ஷாங்காய்க்கும் தொடர்பு இல்லாததால், அதை மட்டும் காலன் லிச் ஃபீல்ட் கணக்கில் கொண்டு வரவில்லை. இதனால் ஜப்பானியர்களின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதை அவர்கள் கண்டுபிடித்தால் என்னவாகும் என்பது பற்றிய அச்சமும், பயமும் அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தன. அவர் எதிர்பார்த்தது மாதிரியே உண்மை கண்டறியப்பட்டது. அவரை எப்போது வேண்டுமானாலும், சித்திரவதை கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை எழுந்தது.

அந்த சமயத்தில் என்ன செய்வது என்பது பற்றி என்ன யோசித்தும், சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ‘அவர் ஒரு காகிதத்தை எடுத்து, தனது மனதிலுள்ளவற்றை தெளிவாக எழுதினார். எதைப் பற்றி நான் கவலைப் படுகிறேன்? இது பற்றி என்னால் என்ன செய்ய முடியும்?’; முதல் கேள்விக்கான பதில், ‘என்னை நாளைக் காலையில் சித்திரவதைக் கூடத்துக்கு அனுப்புவார்கள். அதுபற்றி பயப்படுகிறேன்.’ – இரண்டாவது கேள்வி – இது பற்றி என்ன செய்ய முடியும்? இதற்கான பதில்கள், ‘நடந்ததைக் குறித்து ராணுவ அதிகாரிக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால் மொழியிலிருந்து பல பிரச்னைகள். அதனால் முடியாது. தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் எந்த வகையிலும் அது சாத்தியம் இல்லை. பிடித்தவுடன் கேள்வி கேட்காமல் சுட்டுக் கொன்று விடுவார்கள். மூன்றாவதாக நாளைக்கு அலுவலகம் போகாமல் இருந்து விடுவது. ஆனால், அவர்களே தேடி வந்து பிடித்தால் நிலைமை மோசமாகிவிடும். நான்காவது, எதுவுமே தெரியாததுபோல நாளை (திங்கட்கிழமை) அலுவலகம் செல்லலாம். அப்போது கேள்வி எழுந்தால் நமது நிலைப்பாட்டைச் சொல்லலாம். அதுவுமின்றி, நடுவில் உள்ள இரண்டு நாட்களில் தாங்கள் கண்டுபிடித்தது பற்றிய சந்தோஷம், எனக்குத் தெரியாது என்ற எண்ணம் ஆகியன அவர்களை ஏதோ ஒரு விதத்தில் அமைதிப் படுத்தியிருக்கலாம்.

இவற்றை எழுதிய காலன் லிச் ஃபீல்ட், நான்காவது வழியைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறே செயல்படுத்தினார். அவர் எதிர்பார்த்தப்படியே நடந்தது. இது சாத்தியமானதிற்குக் காரணம், அவரது சிந்திக்கும் திறன், நல்லநேரம், தைரியம் ஆகியன மட்டும் காரணம் அல்ல. அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் எடுக்கப்பட்ட தெளிவான முடிவை, அவர் ஏற்று செயல்படுத்தியதுதான். (ஆபத்தான சந்தர்ப்பங்களில் மட்டும் என்றில்லாமல், நமது திட்டமிடுதலை, ஒவ்வொரு நாளும் எப்படி அமைய வேண்டும் என்ற விருப்பங்களையும் தெளிவாக எழுதி, அதைப் பிடித்து (நமக்குள் பேசி) ஏற்றுக்கொண்டால், அவ்வாறே நடப்பதற்கு சுலபமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள். வெற்றி கிடைக்கும்.

0

Share/Bookmark

‘காணி நிலம்’ இயக்குநருடன் ஒரு நேர்காணல் – I

$
0
0

1267196595_76696696_3-decorative-itemsmodern-paintings-in-vinylflex-Art-Collectiblesஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 10

உயிர் பிரிவதற்குள் ஒரு காணி நிலத்துக்காவது சொந்தக்காரர் ஆகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன்  வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் சின்னத்தாயி.  அது அவருடைய அப்பாவுக்கு கனவாகவே இருந்துவிட்ட லட்சியம். அப்பாவின் முன்னோர்களோ நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று. உயிர் பிரியும் தறுவாயில் அப்பா வெளிப்படுத்திய முதலும் கடைசியுமான அந்த ஆசையை அடைவதற்கு சின்னத்தாயி என்னவெல்லாம் தடைகளை எதிர்கொள்கிறார். அடைந்த பிறகு என்ன ஆகிறது என மூன்று மணி நேரத்துக்குள் சமூகத்தின் அடித்தட்டில் வாழ்ந்த மற்றும் இப்போதும் வாழந்துவரும் ஒரு சாதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையைத் துல்லியமாக, நேர்மையாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.

அதனால்தானோ என்னவோ இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள்.  எதிர்ப்புகள்.

சர்வதேசப் படத்தைஎடுக்க வேண்டுமென்றால், சர்வதேசப் படங்களைக் காப்பி அடித்தால் பொதுமே என்ற உயரிய புரிதலுடனும், வர்றாய்ங்க… போறாய்ங்க என்று பேசிவிட்டால் மதுரை… லே லே என்று சேர்த்துக்கொண்டுவிட்டால் நெல்லை கிராமிய மணங்கள் கமழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடனும் இயங்கிவரும் தமிழ்த் திரையுலகில் கொஞ்சம் கூடுதல் கலை அறிவுடன் செயல்படும் இந்தப் படத்தின் இயக்குநர் ஜே-யுடன் அவருடைய அடுத்த படத்துக்கான ஷூட்டிங் நடக்கும் கிராமத்தில் தமிழ்பேப்பருக்காக எடுத்த பேட்டி.

ஷூட்டிங் நடக்கறதா சொல்றீங்க அதுக்கான எந்த பரபரப்புமே காணுமே?

ஒரு எழுத்தாளர் எழுதும்போது கூச்சல் போட்டுக் கொண்டா எழுதுகிறார்? ஒரு சிற்பி சிலை வடிக்குபோது ஆரவாரம் செய்து கொண்டா செதுக்குகிறார்?

ஆனால், திரைப்படம் என்பது ஒரு வகையில் அதிக ஆட்களும் தொழில்நுட்பமும் தேவைப்படும் ஒரு கலை ஆயிற்றே?

அது உண்மைதான். தனி நபர் கலையில் இருப்பதைவிட இதில் கொஞ்சம் கூடுதல் சத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால், பொதுவாக நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கான ஆர்ப்பாட்டங்கள் தேவையே இல்லை. எனது படத்தின் கதாநாயகர் கிராமங்களில் வாழும் சராசரி மனிதர்கள்தான். நான் நடிகரை விவசாயியாக ஆக்குவதில்லை. விவசாயியைத்தான் நடிகராக்குகிறேன். என் நடிகர்களுக்கு கேரவேன் தேவையில்லை. குடை பிடித்துக் கொண்டு அருகில் நிற்க ஆட்கள் தேவையில்லை. மேக்கப் சாதனங்களுடன் கையில் கண்ணாடியைப் பிடித்த படி யாரும் தேவையில்லை. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஆப்பிள் ஜூஸ் தேவைப்படுவதில்லை. எனவே, கூட்டமும் கூச்சலும் குறைவாகத்தான் இருக்கும்.

உங்கள் படத்தின் காட்சிரீதியிலான அம்சங்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். முதலில் படத்தின் அரசியல் பற்றிப் பார்ப்போம். இது ஒரு அரசியல் படமல்ல. எனக்கு எந்த அரசியலும் கிடையாது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் சொன்னீர்கள். ஆனால், இன்று எல்லா தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றனவே?  இது நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றா? அல்லது எதிர்பார்த்துதான் அப்படி சொன்னீர்களா?

எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் என்று நீங்கள் ஒரு விஷயம் சொன்னீர்களே அதில் இருந்தே உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும், இது ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடை ஆதரித்து எடுக்கப்பட்ட படம் அல்ல என்று. அந்தக் கோணத்தில்தான் இது அரசியல் படம் அல்ல என்று  சொன்னேன். இந்தப் படத்தில் நிலப்பிரபுக்களுக்கு எதிரான  கம்யூனிஸ்ட் போராட்ட காட்சிகளை கம்யூனிஸ்ட்கள் வரவேற்றிருக்க வேண்டும்; மடாதிபதி ஒருவரை ஏர்க்காலில் பூட்டி நிலத்தை உழ வைத்த காட்சியை அவர்கள் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கீழ்வெண்மணிக் கொடூரம் ஒரு விபத்து என்ற தொனியில் இடம்பெற்ற பகுதிகளைக் காரணம் காட்டி  எதிர்க்கிறார்கள். மேலும் வன்முறைப் பாதை சரியல்ல என்ற கோணமும் படத்தில் சொல்லப்படுவதைக் குற்றம் சாட்டுகிறார்கள். காந்திய வழிதான் சரி என்பதைக் கோடிட்டுக் காட்டியிருப்பதை வரவேற்றிருக்க வேண்டிய காந்தியவாதிகள் பூதான இயக்கத்தை விமர்சித்ததை வைத்துப் படத்தை எதிர்க்கிறார்கள். சமகால விவசாயிகளின் நிலை பற்றிய காட்சிகளை விவசாயப் பெருங்குடிமக்கள் குறிப்பாக தலித்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களும் படத்துடன் முரண்பட்டு நிற்க அவர்களுக்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய… எல்லாருக்கும் உவப்பானதைப் பேசுவது அல்லவே கலைஞனின் வேலை.

இந்தியாவில் நில சீர்திருத்தம் முறையாக அமல்படுத்தப்பட்ட இரண்டே மாநிலங்கள் மேற்கு வங்கமும் கேரளாவும்தான். விவசாயக் கூலித்தொழிலாளார்களுக்கு ஆதரவாக அன்றும் இன்றும் போராடிவருவது கம்யூனிஸ்ட்கள் மட்டும்தானே…

நான் கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தை இரண்டு அடிப்படையில் விமர்சிக்கிறேன். முதலாவது கறுப்பு வெள்ளை என்று பிரச்னையை மட்டையடி அடிப்பதன் மூலம் இணக்கமான அடுத்த கட்ட நகர்வை அவர்கள் தடுக்கிறார்கள். இரண்டாவதாக, வன்முறை வழியிலான எதிர்ப்பு என்ற வகையில் பல பிழையான வழிகளில் நகர்கிறார்கள். குறிப்பாக, தங்கள் கோட்டையை பலப்படுத்திக் கொள்ளாமல் போர்க்கொடியைப் பறக்கவிடுகிறார்கள். அதில் இருக்கும்  அபாயத்தையும் அசட்டுத்தனத்தையும் அநியாயத்தையும்தான் விமர்சிக்கிறேன். கூட்டம் போட்டு கோஷம் போட்டுவிட்டு இவர்கள் போய்விடுவார்கள். அடிவாங்குவதெல்லாம் அப்பாவிகளாக இருப்பார்கள்.

கம்யூனிஸ்ட்கள் பொதுவாக அப்படி செய்வது கிடையாதே. பிற அரசியல் கட்சிகள் வேண்டுமானால் அப்படி செய்யக்கூடும். இவர்கள் களத்தில் இருந்து போராடுபவர்கள். களத்தில் இருப்பவர்களைக் கொண்டே போராடுபவர்கள். எந்த அடக்குமுறையையும் நேரடியாக எதிர்கொள்பவர்களும் அவர்கள்தானே.

அது என்னவோ உண்மைதான். ஆனால், நான் சொல்லவருவது அது அல்ல. செங்கொடியைக் கையில் வைத்துக் கொண்டு அடி வாங்கியதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் அல்ல. கம்யூனிஸ்ட் ஆக ஆக்கப்பட்ட எளிய மக்கள்தான். அவர்களை கம்யூனிஸ்ட் ஆக ஆக்கியதையோ போராடச் சொன்னதையோ நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், குச்சியைக் கையில் எடுத்துக் கொடுத்து, துப்பாக்கியுடன் இருக்கும் எதிரியை போய் எதிர்த்துவிட்டு வா என்று சொல்வது தவறுதானே?

அப்படியானால், இவர்களுக்கும் துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்கிறீர்களா?

அது இன்னும் மோசமாக ஆகும்.

அப்படியானால் என்னதான் செய்வது. அடங்கி ஒடுங்கி கொடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டியதுதானா?

அப்படியும் சொல்லவில்லையே. கூலியை உயர்த்திக் கொடு என்று கேட்டுப் போராட்டம் நடத்த மக்களைத் திரட்டுகிறீர்கள். அப்படியானால், அடுத்த ஊரில் இருந்து ஆட்களை வரவழைத்துக் கொள்கிறேன் என்று ஆண்டை சொல்கிறான். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். பக்கத்து ஊரில் இருந்தும் யாரும் வேலைக்கு வராதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய முடியவில்லை. அந்த ஒற்றுமையை அல்லவா முதலில் கொண்டுவந்திருக்க வேண்டும். ஓட்டையான வலையை வைத்து மீன் பிடிக்க அதுவும் சுறாவைப் பிடிக்க கடலில் இறங்கலாமா?

ஒரு ஆண்டைக்கு ஒரு வருடம் வயல் வேலை நடக்கவில்லையென்றாலும் கூடத் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால், ஏழைகளுக்கு  ஒரு நாள் பகலில் வேலை நடக்கவில்லையென்றால் அந்த நாள் இரவில் கூட அடுப்பு எரிக்க முடியாதே. அப்படி இருக்கும்போது எல்லாரையும் ஓர் அணியில் திரட்டுவது எப்படி சாத்தியம்?

அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதானே சண்டையை ஆரம்பிக்க வேண்டும். அதோடு, ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இறுதி இலக்குக்குக் குறைவாக எதையும் ஏற்கமாட்டோம் என்ற போக்கு சரியானதல்ல. எளிய மக்களின் வாழ்க்கையைப் பணையம் வைத்துத்தான் போராடுகிறோம் என்ற பிரக்ஞை மனத்தில் எப்போதும் இருக்கவேண்டும். கீழ்வெண்மணியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆண்டைகள், கம்யூனிஸ்ட்களுக்குப் போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். விவசாயத் தொழிலாளிகளையெல்லாம் பார்த்து, கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டுவிட்டு எங்கள் சங்கத்தில் சேர்ந்துவிடுங்கள். நீங்கள் கேட்பதையெல்லாம் செய்து தருகிறோம் என்று சொல்கிறார்கள். எளிய விவசாயிகளுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படியல்ல. பாட்டாளிகள் முதலாளிகளுடன் இணக்கமாகப் போய்விட்டால் கம்யூனிஸ்ட்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே. அதனால், அந்த வாய்ப்பை மறுக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்கள் செய்தது சரிதானே. ஆதிக்க சக்தியின் நோக்கமே கம்யூனிஸ்ட் கட்சியை வலுவிழக்கச் செய்வதுதானே. அவர்கள் வலுவிழந்த பிறகு பழைய அடக்குமுறைகளைத் தொடருவார்கள். ஆண்டைகளின் தந்திரம் அரசியல் விழிப்பு உணர்வு பெற்ற கம்யுனிஸ்ட்களுக்குப் புரியும். எளிய பாட்டாளிகளுக்குப் புரியாது.

இங்குதான் கம்யூனிஸம் தோற்க ஆரம்பிக்கிறது. ஆண்டையை அடியோடி ஒழிக்க வேண்டிய சக்தியாகவே அது பார்க்கிறது. அவர்களுடன் எந்தவித நட்புறவையும் வைத்துக்கொள்ள அது விரும்பவில்லை. அதனால்தான் அவர்களால் ஒரு கீழ்வெண்மணியைத்தான் பரிசாகத் தர முடிந்தது. அதேநேரம், காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் தம்பதியினரால் தலித்கள் அனைவருக்கும் அவர்கள் உழுத நிலத்தையே சொந்தமாக்கித் தர முடிந்தது. அரசிடம் கடனுதவி பெற்றார்கள். நிலத்தை ஆண்டைகளிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினார்கள். எளிய மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து அரசாங்கக் கடனை அடைத்தார்கள். எந்த இடத்தில் கம்யூனிஸ வழியில் போராடியபோது 44 பேரை பலி கொடுக்க நேர்ந்ததோ அதே இடத்தில் ஐந்தாறு வருடங்களில் காந்திய வழியில் போராடி அந்த நிலத்துக்கே சொந்தக்காரர்களாக ஆன அதிசயம் நடந்தது. இதில் வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமா… சாதிப் போராட்டமா என்ற சிக்கலும் இருக்கிறது.

சாதிகளுக்குள்ளும் கூட ஒற்றுமை இருப்பதில்லை.

ஆமாம். வர்க்க அடிப்படையில் அனைவரும் சேர்ந்துதான் கீழ்வெண்மணியில் போராடி இருக்கிறார்கள். என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி சார்ந்த கண்ணோட்டமே மிகவும் அவசியம். இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆதிக்க சாதிகள், பகுதி (செமி) ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்று ஒரு வசதிக்காகப் பிரிக்கிறேன். இதில் கடைசி இரண்டு பிரிவினரும் தமக்குள் ஒன்று சேர்ந்து போராடுவதுதான் கம்யூனிஸக் கொள்கையின் அடிப்படையிலும் தலித் விடுதலை அடிப்படையிலும் அவசியமான ஒன்று. அது எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. அரை நண்பனை எதிரியாக்கிக் கொண்டதில்தான் முடிந்திருக்கிறது. அல்லது இஸ்லாம்,கிறிஸ்தவம் போன்றவற்றின் உதவியை நாடியிருக்கலாம்.

மத மாற்றத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதுபோல் ஆகிவிடாதா?

ஆகாது. அது ஒரு நல்ல துருப்புச்சீட்டு. பிற மதத்துக்குள்ளும் போய் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அல்ல; பேரத்தை நல்ல முறையில் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து. கிறிஸ்தவ மதத்தினருக்கு மந்தையைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை. இந்துக்களுக்கு இருப்பதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. பொருளாதார மேம்பாடு, சமூக மரியாதை இவற்றையெல்லாம் இரண்டு சக்திகளிடமும் பேரம் பேசி அழகாக ஒரு சமூகம் தன்னை முன்னேற்றிக் கொள்ள முடியும்.

பல பழங்குடிப் பகுதிகளில் இதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பாதி பேர் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்; மீதி பேர் இந்துக்களாக தங்களுடைய பாரம்பரிய அம்சங்களைப் பின்பற்றிக்கொண்டு வருவார்கள். இந்து மதத்தினர் ஆஸ்பத்திரி கட்டப் போகிறேன் என்று சொன்னால் வாருங்கள், கட்டித் தாருங்கள் என்று சொல்வார்கள். கிறிஸ்தவர்கள் பள்ளிக்கூடம் கட்டப்போகிறேன் என்றால் அவர்களுக்கும் வரவேற்பு கொடுப்பார்கள். இரண்டு அதிகார மையங்களையும் அழகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். கம்யூனிஸ்ட்களானாலும் சரி, அடித்தள மக்களுக்காகப் போராடும் யாரானும் சரி, எதிரும் புதிருமாக இருக்கும் அதிகார மையங்களை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக, திமுக என்று மாற்றி மாற்றி காவடி தூக்குபவர்கள் இதைக் கொஞ்சம் மாற்றி செய்தால் போதும்.

ஆனால், இது காலப்போக்கில் இரு பிரிவினருக்கிடையே வெறுப்பை அதிகரித்து மதக்கலவரத்தில்தானே போய் முடியும்?

மத அமைப்புகளை எந்த அளவுக்கு அனுமதிக்க வேண்டும் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதெல்லாம் தெளிவாக திட்டமிட்டுச் செய்ய வேண்டிய எளிய விஷயம்தான். ஒரு மதத்துக்கு மாற்றாக இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அப்போது மட்டும் முடியாது என்று உங்கள் பகுத்தறிவு மனசாட்சி தலைவிரித்துப் போட்டுக் கொண்டு ஆட ஆரம்பித்துவிடும். ஆனால், அது இன்றைய ஆளுங்கட்சியாலும் நாளைய ஆளுங்கட்சியாலும் மிகக் கேவலமாக அவமானப்படுத்தப்படும்போது, ஆணி அடித்து மரத்தில் கட்டிப் போட்டதுபோல் அடங்கி ஒடுங்கிவிடும். மக்கள் நலன், சுயமரியாதை இதற்கெல்லாம் புதிய புதிய பதவுரைகளை எழுதுவதை விட்டுவிட்டு மொழியை அதன் போக்கில் புரிந்துகொள்வது எவ்வளவோ நல்லது.

பக்கத்து ஊரில் இருந்து ஆட்களை அழைத்துவந்து ஆண்டை அறுவடை செய்ததும் கோபத்தில் அவருடைய அடியாள் ஒருவரை நீங்கள் கொன்றுவிடுகிறீர்கள். எதிர்ப்பது என்று முடிவு செய்தால் அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டும் அல்லவா? ஆண்டை சும்மா விடமாட்டான்; உங்களை சுற்றி வளைத்து தாக்கப் போகிறான் என்பது உங்களுக்குத் தெரிகிறது. அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும். ஒன்று பெண்கள், குழந்தைகள் வயதானவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு துணிந்து எதிர்த்து போரட வேண்டும். அல்லது அவர்களையும் சேர்த்துக் கொண்டாவது போராட வேண்டும். அல்லது அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு நீங்களும் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இதில் எதையுமே செய்யாமல் அவர்களை ஒரு வீட்டில் தனியே அம்போ என்று பூட்டிப் போட்டுவிட்டு ஆண்கள் எல்லாரும் தலைமறைவாகிவிட்டார்கள். இதுவா போர் தந்திரம். மோதிப் பாருடா என்று எதிரியிடம் சவால் விட வேண்டியது. அப்பாவிகளை அம்போ என்று எதிரியின் கருணைக்கு விட்டு விட்டு ஓடிவிடுவது. இதுதான் வீரமா? உங்களால் இதுதான் முடியுமென்றால், நீங்கள் அப்பாவிகளைத் தூண்டிவிடாமலேயே இருந்திருக்கலாம். காந்தியவாதிகள் மட்டுமல்ல, பெரியார்கூட இந்த அம்சத்தினால்தான் கம்யூனிஸ்ட்களை விமரித்தார். இதைத்தான் நான் அதில் கேட்டிருந்தேன்.

கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே மிகவும் சிக்கலான நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய எதிரிக்கு இருக்கும் ஆயுத, அரசியல் பொருளாதார, சமூக பலம் அவர்களுக்கு இருக்கவே இருக்காது. எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு இறங்குவது என்பது சாத்தியமில்லை. அவர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற ஒன்றே கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தை நியாயப்படுத்தப் போதுமானது. வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தால்தான் இறங்கவேண்டும் என்று சொல்லமுடியாது.

அப்படி நான் சொல்லவும் இல்லை. உங்கள் வசம் எல்லாவித பலமும் குறைவாக இருக்கும் நிலையில், அதிக இழப்பு இல்லாமல் வெற்றியை அடைவதற்கான ஒரு வழியைத்தான் யோசிக்க வேண்டும். சம பலம் இருந்தாலுமே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அப்படி இல்லாதபோது நீங்கள் வன்முறை வழியை யோசிப்பது அபத்தமானது மட்டுமல்ல. அநியாயமானதும் கூட. நுட்பமான மற்றும் வெளிப்படையான அடக்குமுறைகளைப் புரிந்துகொண்ட ஒரு தலைவர், தன் ஈகோவைத் திருப்திப்படுத்தும்வகையில் போராட்டத்தைத் தீர்மானிக்கக் கூடாது. நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டுதான் போராட்ட வழியை முடிவு செய்ய வேண்டும்.

காந்திய வழிதான் சரி என்று சொல்லும் நீங்கள் பிறகு ஏன் பூதான இயக்கத்தை மையமாகக் கொண்ட அடுத்த பகுதியில் அதையும் விமர்சித்திருக்கிறீர்கள்.

ஏனென்றால், அவர்கள் சரியாக அமல்படுத்தவில்லை. கம்யூனிஸ்ட்களின் வன்முறை எந்த அளவுக்குத் தவறோ அதே அளவுக்கு பூதான இயக்கத்தின் மந்தத்தன்மையும் தவறானதுதான். நிலத்தை அவர் ஆண்டைகளிடம் இருந்து வாங்கிக் கொண்டே போவாராம். முறையாகப் பிரித்துக் கொடுக்கவோ, நீர்ப் பாசன வசதிகள் செய்து கொடுக்கவோ எந்த ஏற்பாடும் செய்யமாட்டாராம். என்ன முட்டாள்தனம்? பட்டினியாகக் கிடைக்கும் ஒருவரை விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு இலையை மட்டும் போட்டுவிட்டுப் போய்விட்டார். கேட்டால் அடுத்த வருடம் வந்து இன்னொருவர் தண்ணி தெளிப்பாராம். அதற்கு அடுத்த வருடம் இன்னொருவர் வந்து உணவு பரிமாறுவாராம். என்ன பேத்தல் இது? பூதான இயக்கம் உண்மையில் வெற்றி பெற்றிருந்தால், தலித்களின் நிலைமை எப்போதோ மேம்பட்டிருக்கும். வினோபா ரொம்ப நல்லவர். மற்றவர்கள் அந்த அளவுக்கு நல்லவர்கள் இல்லை என்ற சால்ஜாப்பெல்லாம் வேலைக்கு ஆகாது.

ஜே.சி.குமரப்பா போன்றவர்கள் அடுத்தகட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொன்னபோது அதை அவர் கேட்கவில்லை. படகுல ஏறி உட்கார்ந்து விலா எலும்பு நோக துடுப்பு போட்டதுல தப்பு இல்லை. ஆனால், கரையோட கட்டிப் போட்டுருக்கற கயிறை அவுத்துட்டுத்தான அதைச் செஞ்சிருக்கணும். நான் பாட்டுக்கு துடுப்பு போட்டுட்டே இருப்பேன்னு செஞ்சா இருந்த இடத்துலயே இருக்க வேண்டியதுதான். அதுதான் நடந்தது. 10 சதவிகித வெற்றி 20 சதவிகித வெற்றிங்கறதெல்லாம் நம்மளை நாமே ஏமாத்திக்கற விஷயம்தான்.

ஆனால், அந்தக் குடிசையில் பக்கத்து ஊரில் இருந்து வந்த அடியாட்கள் ஒளிந்திருந்ததாக எண்ணித்தான் கொளுத்திவிட்டார்கள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதே…அது திட்டமிட்ட திரிபுதானே?

ஆண்டையின் கையாள் கொல்லப்பட்டதை ஆண்டை தனக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு கீழ் வெண்மணி கிராமத்தையே சூறையாடத் திட்டமிடுகிறார். அன்று இரவில் கையில் தீப்பந்தத்துடன் கிளம்பிய அவரும் அவருடைய ஆட்களும் வழியில் இருந்த எல்லா குடிசைகளுக்கும் தீ வைத்தபடியே போனார்கள். 43 பேர் இருந்த குடிசையும் அதில் ஒன்றாக இருந்தது.

நாயுடுவின் ஆட்கள் பெண்களையும் குழந்தைகளையும் அந்த வீட்டுக்குள் போட்டுப் பூட்டி ஒன்றும் எரிக்கவில்லை.அந்த வீட்டில் பதுங்கியிருந்த பெண்கள் சத்தம் போட்டால் தங்களை நாயுடுவின் ஆட்கள் பிடித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிடுவார்கள் என்று பயத்தில் குரல் எழுப்பாமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். தீ பரவ ஆரம்பித்த பிறகே அபயக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் காலங்கடந்துவிட்டது.

உண்மையில் அந்த வன்முறைச் சம்பவத்தின்போது, இருளில் மறைந்திருந்த கம்யூனிஸ்ட்களில் சிலர், அந்த வீட்டுக்குள் வேறு ஊரில் இருந்து அழைத்து வரப்பட்ட போராளிகள் இருப்பதுபோல, ஏ மேலூரானே வேல் கம்பை எடுத்துட்டு வெளிய வா… ஏ வடக்கூரானே அருவாளை எடுத்துட்டு வா என்று கூக்குரலிட்டிருக்கிறார்கள். அதாவது, அப்படிச் சொன்னால், நாயுடுவின் ஆட்கள் அந்த வீட்டுப் பக்கம் நெருங்க பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நாயுடுவின் ஆட்களோ அந்த வீட்டில் போராளிகள்தான் இருக்கிறார்கள். அவர்களை வெளியேவிட்டால் தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்று பயந்து அல்லது அந்தப் போராளிகளை அழிக்கும் நோக்கில் வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு தீ வைத்திருக்கிறார்கள்.

இதற்கு முன் அந்தப் பகுதியில் எத்தனையோ தீ வைப்புகள் நடந்ததையும் அப்போதெல்லாம் பெண்களையும் குழந்தைகளையும் விரட்டியடித்திருக்கிறார்கள். தென்பரையில் இருந்து கீழ்வெண்மணிவரை என்ற கம்யூனிஸ்ட்கள் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இருந்துதான் இதற்கான ஆதாரங்களே கிடைத்தன.

ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 43 பேர் அதுவும் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை ஆதிக்க சாதியினர் துரத்திப் பிடித்து, அந்தக் குடிசைக்குள் அடைத்து தீவைத்துக் கொல்லவில்லை. அந்தக் குடிசைக்குள் இருப்பது தெரிந்திருந்தால் கொளுத்தியிருக்க மாட்டார்கள் என்று நம்ப எல்லா காரணமும் இருக்கின்றன. அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நான் சொல்லலை. ஆனால், இந்த அளவுக்குக் கெட்டவர்கள் கிடையாது, குறைந்தபட்சம் அந்த சம்பவத்தைப் பொறுத்தவரையிலாவது. மேலும் அன்று நாயுடுவுடன் புறப்பட்டவர்கள் அனைவருமே குடித்துவிட்டு வந்திருந்தனர். இவற்றையெல்லாம் நான் ஒரு உண்மைத் தகவல் என்ற அளவில்தான் படத்தில் இடம்பெற வைத்திருக்கிறேன். அவர்கள் மீதான கோபத்தை மட்டுப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டு எதையும் நான் சேர்க்கவில்லை. இதையெல்லாம் சொன்னால் அவர்கள் மீதான விமர்சனம் கூர் மழுங்கிவிடும் என்று பயந்துதான் கம்யூனிஸ்ட்களும் பிறரும் அவற்றை முன்வைக்கவில்லை. நான் உண்மையைச் சொல்ல விரும்பினேன். அதனால் சொன்னேன். இதனால், நாயுடு அன்கோவின் மீதான கோபம் குறையும் என்றால் அதைஎன்னால் தடுக்க முடியாது. ஆனால், அது என் நோக்கம் அல்ல. ஓர் வரலாற்று நிகழ்வின்  முழுப் பரிணாமமும் வெளிப்படவேண்டும் என்பதுதான் என் இலக்கு.

குருதிப்புனலை எழுதியவர் சொன்ன நியாயப்படுத்தலை நினைவுபடுத்துகிறது நீங்கள் சொல்வதும்.

நண்பரே, அந்தப் போராட்டத்தை பாலியல் கோணத்தில் பார்க்கிறேன் என்று அசட்டுத்தனமாக எழுதியிருந்தார் அவர்.

அந்தப் படைப்புக்கு சாஹித்ய அகாடமி பரிசே கொடுக்கப்பட்டதே.

அது அந்தப் பரிசு கொடுக்கும் அதிகார பீடத்தின் இலக்கிய அறிவின்மையையும் அதன் அப்பட்டமான அரசியலையும்தான் காட்டுகிறது. அந்த படைப்பை முற்போக்கு முகாமும் கூட தூக்கிவைத்துக் கொண்டாடியது. நான் அந்த அளவுக்கு அபத்தமாக எதையும் செய்யவில்லை. உண்மையில் குப்பையைவிட என் படைப்பு மேலானது என்று சொல்வது தவறுதான். ஆனால், நான் வேறு கோணத்தில்தான் சொல்கிறேன்.

ஒரு நிகழ்வு இப்படியும் இருக்கலாம் என்று மறு வாசிப்பு செய்வதில் எந்தத் தவறும் கிடையாதே?

மறு வாசிப்பு என்ற பதத்தை இந்த இடத்தில் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அதிகாரவர்க்கம் ஒரு நிகழ்வை தனக்கு சாதகமாகப் பதிவு செய்திருக்கும்போது ஒருவர் பொய்யின் திரையை விலக்கி உண்மையை வெளியே காட்ட செய்யும் முயற்சிக்குத்தான் மறு வாசிப்பு என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும். இறைவனுடன் ஜோதியில் கலந்தார் என்று அதிகாரவர்க்கம் கதைகட்டிவிட்டிருந்தால் தீ வைத்துக் கொளுத்தியிருப்பார்கள் என்று அதைக் கட்டுடைக்கலாம். மறுவாசிப்பு செய்யலாம். உண்மை அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது கூடத் தேவையில்லை. அதிகாரத்தை எதிர்ப்பவர்களுக்கு, புனைவுகளை தர்க்கரீதியாகப் பார்க்கும் உரிமை 100 சதவிகிதம் உண்டு. அல்லது தங்களுக்கான புனைவுகளை எழுதிக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், தெளிவாகத் தெரியும்  நிலப்பிரபுத்துவ கம்யூனிஸ போராட்டத்துக்கு  ஃபிராய்டிய வாசிப்பு கொடுப்பது என்பதெல்லாம் அபத்தமானது. சரி அப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு வேண்டுமானால், சாமான் எழுந்திருக்காமல் இருந்திருக்கலாம். தீப்பந்தத்தைத் தூக்கிச் சென்ற எல்லாருக்குமேவா?  மனதில் கற்பனையாக என்னவெல்லாமோ தோன்றத்தான் செய்யும். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கு முன்னால் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எனக்குக் கூட துறவு வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு பாலியல் குறைபாடு இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக தெரசா அம்மையார் பூப்பெய்தாததால்தான் சமூக சேவைக்கு வந்தார் என்று ஒரு காரணத்தை முன் வைத்தால் அசட்டுத்தனமாக தோன்றாதா என்ன?

ஆனால், நாயுடு குற்றவாளி அல்ல என்ற எண்ணத்தை அந்தப் படைப்பு உருவாக்காது என்று ஆசிரியர் உத்தரவாதம் தந்திருந்தாரே?

அந்த சிந்தனையே உங்களுக்கு எழவே கூடாதே. ஹிட்லரின் கொலை வெறிக்கு யூதர்கள் மீதான இனவெறிதான் காரணம். முதலாளிகளின் வர்க்க அராஜகத்துக்கு அவர்களுடைய ஆதிக்க மனோபாவம்தான் காரணம். இதிலெல்லாம் வேறு என்ன காரணம் இருக்கலாம் என்ற சிந்தனையே மிக மிகத் தவறானது அல்லவா? வேண்டுமென்றால், வர்க்க சிந்தனையைக் காட்டிலும் சாதித்திமிரே காரணமாக இருந்ததுஎன்று சுட்டிக்காட்டலாம். ஏனென்றால், அதுவும் உண்மை. அதைவிட்டுவிட்டு ஃப்ராய்டிய வாசிப்பு என்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.

அதுமட்டுமல்லாமல், அந்த நாவலில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையில் வந்து போகும் கதாபாத்திரங்களில் எந்த ஒன்றாவது தன்னுடைய குரலில் ஒரு வார்த்தையையாவது பேசியிருக்கிறதா? தன்னை எதிர்த்த ஒரு நபருக்கு தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபடும் தண்டனையைக் கொடுக்கிறாராம்…கண்றாவி… நாம் வேறு உருப்படியாக ஏதாவது பேசுவோமா?

(சிரித்தபடியே) சரி… படத்துக்கு வருவோம். உங்களுக்கு அரசியல் கிடையாது என்று சொல்கிறீர்கள். ஆனால், தலித் குடும்பம் கூலித் தொழில் செய்யும் முதல் பகுதியில் அவர்கள் விவசாய வேலை இல்லாத நேரத்தில் வேட்டைக்குப் போவது, குல தெய்வ வழிபாடு, கள்ளு குடித்து  மாட்டுக் கறி தின்னு சந்தோஷமாக இருப்பது என நகர்கிறது.

இரண்டாவதாக கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து போராடுவதில் மிக மோசமான வன்முறைக்கு ஆளாவதாக சொல்லிக் காட்டி கம்யூனிஸ்ட்கள் மீது கோபம் வரும் படி திரைக்கதையை அமைத்திருக்கிறீர்கள். மூன்றாவது பகுதியில் காந்திய வழியிலான பூதான இயக்கத்தின் தோல்வியை விவரித்திருக்கிறீர்கள்.

கடைசியாக தலித் குடும்பமொன்றுக்கு காணி நிலம் கைக்கு வரும்போது விவசாயம் பெரும் நஷ்டத்தைத் தரும் தொழிலாக மாறிவிட்டது. போதாத குறையாக அந்த நிலத்தில் இறால் பண்ணைகள் முளைக்கின்றன என்று முடித்திருக்கிறீர்கள். பால் கறந்த போது பசு கைக்குக் கிடைக்கவில்லை. அடிமாடாக எந்த பிரயோசனமும் இல்லாத நிலையில்தான் அவர்கள் கைக்கு கிடைத்திருக்கிறது என்று இந்த அளவுக்கு எதிர்மறை தொனி உங்கள் படைப்பில் இருக்கத்தானே செய்கின்றது? அதோடு போராடாமல் அடிமையா இருந்தபோது சந்தோஷமா இருந்தாங்க. போராட ஆரம்பிச்சதும் அது வன்முறையா இருந்தாலும் சாத்விகமாக இருந்தாலும் அவங்களுக்கு எந்த நிம்மதியையும் தந்துவிடவில்லை அப்படிங்கற விஷமமான அரசியல்தானே படைப்பில் இருக்கிறது?

நிலம் கைக்குக் கிடைத்ததும் விவசாயம் அமோகமாக நடந்து வீடு வாசல், சொத்து சுகம், பிள்ளை குட்டிங்கன்னு தலித்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டே இருந்தார்கள் அப்படின்னு ராஜா ராணி கதை மாதிரி முடிக்க எனக்கு ஆசைதான். ஆனா பாருங்க, நிஜத்துல அப்படி நடக்கலை. நானும் நிஜத்துல உள்ளதையே காட்டணும்ன்னு வேற தீர்மானிச்சிருக்கேன். அதனால, நான் எந்த மக்களோட வாழ்க்கையைக் காட்டறேனோ அவங்களோட வாழ்க்கையைப் போலவே, எதிர்மறையா அவ நம்பிக்கையாத்தான் என் படமும் இருக்கும்.

அப்பறம், நான் மக்களோட வாழ்க்கையை அவர்களோட வாழ்ந்து அனுபவித்து எழுதியவர்களின் படைப்புகளை மையமாக வைத்தும் நானே நேரடியாகப் பெற்ற அனுபவங்களை வைத்தும் படமாக்கியிருக்கிறேன். அந்த வாழ்க்கைக்கு என்ன அரசியல் இருக்குமோ அது என் படத்திலும் இருக்கும். உண்மையில் அது அரசியல் அல்ல. அந்த மக்களின் வாழ்க்கைப் பார்வை. என் கருத்துகளை அதில் திணிக்க முற்பட்டால் அதுதான் அரசியல். நிழலில் வளரும் செடி சூரியனைத் தேடி வளைந்து நெளிந்து வளருகிறது. அந்தச் செடியின் வளைவு நெளிவுகள் சூரியனையும் அந்தச் செடியையும் சார்ந்த ஒன்று. நான் வளைக்கவுமில்லை. நிமிர்த்துவது அவசியம் என்று நினைக்கவும் இல்லை.

அமெரிக்காக்காரன் தன்னோட எடுபிடி வேலைக்கு தன் நாட்டுல இருக்கறவனுக்குக் கொடுக்கறதைவிட பத்துல ஒரு பங்கு ரூபா கொடுத்தா இந்தியால இருந்து நிறைய பேர் கிடைப்பாங்கன்னு இந்தியாவைத் தேடி வர்றான். ஒரு இந்தியாக்காரனை தேடிப் பிடிச்சு தன் நிறுவனத்துல பொம்மைத் தலைவரா பக்கத்துல உட்கார்த்தி வெச்சுக்கறான். அவர் ஆயிரம் இந்திய மந்தையை வெச்சு வேலை வாங்கறாரு. இவங்களும் ஏதோ தங்களை மதிச்சுத்தான் கூப்பிடறான்னு நம்பி போய் வலைல விழறாங்க. பொம்மைத் தலைவர்களும், என்.ஆர்.ஐ.களும் பி.பி.ஓ-ல வேலை செய்யறவங்களும் சந்தோஷமா இருக்காங்கன்னு காட்டினா அதுல என்னோட அரசியல் எதுவும் கிடையாது. உங்களையெல்லாம் குனிய வெச்சு என்னமோ செய்யறான்னு நான் சொன்னா அதுதான் அரசியல்.

(கேள்வி-பதில் தொடர்கிறது) 

Share/Bookmark

‘காணி நிலம்’ இயக்குநருடன் ஒரு நேர்காணல் – II

$
0
0

முதல் பகுதி :

modernartசரி திரைப்படத்தின் மேக்கிங் பற்றி பார்ப்போம். லோ பட்ஜெட் அப்படிங்கறது உங்களுக்கு எந்த அளவுக்கு தடையா இருந்தது?

லோ பட்ஜெட்ன்னு சொல்றதைவிட இதை நான் ஆக்சுவல் பட்ஜெட்டுன்னுதான் சொல்ல விரும்பறேன். உண்மையில நிறைய பணம் இதுல இன்வால்வ் ஆகலைங்கறதுனாலதான் எந்த சமரசமும் இல்லாமல் எடுக்கவும் முடிஞ்சிருக்கு. அதுஒரு விபரீதமான வளையம் தெரியுமா? பெரிய நடிகர்கள் இன்வால்வ் ஆறதுனால பட்ஜெட் கன்னா பின்னான்னு ஏறுது. அதை ஈடுகட்ட பாட்டு, எக்ஸாட்டிக் லொகேஷன்னு போறாங்க. அது இன்னும் பட்ஜெட்டை எகிற வைக்குது. பெரிய ஸ்டார் பின்னால நீங்க போகலைன்னா பட்ஜெட் ஏற வாய்ப்பே இல்லை. எந்த சமரசத்துக்கும் அவசியமும் இல்லை.

ஆனா, பெரிய ஸ்டார் இல்லைன்னா படம் பெட்டியை விட்டே வெளிய வரமுடியாதே.

விநியோகஸ்தர்கள் மாதிரியே பேசறீங்களே. தமிழ்ல வெள்ளி விழா, வெற்றி விழா கொண்டாடின படங்களோட பட்டியலை எடுத்துப் பார்த்தா, புதுமுகங்கள் நடிச்சு புது இயக்குநர்கள் எடுத்த படங்களோட வசூலை வேற எந்தப் படமும் கொடுத்தது இல்லை. ஒருவர் ஸ்டார் ஆகி ரசிகர்கள் ஆதரவும், பிற வசதி வாய்ப்புகளும் வந்த பிறகு அடைகிற வெற்றிகளைவிட புதுமுகமா இருந்தபோது அடையும் வெற்றி மிகப் பெரியதாதான் இருக்கு. அதனால, கொஞ்சம் சென்ஸிபிளா இருந்தாலே போதும் எந்தக் குதிரை ஜெயிக்கும்னு எளிதில் தீர்மானிச்சுட முடியும். அதுவும்போக திரையுலகத்துல ஆயிரம் போட்டு பத்தாயிரம் சம்பாதிக்க யாரும் தயாரா இல்லை. லட்சங்களைக் கொட்டி கோடியை பிடிக்கத்தான் ஆசைப்படறாங்க. லட்சங்கள் போடறதுனால நஷ்டம் வந்துடக்கூடாதுன்னு நிறைய பயப்பட வேண்டியிருக்கு. நாங்க இந்த விஷயங்களை எங்க தயாரிப்பாளார் கிட்ட தெளிவா சொன்னோம். அவர் அதைப் புரிஞ்சுகிட்டு முழு ஒத்துழைப்பும் கொடுத்தார்.

நீங்க திரைப்படத்தொழிற்சங்கத்தினர் யாரையுமே பயன்படுத்தாததுனால நிறைய சிரமங்கள் எதிர்கொள்ள வேண்டிவந்ததா பேசப்பட்டதே

நாங்க எந்த தொழிற்சங்கத்துக்கும் எதிரி கிடையாது. ஆனால், சினிமாவை வெறும் தொழிலா பாக்கறவங்களை வெச்சு எங்களால வேலை செய்ய முடியாது. இத்தனை மணிநேரத்துக்கு இவ்வளவு ரூபா, அதை விட கூடினா டபுள் பேட்டா அப்படிங்கற கான்செப்ட் எங்க யூனிட்டுக்கு ஒத்துவராது. எங்க யூனிட்ல வேலை செய்யறவங்களுக்கு சம்பளம் கிடையாது. படத்தோட பங்குதாரர்கள்ல அவங்களும் ஒருத்தர். வர்ற லாபத்துல எல்லாருக்கும் ஒரு பங்கு. இதுதான் எங்க கான்செப்ட். அதனாலதான், தமிழ் திரையுலகில் பணியாற்றிய யாரையுமே எங்கள் இயக்கத்தில் சேர்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம்.

தமிழ் திரையுலக செயல்பாடுகள் கலையுணர்வுக்கு எதிரானதாகவே இருப்பதாக நினைக்கிறோம். தமிழில் இருக்கும் சிறந்த திரை மொழி வாய்க்கப்பெற்றவர்களுக்கு சமூக அக்கறை அறவே கிடையாது. சமூக அக்கறை கொண்டவர்களுக்கோ  திரைப்படம் எட்டாத கலையாகவே இருக்கிறது. டெக்னிக்கல் திறமை உள்ள ஒருவருக்கு சமூக அக்கறையை உருவாக்குவதைவிட சமூக அக்கறை கொண்டவர்களுக்கு திரை மொழியோடு பரிச்சயம் ஏற்படுத்துவதே சரி என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அதனால்தான் எங்கள் யூனிட்டில் சேர அதை அடிப்படையாக வைத்திருக்கிறோம்.

ஒரு கிராமத்துக்கு ஷூட்டிங்குக்குப் போவதாக இருந்தால் எங்கள் யூனிட் மாட்டு வண்டியில் அல்லது டிராக்டரில் போய் இறங்கும். எங்கள் யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் கிராமத்தினருடன் நெருங்கிப் பழகி அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு கதையை நுட்பமான வாழ்க்கை சம்பவங்களை சேகரித்துக் கொண்டு வருவார்கள். ஆரம்பத்தில் கதையின் ஒரு ஸ்கெலிடன் மட்டும்தான்  எங்களிடம் இருக்கும். ஒரு மாதம் அந்த மக்களுடன் வாழ்ந்து சேகரிக்கும் தகவல்கள்தான் படத்தின் நம்பகத்தன்மையை தீவிரத்தை அதிகப்படுத்தும்.

அப்பறம் ஒரு நடிகரை திருநெல்வேலி தமிழில் பேசும்படி சொல்லி விஷப்பரிட்சையெல்லாம் செய்ய மாட்டோம். திருநெல்வேலிக்காரர் ஒருவரையே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிடுவோம். அவர்களுக்கு கேமராவைப் பார்த்தால் நடிக்க வராது என்பதால், அதை மறைத்துவைத்தே படத்தி எடுத்து முடித்துவிடுவோம். உங்களுக்கே தெரிந்திருக்கும் இந்தப் படத்தில் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே படத்தில் பயன்படுத்தியிருந்தோம். அதுவும் அதைப் பாடுபவர்களை வைத்தே பின்னணிக் கருவிகள் எதுவும் இல்லாமல் கிராமப்புறத்தில் ஏற்றம் இறைக்கும் போது ஒருவர் பாடும் பாட்டு அந்தப் பின்னணியில் இருக்கும் சத்தங்களை மட்டுமே வைத்து படம் பிடிக்கப்பட்டிருந்தது. நாட்டுப்புறப் பாடல்களை ஸ்பேஸ் ஃபில்லராக நாங்கள் பயன்படுத்தவில்லை. சர்வதேசத்தரம் என்பது பிராந்தியத்தன்மை முழு அளவில் வெளிப்படுவதே என்றே நாங்கள் நம்புகிறோம்.

டைரக்டரான நான் யாரையும் திட்டமாட்டேன்; கதை டிஸ்கஷன்னு சொல்லி அடுத்தவங்க அறிவை சுரண்டமாட்டேன்; திரைக்கதைக்கு யாரையாவது பயன்படுத்திக் கிட்டா கோடிகளை நான் சம்பாதிச்சிட்டு அவருக்கு பிச்சைக்காசைத் தூக்கி எறியமாட்டேன். நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மாமா வேலை பார்க்க மாட்டேன். இப்படி திரைக்கு பின்னால் நாங்க கடைப்பிடிக்கும் நல்ல அம்சங்களை ஒரு தகவல் அப்படிங்கற அளவுலதான் உங்க கிட்ட சொல்றேன். ஒரு படத்தை நீங்க அதனோட தரத்தின் அடிப்படைல மட்டுமே பார்த்து உங்க கருத்தைச் சொன்னா போதும். நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லி எந்த சலுகையும் எதிர்பார்க்கலை.

சினிமாங்கறது ஒரு வகையில காட்சிபூர்வமான ஊடகம்தானே. ஆனால், நீங்கள் அந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதுபோல் தெரிகிறதே.

பொதுவான கமர்ஷியல் படங்களைப் பார்த்துப் பழகின கண்களுக்கு இந்த படம் இப்படியான உணர்வைத்தான் தரும். லைட்டிங், கேமரா மூவ்மெண்ட் போன்ற விஷயங்கள்ல எங்களுக்கு சில எல்லைகள் இருந்தன. அது படத்தின் கலையம்சத்தை எந்த வகையிலயும் குறைக்கலை. எங்களோட ஃப்ரேம் கம்பொசிஷனுக்கு ஒரே ஒரு இலக்கணம்தான்: ஒளியும் இருளும். இந்த இரண்டுமே எல்லா ஃப்ரேம்லயும் இருந்தே ஆகணும். வெறும் ஒளி மட்டும் அல்லது வெறும் நிழல் மட்டுமே எந்த ஃப்ரேம்லயும் இருக்காது. பிம்பங்கள் தட்டையாக இடம்பெறக்கூடாது. தூர இடைவெளிகள், ஆழங்கள் நன்கு தெளிவாக ஃப்ரேமில் இடம்பெறும் அளவுக்கு ஒளியைப் பயன்படுத்துவது என்பதுதான் எங்களுடைய குறைந்தபட்ச இலக்கு. அப்பறம் க்ளோஸப் ஷாட்களுக்கெல்லாம் உலகின் புகழ் பெற்ற போர்ட்ரெய்ட் புகைப்படங்கள், ஓவியங்களை அடிப்படையா வெச்சு தான் பண்ணியிருந்தோம். உலகின் மிகச் சிறந்த ஓவியங்களும் புகைப்படங்களும்தான் எங்களோட படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமின் லைட்டிங், கலர் காம்பினெஷனை தீர்மானிச்சன. ஒரு வகையில அதுல ஒரிஜினாலிட்டி இல்லைன்னு நீங்க குற்றச்சாட்டு வெச்சா அதை நிச்சயம் நாங்க ஒத்துக்கறோம். ஆனால், அதையும் கூட வெறும் ஃப்ரேம் அழகுக்குன்னு வைக்காம சம்பந்தப்பட்ட காட்சியோட உணர்ச்சியை மையமா வெச்சேதான் எடுத்திருக்கறோம்.

நீங்க நடத்தற திரைப்பட பயிற்சி பள்ளி பற்றிச் சொல்லுங்க.

ஒரு வருடத்துக்கு சுமார்  15-20 பேரை தேர்ந்தெடுக்கறோம். வாரத்துக்கு இரண்டு திரைப்படங்கள் வீதம் சுமார் 200 படங்கள் அவர்களுக்கு இரண்டு வருடத்தில் திரையிட்டுக் காட்டுகிறோம். உலகத் திரைப்படங்கள் 100; இந்தியத் திரைப்படங்கள் 100. அவங்களோட கல்வித் தகுதி மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். ஒரு ஆறு மாதம் நகர்ப்புறம் ஒன்றில் மாதம் சராசரியாக 10000 வீதம் 60,000 சம்பாதிக்கிறார்கள். செலவுகள் போக எப்படியும் 15-20 ஆயிரம் கையில் நிற்கும். உணவு விடுதிகளில் தங்கி வேலை செய்பவர்களால் அதைவிடக் கூடுதலாகவே சேமிக்க முடியும். அதை அடுத்த ஆறு மாத கிராமப்புற பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படியாக திரைப்படப் பயிற்சியோடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற தமிழ் வாழ்க்கையோடும் அவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கும். உலக இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ், இந்திய இலக்கியங்களுடனும் இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளுடனும் அவர்களுக்கு நல்ல பயிற்சி தரப்படுகிறது. கணினி யுகத்தில் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தேறிவிடுகின்றன. இந்த அடித்தளத்துக்குப் பிறகுதான் எங்கள் திரைப்படப் பள்ளியில் கேமராவையே ஒருவர் தொட அனுமதிக்கப்படுவார்.

எத்தனை பேர் இதுவரை பயிற்சி எடுத்து முடித்திருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் படங்கள் எடுத்திருக்கிறார்களா?

கொஞ்சம் பொறுத்திருங்கள். எங்கள் பையன்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பீடங்களில் இருக்கும் சிலைகளை நீங்களாகவே அகற்றிவிட்டால் உங்களுக்கும் நல்லது. அந்தச் சிலைகளுக்கும் நல்லது. இல்லையென்றால், உடைத்தெறியப்படும்.

0

 

Share/Bookmark

‘கண்ணே சங்கீதா!’

$
0
0

valluvarஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 9

சென்ற அத்தியாயத்தில் அளபெடைகளைப்பற்றிப் பேசும்போது, வேண்டுமென்றே ஒரு முக்கியமான சினிமாப் பாடலைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். ‘இன்னிசை அளபெடையே’ என்று ஒரு பாட்டில் வைரமுத்து எழுதியிருப்பார். அதன் அர்த்தம் என்ன?

அளபெடை எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அதில் பல வகைகள் உண்டு என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அவை:

* செய்யுளிசை அளபெடை (அல்லது) இசை நிறை அளபெடை
* சொல்லிசை அளபெடை
* இன்னிசை அளபெடை
* இயற்கை அளபெடை

இவற்றுள் மிக எளிமையானது, ‘இயற்கை அளபெடை’தான். ஆகவே, அதை முதலில் பார்த்துவிடலாம்.

இங்கே ‘இயற்கை’ என்பது, ஒரு சொல் இயல்பாக எப்படி ஒலிக்கிறது என்பதைக் குறிக்கும். அதாவது, இயல்பாகவே அளபெடையாக நீண்டு ஒலிக்கும் சொற்கள், இவை எப்போதும் அளபெடுத்துதான் எழுதப்படவேண்டும்.

இளைஞர்கள், இல்லத்தரசிகள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் என்று பல மட்டங்களில் ‘எங்களுக்குமட்டும்தான் புரியும்’ ரகச் சொற்கள் உண்டு. இந்தமாதிரி ஒரு குழுவுக்குள் உள்ளவர்கள் பயன்படுத்துகிற, அவர்களுக்குமட்டுமே பொருள் விளங்குகிற விசேஷச் சொற்களைக் ‘குழூஉக்குறி’ என்பார்கள்.

இங்கே ‘குழூஉக்குறி’ என்பது இயற்கை அளபெடை. அதனைக் ‘குழூக்குறி’ என்று ஒருபோதும் எழுதக்கூடாது, சொல்லக்கூடாது, சொன்னாலும் அதற்குப் பொருள் இருக்காது.

மற்ற அளபெடைகள் அப்படியில்லை. செய்யுளிசை அளபெடை அல்லது சொல்லிசை அளபெடை அல்லது இன்னிசை அளபெடையில், சம்பந்தப்பட்ட எழுத்துகளை அளபெடுத்தும் சொல்லலாம், அளபெடுக்காமலும் சொல்லலாம், இரண்டுக்கும் பொருள் இருக்கும்.

ஆக, இயற்கை அளபெடை என்பது பேசுகிறவர், எழுதுகிறவரின் விருப்பத்தாலன்றி, இயல்பாகவே அளபெடுக்கும் சொற்கள். இதற்கு வேறு சில உதாரணங்கள்: மரூஉ, குரீஇ போன்றவை.

அடுத்து, செய்யுளிசை அளபெடை. இதைத் தெரிந்துகொள்வதற்கு, கொஞ்சம்போல் மரபுக் கவிதை இலக்கண அறிவு தேவை. ரொம்பப் படுத்தாமல் மேலோட்டமாகச் சொல்கிறேன். பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்.

புதுக் கவிதைகளை எழுதும்போது, அவற்றில் நம் இஷ்டப்படி எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம். கருத்துமட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமானது.

ஆனால், மரபுக் கவிதைகள் அப்படியில்லை, ஓர் அடியில் இத்தனை சொற்கள்தான் இருக்கவேண்டும், அவை இந்தவிதமான சொற்களாக அமையவேண்டும், அவற்றினிடையே எதுகை, மோனை, இயைபு போன்ற ஒற்றுமைகள் அந்தந்த இடங்களில் வரவேண்டும், இந்த வகை வார்த்தைக்குப்பிறகு இந்த வகை வார்த்தைதான் வரவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உண்டு.

உதாரணமாக, ‘வெண்பா’ வகையைச் சேர்ந்த மரபுக் கவிதை ஒன்றில் ‘அன்பே’ என்று ஒரு வார்த்தை இருந்தால் அடுத்த வார்த்தை ‘நல்லா இருக்கியா?’ என்று வரக்கூடாது, ‘நலமா?’ என்று அதை மாற்றி எழுதவேண்டியிருக்கும்.

‘அன்பே’க்குப்பிறகு ‘நல்லா இருக்கியா’ ஏன் வரக்கூடாது, ‘நலமா’ ஏன் வரலாம் என்பதைப்பற்றிப் பேசுவது நம் தொடரின் நோக்கம் அல்ல. ஒரு குறிப்பிட்ட வகைச் சொல்லுக்குப்பிறகு இந்த வகைச் சொற்கள்தான் வரலாம் என்கிற இலக்கணம் மரபுக் கவிதைகளில் உண்டு. இப்போதைக்கு நாம் அதைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டால் போதும்.

இன்னொரு விஷயம், எந்தச் சொல்லுக்குப்பிறகு எந்தச் சொல் வரலாம் என்கிற கணக்கை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு எல்லா வகைக் கவிதைகளுக்கும் பயன்படுத்தமுடியாது. இந்தக் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு வகைக்கும் மாறுபடும்.

உதாரணமாக, ‘கண்ணே சங்கீதா’ என்பது வெண்பாவில் தப்பு, ஆனால் ஆசிரியப்பாவில் சரி!

ஏன் அப்படி? ஒவ்வொரு வகைக் கவிதைக்கும் வெவ்வேறு ரூல்ஸ் என்று படுத்தாமல், எல்லாவற்றுக்கும் ஒரே செட் கட்டுப்பாடுகளை விதித்துவிடுவது சுலபமல்லவா?

மரபுக் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ஓசை உண்டு. உதாரணமாக, வெண்பாவுக்குச் செப்பலோசை, ஆசிரியப்பாவுக்கு அகவலோசை, கலிப்பாவுக்குத் துள்ளலோசை, வஞ்சிப்பாவுக்குத் தூங்கலோசை என்று சொல்வார்கள்.

இந்த ஓசைகள் ஒவ்வொன்றும், மேலே நாம் பார்த்த அந்தச் சொல் கட்டுப்பாடுகளால்தான் வருகின்றன. ‘கண்ணே சங்கீதா’ என்ற ஓசை வெண்பாவுக்குப் பொருந்தாது, ஆனால் ஆசிரியப்பாவுக்குப் பொருந்தும். அதனால்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வகை மரபுக் கவிதையையும் எழுதுவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் உண்டு என்று தெரிந்துகொண்டு, அதற்குள் நின்று விளையாடுவதில் தனி சுவாரஸ்யம் இருக்கிறது. இதன் நடுவே ஒரு நல்ல கருத்தையும் கவிதையில் சொல்வதென்றால் இரட்டை சந்தோஷம்.

அது நிற்க, மறுபடி செய்யுளிசை அளபெடைக்கு வருவோம். அதற்கும் மரபுக் கவிதைக்கு என்ன சம்பந்தம்?

மரபுக் கவிதைக்கென்று ஓர் ஓசை உண்டு என்று பார்த்தோம். அதைதான் இங்கே ‘செய்யுளிசை’ என்று அழைக்கிறோம். அதாவது, செய்யுளுக்கான இசை.

சில சொற்களால் அந்த இசை கெடும்போது, அளபெடையைப் பயன்படுத்தி ஒட்டுப்போட்டுச் சரி செய்துவிடலாம். அதுவே ‘செய்யுளிசை அளபெடை’, இதனை ‘இசை நிறை அளபெடை’ என்றும் குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக, இந்தத் திருக்குறளைப் பாருங்கள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

(கடவுளுக்குப் பதிலாகக் கணவனைக் கும்பிடும் பெண் ஒருத்தி வானத்தைப் பார்த்துக் கட்டளை போட்டால், உடனே மழை பொழியும்).

இங்கே இரண்டாவது சொல் ‘தொழாள்’ (தொழாதவள்) என்றுதான் இருக்கவேண்டும். ஆனால், அது வெண்பா இலக்கணத்துக்குப் பொருந்தாது. அதாவது, அங்கே ‘தொழாள்’ என்று எழுதினால், இது வெண்பா ஆகாது.

ஆகவே, வள்ளுவர் அதனைத் ‘தொழாஅள்’ என்று நீட்டுகிறார். இந்த அளபெடையின்மூலம் வெண்பா இலக்கணம் பொருந்துகிறது, அதன் இசையும் நிறைகிறது.

இதுதான் செய்யுளிசை அளபெடை, செய்யுளின் தன்மைக்கு ஏற்ப ஓர் எழுத்தை நீட்டிச் சொல்வது. அதன்மூலம் மரபுக் கவிதை இலக்கணம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது.

இதற்குக் கொஞ்சம் காமெடியாக ஓர் உதாரணம் சொல்வதென்றால், ஒரு மேடையில் ஐந்து நிமிடம் பேசியாகவேண்டும் என்று ஒருவர் கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால் நாம் நான்கு நிமிடத்துக்குதான் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறோம். என்ன செய்வது?

பிரச்னையில்லை. நான்கு நிமிடச் சரக்கைக் கொஞ்சம் நீட்டி, முழக்கி, மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பேசிவிடுகிறோம், அவர்களுக்கும் திருப்தி, நமக்கும் சந்தோஷம். இதுதான் செய்யுளிசை அளபெடை!

அடுத்த வாரம், நாம் கவனமாக ஐந்து நிமிடத்துக்குப் பேச்சைத் தயார் செய்துகொண்டு செல்கிறோம். ஆனால் இப்போது அவர் ‘ஐந்து நிமிடமோ, ஏழு நிமிடமோ பேசுங்கள்’ என்கிறார்.

உடனே, நாம் என்ன செய்வோம்? ஐந்து நிமிடத்தில் பேசிவிட்டுக் கீழே இறங்குவோமா, அல்லது இன்னும் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்து ஏழு நிமிடத்துக்குப் பேசுவோமா?

இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், முதல் வாரத்தில் நம்மிடம் குறை இருந்தது (ஐந்து நிமிடப் பேச்சுக்குப் பதிலாக நான்கு நிமிடத்துக்கு உரிய பேச்சைதான் கைவசம் வைத்திருந்தோம்!), அதைச் சரி செய்வதற்காகக் கொஞ்சம் நீட்டி முழக்கினோம்.

ஆனால் இரண்டாவது வாரத்தில், நம்மிடம் குறை எதுவும் இல்லை, சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பேச்சு இருந்தது. அதை இன்னும் இனிமையாக்குவதற்காகக் கூடுதல் விஷயங்களைச் சேர்த்தோம்.

அதுவும் ‘சேர்த்தல்’தான், இதுவும் ‘சேர்த்தல்’தான், ஆனால் சாம்பாருக்கு உப்புப் போடுவதற்கும் (அவசியத் தேவை) பாயசத்துக்கு முந்திரி போடுவதற்கும் (சுவை கூட்டுதல்) வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதே வித்தியாசம்தான் இந்த இரு அளபெடைகளுக்கும்.

இதைப் புரிந்துகொள்வதற்கு இன்னொரு திருக்குறள் உதாரணத்தைப் பார்க்கலாம்:

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்கண் வற்றாகும் கீழ்

(அடுத்தவர்கள் நல்ல ஆடைகளை அணிந்து, நன்றாக உண்டு வாழ்ந்தால் அதைப் பார்த்துப் பொறாமை கொள்கிற சிலர், அவர்கள்மீது ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள்).

இந்தப் பாடலில் ‘உடுப்பதூஉம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘உடுப்பதும்’ என்றுமட்டும் எழுதியிருந்தாலோ, ‘உண்பதூஉம்’ என்பதற்குப் பதிலாக ‘உண்பதும்’ என்று எழுதியிருந்தாலோ வெண்பா இலக்கணம் கெட்டுப்போகாது. அப்போதும் அது வெண்பாதான்.

ஆனால், வள்ளுவர் அதனை மேலும் இனிமையாக ஒலிக்கச் செய்வதற்காக, அளபெடையைப் பயன்படுத்துகிறார். நீங்களே சொல்லிப் பார்த்தால் தெரியும் ‘உடுப்பதும் உண்பதும்’ என்பதைவிட, ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ என்பது காதுக்கு அதிகக் குளிர்ச்சியாக ஒலிக்கிறது. பாயசத்துக்கு முந்திரிப்பருப்புபோல!

இப்படி இலக்கணத்துக்காக அன்றி, மரபுக் கவிதையின் இசைக் கட்டுப்பாடுகளுக்காக அன்றி, இன்னிசைக்காக அளபெடுப்பதால் இதன் பெயர் ‘இன்னிசை அளபெடை’.

மூன்றாவது வகை, சொல்லிசை அளபெடை. இதன் அர்த்தம், ஒரு சொல்லை வேறுவிதமாகத் தொனிக்கச் செய்வதற்காக அதில் ஓர் எழுத்தை அளபெடுக்கவைப்பது.

இந்தமுறையும் திருக்குறள் உதாரணம்தான்:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

(எவையெல்லாம் இனிய சொற்கள்?

1. அன்பு கலந்து பேசப்படுபவை
2. வஞ்சம் இல்லாமல் பேசப்படுபவை
3. மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுடைய பேச்சுகள்!)

இந்தப் பாடலில் ‘அளைஇ’ என்ற சொல்லைக் கவனியுங்கள். அது எந்த வகை அளபெடை?

‘அளை’ என்றால் துழாவுதல், கலத்தல் என்று பொருள். ‘தண்ணியில அளையாதே’ என்று குழந்தைகளை அதட்டுகிறோமில்லையா, அந்த வார்த்தைதான் இது.

இந்தப் பாடலில் அது ‘ஈரம் அளை’ என்று வருகிறது. அதன் அர்த்தம், ஈரம், அதாவது, அன்பைக் கலத்தல்.

ஆனால், இங்கே நமக்கு ‘அன்பைக் கலத்தல்’ என்கிற பொருள் அவசியமில்லை, ‘அன்பைக் கலந்து’ என்கிற பொருள்தான் வேண்டும்.

அதற்காக, திருவள்ளுவர் அளபெடையைப் பயன்படுத்துகிறார். ‘அளைஇ’ என்றால், அளைந்து, அதாவது கலந்து என்கிற பொருள் தானாக வருகிறது.

இப்படி இசையை நிறைப்பதற்காகவோ, இன்னிசையைக் கூட்டுவதற்காகவோ அல்லாமல், ஒரு சொல்லை வேறுவிதமாக மாற்றுவதற்காக வரும் அளபெடையைச் ‘சொல்லிசை அளபெடை’ என்கிறோம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால்:

* மரபுக் கவிதை இலக்கணம் மீறும் நேரத்தில் அதைச் சரி செய்ய வரும் Patch Up : செய்யுளிசை அல்லது இசை நிறை அளபெடை
* இலக்கணம் மீறாதபோதும், இனிய இசைக்காக நீண்டு வருவது : இன்னிசை அளபெடை
* ஒரு சொல்லை வேறுவிதமாக மாற்றுவது : சொல்லிசை அளபெடை
* இயல்பாகவே (எப்போதும்) அளபெடுத்து ஒலிப்பது : இயற்கை அளபெடை

அளபெடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாம். அல்லது, ஒரே வரியில் அடுத்தடுத்து வரலாம். இதை வைத்தும் அவற்றைப் பல வகைகளாகப் பிரிப்பார்கள்.

* இணை அளபெடை
* பொழிப்பு அளபெடை
* ஒரூஉ அளபெடை
* கூழை அளபெடை
* மேற்கதுவாய் அளபெடை
* கீழ்க்கதுவாய் அளபெடை
* முற்று அளபெடை

இந்தப் பெயர்கள் கொஞ்சம் குழப்புவதுபோல் தெரிந்தாலும், இவற்றை ஞாபகம் வைத்துக்கொள்வது மிகச் சுலபம். ஒரே ஒரு சின்னக் கற்பனையைச் செய்துகொண்டால் போதும்.

ஒரு வகுப்பில் இருபத்தெட்டு பையன்கள் இருக்கிறார்கள். அவர்களை வரிசைக்கு நான்கு பேராக மொத்தம் ஏழு வரிசைகளில் நிறுத்திவைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு வரிசையிலும் உள்ள பையன்களை A, B, C, D என்று அழைப்போம். முதல் வரிசையில் A, B இருவரும் ஒரேமாதிரி உடை அணிந்திருக்கிறார்கள். இதற்கு ‘இணை’ என்று பெயர்.

இரண்டாவது வரிசையில், A, C ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்குப் ‘பொழிப்பு’ என்று பெயர்.

மூன்றாவது வரிசையில், A, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு ‘ஒரூஉ’ என்று பெயர்.

நான்காவது வரிசையில் A, B, C மூவரும் ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்குக் ‘கூழை’ என்று பெயர்.

ஐந்தாவது வரிசையில் A, C, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு ‘மேற்க்கதுவாய்’ என்று பெயர்.

ஆறாவது வரிசையில் A, B, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு ‘கீழ்க்கதுவாய்’ என்று பெயர்.

நிறைவாக, ஏழாவது வரிசையில் A, B, C, D நால்வரும் அச்சடித்தாற்போல் ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு ‘முற்று’, அதாவது முழுமை!

இந்த உதாரணத்தில் பையன்களுக்குப் பதிலாக, செய்யுளின் சொற்கள், வரிசைக்குப் பதில் செய்யுளின் அடிகள், ஆடைகளுக்குப் பதில் அளபெடைகள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மேட்டர்.

உதாரணமாக, நாம் மேலே பார்த்த ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்’ என்ற குறளில், முதல், இரண்டாவது சொற்கள் (A, B) அளபெடுத்துள்ளன. ஆகவே, இது ‘இணை அளபெடை’.

வேறொரு பாடலில் ‘பூஉக் குவளைப் போஒது அருந்தி’ என்ற அடியில் முதல், மூன்றாவது சொற்கள் (A, C) அளபெடுத்துள்ளன. ஆகவே, இது ‘பொழிப்பு அளபெடை’. இதைப்போலவே மற்ற அனைத்து அளபெடைகளுக்கும் உதாரணம் சொல்லமுடியும்.

அளபெடைப் புராணம் போதும், அடுத்து, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு இலக்கணத்தைப்பற்றிப் பேசுவோம். அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* செய்யுளிசை அளபெடை (அல்லது) இசை நிறை அளபெடை (சாம்பாருக்கு உப்பு)
* இன்னிசை அளபெடை (பாயசத்துக்கு முந்திரி)
* சொல்லிசை அளபெடை
* இயற்கை அளபெடை
* மரபுக் கவிதைகள், சொல் கட்டுப்பாடுகள், ஓசை
* இணை அளபெடை (A, B)
* பொழிப்பு அளபெடை (A, C)
* ஒரூஉ அளபெடை (A, D)
* கூழை அளபெடை (A, B, C)
* மேற்க்கதுவாய் அளபெடை (A, C, D)
* கீழ்க்கதுவாய் அளபெடை (A, B, D)
* முற்று அளபெடை (A, B, C, D)

0

Share/Bookmark

பொலிவார் : புரட்சி வீரன்

$
0
0

simonபுரட்சி / அத்தியாயம் 15

தொடர் தோல்விகளை உதறித் தள்ளிவிட்டு 1819ம் ஆண்டு பொலிவார் 2500 வெனிசூலா வீரர்கள் கொண்ட ஒரு படையுடன் நியுவா கிரானடாவுக்குப் படையெடுத்துச் சென்றார். கடும் மழைக்காலம். ஆந்திய மலைத் தொடர்களையும் வெள்ளங்களையும் காடுகளையும் கடந்து வீரர்கள் முன்னேறினார்கள். 75 தினங்கள் தொடர்ந்த பயணத்தின் முடிவில் சமதளத்தை அடைந்தபோது களைப்பும் கடும் பசியும் உச்சத்தைத் தொட்டிருந்தது. பல குதிரைகள் செத்து விழுந்திருந்தன. துப்பாக்கிகள் துருவேறிக் கிடந்தன. ஆனால் ஸ்பானிஷ் படைகளை எதிர்கொண்டபோது இவை எதுவுமே பொருட்டில்லை என்பதுபோல் அவர்கள் மூர்க்கத்துடன் போரிட்டனர். கிட்டத்தட்ட 1600 படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நியுவா கிரானடாவை ஆட்சி செய்து வந்த ஸ்பானிஷ் கவர்னர் உயிர் காத்துக்கொள்ள தப்பி ஓடினார். தலைநகரம் பொகோடா பொலிவாருக்காகத் திறந்திருந்தது.

குழுமியிருந்தவர்கள் மத்தியில் பொலிவார் பெருமிதத்துடன் உரையாற்றினார்:

‘… (வீரர்களே) நீங்கள் பதினான்கு மாகாணங்களைக் கொடுங்கோலர்களிடம் இருந்து கைப்பற்றியிருக்கிறீர்கள். அமெரிக்காவை அடிமைப்படுத்திய கொள்ளைக்காரர்களிடம் இருந்து நிலத்தை மீட்டிருக்கிறீர்கள்… ஈடுஇணையற்ற இந்தப் போராட்டத்தை தொடங்கியபோது 200 பேர்கூட நம்மிடம் இல்லை. இப்போதோ ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறீர்கள். அமெரிக்கா முழுவதும் உங்கள் தீரம் பேசப்படும். வடக்கிலும் தெற்கிலும் சுதந்தரமான பாதுகாப்பிடத்தை நீங்கள் உருவாக்குவீர்கள். நமது கொடி, அர்ஜெண்டினா, சிலி, பெரு ஆகிய நாட்டுக் கொடிகளுடன் சேர்ந்து பறக்கும்.’

பொலிவாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று இதனை வரலாறு பதிவு செய்துள்ளது. நியுவா கிரானடா, வெனிசூலா, பனாமா, ஈக்வடார் ஆகியவற்றை உள்ளடக்கிய அகண்ட கொலம்பியா இப்போது ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. புதிய பிரதேசத்தின் ராணுவ சர்வாதிகாரியாகவும் அதிபராகவும் பொலிவார் பொறுப்பேற்றுக்கொண்டார். இப்போதும் பொலிவார் அமைதியடையவில்லை. அவரை அமைதியாக இருக்கவிடும் நோக்கமும் ஸ்பெயினுக்கு இல்லை. பொலிவாரைப் பலவீனப்படுத்தி, வீழ்த்தி மீண்டும் இந்நாடுகளைக் கைப்பற்றிக்கொள்ளும் நோக்கத்தில் உறுதியாக இருந்தது ஸ்பெயின். அதனால்தான் ஒருசில நாடுகளில் வெற்றி பெறுவது போதாது, தென் அமெரிக்கக் கண்டம் முழுவதுமாக ஆதிக்கத்தின பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் என்றார் பொலிவார். விடுதலை என்பது நிபந்தனையற்றது, முழுமையானது. பகுதியளவிலான விடுதலை என்பது அவரைப் பொருத்தவரை அர்த்தமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.

தொடர்ந்து தெற்கு நோக்கி முன்னேறிய பொலிவார் மேலும் சில வெற்றிகளை ஈட்டி, ஈக்வடாரை முழுவதுமாக விடுவித்தார். பெருவில் கிடைத்த வெற்றியை 1824ல் உறுதி செய்தார். ஸ்பெயின் தன் கண்முன்னால் தென் அமெரிக்காவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தது. பொலிவாரின் படைகள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே  இருந்தன. ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களைக் காவல் காத்துக்கொண்டே புதிய பிரதேசங்களை அவர்கள் விடுவிக்கவேண்டியிருந்தது. வெற்றிக்கு ஒரு போர்; வெற்றியை உறுதி செய்ய இன்னொரு போர்; கலகக்காரர்கள் ஊடுருவலைத் தடுக்க ஒரு போர்; எல்லைகளைப் பலப்படுத்த மீண்டுமொரு போர் என்று சுழற்சி முறையில் ஓயாமல் இயங்கவேண்டியிருந்தது. அவ்வப்போது தோற்றம் காட்டிக்கொண்டே இருந்தாலும் பொலிவார் கனவு கண்ட முழு அமைதி இன்னமும் வந்தபாடில்லை.

பல லட்சக்கணக்கானவர்களுக்கு பொலிவார் ஒரு வலுவான புரட்சியாளராக இப்போது பரிச்சயமாகியிருந்தார். நீங்காப் புகழுடன் சேர்ந்து பொறாமையும் வஞ்சகமும் துரோகமும்கூட பொலிவாரைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தன. அவருடைய அதிகாரத்தை வீழ்த்த உள்ளுக்குள் இருந்தே பலர் முயற்சி செய்தபடி இருந்தனர். நொடிப் பொழுதும் சோராமல் எச்சரிக்கையுணர்வுடன் இருக்கவேண்டிய அவசியத்தால் மனரீதியிலும் உடல்ரீதியிலும் பொலிவார் களைப்படைந்தார். 1828ல் ஒருமுறை பொகோடாவில் தனது இருப்பிடத்தில் பொலிவார் உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு குழு உள்ளே நுழைந்து அவரைக் கொல்லமுயற்சி செய்தது. சத்தம் கேட்டு பால்கனிக்கு விரைந்து அங்கிருந்து குதித்து வீதியில் ஓடி, ஒரு பாலத்தின் அடியில் பொலிவார் மறைந்திருக்கவேண்டியிருந்தது.

அகண்ட கொல்பியாவை அமைதியாக வைத்திருக்க அடுத்த இரு ஆண்டுகளை அவர் கழிக்கவேண்டியிருந்தது. அப்போதும்கூட அமைதிக்கான வழி தட்டுப்படவேயில்லை என்னும் நிலையில் வாழ்வில் முதல்முறையாக பொலிவார் தனது போராட்டத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். 1830ம் ஆண்டு பொலிவார் தனது பதவிகளைத் துறந்தார். பொகோடாவைவிட்டு வெளியேறி மேற்கில் கரீபியன் கரைப் பகுதியை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார். ஒரு வகையில் தன்னைத் தானே பொலிவார் நாடு கடத்திக்கொண்டுவிட்டார்.

அந்நியர்களிடம் இருந்து விடுதலை என்பது மட்டுமே பொலிவாரின் கனவாகவும் பணியாகவும் இருந்திருந்தால் அவரை ஒரு திறமையான ராணுவ ஜெனராக மட்டுமே சரித்திரம் மதிப்பிட்டிருக்கும். பொலிவார் ராணுவ வெற்றிகளைத் தாண்டி சமுதாய மாற்றங்கள் குறித்தும் சிந்தித்தார். உயர் குடிகள், கிரியோல்கள், சாமானியர்கள், அடிமைகள் என்று மக்கள் பலவாராகப் பிரிந்து கிடப்பதும் ஒவ்வொருவரும் தனித்தனியே சுதந்தரம் வேண்டி போராடுவதும் பலனற்றது என்றார் பொலிவார். அனைவருடைய போராட்டங்களும் ஒன்றிணைக்கப்படவேண்டும் என்னும் நோக்கில் அவர் தம் படைகளை வளர்த்தெடுத்தார். இனரீதியிலான பாகுபாடுகளை ஏற்க மறுத்து சுதந்தரம், சமத்துவம் ஆகியவற்றைக் கோஷங்களாக முன்வைத்தார்.

ஸ்பெயின் தனது ஆளுகைக்கு உட்பட்ட காலனிகளில் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளைக் கறாராக கடைபிடித்து வந்தது. வெள்ளையர் அல்லாதோர் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். வெள்ளையும் கறுப்பும் கலந்த மாநிறம் கொண்டிருந்த அமெரிக்க இந்தியர்கள் பார்டோ என்று அழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். ‘மிகவும் மோசமான நிலையில் அழுத்தி வைக்கப்பட்டுள்ள பார்டோக்களுக்குப் புரட்சி சரியான வாய்ப்பையையும் உரிமையையும் அங்கீகாரத்தையும் வழங்கும்’ என்றார் பொலிவார். சொன்னதோடு நில்லாமல் தன் படைகளில் பார்டோக்களை அதிக எண்ணிக்கையில் அவர் இணைத்துக்கொண்டார்.  வெனிசூலாவில் பெரும்பாலானோராக இவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்டோக்களுக்கு அடுத்த நிலையில் அடிமைகள் இருந்தனர். ‘விடுதலையை நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு புரட்சிப் படை அடிமைகளை வைத்திருந்தால் அது பைத்தியக்காரத்தனம்’ என்று சீறினார் பொலிவார். 1819ம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில், வெனிசூலாவைக் கவ்விப் பிடித்திருக்கும் இருளான அடிமைத்தனத்தை உடனடியாக விலக்கவேண்டும் என்று பொலிவார் அறைகூவல் விடுத்தார். முதல் அடியை அவரே எடுத்து வைத்தார். தன்னிடம் இருந்த அடிமைகள்அனைவரையும் பொலிவார் விடுவித்தார். 1811ல் வெனிசூலாவில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. சட்டப்படி அடிமைத்தனத்தைத் தடை செய்தால் போதாது, மனத்தளவிலும் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படவேண்டும் என்று இறுதிவரை பிரசாரம் செய்தார்.

எதிரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை தன் படை வீரர்களுக்குப் பிரித்துகொடுத்தார் பொலிவார். அவர்களை ஆயுதம் தாங்கிய மக்கள் என்று வர்ணித்தார். அக்டோபர் 1817ல் இது தொடர்பாக ஒரு தனிச்சட்டத்தையும் கொண்டுவந்தார். ‘ஒவ்வொரு போர் வீரனும் சொத்துடைய குடிமகனாகத் திகழவேண்டும்.’ அதே போல் பெருவில் உள்ள ஏழை அமெரிக்க இந்தியர்களுக்கும் நிலம் அளிக்கச் செய்தார். பொலிவாரின் முயற்சிகள் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தன.

பொலிவாரின் பெயரைத் தாங்கி நிற்கும் பொலிவியாவின் அரசியலமைப்புச் சட்டம் அவராலேயே எழுதப்பட்டது. 1826ல் இச்சட்டத்தை பொலிவிய காங்கிரஸின் முன்வைத்து உரையாற்றியபோது, தென் அமெரிக்காவை அச்சுறுத்தும் இரண்டு மிருகத்தனமான எதிரிகளை அவர் குறிப்பிட்டார். அவை கொடுங்கோன்மை மற்றும் அராஜகவாதம். ‘ஸ்பானிஷ் அமெரிக்கன் ஒவ்வொருவனும் தான் யாருக்கும் கட்டுப்படவேண்டியதில்லை என்று கருதுகிறான். இந்த மனோபாவத்தால்தான் சமூகத்தில் பிரிவுகளும் ராணுவ எழுச்சிகளும் மாகாணப் புரட்சிகளும் தோன்றின. ’

பொலிவாரின் அரசியல், சமூகச் சிந்தனைகள் எப்படி இருந்தன என்பதை அவர் வரைந்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் அறிந்துகொள்ளமுடியும். புதிய குடியரசு ஆட்சிமுறையில் அதிபர் சட்டமன்றத்தால் நியமிக்கப்படுவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிக்கலாம்; தனக்கு அடுத்து வரவேண்டியவரை இவரே நியமிக்கலாம். சூரியனைப் போல் அதிபர் மையமாக இருந்து அனைத்தையும் இயக்குவார். மக்களுக்கு சுதந்தரம், சமத்துவம், பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்படும். சுதந்தரமான, வலிமையான நீதிமுறை நிலவும். சலுகைகள் என்று யாருக்கும் எதுவுமில்லை. அடிமைகள் விடுவிக்கப்படுவார்கள். தேர்தல்கள் அநாவசியமானவை. அவற்றால் பலன் எதுவுமில்லை.

முற்போக்கான பல கூறுகளைக் கொண்டிருந்தபோதும் அதிபருக்கு பொலிவார் வழங்கிய உரிமைகள் அதிகபட்சமானவை என்பதில் சந்தேகமில்லை. அதே போல் அகண்ட கொலம்பியாவின் அரசியல் தலைமையோடு சேர்த்து ராணுவத் தலைமையையும் பொலிவார் ஏற்றுக்கொண்டதும் ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை முன்னிறுத்தியதும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்கள். அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபோதும், அதை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டபோதும் பொலிவார் ராணுவ முயற்சிகளைக் கடைசிவரை கைவிடவில்லை.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். பொலிவாரின் பலம் மட்டுமல்ல அவருடைய பலவீனத்தின் அடிநாதமாகவும் மக்களின் நலனே இருந்தது. அளவற்ற அதிகாரத்தைத் தன்னிடம் குவித்துக்கொண்டபோதும் அதைக் கொண்டு மக்களுக்குச் சுதந்தரத்தையும் சமத்துவத்தையும் அளிக்கமுடியுமா என்பதைப் பரிசோதிப்பதில்தான் அவர் ஆர்வம் காட்டினார்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்திய முன்னணி தலைவர்களில் ஒருவராக பொலிவார் நவீன வரலாற்றில் இடம் பிடிக்கிறார். இருந்தும், பொலிவாரை ஒரு தேசியவாதி என்று அழைக்கமுடியாது என்கிறார் ஜான் லிஞ்ச். காரணம் தேசியவாதம் என்பதில் பிரிவினைவாதமும் அடங்கியிருக்கிறது. பொலிவார் தன் மக்களைப் பிற நாடுகளிடம் இருந்து தனியே பிரித்தெடுக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த தென் அமெரிக்காவும் தங்கள் எல்லைகளைத் துறந்து ஒரே தேசமாக ஒன்றுபடவேண்டும் என்று கனவு கண்டார். அகண்ட கொலம்பியாவை (வெனிசூலா, நியுவா கிரானடா, ஈக்வடார்) உருவாக்கி அத்துடன் பெருவையும் பொலிவியாவையும் அவர் இணைக்க விரும்பினார். எதிர்காலத்தில், தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒரே நாடாக இணையும் என்று நம்பினார்.

இந்தக் கனவு மட்டுமல்ல பொலிவாரின் பல கனவுகள் நிறைவேறவில்லை. மிகுந்த விருப்பத்துடன் அவர் கொண்டு வந்த பல சட்டங்கள் ஏட்டளவில் சுருங்கிவிட்டன. பொலிவாரின் சமூகம் அவர் அளவுக்கு முற்போக்கானதாக இல்லை என்பது ஒரு முக்கியக் காரணம். பொலிவார் கொண்டுவர நினைத்த மாற்றங்கள் தங்களுடைய நலன்களைப் பாதிப்பதாக அவர்கள் அஞ்சினர். இன்னொரு காரணம், ஜான் லிஞ்ச் குறிப்பிடுவது போல் பொலிவார் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருந்தார். போர்முனையில் தன் எதிரிகளை அழித்தொழித்த பொலிவாரால் இத்தகைய பிற்போக்காளர்களை இறுதிவரை வென்றெடுக்கமுடியவில்லை.

தன்னை எப்படி மதிப்பிடவேண்டும் என்பதை பொலிவாரே ஓரிடத்தில் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ‘புரட்சிகளையும் அவற்றில் பங்கேற்றவர்களையும் புரிந்துகொள்ளவேண்டுமானால் மிக அருகில் சென்று காணவேண்டும். மதிப்பிடவேண்டுமானால் தொலைவில் இருந்தபடி பார்க்கவேண்டும்.’ இதன்படியே, பொலிவாரை அவர் வாழ்ந்த காலத்துக்கே சென்று மிக அருகில் கண்டாலும் சரி, நிகழ்காலத்தில் நின்றபடி தரிசித்தாலும் சரி, அனைத்து குறைபாடுகளைத் தாண்டி சில விஷயங்கள் பிரகாசமாகத் தெரிகின்றன. அந்நிய ஆதிக்கத்தைத் தன் வாழ்நாளின் இறுதிவரை தீரமாக எதிர்த்திருக்கிறார். தோல்விகளைக் கண்டு துவளாமல் படைகளைத் திரட்டி வழிநடத்தியிருக்கிறார். மக்களை நேசித்திருக்கிறார். அவர்களுக்குச் சுதந்தரம் பெற்றுத் தரவேண்டும் என்று துடித்திருக்கிறார். சுதந்தரத்தின் தேவைகளையும் போதாமைகளையும் ஒருசேரப் புரிந்து வைத்திருக்கிறார். ‘மக்களின் ஒரு பிரிவினரை அடிமைப்படுத்தி வைத்திருப்பது எரிமலையின்மீது ஏறி நிற்பதற்குச் சமமானது. அடிமைத்தனம் அனைத்து அழுத்தங்களையும்மீறி வெடித்து கிளம்பும், விடுதலை பெறும்’ என்று முழங்கியிருக்கிறார். மொத்தத்தில், விடுதலை வேட்கை கொண்ட ஒரு புரட்சி வீரனாக வாழ்ந்திருக்கிறார், வீழ்ந்திருக்கிறார்.

XIR158240எனவேதான் அவர் செய்தது, செய்யத் தவறியது இரண்டுமே நமக்கு இன்று முக்கியமாகப் படுகிறது. தான் கனவு கண்டபடி தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணையவில்லை என்பதையும் தன் கனவு நிறைவேறவில்லை என்பதையும் பொலிவார் நன்கு அறிந்திருந்தார். இதுவே அவரை அதிகம் வேதனைக்குள்ளாக்கியது. இன்னொரு பக்கம் காசநோய் அவரை விடாமல் உலுக்கிக்கொண்டிருந்தது. தான் பலமிழந்துகொண்டிருப்பது அவரைத் துன்பத்துக்குள்ளாக்கியது. நாற்பது வயதைத் தொடும்போதே மூப்படைந்தவர் போல் பொலிவார் காணப்பட்டதாகச் சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். நீண்ட வாழ்நாளில் ஒரு மனிதன் அனுபவிக்கவேண்டிய வெற்றிகளையும் தோல்விகளையும் போர்களையும் போராட்டங்களையும் மிகக் குறுகிய காலகட்டத்தில் பொலிவார் சந்தித்து முடித்துவிட்டதால் அவர் விரைவிலேயே மூப்படைந்திருக்கக்கூடும். தனது 47வது வயதில், 1830ம் ஆண்டு பொலிவார் மரணமடைந்தார்.

சேகரித்து வைத்திருந்த பல மில்லியன் டாலர் சொத்துகளை பொலிவார் முழுமுற்றாகச் செலவழித்து முடித்திருந்தார். இறக்கும்போது அந்த லிபரேட்டரிடம் ஒன்றுமேயில்லை. நண்பர்கள் ஒன்றிணைந்து பணம் சேகரித்துதான் இறுதிச் சடங்குகளைச் செய்துமுடித்தார்கள். உலர்ந்துபோன மெலிந்த அவர் உடலுக்குக்கூட வேறு ஒரு நண்பரின் சட்டையை வாங்கித்தான் அணிவித்தார்கள்.

(அடுத்த பகுதி : ஒரு மராட்டியப் புரட்சியாளரின் கதை)

Share/Bookmark

சுமேரியர் அறிவியல் முன்னேற்றம் – 2

$
0
0

sumerianபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 9

வானியல்

உலகத்தில் சில சங்கமங்கள் பிரமிக்கவைப்பவை, நம்ப முடியாதவை. ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் 1: 2 சதவிகிதத்தில் கலக்கும்போது, இன்னொரு வாயு பிறப்பதில்லை. இவை இரண்டின் வடிவங்களுக்கே தொடர்பில்லாத திரவ வடிவம் வருகிறது. அதே போல் இன்னொரு சங்கமம். சுமேரியர்களின் மத நம்பிக்கைகளும், கணித அறிவும் சங்கமித்தன. பிறந்தது ஒரு புத்தம் புதுத் துறை – வானியல்!

அடிக்கடி மழை பெய்தது. கண் பார்வையைப் பறித்துவிடுமோ என்று பயப்படவைக்கும் பளிச் மின்னல், காதுகளைச் செவிடாக்குமோ என மிரட்டும் இடி, பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடுவோமோ என அஞ்சவைக்கும் மழை. என்ன செய்வதென்றே தெரியாத மக்கள் மழை, இடி, மின்னல் போன்ற தங்களால் கட்டுப்படுத்தமுடியாத அத்தனை இயற்கை சக்திகளையும் கடவுள்கள் ஆக்கினார்கள். தீங்குகள் செய்யாதிருக்கும்படியும், தங்களைக் காப்பாற்றும்படியும் இவர்களிடம் வேண்டிக்கொண்டார்கள். இந்தக் கடவுகள்கள் காண முடியாத தூரத்தில், விண்வெளியில் இருப்பதாகக் கற்பனை செய்தார்கள். இந்தக் கற்பனை, கர்ண பரம்பரைக் கதைகளானது. ஒரு கட்டத்தில் மக்கள் மனங்களில் நம்பிக்கைகளாகவும் இவை உருமாறின.

கடவுள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆசை பலருக்கு வந்தது. பிரபஞ்சம், திசைகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று பல்வேறு கோணங்களில் தேடல் தொடங்கியது. இந்தத் தேடலில் தங்கள் கணித அறிவைக் கலந்தார்கள். இந்தச் சங்கமத்தில் வானியல் பிறந்தது. பௌர்ணமி, அமாவாசை, கிரகண தினங்கள், இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes), சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்களான உத்தராயணம், தட்சிணாயனம் (Solstices) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.

வரலாற்றின் ஆரம்ப காலங்களில், இரவும், பகலும் சந்திரச் சுழற்சியால் வருகின்றன என்று நம்பினார்கள். இதனால், சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப்படையில், நாட்காட்டிகளை அமைத்தனர். அதில்  354 நாட்களும், 12 மாதங்களும் இருந்தன. இவற்றுக்குச் சந்திர காலண்டர்கள் * என்று பெயர்.

(* இன்று உலகம் முழுவதும் சூரிய காலண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. சந்திரக் காலண்டர்கள், சூரியக் காலண்டர்களாக மாறிய வளர்ச்சிக்குப் பின்னால், பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர்:

டாலமி (Ptolemy)

கி.பி. 110 – கி.பி. 170 வரை வாழ்ந்த கிரேக்க நாட்டு விண்ணியலாளர், கணித மேதை. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோணத்தில் பதிக்கப்பட்டிருப்பதாகவும், பகல், இரவு, மாதம் ஆகியவற்றை அளிக்கும் விதமாக இவை சுழல்வதாகவும் கூறினார். அடுத்த சுமார் 1500 ஆண்டுகளுக்கு, வானியலில் டாலமியின் கொள்கைதான் வேதம்.

நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus)

கி.பி. 1473 முதல் கி.பி. 1543 வரை வாழ்ந்த போலந்து நாட்டு வானியல் அறிவியலாளர்.  டாலமியின் கொள்கையிலிருந்து உலகத்தை மாற்றியவர். கிறிஸ்தவ மதப் பாதிரியாராக இருந்தவர்.  கணிதம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.  கோப்பர்நிக்க முறை என்று அழைக்கப்படும் இவருடைய கொள்கை சூரியமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, பூமி தனது அச்சில் தினமும் சுழல்கிறது. நிலையாக இருக்கும் சூரியனை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. உலக வானியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், நாம் இன்றும் பின்பற்றுவதும், காப்பர்நிக்கஸ் போட்டுச் சென்றிருக்கும் ராஜபாட்டைதான்.

மருத்துவம்

சுமேரியர்கள் மருத்துவத் துறையில் கண்டிருந்த முன்னேற்றங்கள் பற்றி ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அஷூர்பானிப்பால் (Ashurbanipal) என்னும் மன்னர், மெசபடோமியாவின் ஒரு பகுதியான அஸிரியாவை (Assyria) கி.மு. 683 முதல் கி.மு. 627 வரை ஆட்சி செய்தார். இவர் அறிவுத் தேடல் கொண்டவர். தன் அரண்மனையில் பெரிய நூலகம் வைத்திருந்தார். இங்கே, 20,000 நூல்கள் வைத்திருந்தார்.  க்யூனிஃபார்ம்  என்னும் உளி மொழியில் எழுதப்பட்ட களிமண் பாளங்கள் இவை.

எதிரிகள் அஸிரியா மீது போர் தொடுத்தார்கள். நூலகத்துக்குத் தீ வைத்தார்கள். ஓலைச் சுவடிகளாகவோ, காகிதமாகவோ இருந்திருந்தால், இந்த அறிவுப் பொக்கிஷம் முழுக்கச் சாம்பலாகியிருக்கும். மாறாக, நெருப்பில் சுடப்பட்ட இந்தப் பாளங்கள் ஓடுகளாயின. இருபதாயிரம் பாளங்களில், பல்லாயிரம் பாளங்கள் அகழ்வாராய்ச்சியில் ஓடுகளாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் 660 பாளங்கள் சுமேரியரின் மருத்துவ அறிவுக்கு அற்புத ஆதாரங்கள்.

சுமேரியரின் மருத்துவ அணுகுமுறையில் மூட நம்பிக்கைகளும் அறிவியலும் ஒன்றாகக் கலந்துள்ளன. உடலின் பாகங்கள் பற்றிய உடற்கூறு அமைப்பியல் (Anatomy) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால் தலைவலி, கழுத்து வலி, வயிற்று வலி, மூட்டு வலி ஆகிய உபாதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், இந்தச் சுகவீனங்கள் துர்தேவதைகளால் வருகின்றன என்று முடிவு கட்டினார்கள். தலைவலி, கழுத்துவலி, மூட்டு வலி போன்ற ஒவ்வொரு உபாதைக்கும் ஒவ்வொரு துர்தேவதை காரணம். அந்தந்த தேவதைக்குப் பரிகாரங்களும், பூசைகளும் நடத்தினார்கள். அதே சமயம், சடங்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், செடிகள், பூக்கள் ஆகிய இயற்கைப் பொருட்களால் மருந்துகள் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கஷாயங்கள் வெறுமனே, நோயின் வெளிப்படை அடையாளங்களை நீக்கும் சிகிச்சைகளாக இல்லாமல், அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பவையாக இருந்தன.

உடல் காயங்கள் அடிக்கடி மக்கள் சந்தித்த பிரச்னை. இதற்கு, சில மருந்து செடிகளின் சாறுகளையும், உப்புகளையும் சேர்த்து, ஒருவிதப் புண் கட்டுத் துணியைச் (Bandage) சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். ரத்தக் காயங்களுக்கு மூன்று படிநிலை சிகிச்சையைக் கையாண்டார்கள். முதலில் அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவதாக மருந்து போடவேண்டும். மூன்றாவதாகக் கட்டுத் துணியால் காயத்தை மூடவேண்டும்.

மருத்துவர்கள் இரண்டு வகையினர். மாந்திரீகங்களால் சிகிச்சை அளிப்பவர்கள் மந்திரவாதிகள். கஷாயமும் களிம்புகளும் தரும் அறிவியல் அணுகுமுறை கொண்ட மருத்துவர்கள் இரண்டாம் வகையினர். இந்த இரண்டு முறைகளையும் மக்கள் பின்பற்றினார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அறுவை சிகிற்சைகளும் நடைமுறையில் இருந்தன. அதிலும், ஒரு களிமண் பாளம், மண்டையோட்டில் செய்யும் அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கிறது. கிருமி நாசினியாக அவர்கள் எதைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா? நல்லெண்ணெய்!

பொறியியல்

உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள், சக்கரங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சுமேரியர்கள் சொந்தக்காரர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை உருவாக்கினார்கள்.

நாகரிக மறைவு

கி.மு. 6000 முதல், அதாவது 8000 ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டிப் பறந்த நாகரிகம், கற்பனையே செய்யமுடியாத அளவு முன்னேற்றங்கள் கண்டிருந்த கலாசாரம் கி.மு. 600 வாக்கில் காணாமல் போனது. நமக்குக் கிடைத்திருக்கும் சொற்ப சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போதே இந்நாகரிகம் எவ்வளவு பிரமாண்டமாக அப்போது இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம். உண்மையில் சுமேரியர்களின் வாழ்க்கைமுறை இன்றைய நாடுகளின் கலாசாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

சுமேரிய நாகரிகம் எப்படி மறைந்திருக்கும்? சுமேரிய நாகரிகத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. ஆரம்ப காலம் – கி.மு. 6000 முதல் கி.மு. 2600 வரை
2. வளர்ச்சிக் காலம் – கி.மு. 2600 முதல் கி.மு. 1750 வரை
3. சரிவு / மறைவு காலம் – கி.மு. 1750 முதல் கி.மு. 600 வரை

சுமேரியர்கள் உருவாக்கிய நாடு, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடு. ஒவ்வொரு நகரத்துக்குமிடையே கால்வாய்கள் இருந்தன. இந்தக் கால்வாய்கள் பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், மனோரீதியாகவும் மக்கள் மனங்களில் தூரத்தை ஏற்படுத்தின. நாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு மறைந்து, என் நகரம், உன் நகரம் என்னும் மனப்பாங்கு தோன்றியது. இந்த ஒட்டுறவின்மையின் அடுத்த கட்டம் மன வேறுபாடுகள், சச்சரவுகள், சண்டைகள். பெரும்பாலான சச்சரவுகளுக்கு மண்ணாசையும், அடுத்தவர் கால்வாய்களைத் தம்முடையதாக்கும் ஆசையும்தான் காரணம்.

hammurabiநகரங்களுக்கு நடுவிலான முதல் போர் கி.மு. 3200 வாக்கில் நடந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள். ஆனால், கி.மு. 2500ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் போர்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாயின. நகரங்கள் அணி சேர்வதும், அணிகள் மாறுவதும் வாடிக்கையானது. பலசாலி நகரங்கள் வலிமை இல்லாதவர்களைத் தோற்கடித்தார்கள், தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். கி.மு. 2340 முதல் கி.மு. 2316 வரையிலான காலகட்டத்தில் கிஷ், உர், உருக், லகாஷ் ஆகிய நகரங்கள் போர் வெற்றிகளால் பரிணாம வளர்ச்சி பெற்று குட்டி சாம்ராஜ்ஜியங்களாயின.

இந்தக் குட்டி நகர சாம்ராஜ்ஜியங்களை இணைத்து ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தவர் ஹமுராபி மன்னர். அவருக்குப் பின் வந்த மன்னர்களுக்கு, சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காக்கும் திறமை இருக்கவில்லை. இதனால் உள்நாட்டுச் சண்டைகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும் ஏற்பட்டன. சுமேரியா சரியத் தொடங்கியது. கி.மு. 330ல் மாவீரன் அலெக்சாண்டர் மெசபடோமியாமீது போர் தொடுத்து வென்றார். சுமேரியர்களைக் கிரேக்க ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இன்னொரு பக்கம், சுமேரியாவை தாங்கிப் பிடித்து வந்த விவசாயமும் பருவ நிலை மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களாலும் நசிவடையத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு வறட்சி தொடர்ந்தது.  சுமேரியா காணாமல் போகத் தொடங்கியது.

நம் வாழ்க்கையைச் செழுமையாக்கிய சுமேரியர்களுக்கு மனமார நன்றி கூறி விடை பெறுவோம். நம் வணக்கத்துக்குரிய மூதாதையர்களாக சீனர்களைச் சந்திக்கத் தயாராவோம்.

0

Share/Bookmark

பார்ப்பனர்களும் பறையர்களும்

$
0
0

brahmanism_GodsOfTheIndianTriadபறையர்கள் /அத்தியாயம் 16

ஹென்றி வொயிரகட் என்ற ஆங்கிலேயப் பேராயர் தென்னிந்தியாவின் ஊர்த் தெய்வங்கள் என்ற நூலில் ‘தென்னிந்தியாவில் உள்ள பறையர் சமுதாயத்தினர் தொடக்கக் காலத்தில் திராவிடர்களுக்குள் மூத்த முன்னணிச் சமுதாயமாக இருந்தனர். அவர்களை உச்ச இடத்திலிருந்து கீழே தள்ளவும், அடிமைகளைப் போல் இழிவுப்படுத்தவும் பிராமணர் ஆதிக்கமே பயன்படுத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும் எம்.ஜே.வுட்ஹவுஸ் என்ற தொல்பொருள் ஆய்வாளர் தனது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற நூலில் ‘பிராமணிய சாதிமுறை இங்கு நுழைக்கப்பட்டபோது இப்போது தென்னிந்தியாவில் அடிமைக்குடிகளாக அழுத்தப்பட்டவர்கள் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார்கள். உண்மையாகவே அவர்கள் நிலக்கிழார்களாகவும் இருந்தனர். பழங்காலத்தில் அவர்கள் சமுதாயத்திலும் நாட்டிலும் பெற்றிருந்த பெருமை, சிறப்புரிமைகள் என்ற வடிவில் காணப்படுகின்றது. மிக ஆர்வத்துடனும் அந்த சிறப்புரிமைகள் காக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் அந்த உரிமைகள் எந்த அடிப்படையில் வந்தன என்பது மறக்கப்பட்டதுடன் தெளிவுபடுத்தாமலும் போயிருக்கின்றன. மறைந்த பழைய சமுதாய அமைப்பில் அவர்கள் பெற்றிருந்த சிறப்புரிமைகள் இன்னும் தொடர்ந்து வாழ்கின்றன. உச்சத்திலிருந்து நீண்டநாளுக்கு முன்பு புறப்பட்டுப் போனவர்களின் நிழல்கள் அவை. ஒரு காலத்தில் இந்த மக்களின் முன்னோர்கள் உயர்ந்த வாழ்வு பெற்றிருந்தனர். இன்றைக்கு ‘நாங்கள் உயர்ந்த சாதிகள்’ என்ற கர்வத்துடன் கூறிக்கொள்பவர்கள் அன்று அந்த உயர்வு வாழ்வு பெற்றிருந்த சமுதாயப் பெருமக்களை நாடி தமது வாழ்க்கையை ஓட்ட ஒண்டி வாழ்ந்தவர்கள். அப்படி ஒரு காலத்தில் ஒண்டி வாழ்ந்தவர்கள் இன்று அவர்களைத் தொட்டாலும் தீட்டு எனப் பண்பின்றிச் சொல்லவும் தயங்குவதில்லை.’ (Slavery in the Tamil Country, Prof. Manikkam, p.22). என்று கூறுகிறார்.

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து இன்றைய ஒடுக்கப்பட்ட சமுதாயமான பறையர் சமுதாயத்தினர் பழங்காலத்தில், சமுதாயத்தில் மதிப்பும் பெருமையும் வாய்ந்த இடத்தைப் பெற்று வாழ்ந்திருந்தனர் என்பதை உணர முடியும்.

தந்திரமாக, ஒழுக்கங்கெட்ட சில தமிழ் அரசர்களையும், காசுக்கும் பதவிக்கும் விலைபோகும் சில தமிழர்களையும் பயன்படுத்தியே பண்பாட்டுக் களத்தில் வெல்ல முடியாத மிகப்பெரிய மூத்த தமிழ்ப்பறையர் சமுதாயத்தைப் பார்ப்பனர்களால் வீழ்த்த முடிந்தது.
பார்ப்பனர் தமது வருணாசிரம சாதி முறையைப் புகுத்தி வலுவாக வாழ்ந்திருந்த தமிழ்ப் பெருமக்களைப் பிரித்து சிதறவைக்க முனைந்தனர். தமிழகத்தின் மூத்தத் தமிழ்க்குடியினரான பெருமைமிகு பறையர் சமுதாயம் தமிழ்ப் பண்பாடுகளை உயரப்பிடித்துக் கொண்டு தம்முடன் ஒத்துழைத்த நல்ல சில தமிழ்க்குடிகளாகவும், நல்ல தமிழ்ப்பண்பாளர்களாகவும் இருந்தவர்களுடன் சேர்ந்து வருணாசிரம சாதிமுறையைப் புகுத்தித் தென்னிந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். பறையர்-பார்ப்பனர் பண்பாட்டு மோதலில் பார்ப்பனர் கை ஓங்கியது. அதற்குப் பல காரணங்களில் தமிழர்களில் பலர் அந்தக் கொடிய சாதிமுறையை எதிர்ப்பதைக் கைவிட்டு ஏற்றுக் கொண்டதே முக்கியக் காரணமாகும்.

இன்றும் உலகில் ஆங்கில அகராதிகளிலும் பறையர்-பார்ப்பனர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வரலாற்றில் அன்று ஏற்பட்ட பண்பாட்டு மோதலின் விளைவே அகராதிகளிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. இன்று உலகில் உன்னதமாக வாழ்ந்து வீழ்த்தப்பட்டவர்களைப் பறையர் என்றே குறிப்பிடும் வழக்கம் உருவாகியுள்ளது. நியாயமற்ற எதையாவது கையாண்டு ஆதிக்கம் பெறுவர்களைப் பிராமணர் என்றும் அழைக்கின்றனர்.

தமிழகராதியில் ‘பறையன்’ என்ற சொல்லுக்குப் புரோகிதன் அல்லது வழிபாடு செய்பவன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில், காதணி விழா, பூப்பு நீராட்டு விழா, மணவிழா முதலிய குடும்ப விழாக்களிலும், இறப்பு நிகழ்ச்சிகளிலும் இசைவாணர்கள் அல்லது பறை என்னும் இசைக்கருவிகளை முழக்குபவர்கள் தவறாது இடம் பெறுவர். இசைவாணர்கள் இன்றைய சாதி அமைப்புப் படி ‘பறையன்’ என்ற இனத்தவராவர்.

பண்டைக் காலத்தில் இசைக்குடிகளுக்குரிய சிறப்புச் செயலால் பெருமையுடன் அழைக்கப்பட்ட ‘பறையர்’, நால்வருணப் பாகுபாட்டின்படி தீண்டத்தகாத சாதி இந்துவாகி, ‘பறையர்’ என்பது பிறவியினால் பெற்ற இழிவானப் பெயராக நின்று நிலைத்துவிட்டது. பரம்பரைக் களங்கம் தன்மீது படிந்திருப்பதை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

‘விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை; பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!” என்று பாரதியார் பறையர் விடுதலைப் பற்றிப் பாடினாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை.

உலக உயிர்களிடையே உயர்வாகக் கருதப்படும் மனிதர்களிடம் மட்டும் காணப்படும் சாதியப் பிரிவினைகளால் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் பழக்கம் மெல்ல, மெல்லக் கருக்கொண்டு வளர்ந்து ஆழ வேரூன்றி அழிக்க முடியாத விஷ விருட்சமாக இன்று வளர்ந்து நிற்கின்றது.

இசைத்துறையில் மகோன்னத நிலையில் இருந்த பறையரும், பாணரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்த இரு தமிழ்க்குடிகளும் இசைத்துறையிலிருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

திராவிட இனத்தின் சிறப்பும் செல்வாக்கும் மிக்க தமிழ்க்குடி என உலக ஆங்கில அகராதிகள் வர்ணிக்கும் பெருமைமிகு பறையர் சமுதாயம் கோயில்களிலும் கலைகளிலும் அரசிலும் சமுதாயத்திலும் முதலிடம் பெற்றிருந்தனர் என்பது வரலாறு. ஆரியரின் இன ஒதுக்கல் கொள்கை வலிந்து புகுத்தப்பட்டதால் பறையர் சமுதாயம் பெற்றிருந்த இடங்கள் பறிக்கப்பட்டு முழுமையாக ஒதுக்கப்பட்டனர். இப்படி இன ஒதுக்கல் கொள்கையால் பல பெருங்கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாறு தெளிவாகக்காட்டுகின்றன.

0

Share/Bookmark


நரேந்திர மோடியின் கதை : தொடக்கம்

$
0
0

narendra-modi-the-man-the-times-400x400-imadjbh9uqqry72kநரேந்திர மோடி குறித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள இரு நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நூல், நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய Narendra Modi : The Man, The Times.  இரண்டாவது, கிங்ஷுக் நாக் எழுதிய The NaMo Story. முகோபாத்யாய், நாக் இருவருமே குஜராத் அரசியல் குறித்தும் மோடி குறித்தும் பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர்கள். மோடியின் அரசியல் வாழ்க்கையோடு சேர்த்து குஜராத்தின் சமூக, அரசியல் வரலாறையும் பாஜக வளர்ந்த கதையையும் இந்திய அரசியல் களத்தில் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்கின்றன இந்த நூல்கள்.

முகோபாத்யாய், தி எகனாமிக் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், அவுட்லுக், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.  குஜராத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளும் நேர்காணல்களும் மேற்கொண்டு, மோடியிடமும் உரையாடி தனது புத்தகத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். கரன் தாப்பர் செய்ததைப் போல் 2002 குறித்து சங்கடமான கேள்விகள் எதையும் முகோபாத்யாய் மோடியிடம் முன்வைக்கவில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார். மோடியிடம் என்ன கேட்கவேண்டும், என்ன கேட்கக்கூடாது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்ட பிறகே தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். மோடியை இதற்கு முன்பே நிலஞ்சன் முகோபாத்யாய் வேறு சில சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்திருக்கிறார், உரையாடியிருக்கிறார் என்றபோதும் குஜராத்தின் முதல்வரான பிறகு அவரைச் சந்திப்பது இதுவே முதல் முறை.

வேறு பலரும்கூட குறிப்பிட்டுப் பாராட்டும் மோடியின் ஒரு பண்பை விவரித்தபடியே புத்தகம் ஆரம்பமாகிறது. முதல்வரின் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். தற்சமயம் இல்லை, வந்தவுடன் பேசுவார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் மோடி லைனுக்கு வந்துவிட்டார். எங்கே, எப்போது என்பதை விரைவில் உறுதி செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். உடனே அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் அவர் அலுவலகத்தில் இருந்து பறந்து வரத் தொடங்கிவிட்டன. நேரம் ஒதுக்கப்பட்டது. புன்சிரிப்புடன் வரவேற்று உபசரித்து கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார் மோடி. தன் வாழ்வின் தொடக்கப்பகுதி தொடங்கி, கல்வி, அரசியல் ஈடுபாடு, வழிநடத்திய தலைவர்கள், மேற்கொண்ட பணிகள், படிப்படியாக வளர்ந்த கதை, தனது கனவுகள், இந்துத்துவ அரசியல், குஜராத் 2002 (அதிகமில்லை, கொஞ்சம்தான்) என்று பல விஷயங்கள் குறித்து சுருக்கமாக மோடி உரையாடியிருக்கிறார்.

மோடியை இன்னொரு காந்தியாகவோ அல்லது மற்றொரு ஹிட்லராகவோ முன்னிறுத்தாமல், “அவரைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்திருக்கிறேன் என்கிறார் முகோபாத்யாய். ஹேஜியோகிராஃபியாகவும் (புகழ் புராணம்) இல்லாமல் கூர்மைமயான விமரிசன நூலாகவும் இல்லாமல் பல கோணங்களில் இருந்து மோடியை அணுகி முடிந்தவரை விருப்பு, வெறுப்பற்று பதிவு செய்திருக்கிறார் முகோபத்யாய். ஆனால் அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போல், 2002 சம்பவத்தை விலக்கிவிட்டு மோடியைப் புரிந்துகொள்வதோ மதிப்பிடுவதோ முடியாத காரியம். அந்தச் சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் மோடி ‘வழிபாட்டுக்குரிய ஒரு தலைவராக வளர்ச்சி அடைந்திருக்கமாட்டார். அவரைப் பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண்டிருக்கவும் மாட்டோம்.’

0

நரேந்திர மோடி 17 செப்டெம்பர் 1950 அன்று பிறந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தோன்றி ஒன்பது மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. மோடி பிறந்து, வளர்ந்து, படித்த மெஹ்சானா என்னும் மாவட்டம் குஜராத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குஜராத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் செழிப்பாக இந்த மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும் பல உற்பத்தி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இங்குள்ள வாட்நகர் என்னும் சிறிய நகராட்சியில்தான் மோடி பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டார். மிகுந்த பாசத்துடன் வாட்நகரை முகோபாத்யாயிடம் நினைவுகூர்கிறார் மோடி. குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில மாதங்களில் ஒரு தனி கமிட்டியை உருவாக்கி இந்நகரின் வளர்ச்சித் திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி.

2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வாட்நகரில் தானா ரிரி மஹோத்சவ் நடைபெற்றுவருகிறது. புராணத்தின்படி அக்பரின் துருப்புகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த இரு சகோதரிகளும் தற்கொலை செய்துகொண்டனராம். குஜராத்தி பிராமணப் பிரிவைச் சேர்ந்த இந்த இரு பாடகர்களையும் கடத்திவந்து தன் அரண்மனையில் பாட வைக்க அக்பர் திட்டமிட்டிருந்தாராம். 2010ம் ஆண்டு இவர்கள் பெயரில் ஒரு விருதை உருவாக்கி, முதல் விருது லதா மங்கேஷ்கருக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் மோடி.

மோடி பிறந்து, வளர்ந்த ரயில் பெட்டி போன்ற ஒரு வீட்டுக்குச் சென்று முகோபாத்யாய் பார்வையிட்டிருக்கிறார்; அவருடைய பால்ய சிநேகிதர் ஒருவரிடமும் மோடியின் மாமாவிடமும் உரையாடியிருக்கிறார். இளம் வயதில் இருந்தே மோடி ‘ஒரு சிறந்த இந்துவாக’ இருந்திருக்கிறார்.  கோயில்களுக்குச் சென்று சத்தம் போட்டு மந்திரங்களை உச்சரிப்பார். பண்டிகைக் காலங்களில், முக்கிய தினங்களில் விரதம் இருப்பார். முகோபாத்யாயிடம் பேசும்போது, சமயத் தேடலைவிடவும் ஆன்மத் தேடலில் தனக்கு விருப்பம் அதிகம் என்று குறிப்பிடுகிறார். கைலாஷ் மானசரோவர், அமர்நாத் என்று சிவாலயங்களைத் தேடிச் சென்று தரிசித்திருக்கிறார். ‘தினமும் பூஜை செய்கிறேன் என்றபோதும் மத நம்பிக்கைகளிலும் நம்பிக்கைச் சார்ந்த சடங்குகளிலும் நான் சிக்கிக்கொள்ளவில்லை.’

அப்போது மோடியின் தந்தை வாட்நகர் ரயில்வே நிலையத்துக்கு அருகில் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வந்தார். மோடிக்கு ஆறு வயதாகும்போது மகா குஜராத் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. மகா குஜராத் ஜனதா பரிஷத் என்னும் அமைப்பு குஜராத் தனி மாநிலமாக அறிவிக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் போராடி வந்தது. வாட்நகரில் உள்ள ரசிக்பாய் தவே, இந்துலால் யாக்னிக் ஆகிய பிரமுகர்கள் இந்தக் கோரிக்கைக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர். வாட்நகரில் அமைந்திருந்த தவேயின் அலுவலகத்துக்குச் சென்று குஜராத் மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் முத்திரைகளை வாங்கி விநியோகிக்கும் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தார் மோடி. ரசிக்பாயிடம் இருந்து எப்படிச் சத்தம் போட்டு கோஷமிடுவது என்று கற்றுக்கொண்டார். தனது முதல் அரசியல் பணியை ஒரு விளையாட்டு போல கற்றுக்கொண்டு செய்ததாகக் குறிப்பிடுகிறார் மோடி.

அப்போதே காங்கிரஸைத் தீவிரமாக வெறுக்கத் தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார் மோடி. ‘மக்கள் அப்போது காங்கிரஸைத் தீவிரமாக வெறுத்தனர். பேரணி நடத்தினர், கோஷமிட்டனர், உருவபொம்மைகள் எரித்தனர். ஏன் காங்கிரஸ்மீது இவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று யோசித்தேன். விசாரித்தபோது, காங்கிரஸ் நமக்கு தீங்கு செய்துவருகிறது என்று சொன்னார்கள். ’

தனி மாநிலக் கோரிக்கைகள் தீவிரமாக இருந்த சமயம் அது. தனி ஆந்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த பொட்டி ஸ்ரீராமுலு 15 டிசம்பர் 1952 அன்று இறந்துபோனார். ஆந்திராவை உருவாக்குவதாக இரு தினங்களில் நேரு அறிவிக்கவேண்டி வந்தது. அதுவரை காலம் ஒன்றாக இருந்த ஆந்திராவும் தமிழ்நாடும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு பல மாநிலக் கோரிக்கைகள் எழும் என்று அஞ்சிய நேரு, மாநில மறுசீரமைப்பு கமிட்டியை (எஸ்ஆர்சி) உருவாக்கினார். எதிர்பார்த்தபடியே பல கோரிக்கைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, பம்பாய் தொடர்பானது. மராத்தி பேசும் மக்களுக்கும் குஜராத்தி பேசும் மக்களுக்கும் பொதுவாக இருந்த பம்பாய் யாருக்குச் செல்லும் என்னும் கேள்வி பொது வெளியில் எழுந்தது. பம்பாய் மாநிலத்தை குஜராத், மகாராஷ்டிரா என்று தனியே பிரித்து பம்பாய் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றிவிடலாம் என்னும் அரசின் யோசனை ஏற்கப்படவில்லை. இறுதியில் இருமொழி மாநிலமாக பம்பாய் மாற்றியமைக்கப்பட்டது. அதே சமயம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றை தனி மாநிலங்களாக அங்கீகரிக்கமுடியாது என்றும் எஸ்ஆர்சி அறிவித்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1 மே 1960 அன்று மகாராஷ்டிரா, குஜராத் இரண்டும் தனி மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. பம்பாயும் அகமதாபாத்தும் அவற்றின் தலைநகரங்கள் ஆயின. அப்போது மோடி பத்து வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.

(தொடரும்)

Share/Bookmark

கவலைப்பட நேரமில்லை

$
0
0

worriesபேசு மனமே பேசு / அத்தியாயம் 17

தன்னோடு பேசுதலை, பொதுவான விஷயங்களுக்கும், தனிப்பட்ட விஷயங்களுக்கும், தெளிவு பெற மற்றும் சரியான முடிவெடுக்க உபயோகப்படுத்தலாம். உதாரணமாக  ‘கவலை’ என்பதை எடுத்துக் கொள்வோம். எந்த விதமான பிரச்னைகளுக்கும் நமது முதல் எதிர்வினை, ‘கவலை’ என்பதாகவே இருக்கிறது. இது பலருக்கு பழக்கமாக இருக்கிறது. பொதுவாகவே, ‘கவலை’ உண்டானால், அது உடலிலும் ஒருவித தேக்க நிலையை ஏற்படுத்தும் வலிமை படைத்தது. பிரச்னைகள் அல்லது அவ்வாறு பிரச்னைகளைக் கொண்டு வரலாம் என்று நினைக்கக்கூடிய விஷயங்கள் ஆகியன ஏற்படுத்தும் முதல் உணர்ச்சி கவலையாகவே இருக்கிறது. இந்த மனப்பான்மையை ‘தன்னோடு பேசுதல்’ மூலம் ஒழிக்கமுடியும். கவலை என்கிற ஒன்றால், தனியான பிரச்னைகளும், நஷ்டங்களும் ஏற்படும் என்பதால் மிக எச்சரிக்கையுடன் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின்போது, சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் உயிரிழந்தனர். அதே காலகட்டத்தில் இருதயம் தொடர்புடைய நோய்களால் இறந்தவர்கள் 20 லட்சம் பேர்கள். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் கவலையால் ஏற்படும், டென்ஷன், பயம் ஆகியவற்றால் இறந்தனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. கவலையால், முடக்கு வாதம், வாயுத் தொந்திரவுகள், மன அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் நிரூபணத்துடன் கூறுகின்றனர்.

டாக்டர் எட்வர்ட் போடோல்ஸ்கி என்ற புகழ் பெற்ற போலந்து நாட்டு மருத்துவர், Stop worrying and get well என்ற முக்கியமான நூலைஎழுதியுள்ளார். அவரது நூலில் உள்ள அத்தியாயங்களின் தலைப்புகளே, நூலைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகின்றன.

‘கவலையால் பாதிக்கப்படும் இதயம்’, ‘கவலையால் கூடும் இரத்த அழுத்தம்’, ‘கவலையால் உருவாகும் முடக்குவாதம்’, ‘வயிற்றைப் பாதுகாக்க கவலையைக் குறைப்போம்’, ‘கவலையும் தைராய்டும்’, ‘கவலையால் விளையும் நீரிழிவு’ என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும், தலைப்பு பற்றிய ஆதார பூர்வ விளக்கங்களும், விவரங்களும் தரப்பட்டுள்ளன.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கவலையால் பெரும் மன்னர்களே மாய்ந்து போயிருக்கின்றனர் என்பது தெரியும். புராணங்களை எடுத்துக்கொண்டால், ஞானியும் அறிஞருமான, மகாராஜா தசரதன், கைகேயிக்கு வரங்களைக் கொடுத்துவிட்டு, அதன் விளைவுகள் என்னாகுமோ என்ற கவலையிலேயே மனம் நொந்து இறந்து போனார்.

பிரெஞ்சு நாட்டின் மிகப் பெரிய சோதிடர்களில் முதன்மையானவர் செரோ. அவர் சோதிடம் சொன்னால் அப்படியே பலிக்கும் என்ற பெயரும், புகழும் பெற்றிருந்தார். சாதாரண குடிமகனிடமிருந்து, நாட்டை ஆளும் மாமன்னர் உட்பட அனைவரும், செரோவை அதற்காக போற்றியும், மதித்தும் வந்தனர். அவர் ஒரு நாள் அரசனுக்கு சோதிடம் சொல்லும்போது, அன்றிலிருந்து நான்காவது மாதத்தில், ஒரு குறிப்பிட்ட தேதியில், மன்னன் இறந்து போவான், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிவிட்டார்.

அரசனுக்கு பயமும், கவலையும் ஏற்பட்டன. நாட்கள் நகர்ந்தது. அரசனின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பிட்ட நாளுக்கு, முந்தைய நாள் கவலை உச்சக்கட்டத்தை அடைந்தது. உடல் நிலையில் அதுவரையில் பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும், கவலை அவனை ஸ்தம்பிக்க வைத்தது. சோதிடர் குறிப்பிட்ட நாளில் மன்னன், உண்மையிலேயே இறந்து போனான். இது உண்மையில் நடந்தது.

கவலைக்கு அத்தனை வலு உண்டு. மனத்தை ஒரு நிலையில் நிறுத்த முடியாது. சரியாக யோசிக்க முடியாது. சுய பரிதாபம், பிறர்மேல் பழிபோட முயற்சி, எரிச்சல், கோபம், பயம் ஆகிய அனைத்தும் மாறி மாறி வாட்டும். கவலை என்றால், ‘இல்லாத ஊருக்கு வழி தேடுவது’ போலத்தான். அதாவது கவலைப்படுவதன் மூலம், நாம் எதனுடைய மையத்தையும் நோக்கி பிரயாணப்பட முடியாது. இம்மாதிரியாக அழித்துக் கொள்ளவே முடியும். இத்தகைய ‘கவலை’ என்ற விஷ வலையிலிருந்து நாம் எவ்வாறு விடுபட முடியும்? கவலையின் மூலகாரணம், நம்மால் சமாளிக்க முடியுமா? விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் உள்ளனவா? போன்ற சந்தேகங்கள்தான் என்று நிச்சயமாகக் கூறலாம். இவற்றை முதலில் விலக்க வேண்டும்.

இதற்காக நமக்குள்ளேயே பேசிக்கொள்ள வேண்டிய வாக்கியங்கள், பின்வருமாறு இருக்கலாம். இவற்றை விட சிறந்ததாக இருந்தாலோ, உங்களது சூழ்நிலையின் அடிப்படையில் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாலோ, அவ்வாறே செய்யுங்கள். உடல் நலம் இல்லாதவர்களில் சிலர் மாத்திரைகளை விழுங்கும்போது, முதலில் தண்ணீரை வாயில் ஊற்றிக்கொண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொள்வார்கள். மற்றவர்கள் முதலில் மாத்திரைகளை தொண்டையின் அருகில் வைத்துவிட்டு, பிறகு தண்ணீர் குடித்து விழுங்குவார்கள். அது போலவே, உங்களது சௌகர்யம் போல, தனக்குள் பேசும் வாக்கியங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு சில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

‘பிரச்னை குறித்து எனக்குக் கவலை இல்லை. அக்கறை மட்டுமே இருக்கிறது. எனது எண்ணங்கள், என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனக்கு வலு சேர்க்கும் எண்ணங்களை, அர்த்த பூர்வமான அணுகுமுறைகளை உருவாக்கும் எண்ணங்களையே உருவாக்கினேன்.’

இரண்டாவதாகக் கவலை, மனத்தில், உடம்பில் ஒருவித இறுக்கத்தை உண்டு பண்ணும். அமைதியின்மையை உருவாக்கும். எதைச் செய்ய அல்லது செயல்பட முயற்சித்தாலும், நம்பிக்கையுடன் அணுகக்கூட முடியாது. இதை மாற்றுவதற்கு, பின்வரும் வாக்கியங்களை சொல்லிக் கொள்ளலாம்.

‘என்னால் சுலபமாக, மனத்தையும், உடலையும் இயல்பாக, இலகுவாக வைத்துக்கொள்ள முடிகிறது. நான் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன்.’
மூன்றாவதாக, கவலையின் விளைவுகளான, உறுதியின்மை, முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஆகியவற்றை நீக்குவதற்கு… ‘நான் எப்போதும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் விஷயங்களை அணுகுகிறேன். முடிவெடுக்கிறேன்.’

அடுத்ததாக, கவலையுடன், நாம் எதைச் செய்ய ஆரம்பித்தாலும், அதில் நமது முழு சக்தியுடன் ஈடுபட முடியாது. ‘பிரச்சினை வந்து விட்டது. இதைச் செய்து பார்ப்போம். இதனால் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்று முயற்சிக்கலாம்’ என்கிற ரீதியில் அணுகினால், வெற்றி பெற முடியாது. கவலையின் பரிமாணத்தில் மாற்றம் ஏற்பட்டு, அதன் ஆழமும், ஆதிக்கமும்தான் அதிகமாகும். எந்தக் காரியத்தை செய்யும்போதும், எதையும் நம்பிக்கையுடன் செய்ய, பின்வருமாறு பேசிப் பழகுங்கள்.

‘நான் எதைச் செய்யும்போதும், மனம் முழுக்க நம்பிக்கையுடனும், அந்தச் செயல் வெற்றிகரமாக முடியும் என்ற உறுதியுடனும்தான், காரியத்தில் இறங்குகிறேன்’
பொதுவாகவே நமது எண்ண ஓட்டங்கள் சரியானவையாக வைத்துக்கொண்டால், தவறான உணர்ச்சிகளுக்கு, பாதிப்புகள் உண்டாகும் எண்ணங்களுக்கு மனத்தில் இடம் இருக்காது. அதற்காக தினமும் சொல்லிப் பழக வேண்டிய எண்ணங்கள் பின்வருமாறு:

‘நான் என் மனத்தை நல்ல, வலிமையான, ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணங்கள் மூலம், மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறேன். நான் என்ன நினைக்க வேண்டும் என்பதை நானே தேர்வு செய்கிறேன். கடந்த கால எண்ணங்கள், அனுபவங்கள், நம்பிக்கைகள் ஆகியன எந்த விதத்திலும், எனது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்க நான் அனுமதிக்கவில்லை. புதிய எண்ணங்கள், சிந்தனைகள், ஆகியவற்றுக்கு என் மனமும், ஆழ்மனமும் தயாராகவே இருக்கின்றன.’

இவ்வாறெல்லாம் பேசிக் கொள்வதன்மூலம், பெரிய விஷயங்களை சாதிக்க முடியுமா என்று தோன்றலாம். ஏனென்றால், இதன் புதுமையும், எளிமையும் நமக்குப் பழக்கமில்லாதவை. ஆனால் நம்புங்கள். உங்களோடு பேசுங்கள். உங்களுக்குள் பேசுங்கள். கவலையற்ற வாழ்வை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராகுங்கள்.

0

Share/Bookmark

புரிந்துகொள்ள முடியாத நபர்

$
0
0

modiஅறுபதுகளின் தொடக்கத்தில் சுதந்தர இந்தியாவின் முதல் ஆன்மிகச் சாமியார் என்று அழைக்கப்பட்ட பாண்டுரங் சாஸ்திரி அதவாலே என்பவரின் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டு வந்திருக்கிறார் மோடி. அவர் உரையாற்றும் தன்மை தன்னை அதிகம் கவர்ந்ததாக மோடி குறிப்பிடுகிறார். தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபோது இவருக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.

தன் மறைவுக்கு முன்னர் அதவாலே தன் வளர்ப்பு மகளான ஜெயஸ்ரீ அதவாலே என்பவரைத் தனது இயக்கத்தின் (ஸ்வத்யாய் இயக்கம் மற்றும் பரிவார்) ஆன்மிக வாரிசாக நியமித்தார். ஜூன் 2006ல் அகமதாபாத்தில் பங்கஞ் திரிவேதி என்னும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கும் ஜெயஸ்ரீ இயக்கத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. கொல்லப்படுவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் மோடியை திரிவேதி தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஜெயஸ்ரீ பரிவார நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அவர்களால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று தான் அஞ்சுவதாகவும் திரிவேதி மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். சுமார் ஐந்தாண்டு காலத்துக்கு மீடியாவில் இந்த விவகாரம் தொடர்ந்து அலசப்பட்டது.  தனக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்பதாக மோடி விலகிக்கொண்டார்.

மோடி புரிந்துகொள்ளமுடியாத ஒரு நபராகவே அன்று தொடங்கி இன்றுவரை நீடிக்கிறார் என்கிறார் கிங்ஷுக்நாக். தன் குடும்பத்தினர் உள்பட யாருடனும் அவர் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டதில்லை. அரசியல் களத்தில்கூட மோடிக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் சொல்லமுடிவதில்லை. எந்தப் பெயர்களையும் குறிப்பிடமுடியவில்லை. ஜஷோதாபென் சிமன்லால் என்பவருடனான மோடியின் இளவயது திருமணம் குறித்து பத்திரிகைகளில் சில செய்திகள் வருவதற்கு முன்பு தங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்று பாஜகவிலேயே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே எழுதப்பட்டதைத் தவிர புதிதாக எந்த உபயோகமான தகவலும் கிடைக்கப்போவதில்லை என்பதால் நிலஞ்சன் முகோபாத்யாய் இது பற்றி மோடியிடம் எதுவும் கேட்கவில்லை.

மோடியின் முரண்பட்ட பர்சனாலிட்டிக்கு இது ஓர் உதாரணம் என்கிறார் முகோபாத்யாயிடம் உரையாடிய ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர். தான் எப்படிப்பட்டவர் என்பதை மோடி ஒரு போதும் பொதுவெளியில் வெளிக்காட்டியதில்லை. அவர் வெளிக்காட்டும் தோற்றம்தான் நிஜமானது என்று நினைப்பதும் தவறு என்கிறார் இவர். மோடி தன் மனைவியை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, முறைப்படி விவாகரத்தும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர்.

இது மோடியின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் முகோபாத்யாய். சங் பரிவாரத்தில் பெண்களுடனான திருமண மற்றும் நட்புரீதியான உறவுமுறை நீண்டகாலமாகவே குழப்பம் மிகுந்ததாக இருந்து வருகிறது என்கிறார் அவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நிறுவிய கே பி ஹெட்கேவாரின் மரணத்துக்குப் பிறகு பல இயக்கத் தலைவர்களின் உறவுமுறைகள் குறித்து மீடியாவில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவாதங்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மோடியும்கூட மிரட்டலையும் சமரசத்தையும் பயன்படுத்தி தன் திருமணம் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கச் செய்தார்.  ஆனால் அவருடைய முயற்சிகள் குஜராத்தைத் தாண்டி வெற்றிபெறவில்லை.

தன் திருமணம் குறித்து மட்டுமல்ல பொதுவாகவே தனது கடந்த காலத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவரக்கூடாது என்பதில் மோடி கவனமாக இருந்திருக்கிறார். சிறு வயதில் மோடி ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் என்பதைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறார் ஒரு நிருபர். மோடிக்கு நன்றாக நடிக்க வருகிறது, இளம் வயதிலிருந்தே இயல்பாக அவருக்கு நடிக்க வந்துவிட்டது என்றும் அவர் எழுதிவிட்டதால் மோடி கோபம் அடைந்துவிட்டாராம்.

குஜராத் மாநிலம் உருவாகி இரு ஆண்டுகளில், அதாவது 1962ல் இந்திய சீனப் போர் மூண்டுவிட்டது. துருப்புகள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. 12 வயது மோடி மெஹ்சானாவுக்குத் திரும்பி ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் தன்னார்வப் பணிகளில் இணைந்துகொண்டார். இந்தியப் போர்வீரர்களுக்கு ஆடைகள் வாங்குவதற்காக எல்லோரிடமிருந்தும் நிதி சேகரித்துக்கொண்டிருந்தார்கள். மோடியும் அதில் சேர்ந்துகொண்டார். தேநீரும் தின்பண்டங்களும் கொண்டு சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்.

சீனப் போர் முடிவடைந்ததும் 1965ல் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடங்கிவிட்டது. ஒப்பந்தங்களைமீறி ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்தன. செப்டெம்பர் 19ம் தேதி அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேதா, அவர் மனைவி இருவரும் குஜராத் பாகிஸ்தான் எல்லையைப் பார்வையிட சென்றபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இறந்துபோனார்கள்.

இந்தக் காலகட்டம் தன் வாழ்வில் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கியது என்கிறார் மோடி. நேரு, சாஸ்திரி இருவரும் மரணமடைந்துவிட ஒரு வலுவான தலைவர் நாட்டுக்குத் தேவை என்னும் உணர்வு எங்கும் பரவியிருந்த சமயம் அது. தேசபக்தியுணர்வு தன்னையும் பற்றிக்கொண்டதாக மோடி நினைவுகூர்கிறார். சர்தார் வல்லபபாய் படேல் ஏன் பிரதமராகவில்லை என்று குஜராத்தில் இருந்த பலரையும் போல் மோடியும் அப்போது ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டது குறித்தும் சங் பரிவார் பணிகள் குறித்தும் மோடி பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார். வகில் சஹாப் என்று அழைக்கப்பட்ட சங் பரிவார் தலைவர் லஷ்மண்ராவ் இனம்தாருடன் மோடிக்குப் பரிச்சயம் ஏற்பட்ட காலமும் இதுவே. அப்போது மோடி ஒரு பால சுவயம்சேவக். வகில் சஹாபின் உரைகள் அவரை மிகவும் கவர்ந்தன. பின்னர் அவர் பெயரில் குஜராத்தில் பள்ளி ஒன்றை அவர் தொடங்கிவைத்தார்.

(தொடரும்)

Share/Bookmark

சீன நாகரிகம்

$
0
0

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 10

அரசாட்சி ஆரம்பம்

chinazithermusicசீனா என்றவுடன் சில காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றும். தொங்குமீசை வைத்த சினிமா வில்லன்கள், இந்தி – சீனி பாய், பாய் என்று பண்டித நேருவுக்கு  சீனத் தலைவர்களோடு இருந்த ஒட்டுறவு, 1962ல் இந்தியாவோடு அவர்கள் நடத்திய போர், தொடர்கின்ற நட்பும், உரசலும் கலந்த வினோத உறவு, நம்பிக்கை வைக்க முடியாத தரத்தில், நம்பவே முடியாத விலையில் உலகச் சந்தையில் அவர்கள் கொண்டுவந்து கொட்டும் வகை வகையான பொருட்கள்.

கலைடாஸ்கோப் வைத்து கண்ணாடித் துண்டுகளைப் பார்ப்பதுபோல், இவை வண்ண மயமான பிம்பங்கள். ஆனால், சீனாவைப் பிரதிபலிக்கும் நிஜங்கள் அல்ல. இவை அனைத்தையும் தாண்டி, சீனா பிரம்மாண்டமானது, பாரம்பரியப் பெருமைகள் கொண்டது.

வீரியம் குறையாமல் தொடரும் பண்டைய நாகரிகங்கள் ஒரு சிலவே. அவற்றுள் முக்கியமானது சீன நாகரிகம். இதன் தொடக்கம் கி.மு. 5000, அதாவது சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால் என்று கருதப்படுகிறது. ஆனால், சீனாவில் மனித இனம் வாழத் தொடங்கி 14 லட்சம் வருடங்கள் ஆகிறது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது.

ஐந்தாம் அத்தியாயத்தில், கோர்டன் சைல்ட் என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் நகரக் கட்டமைப்பு, அரசாங்கம், தொலைதூர வாணிபம், கலை, எழுத்துக்கள், கணிதம்  போன்ற பத்து அம்சங்கள்தாம் நாகரிகத்தின் பத்து அளவுகோல்கள் என்று சொன்னார். மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தாலும், நாகரிக அம்சங்கள் சீனாவில் வளரத் தொடங்கியது கி.மு. 5000 பிறகுதான்.

நாகரிக ஆதாரங்கள்

சீனாவின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்; வெண்கலப் பொருட்கள், தந்தக் கைவினைப்பாடுகள், பச்சைக் கல் (Jade) நகைகள், எலும்பால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள், மண் பாண்டங்கள், இசைக் கருவிகள் போன்றவை.  இந்த அடிப்படையில்தான், நாகரிக முன்னேற்றங்களும், அவை நிகழ்ந்த காலங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

மஞ்சள் ஆறு

சீன நாகரிகத்தில் மஞ்சள் ஆறு தனியிடம் பெறுகிறது,  ஹூவாங் ஹே (Huang He) என்ற இந்த ஆறு திபெத் வழி பாய்ந்து வரும்போது, அங்குள்ள மணலால் மஞ்சள் நிறம் பெறுகிறது. இதுதான் பெயர்க் காரணம். இதன் பள்ளத்தாக்கு மிக வளமானது. எனவே சீன நாகரிகத் தொட்டில் என்று இப்பள்ளத்தாக்கைச் சொல்வார்கள். மஞ்சள் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஒடி சீனாவின் நெற்களஞ்சியம் எனப்படும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மூழ்கடிக்கும். இதனால் மஞ்சள் ஆறு சீனாவின் சோகம் (China’s Sorrow) என்றும் அழைக்கப்படும்.

சீன நாகரிகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பதின்மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்,

1.    ஆரம்ப நாட்கள் (கி.மு. 20,000 முதல் – கி.மு. 5000 வரை)

அகழ்வாராய்ச்சிகளில் மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் கி.மு. 20,000 அல்லது கி.மு. 19,000 – த்தில்  உருவான பாத்திரங்கள் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.  இவை முழுக்க முழுக்கக் கைகளால் செயப்பட்ட களிமண் பாண்டங்கள்.

கி.மு. 7600 வாக்கில், வீடுகளில் மிருகங்கள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. பன்றிகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.மு. 6000 வாக்கில்  நாய்களும் கோழிகளும் வீட்டுப் பிராணிகளாக இருந்தன.

கி.மு. 7500ல் விவசாயம் தொடங்கிவிட்டது. திணை (Millet) தான் முதற் பயிர். நெல் சாகுபடி பிறகு வந்தது.

2.    கி. மு. 5000 முதல் கி. மு. 1800 வரை  – புதிய கற்காலம் (Neolithic Age)

ஆரம்ப நாட்களில், ஆதிவாசிகள் தனிமரங்களாகத்தான் வாழ்ந்தார்கள். கி.மு. 5000 ல் திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பாதுகாப்பும் குடும்பத்தினரின் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றது. வீடுகள் கட்டினார்கள், சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமூக வாழ்க்கை தொடங்கியது.

திணை, நெல் போன்ற பயிர் நாற்றுக்களை வரிசையாக நட்டால் அவை சிறப்பாக வளரும் என்று மேலை நாட்டு ஆராய்சியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டறிந்தார்கள். ஆனால், கி. மு 5000 – த்தில் சீனர்கள் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.

விவசாயத்தில் ஆண் பெண் ஆகியோரின் மனித சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உடல் உழைப்பை எப்படிக் குறைக்கலாம் என்று சிந்தித்தார்கள். மாடுகளை வீட்டில் வளர்த்தார்கள். விவசாயத்துக்கும் பால் தரவும் இவை உதவின. அடுத்த கட்டமாக, விவசாய உபகரணங்கள் தயாரித்தார்கள்.  உலோகங்களை அவர்கள் அறியாத காலம். எனவே, அன்றைய ஆயுதங்கள் அத்தனையும் செய்யப்பட்டது கற்களால்.

தொடக்கத்தில், இலை, தழைகளும், மரப் பட்டைகளுமே, ஆண் பெண்களின் ஆடையாக இருந்தது. துணையாளின் அழகுக்கு அழகூட்ட என்ன செய்யலாம்? தேடியபோது பருத்தி நூல் கண்ணில் பட்டது, கைகளில் கிடைத்தது. காதல் பெண்கள் கடைக்கண் பார்வை நெசவுத் தொழிலுக்கு அச்சாரம் போட்டது.  கி.மு. 3630 – இல் சீனப் பெருமகன் பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் கற்றுக்கொண்டான். காலம் காலமாக சீனாவின் முக்கிய தொழிலாகப்போகும் பட்டுத் தொழில் பிறந்து ஆழமாக வேரூன்றியது.

கி.மு. 5000 முதல், கி.மு. 1800 வரையிலான 3200 ஆண்டுகளில், பல முன்னேற்றங்கள்.  தனிமரங்களாக வாழ்ந்த மனிதர்கள் குடும்ப வாழ்வு தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பங்களாக வசித்தார்கள். சமூக வாழ்க்கை முறை பரவலாகத் தொடங்கியது. குடியிருப்புகளின் தொகுப்புகள் கிராமங்கள், ஊர் எனப் பரிணாம வளர்ச்சி கண்டன. முதலில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற மாதிரி,  கைகளில் அதிகாரம் இருந்தவர்கள் எல்லோருமே தலைவர்கள் ஆனார்கள். ஆனால், மக்கள் தொகை பெருகப் பெருக, இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது புரிந்தது. அவர்களாகவே, தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் தலைவன் தனக்கு உதவியாளர்களை அமர்த்திக்கொண்டான். அரசாங்கம், அதிகாரிகள் ஆகிய கட்டமைப்பு தொடங்கியது.

அதிகாரத்தைச் சுவைத்த தலைவன், பதவியைத் தானும் தன் குடும்பமும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். காய்களை நகர்த்தினான். தலைவன் அரசனானான். இவர்கள் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu Xi) என்பவர் முதல் மன்னரானார். அடுத்து,  பதின்மூன்று சக்கரவர்த்திகள் தொடர்ந்தார்கள். இவர்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை: இதிகாசங்களை மட்டுமே நம்பவேண்டிய நிலை.

அறிவியல் முன்னேற்றமும் அட்டகாசமானது. கி.மு. 2500 – க்கு முன்னாலேயே மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சீனர்களின் தனித்துவமான அக்யுபங்ச்சர்.  உடலின் பிரதான 12 இடங்களில் தோலிலும், தோலுக்கு அடியிலுள்ள திசுக்களிலும் ஊசிகள் சொருகுவார்கள்.  இதனால், நோய்த் தடுப்பு தரும் இயற்கைச் சுரப்பிகள் தூண்டிவிடப்படும் என்பது அடிப்படைக் கருத்து. உடல் அமைப்பு, நோய்கள் வரும் காரணங்கள், தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவு இருந்தால்தானே இது சாத்தியம்? சீன டாக்டர்களே, உங்களுக்கு ஒரு சல்யூட்.

கி.மு. 2400 – த்திலேயே, வானியல் பற்றிய அறிவு இருந்தது. பல ஆய்வுக் கூடங்கள் இருந்தன.

3.    கி. மு 1600 முதல் கி. மு 1046 வரை – ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி

கி.மு. 1600 ல், டா யி (Da Yi ) என்னும் மன்னர், சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பாகங்களில் இருந்த பெரும்பாலான குட்டி ராஜாக்களைப் போரில் வென்றார். தெற்குப் பகுதி தவிர்த்த மிச்சச் சீனாவின் பெரும்பகுதி டா யி ஆட்சியின் கீழ் வந்தது. இவர் வம்சாவளியில் தொடர்ந்து 32 அரசர்கள் சீனாவை ஆண்டனர். ஷாங் என்றால் உயர்ந்த என்று பொருள். அந்த அடிப்படையில், ஷாங் என்னும் பெயர் வைக்கப்பட்டது. ஷாங் வம்சத்தில் மொத்தம் 33 மன்னர்கள். அன்றைய சீனப் பாரம்பரியப்படி, மன்னர் மரணமடைந்தால், அரியணை ஏறுவது அவர் மகனல்ல: அவருடைய அண்ணன் அல்லது தம்பி: இவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், சகோதரர்களின் மகன்கள் தலையில் கிரீடம் ஏறும்.
ஷாங் வம்ச மன்னர்கள் நல்லாட்சி நடத்தினார்கள். அவர்கள் தலைமையில் சீனா மாபெரும் முன்னேற்றங்கள் கண்டது. அந்தப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சில:

  • மண்பாண்டங்கள் பரவலாகப் பயன்பட்டன. இந்தப் பாத்திரங்களைத் தயாரிக்கத் திகிரி (Potter’s Wheel) பயன்படுத்தப்பட்டது.
  • வெண்கலம் தயாரிக்கும் கலை அன்றைய சீனர்களுக்குத் தெரிந்திருந்தது. வெண்கலப் பாத்திரங்களும், ஆயுதங்களும் புழக்கத்தில் இருந்தன.
  • கி.மு. 1500 – இல் எழுத்து வடிவ மொழி தொடங்கியது. ஆரம்பத்தில் ஆமை ஓடுகளில் எழுதினார்கள். பின்னாளில், களிமண் பாத்திரங்கள், மிருக எலும்புகள், கற்கள்,  வெண்கலப் பாளங்கள்,  பட்டுத் துணி ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். இவை அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
  • தசமக் கணித முறை (Decimal Arithmetic System) கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டல், கழித்தல் கணக்குகளுக்குக் குச்சிகள், எலும்புகள், மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
  • வர்ணாசிரம முறை இருந்தது. அரசரும், பிரபுக்களும் உயர்ந்த ஜாதி: அடுத்து, மத குருக்கள், போர் வீரர்கள், கை வினைஞர்கள், விவசாயிகள் எனத் தர வரிசை. அடித்தட்டில் அடிமைகள்.
  • நகரங்களைச் சுற்றி கோட்டைகள் இருந்தன. அரசர், மத குருக்கள், போர் வீரர்கள்  பூசாரிகள் ஆகியோரும் அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே நகரத்துக்குள் வாழலாம்.  கை வினைஞர்கள், விவசாயிகள், அடிமைகள் நகரத்துக்கு வெளியேதான் வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
  • உயர் குடியினர்  தங்கள் போக்குவரத்துக்குக் குதிரைகள் இழுக்கும் தேர்களைப் பயன்படுத்தினார்கள்.
  • மக்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். மறுபிறவியை நம்பினார்கள். மதச் சடங்குகளில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. மனித பலியும் உண்டு.
  • விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மக்களின் முக்கியத் தொழில் வியாபாரம். ஆரம்ப காலங்களில் நத்தையின் மேலோடுகள் நாணயங்களாகப் பயன்பட்டன. பின்னாட்களில், வெண்கல நாணயங்கள் இந்த இடத்தைப் பிடித்தன.
  • வருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.
  • ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த ஷாங் குலத்துக்குக் கோடரிக் காம்பாய் வந்தார், 33- ம் அரசர்  டி ஜின் (Di Xin). இவரும் நல்லபடியாகத்தான் ஆட்சியைத் தொடங்கினார். பெண் சபலம் கொண்ட இவர் சின்ன வீடு வைத்துக்கொண்டார். விரைவில் தலையணை மந்திரம் வேதமானது. தன் சொந்த மகனைக் கொன்றார். முக்கிய அமைச்சர்களைச் சித்திரவதை செய்து கழுவேற்றினார். மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஆட்சி கவிழ்ந்தது. டி ஜின் தற்கொலை செய்துகொண்டார்.

0

Share/Bookmark

தொட்டியும் குழாயும்

$
0
0

voiceஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 10

கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘எப்படி இருக்கிறது வாழ்க்கை?’ என்று நான் குசலம் விசாரித்தபோது, ‘ரொம்பப் பறபறப்பா இருக்குங்க’ என்றார்.

’நீங்க என்ன ஏரோநாடிகல் எஞ்சினியரிங்கா படிக்கறீங்க?’ என்றேன் கடிக்கும் நோக்கத்துடன்.

‘இல்லையே, கம்ப்யூட்டர் சைன்ஸ்!’ அப்பாவியாகப் பதில் சொன்னார்.

எஅப்புறம் எதுக்குப் பறபறப்பெல்லாம்? சிம்பிளா பரபரப்புன்னு சொன்னாப் போதுமே!’

அவருக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்றே புரியவில்லை. காகிதத்தில் ‘பரபரப்பு’ என்று எழுதிக்காட்டி ‘சரிதானே?’ என்றார்.

‘இது சரிதான், ஆனா பேசும்போது பறபறப்புன்னு சொல்றீங்க, இடையின ரகரத்துக்குப் பதிலா வல்லின றகரம் வருது.’

‘சின்ன வயசுலேர்ந்தே இந்த ர, ற, ல, ழ, ள, ண, ன, ந எல்லாம் எனக்கு ரொம்பக் குழப்பம் சார்’ என்று முகம் சோர்ந்தார் அவர், ‘ஸ்கூல்ல எங்க தமிழ் வாத்தியார் என்னைக் கண்டபடி திட்டுவார், சரியாப் புரியலைன்னு சொன்னா, நாக்கு ஒழுங்கா மடங்கினா எல்லாம் புரியும்ன்னு அதட்டுவார்.’

அவர் சொல்வது ஓரளவுதான் உண்மை. வெறுமனே நாக்குமட்டும் மடங்கினால் போதாது, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு அதற்கு முன்பாகவே தொடங்கிவிடுகிறது.

சரி, ஒரு மொழிக்கு உச்சரிப்பு எந்த அளவுக்கு முக்கியம்?

கொஞ்சம் சிக்கலான விவாதம்தான் இது. சரியாக உச்சரித்துப் பழகாதவர்கள், அல்லது அதில் குழப்பம் உள்ளவர்கள், ‘செய்தி சென்று சேர்ந்தால் போதுமே’ என்பார்கள். ‘பறபறப்பு’ என்று அந்த இளைஞர் தவறாக உச்சரித்தபோதும், நான் அதைப் ‘பரபரப்பு’ என்று புரிந்துகொண்டுவிட்டேனல்லவா? அதற்குமேல் என்ன வேண்டும்?

இந்த வாதம் எல்லா இடங்களிலும் பயன்படாது. உதாரணமாக, ‘மரப்பேனா’ என்றால் ஓர் அர்த்தம், அதையே ‘மறப்பேனா’ என்று உச்சரித்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம். இதுபோல் குழப்பம் தரும் இணைச் சொற்கள் தமிழில் ஏராளமாக உண்டு:

* பல்லி, பள்ளி
* இரங்கு, இறங்கு
* இரை, இறை
* ஊன், ஊண்
* தன்மை, தண்மை
* அலை, அளை, அழை
* வால், வாள், வாழ்

இப்படி இன்னும் நிறைய சொல்லமுடியும். இந்த இணைச் சொற்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவைத் துணுக்குகளும் சமத்கார வாசகங்களும் கவிதை(?)களும் எக்கச்சக்கம். (உதாரணம்: பணி செய்வது தொண்டர், பனி செய்வது ஐஸ் க்ரீம் கடைக்காரர்!)

அப்படிக் குழப்பமே வராவிட்டாலும்கூட, தமிழ் எழுத்துகளை இப்படிதான் உச்சரிக்கவேண்டும் என்று ஒரு தெளிவான இலக்கணம் இருக்கிறது. சரியாக எழுதுவது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு, சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே சரியாகப் பேசுவதும் முக்கியம் என்கிற அக்கறை நமக்கு வரவேண்டும். காரணம், தமிழைப் படிக்கிறவர்களைவிட, கேட்கிறவர்கள் அதிகம்.

அந்த அக்கறையைக் கோட்டைவிட்ட காரணத்தால்தான், வானொலி, தொலைக்காட்சியில் தொடங்கி சினிமாப் பாட்டுகள், வசனங்கள்வரை சகலத்திலும் பிழை மலிந்த உச்சரிப்புகளைப் பார்க்கிறோம். தெரியாமல் தவறு செய்பவர்கள் ஒருபக்கம், ஸ்டைலுக்காக வேண்டுமென்றே தமிழை மாற்றி உச்சரிப்பவர்கள் இன்னொருபக்கம்.

தமிழின் அழகு, அதைச் சரியாக உச்சரிப்பதில் இருக்கிறது. ஒழுங்காக உச்சரித்தால் அத்துணை இனிமையாக இருக்கும், அதையே மாற்றி உச்சரித்தால் காது வலிக்கும். சந்தேகமிருந்தால், உதித் நாராயண் பாடிய பாடல்களைத் தொடர்ந்து இருபத்தேழு நிமிடங்கள் கேட்டுப்பாருங்கள்.

பெரும்பாலானோர் நினைப்பதுபோல், தமிழ் உச்சரிப்பு சிரமமான விஷயமே அல்ல. மிகச் சில எழுத்து இணைகளைத்தவிர மற்ற எல்லாம் எளிமையாக உச்சரிக்கக்கூடியவை, குழப்பமே இல்லாதவை.

இருந்தாலும், ஒவ்வோர் எழுத்தையும் எங்கிருந்து தொடங்கி, எங்கே கொண்டுவந்து எப்படி உச்சரிக்கவேண்டும் என்று இலக்கண நூல்கள் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு உச்சரித்துப் பழகினால் சில நாள்களில் இருக்கிற குழப்பமெல்லாம் தீர்ந்துவிடும்.

குறிப்பாக, இதை ஒரு விளையாட்டுபோல சொல்லித்தந்தால், குழந்தைகள் இதை லட்டுமாதிரி பிடித்துக்கொள்வார்கள். ’என் பிள்ளை எவ்ளோ ஸ்பஷ்டமா இங்க்லீஷ் பேசறான்’ என்று பெருமைப்படுகிற பெற்றோர் அவ்வப்போது தமிழையும் கேட்டுக் கைதட்டலாம்.

அது சரி, இப்போது நாம் பழகவேண்டியது எழுத்து உச்சரிப்பா? அல்லது, சொல் உச்சரிப்பா?

தமிழில் அந்தப் பிரச்னையே இல்லை. இங்கே எழுத்து உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் போதும், சொல் உச்சரிப்பு என்று தனியாக எதையும் படிக்கவேண்டாம்.

உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘C’ என்ற எழுத்தை ‘சி’ என்று உச்சரிக்கப் பழகுகிறோம். ஆனால் அதுவே ‘Car’ என்ற சொல்லில் வரும்போது ‘க’ என்ற உச்சரிப்போடு வருகிறது.

ஆனால் தமிழில் அந்தக் குழப்பங்கள் கிடையாது. ‘சி’ என்ற எழுத்து எந்தச் சொல்லில் வந்தாலும் அதை ‘சி’ என்றுதான் உச்சரிப்போம். சில நேரங்களில் ச்சி, ஜி என்று சிறு மாற்றங்கள் வரக்கூடுமேதவிர, சம்பந்தமே இல்லாமல் ‘க’ என்று உச்சரிப்பு மாறாது.

ஆங்கிலத்தைக் குறைத்துப் பேசுவதற்காக இதைச் சொல்லவில்லை. தமிழ் உச்சரிப்பு பழகுவது மிக எளிது என்பதற்காகச் சொல்கிறேன். பன்னிரண்டு உயிரெழுத்துகள், ஓர் ஆய்த எழுத்து, பதினெட்டு மெய்யெழுத்துகள் என்று மொத்தம் 31 ஒலிகளைப் பழகிக்கொண்டுவிட்டால் போதும். தமிழில் உள்ள லட்சக்கணக்கான சொற்களையும் எந்தப் பிழையும் இல்லாமல் சரியாக உச்சரிக்கலாம்.

பீடிகை போதும். தமிழ் உச்சரிப்புக்கான உடல் பாகங்களை முதலில் பட்டியல் போட்டுவிடுவோம்.

உண்மையில், எழுத்துகளை உச்சரிக்க உதவும் இந்த உடல் பாகங்களை இரண்டு பிரிவுகளாகப் படிக்கவேண்டும். நம்முடைய வசதிக்காக, அவற்றைத் தொட்டி, குழாய் என்று குறிப்பிடுவோம்.

அதென்ன தொட்டி, குழாய்?

வீட்டில் நாம் குழாயைத் திறந்தால் நீர் கொட்டுகிறது. ஆனால் உண்மையில் மேலே தொட்டியில் உள்ள நீர்தான் இப்போது குழாய் வழியே வருகிறது.

ஒருவேளை அந்தத் தொட்டியில் நீருக்குப் பதில் தேனோ பாலோ இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நாம் குழாயைத் திறந்தால் தேன் அல்லது பால் கொட்டும்.

ஆக, தொட்டியில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் குழாயில் வருவது மாறும். வெறுமனே குழாயைமட்டும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருக்கக்கூடாது.

அதுபோல, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பும் ஓர் இடத்தில் தொடங்குகிறது (அதை நாம் ‘தொட்டி’ என்று அழைப்போம்), இன்னோர் இடத்தில் வெளிவருகிறது (அதை நாம் ‘குழாய்’ என்று அழைப்போம்). மேல்பார்வைக்குக் குழாய்மட்டும்தான் தெரியும், ஆனால் நம் கவனம் தொட்டியிலும் இருக்கவேண்டும்.

இதைப் புரிந்துகொள்ள மிகச் சுலபமான உதாரணம், ‘ப’ என்ற எழுத்து. அதை நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள், சொல்லிப்பாருங்கள்.

மேலுதடும் கீழுதடும் கண நேரம் சேர்ந்து பிரிகிறது. ‘ப’ என்ற ஒலி உண்டாகிவிடுகிறது. அவ்வளவுதான்.

ம்ஹூம், அதே மேலுதடும் அதே கீழுதடும் அதே கண நேரம் சேர்ந்து பிரியும்போது, ‘ம’ என்ற ஒலியும் உண்டாகிறதே. அது எப்படி?

இதற்குதான் குழாயைப் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது. தொட்டி எது என்று கவனிக்கவேண்டும். தொட்டி மாறினால் அதே குழாயிலிருந்து தண்ணீருக்குப் பதில் தேனோ பாலோ வரக்கூடும்!

’ப’ என்ற எழுத்து, நம்முடைய மார்பிலிருந்து பிறக்கிறது. பின்னர் உதடுகளில் வெளிப்படுகிறது. மார்புதான் தொட்டி, உதடுதான் குழாய்.

‘ம’ என்ற எழுத்து, நம்முடைய மூக்கிலிருந்து பிறக்கிறது. பின்னர் உதடுகளில் வெளிப்படுகிறது. அதே குழாய்(உதடு)தான், ஆனால் வேறு தொட்டி. ஆகவே ‘ப’ என்ற ஒலி அன்றி, ‘ம’ என்ற இன்னோர் ஒலி கிடைக்கிறது.

இப்படித் தமிழில் ஒவ்வோர் எழுத்தும் எங்கிருந்து பிறக்கிறது (தொட்டி), எங்கே வெளிப்படுகிறது (குழாய்) என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நன்னூலும் தொல்காப்பியமும் இதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளன.

நம் உடலில் உள்ள தொட்டிகள், அதாவது ஒலி பிறக்கும் இடங்கள் நான்கு. அவை:

* மார்பு
* கழுத்து
* மூக்கு
* ஒட்டுமொத்தத் தலை

அடுத்து, குழாய்கள், அதாவது ஒலி வெளிப்படும் இடங்கள் நான்கு. அவை:

* பல்
* உதடு
* நாக்கு
* அண்ணம்

மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன அண்ணம்?

சாப்பாடு அல்ல, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்துப் பருகும் வெள்ளைப் பறவையும் அல்ல, அவையெல்லாம் ‘அன்னம்’, இது ‘அண்ணம்’, நம்முடைய உடல் பாகங்களில் ஒன்று, ஆனால் நாம் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தாத சொல்.

‘அண்ணம்’ என்பது வாயின் மேல் பகுதி. உங்கள் நுனி நாக்கினால் அதனை வருடிப் பார்த்தால் லேசாகக் கூச்சம் ஏற்படும். சிலர் பேசமுடியாமல் தவிக்கும்போது, ‘என்ன? நாக்கு மேலண்ணத்துல ஒட்டிக்கிச்சா?’ என்பார்கள்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், இது மிகவும் உண்மையான வாசகம். ஒருவருடைய நாக்கு சுழலாமல் எங்கேயாவது ஒட்டிக்கொண்டுவிட்டால் போச்சு, பெரும்பாலான எழுத்துகளை உச்சரிக்கமுடியாது.

நாக்கு, அண்ணம் போன்றவற்றைப்பற்றிப் பின்னர் ‘குழாய்’களை விவரிக்கும்போது விரிவாகப் பார்ப்போம். இப்போது நாம் ‘தொட்டி’களைக் கவனிக்கவேண்டியிருக்கிறது.

நம் உடலில் நான்கு உச்சரிப்புத் தொட்டிகள் இருப்பதாகப் பார்த்தோம். அவற்றில் எந்த எழுத்து எங்கே பிறக்கிறது?

  • உயிரெழுத்துகள் அனைத்தும் கழுத்திலிருந்து பிறக்கும்
  • மெய்யெழுத்துகளில் வல்லினங்கள் அனைத்தும் மார்பிலிருந்து பிறக்கும்
  • மெல்லினங்கள் அனைத்தும் மூக்கிலிருந்து பிறக்கும். யாருக்காவது ஜலதோஷம் பிடித்திருந்தால் ‘மூக்கால பேசறான்’ என்பார்கள், அப்போது கவனித்துப்பார்த்தால், அவர்கள் பேசுவதெல்லாம் மெல்லினம்போலவே கேட்கும்
  • இடையினங்கள் அனைத்தும், மார்புக்கும் மூக்குக்கும் இடையே, அதாவது கழுத்திலிருந்து பிறக்கும்
  • ஆய்த எழுத்துமட்டும் ஒட்டுமொத்தத் தலையிலிருந்து பிறக்கும்
  •  உயிர்மெய் எழுத்துகள் அனைத்தும் தங்களுடைய மெய்யெழுத்துகள் எங்கிருந்து பிறக்கிறதோ, அங்கிருந்தே பிறக்கும். உதாரணமாக, ‘க்’ என்ற மெய்யெழுத்து மார்பிலிருந்து பிறப்பதால், க, கா, கி, கீ போன்றவையும் மார்பிலிருந்துதான் பிறக்கும்

மேலே தந்திருக்கும் பட்டியலை நீங்கள் அப்படியே நம்பவேண்டியதில்லை. ஒவ்வோர் எழுத்தாக எடுத்துக்கொண்டு சத்தமாகச் சொல்லிப்பாருங்கள். எந்த ஒலி எங்கிருந்து பிறக்கிறது என்று நீங்களே தெளிவாக உணரலாம்.

சரி, ஒவ்வோர் எழுத்துக்கும் தொட்டிகள் எவை எவை என்று புரிந்துவிட்டது. குழாய்கள்?

ஒரு தொட்டியிலிருந்து கிளம்பும் திரவம், வெவ்வேறு குழாய்களின்வழியே வெளிவருவதுபோல, ஓர் உடல்பாகத்திலிருந்து பிறக்கின்ற எழுத்துகள், பின்னர் வெவ்வேறு உடல்பாகங்களின்மூலம் வெளிவருகின்றன. அதன்மூலம்தான் வெவ்வேறு சத்தங்கள் உண்டாகின்றன.

உதாரணமாக, உயிரெழுத்துகளைப்பற்றி முதலில் பார்ப்போம். இவை அனைத்தும் ‘கழுத்து’ எனும் தொட்டியிலிருந்து பிறப்பவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குழாய், உச்சரிக்கும் விதம்மட்டும் எழுத்துக்கு எழுத்து மாறும்:

  • அ, ஆ என்ற இரு எழுத்துகளும், உதடுகளை நன்கு பிரித்து வாயை அகலத் திறப்பதன்மூலம் பிறக்கும்
  • இ, ஈ என்ற இரு எழுத்துகளையும் உச்சரிப்பதற்கு, அதேபோல் உதடுகளை நன்கு பிரிக்கவேண்டும், அதேசமயம், நாக்கின் விளிம்பு மேல்பல்லின் அடியைத் தொடவேண்டும் (சொல்லிப்பாருங்கள்)
  •  எ, ஏ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளையும் உச்சரிக்கும் முறை இ, ஈ போலவேதான்
  • உ, ஊ என்ற இரு எழுத்துகளை உச்சரிப்பதற்கு, உதடுகளைக் குவிக்கவேண்டும்
  • ஒ, ஓ, ஔ என்ற மூன்று எழுத்துகளையும் உச்சரிக்கும் முறை உ, ஊ போலவேதான்

‘என்னய்யா, ஆனா, ஆவன்னா எப்படிச் சொல்றதுன்னெல்லாம் ஒண்ணாங்கிளாஸ்லயே நாங்க படிச்சுட்டமே!’ என்று சலித்துக்கொள்ளவேண்டாம். அதில் பிழை செய்பவர்களுக்கு இந்த விவரங்கள் உதவும்.

அடுத்து, மெய்யெழுத்துகளில் முதல் ஆறு:

  •  க, ங : அடி நாக்கு, அடி அண்ணத்தைத் தொடவேண்டும்
  •  ச, ஞ : நாக்கின் நடுப்பகுதி, அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடவேண்டும்
  •  ட, ண : நாக்கின் நுனிப்பகுதி, அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொடவேண்டும்

இந்த ஆறு எழுத்துகளையும் சத்தமாகப் பலமுறை சொல்லிப்பாருங்கள். நாக்கும் அண்ணமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு ஜோடியாக நகர்வது ஒரு நடனத்தைப்போல் இருக்கும். இயற்கையில் பூவின் இதழ்கள் ஒத்திசைந்து அமைந்துள்ள ஒழுங்கைப் பார்க்கும்போது ஏற்படும் அதே வியப்பு உண்டாகும்.

இப்போது, மீதமுள்ள மெய்யெழுத்துகளைப் பார்த்துவிடலாம்:

  • த, ந : மேல் பல்லின் அடிப்பாகத்தை, நாக்கின் நுனி அழுத்தவேண்டும்
  • ப, ம : உதடுகள் இரண்டும் அழுந்தப் பொருந்தவேண்டும்
  • ய : நாக்கின் அடிப்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடவேண்டும் (க, ங போலவேதான், ஆனால் ய ஒலி கழுத்திலிருந்து பிறக்கும், இந்த மூன்று எழுத்துகளையும் சொல்லிப்பாருங்கள், நுணுக்கமான வித்தியாசம் புரியும்)
  • ர, ழ : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தைத் தடவவேண்டும்
  • ற, ன : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தில் நன்றாகப் பொருந்தவேண்டும்
  • ல : நாக்கின் விளிம்பு தடித்துக்கொண்டு, மேல் பல்லின் அடியைத் தொடவேண்டும்
  • ள : நாக்கின் விளிம்பு தடித்துக்கொண்டு, அண்ணத்தைத் தொடவேண்டும்
  • வ : மேல் பல் கீழ் உதட்டைத் தொடவேண்டும்

உயிர்மெய் எழுத்துகளின் உச்சரிப்பு எப்படி அமையும்?

முதலில், அவற்றில் உள்ள மெய்யெழுத்தை உச்சரிக்கவேண்டும் (மேற்சொன்ன முறைப்படி)

அதோடு சேர்த்து, அவற்றில் உள்ள உயிரெழுத்தை உச்சரிக்கவேண்டும் (மேற்சொன்ன முறைப்படி)

உதாரணமாக, ’கு’ என்ற எழுத்தை உச்சரிக்க, முதலில் ‘க்’, பிறகு ‘உ’ ஆகிய உச்சரிப்புகளைக் கலக்கவேண்டும். அதாவது, அடி நாக்கு அடி அண்ணத்தைத் தொட (க்), பின்னர் உதடுகள் குவியவேண்டும் (உ).

இந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிக்கப்படும் எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாகத் தொகுத்து வகைப்படுத்தித் தந்துள்ளேன். மற்றபடி இவை அனைத்தும் நன்னூல், தொல்காப்பியத்தில் உள்ளவைதான். அவை எழுதப்பட்டு இத்துணை ஆண்டுகளில் உச்சரிப்பில் எந்த மாற்றமும் கிடையாது.

இவற்றில் பெரும்பாலான எழுத்துகளை நீங்கள் ஏற்கெனவே சரியாக உச்சரிக்கப் பழகியிருப்பீர்கள். அவற்றை ஒருமுறை இந்தப் பட்டியலில் உள்ளபடி சொல்லிப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டுவிடுவது நல்லது. பின்னர், குழப்பம் வரும் எழுத்துகளைமட்டும் தனியே பயிற்சி எடுக்கலாம். உதாரணமாக:

    * ல, ள & ழ

* உதாரணங்கள்:

1. வாழைப்பழம் கொழகொழவென நழுவிக் கீழே விழுந்தது
2. பள்ளிக்குச் சென்ற அழகுப் பிள்ளைக்குப் பல்லி மிட்டாய் கிள்ளித் தா
3. திருவிழாவின்போது பலாப் பழமும் வாழைப் பழமும் களாக்காயுடன் தின்றோம்
4. சிலர் வளவளவென்று பேசி வழவழா கொழகொழா என்று உளறுவார்கள்

    * ர, ற

* உதாரணங்கள்:

1. ஓடுற நரியில ஒரு நரி சிறு நரி, சிறு நரி முதுகுல ஒரு பிடி நரைமயிர்
2. பருந்தைப் பார்த்த கருங்குயில் பரபரவென்று சிறகடித்துப் பறந்தது
3. பிறர்மீது இரக்கம் இல்லாதவர்கள் இறக்கம் காண்பது உறுதி
4. அரத்தால் அறுக்கலாம், அறத்தால் சிறக்கலாம்

    * ன, ண & ந

* உதாரணங்கள்:

1. நான் கண்ணனுடைய வீட்டின்முன்னால் நாவல் பழம் சாப்பிட்டேன்
2. அண்ணாந்து பார்த்தால் முந்நூறு காக்காய்
3. சின்னப் பையன் கன்னல் தமிழில் பாடியது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது
4. பதநியும் பனம் பழமும் வாங்கப் பணம் ரெண்டு வேணும்

இப்படி இன்னும் ஏராளமான வார்த்தை விளையாட்டுகள் தமிழில் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் எப்படிச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்று தெளிவாகப் படம் வரைந்து பாகம் குறிக்கும் கட்டுரைகள் பலவும் இணையத்தில் உண்டு. நம்முடைய இலக்கணப் பகுதிக்கு அவசியமான விஷயங்களைமட்டுமே இங்கே விவரித்துள்ளோம். மற்றவற்றைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

இத்துடன், தமிழ் எழுத்து இலக்கணத்தின் அடிப்படைப் பகுதிகள் நிறைவு பெறுகின்றன. அடுத்த வாரம் சொல் இலக்கணத்தைப்பற்றிப் பேசத் தொடங்குவோம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* உச்சரிப்பு பிறக்கும் இடங்கள் : தொட்டி (மார்பு, கழுத்து, மூக்கு, தலை)
* உச்சரிப்பு வெளிப்படும் இடங்கள் : குழாய் (பல், உதடு, நாக்கு, அண்ணம்)
* மார்பில் பிறக்கும் எழுத்துகள் (வல்லினம்)
* கழுத்தில் பிறக்கும் எழுத்துகள் (உயிரெழுத்துகள், இடையினம்)
* மூக்கில் பிறக்கும் எழுத்துகள் (மெல்லினம்)
* தலையில் பிறக்கும் எழுத்துகள் (ஆய்தம்)
* உயிர்மெய் எழுத்துகளின் பிறப்பிடம் (மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்)
* வெவ்வேறு எழுத்துகள் உச்சரிக்கப்படும் விதம் (உயிர், மெய், உயிர்மெய்)
* ல, ள, ழ, ர, ற, ன, ண, ந உச்சரிப்பு வித்தியாசம்

0

Share/Bookmark

நீலமும் சில பெயர்களும்

$
0
0

‘பறை’ என்ற சொambedkarல் (கூட) வேறுபல சொற்களுடன் இணைந்து வரும் பொழுது இழிவு, அழுக்கு, முருட்டு, கருப்பு என்ற பொருளுடன் வழக்கில் இருந்து வந்துள்ளது.

சில உதாரணங்கள். பறைக்கால் மறைக்காலி  என்றால் ஒருவகை மெல்லிய துணிவகை. பறைக்காளி என்பது ஒருவகை முரட்டுத் துணி. பறைக்குடும்பு என்பது வரிக்கூத்து வகை. பறைக்கோலம் என்றால் இழிவான தோற்றம். பறைசீவி என்றால் சிறுநன்னாரி, நன்னாரி வகை. பறைத் தாதர் என்பவர் வள்ளுவரில் ஒரு சாரார். பறைத் துணி    என்பது ஒருவகை முரட்டுத்துணி, அழுக்காடை. பறைத் தொம்பர் என்றால் பறைக் கூத்தாடி. பறை நாகம் என்றால் கருநாகம். பறைப் பூச்சி என்பது சிலந்திப் பூச்சி வகை. பறைப் பருந்து என்றால்  கரும்பருந்து. பறையாமை என்றால் கருநிறமுள்ள இழிவசவு. பறைப்பாரி என்பது  இரவு காவலாளியின் பாடல் வகை.

மனிதன் திரளாகக் கூடி வாழ்ந்த சிறு சிறு குழு அமைப்புகளுக்கு ஊர்ப்புறம் என்றும், நகர்ப்புறம் என்றும் பெயரிடப்பட்டன. இப்பெயர்கள் மனிதன் குழுக்களாகக் கூடி வாழ்ந்த காலத்தில் இடத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காட்டப்பட்டன. குறிப்பாக மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்தோரை மலைவாசிகள், காட்டுவாசிகள் என்றும் தீவுகளில் வாழ்ந்தோரை தீவுகளில் வசிப்போர் என்றும், சமவெளிகளில் வாழ்ந்த மக்களை சமவெளி மக்கள் எனவும் குறிக்கப்பெற்றனர்.

இராக்கின் தென்பகுதியில் உள்ள பண்டைய ‘ஊர்’ என்னும் பெயர் கொண்ட பகுதி இருந்தது. கி.மு. 3000ல் மெசபடோமியாவில் ஊர் என்னும் பகுதி இருந்தது.பாபிலோனியாவில் ஊர் என்ற நகரத்தில் கி.மு. 2100 காலத்திய களிமண் குறுநாவல் ஒன்று கிடைத்திருக்கிறது. யூப்ரடீஸ் நதிக்கரையில் ‘ஊருக்’ என்ற ராஜ்ஜியம் இருந்தது.

தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களுள் ஆறை என்பது ‘ஆற்றூர்’.‘புத்தூர்’ என்பது புதியவூர்; ‘மூதூர்’ என்பது பழையவூர். ‘பேரூர்’ என்பது மாநகர். ‘பட்டி’ என்பது கால்நடைத்தொழுவம் உள்ள சிற்றூர். ‘பற்று’ என்பது தனிப்பட்டவருக்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; ‘அடங்காப்பற்று’ என்பது அரசன் ஆணைக்கு கடங்காதவர் வசிக்கும் ஊர். ‘பள்ளி’ என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; ‘பாளையம்’ என்பது படையிருக்கும் ஊர்; ‘பட்டு’ என்பது பாளையத்தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; ‘மங்கலம்’ என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர். ‘வாடை’ என்பது வேட்டுவர் அல்லது இடையர் இருக்கும் ஊர். ‘பண்டார வடை’ என்பது குடிகளுக்குரிய ஊர்; ‘நத்தம்’ என்பது பார்ப்பனரல்லாதார் வாழும் ஊர்; ‘குடி’ என்பது ஒரு குடும்பத்தாரோ அல்லது குலத்தாரோ வசிக்கும் ஊர்; ‘குடிக்காடு’ என்பது குடிகள் வசிக்கும் காட்டூர்; ‘குடியேற்றம்’ (குடியேற்றம் என்பது இன்று குடியாத்தம் என மருவி வழங்கும்) என்பது மக்கள் குடியேறிய ஊர்.

‘கல்லாங்குத்து’ என்பது கடின நிலத்தூர்; ‘முரம்பு’ என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; ‘பேட்டை’ என்பது சந்தை கூடும் ஊர்.

‘எயில்’ என்பது மதில் சூழ்ந்தவூர்‘; ‘பரம்புரி’ என்பன அரசர் தலைநகர். ‘விண்ணகரம்’ (விண்டு+நகரம்=விண்னகரம் – விண்டு-விஷ்ணு நகர், நகரம்-மனை, கோயில்) என்பது திருமால் கோயில் ஊர்.

ஊர்ப் பெயர்கள் இவ்வாறிருக்க சேரித்தெரு, பறையர் தெரு, அரிசனத் தெரு, காலனி, புதுக்காலனி, புதூர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், அம்பேத்கர் காலனி என்று பல வகைப்பட்ட பெயர்களில் பறையர் வசிக்கும் இடங்களுக்கு ஆதிக்க சமூகம் கொடுத்திருக்கும் பெயர்கள் எதைக் குறிக்கிறது? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டத்தின் மேல் உயர்வு பெற வழிவகுத்த அம்பேத்கர் பெயரிலும், சமூக மாமேதை தந்தை பெரியார் பெயரிலும் பறையர்கள் குடியிருப்புகளுக்கு பெயர் வைத்திருப்பது நியாயம் தான் என்றாலும் மேற்காணும் பெயர்களையெல்லாம் இந்த சமூகத்தோடு பறையர்கள் இணைந்து வாழக்கூடாது என்கிற பிரிவினை சூழ்ச்சியையே காட்டுகிறது. (தர்மபுரி மாவட்டத்தில் பறையப்பட்டிப் புதூர் என்ற ஊர் உள்ளது. ஆனால் அந்த ஊரில் அனைத்து சமூகத்தினரும் வாழ்கின்றனர்).

மனித இனம் பல்கிப் பெருகிய காலங்களில் இயற்கைச் சூழல் மற்றும் புவியமைப்புகளுக்கேற்ப உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவர்களைக் கறுப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர் எனப் பிரித்தன. மானுடவியலாளர் இவர்களை நீக்ரோ, மங்கோலியர், காகேசியர் எனக் குறிப்பிடுகின்றனர். இது உடல் மாற்ற அடிப்படையில் ஏற்பட்ட வேறுபாடு. ஆனால் இந்தியாவில் வசிக்கும் பறையர்கள்/தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஏனைய இந்தியர்களைப் போல் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கும் பெயர்கள் பறையர், பஞ்சமர், சேரிக்காரர், ஹரிசனர், திருக்குலத்தார், ஆதிதிராவிடர், தலித்.

இந்தப் பறையர்களுக்கு வழங்கப்படும் மேலும் பல பெயர்கள் வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி என்பன. இந்தப் பெயர்கள் அனைத்தும் கிராம வேலையில் ஈடுபடும் பறையர் சாதியினருக்கு உரியனவாகும்.

தமிழகத்தில் உள்ள பறையர்களுடன் தொடர்பு படுத்தப்படும் ஒரு நிறம் நீலம். தமிழகத்தில் உள்ள கட்சிக் கொடிகளில் கூட ‘நீலக்கலர்’ மிகக் குறைந்தே இருக்கும் அல்லது முற்றிலும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட கட்சியினரின் கொடிகளில் ‘நீலம்’ கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதற்குக் காரணம் அம்பேத்கர் அவர் பயன்படுத்திய கட்சிக் கொடியின் நிறம் நீலம் என்பதாக இருக்கலாம்.

நீலத்தின் விளக்கத்தை எழுத்தாளர் ஜெயமோகன் (கொற்றவை) குறிப்பிடுகிறார். ‘அறிய முடியாமையின் நிறம் நீலம் என்று தமிழர் அறிந்திருந்தார்கள். நீலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல் நீலம் ஒரு புன்னகை. கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்க தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் மரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள். அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள். ஆகவே, அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னகைக்கும் கருமையே நீலம்.

நீலம் கொண்டவள் குமரி அன்னை. அழியாத கதைகளின் வழியாக அவர்கள் அறிந்த முழுமுதல் தெய்வம். தென்திசையில் குமுறும் கடலுக்கும் வடதிசையில் ஓங்கி நின்ற மலையடுக்குகளுக்கும் இடையே அவள் ஆளுகையில் காட்டுப் பசுமை அலையடித்துத் ததும்பும் அம்மண்ணைக் குமரி நிலம் என்றார்கள்.’

அதனால்தான் நமது தேசிய கொடியில் இருக்கும் அசோகச் சக்கரத்தை நீல நிறத்தில் வடிவமைத்தாரோ அம்பேத்கர்?

0

Share/Bookmark

ராஜாஜி காட்டும் வழி

$
0
0

rajajiபேசு மனமே பேசு / அத்தியாயம் 18

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது, அவை பற்றிய நமது மதிப்பீடுகளும், அணுகுமுறைகளும்தான். இவற்றை பின்னாலிருந்து இயக்குவது நமது மனப்பான்மை என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமாக Mindset (மனப்பாங்கு) என்று பெயரிட்டுள்ளனர். நமது அனைத்துச் செயல்களுக்கும் பின்னால், அப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதும் மனப்பான்மையாகத்தான் வெளிப்படுகிறது. வாழ்க்கைப் பாதையில், நாம் பயணப்படும்போது, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடித் தடம் பதிவதற்கான வழித்தடம் அல்லது பாதை என்று கூட மனப்பான்மையை விவரிக்கலாம். நாம் நடக்க, நடக்க, வாழ்க்கைப் பாதை உருவாகிறது. நடக்காத வரை, பயன்படுத்தாத வரை பாதையே அங்கில்லை. இதுதான் வாழ்க்கை. நாமும், நமது மனப்பான்மைகளும் இரண்டறக் கலந்தவை.

மறைந்த மூதறிஞர் ராஜாஜியை அனைவரும் அறிவோம். எந்த விஷயத்துக்கும், அவர் ஆற்றிய எதிர்வினை அவர் யார் என்பதை உணர்த்தியது. அவர் சிறந்த ஆட்சியாளராக, பிடிவாதக்காரராக, சீர்திருத்தவாதியாக, அரசியல் அறிஞராக, துணிவு மிக்கவராக அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும்கூட அடையாளம் காணப்பட்டார். அதற்குக் காரணம், அவர் விஷயங்களை அணுகும்போது, அவர் வெளிப்படுத்திய மனப்பான்மை என்று சொல்லலாம். ஆரம்ப காலத்தில், அவர் சேலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்போது தங்குவதற்கு ஒரு வீடு தேவைப்பட்டது. சேலத்திலுள்ள சூரமங்கலம் சாலையில், அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளுடனும் ஒரு வீடு கிடைத்தது. அவருக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தாலும், அது பேய் வாழும் வீடு என்றும் அங்கே குடிபோவது உசிதமானதல்ல என்றும் பலர் அவரைத் தடுத்தனர். ஆனாலும், ‘அந்த வீடுதான் எனக்குப் பிடித்தமானது’ என்று சில காலம் அங்கேயே குடியேறி எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்தார்.

ராஜாஜியைப் பற்றியே இன்னொரு சம்பவமும் உண்டு. ஒருமுறை அவர் நீதிமன்றம்  செல்ல வேண்டியிருந்தது. அதற்காக ஒரு குதிரை வண்டியில் ஏறினார். வண்டியோட்டி ஏறுவதற்குள் குதிரை திடீரென்று வெறிபிடித்து ஓட ஆரம்பித்தது. குதிரையைக் கட்டுப்படுத்துவது இயலாது என்று உணர்ந்த ராஜாஜி, வண்டியின் சட்டங்களைப் பிடித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தார். குதிரை ஒரு கட்டத்தில், களைத்துத்தானே போகவேண்டும். அப்போது தானாக நின்று விடும் என்று எண்ணி, அமைதியாக இருந்ததாக பின்னர் கூறினார். அவர் நினைத்தபடியே, ஒரு குறிப்பிட்ட வழிக்குப் பழக்கப்பட்ட குதிரை, நீதிமன்றம் வந்ததும், தானாக நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய ராஜாஜி தனது வழக்கமான அமைதியுடன், நீதிமன்றத்துக்குள் சென்றார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், பிரச்னைகளை விட, அதை எதிர்கொண்ட மனிதரின் மனப்பான்மைதான் முன்னே நிற்கிறது. இது மூதறிஞரான இராஜாஜிக்கு மட்டுமில்லாமல், நம் அனைவரது வாழ்க்கையிலும், இதே விஷயம் பொருந்தும். எதையும் எதிர்கொள்ளவும், எதிர் கொள்ளாமல் இருக்கவும் நமது மனப்பான்மைதான் காரணமாக உள்ளது. இதை சரியானபடி வைத்துக்கொள்ள ‘தன்னோடு பேசுதல்’ மிகவும் பயன்படும்.

நாம் என்னவாகப் போகிறோம், இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்துதான் மனப்பான்மை வடிவம் பெறுகிறது என்பதை மறக்கக்கூடாது. இதுபோன்ற பொறுப்பேற்கும் தன்மை, நமக்குப் பிடித்த, வெற்றி பெற்ற விஷயங்களில் இருப்பது ஆச்சர்யம் இல்லை. ஆனால், மனிதன், பல பரிமாணங்கள் உள்ளவன். அனைத்துக்கும் அவன்தான் அடிப்படையாகப் பொறுப்பேற்க வேண்டும். இந்த மிக முக்கியமான மனப்பான்மை ஏற்பட, தொடர்ந்து இருக்கச் செய்ய, பின்வரும் வாக்கியங்களை தினமும் தொடர்ந்து சொல்லுங்கள்.

‘எனக்கான பொறுப்புகளை நான் ஏற்கிறேன். அது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். எனது செயல்களுக்கு நானே பொறுப்பு ஏற்பதன் மூலம், நானே எனக்கு ராஜா என்று உணர்கிறேன்.’
நாம், நமது தோல்விகளுக்கு காரணங்கள் சொல்ல, பெரும்பாலும், சூழ்நிலைகள், மற்றவர் போன்றவற்றைத் தேடுவதை வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். அதேபோல, சுய முயற்சியால் வந்த பெரும் வெற்றிகளுக்கும் அதிர்ஷ்டம், நல்ல நேரம், பிறர் உதவி, ஆதரவு ஆகியவற்றை காரணமாகக் கற்பித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு விதமான மனப்பான்மையும் மாற வேண்டும். இதற்குப் பின்வருமாறு உங்களோடு பேசிக் கொள்ளுங்கள். பலன் நிச்சயம் இருக்கும்.

‘நான் எந்தக் காலத்திலும், மற்றவர்களை எனது வாழ்க்கையை நடத்த விட மாட்டேன். அதற்கு நான் மட்டுமே பொறுப்பாக இருக்கிறேன். எனது செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் மற்றவர்கள் பொறுப்பல்ல.’

அவை அனைத்துக்கும் நானே பொறுப்பு. என்றால் நடப்பவை அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.’
இதற்கு என்ன அர்த்தம் என்றால், நமது முடிவுகளுக்கு நாமே பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான். இதனாலேயே முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரப்பட மாட்டோம். இந்த நிலையில், பிரச்னைகள், தடங்கல்கள், பின்னடைவுகள் என்று எதாக இருந்தாலும், அவற்றுக்கு விடை தேடுவதில் கவனமாக இருப்போம்.

சில சமயங்களில், நமது செயல்கள் மற்றும் விளைவுகளுக்கு நம்மால் பொறுப்பாக முடியாத சூழ்நிலை ஏற்படலாம். இந்த நிலை சாதாரண மக்களுக்கும், அவர்களை விட மேம்பட்டவர்களுக்கும் பொதுவாக ஏற்படாது. ஆனால், சமூகத்தில் கடைநிலையில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் போன்றோரில் இந்த நிலை ஏற்படலாம். அப்பொழுதும்கூட, நமது வாழ்க்கை முறையை மாற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றாலும், இதில் ஏதாவது ஒரு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான பொறுப்பை நாம் ஏற்போம் என்று முடிவு செய்தால் வழி பிறக்கும் என்பது பல்வேறு விதங்களில் நிரூபணம் ஆகியிருந்தது.

சமூகத்தின் அவலங்களில் ஒன்று பாலியல் தொழில் என்று கூறலாம். இதில் ஈடுபட்டுள்ள பெண் பாலியல்  தொழிலாளர்கள் அனைவருமே, ஏதோ ஒரு நெருக்குதலால்தான் இதில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் வாழ்க்கையில் என்ன செய்வது என்ற பயம், பரிதவிப்பு அனைவரிடமும் உள்ளது. எதிர்காலத்துக்கு என்று பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இயல்பாகவே இருக்கும். ஆனால், இவர்களுக்கு என்று வங்கிக் கணக்கு தொடங்குவது, மிகக் கடினமான விஷயம். இந்தக் குறையை போக்குவதும் நமது பொறுப்புதான் என்று கல்கத்தாவில் விலை மாதர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுறவு வங்கியைத் தொடங்கினர். 1994ல் இதைத் தொடங்கிய பெண் பாலியல் தொழிலாளியின் பெயர் ரேகா சட்டர்ஜி. வங்கியாக மட்டும் செயல்படாமல், பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்களையும், இந்தக் கூட்டுறவு வங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த வெற்றிகரமான பரிசோதனையைப் பார்த்து, மும்பையின், பாலியல் தொழில் நகரமான காமத்திபுராவில் உள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள், தங்களுக்கு என்று, சாங்கினி பெண்கள் கூட்டுறவு வங்கியைத் தொடங்கினர். இந்த வங்கிகள் ரூ.10/-ஐக் கூட சேமிக்கும் விதத்தில் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள தேசிய வங்கிகள் அளிக்கும் வட்டியும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் பலவித அவமானங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருபவர்கள் கூட, தங்களது வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பு ஏற்கத் தயாராகும்போது, பல புதிய வழிகள் உருவாகின்றன. இவ்வாறு வாழ்க்கையே பிரச்சினையாக உள்ளவர்களும்கூட, அந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்றால், மனமும், உடலும், மாற்றத்தை உருவாக்க இணைந்து பணிபுரியும் என்பதை அனுபவத்தால் உணரலாம். இதற்கான விதத்தில் எண்ணங்களை உருவாக்கிக் கொண்டாலே போதும். அதாவது உங்களோடு நீங்கள் மானசீகமாகப் பேசினாலே, பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். யாராக இருந்தாலும், பொறுப்புணர்வு ஏற்பட்டால் வாழ்க்கையின் பாதையை செப்பனிடத் தயாராகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உணர்வு ஏற்பட, நிலையாக தொடர்ந்து இருக்க பின்வரும் வார்த்தைகளை தினமும், திரும்பத் திரும்ப சொல்லி வாருங்கள். இவை மந்திரம் இல்லை, ஆனால் சக்தியை உருவாக்கும் சாதாரண வார்த்தைகள்தான்.

வெற்றிகரமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுவதற்கும், சந்தோஷமான மனநிலையை உருவாக்கி, அதைத் தொடர்ந்து இருக்கச் செய்யவும், உடலில் வலிமை ஏற்படவும், இவை நிலையாக இருக்கவும், நானே பொறுப்பு. எனது நேர்மறையான எண்ணங்களுக்கும் ஆரோக்கியமான நம்பிக்கைகளுக்கும், எனது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துக்கும் நான் மட்டும்தான் பொறுப்பு.’

0

Share/Bookmark


நாளைய வல்லரசின் நேற்றைய சாதனை – I

$
0
0

ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 11


(விழாவில் திரையிடப்பட்ட ஒரு டெலி ஃபிலிமின் திரைக்கதை வடிவம்).


போபாலில், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இந்தியாவில் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. உலகில் எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

- புதிய கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

அல்லாஹ் கருணையே வடிவானவர். பசித்தவர்களுக்கு உணவு போன்றவர். தாகித்தவர்களுக்குத் தண்ணீர் போன்றவர். நோயுற்றவர்களுக்கு மருந்து போன்றவர்.

- முகம்மது நபி சல்

கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம்…
இந்தப் பேரழிவை எமக்குத் தந்ததற்கு உமக்கு நன்றி ஐயா…
பிதா… சுதன்… பரிசுத்த ஆவிக்கு ஜெயம்…
கஷ்டப்பட்டு பாரம் சுமந்தவர்களுக்கு
மரணத்தை சம்பளமாகத் தந்த உங்களுக்கு ஸ்தோத்திரம்.
ஹல்லேலூயா… ஹல்லேலூயா… ஹல்லேலூயா!

- சங்கீதம் 11 அத்- 27 வது வரி

போபால் போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது. முன்னேற்றப் பாதையில் முன்னேறிக் கொண்டே இருக்கவேண்டும்.

- மானினிய ஸ்ரீமான் மன்மோகன் சிங் ஜி

இந்தியா ஒளிர்கிறது.

-ஆதர்ணிய அத்வானிஜி

அமெரிக்காகாராள்லாம் ரொம்ப நல்லவா… அவா மேல ஒரு தப்பும் இல்லை. வாங்கோ… நாமளே எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்.

- உள்துறை அமைச்சர்

வண்டியை தாறுமாறா ஓட்டிட்டுப் போய் பல பேரை ஒருத்தர் கொன்னுட்டா ஓட்டினவர் மேலதான தப்பு. வண்டியோட உரிமையாளர் மேல ஒரு தப்பும் கிடையாதே.

- இந்திய உயர் நீதிமன்ற நீதிபதியும்  யூனியன் கார்பைடின் அறக்கட்டளையின் தலைவருமான அஹமது.

0

abstract-209aதாரை தப்பட்டைகளும் டிரம்ஸ் டிரெம்பெட்களும் முழங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. வண்ணச் சுழல் விளக்குகள் அலங்கரிக்கும் மேடையில் பள பள உடையுடன் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து வருகிறார். அவருக்குப் பின்னாலேயே கோட் சூட் போட்ட ஒருவர் துள்ளிக் குதித்து வருகிறார். இருவரும் அரங்கின் மையப் பகுதிக்கு வந்து அரங்கத்தினரை வணங்குகிறார்கள்.

பெண் அறிவிப்பாளர் : வெல்கம் டு தி ஒன் அண்ட் ஒன்லி… நம்பர் ஒன் துடப்பக் கட்டையின்… நம்பர் ஒன்  கேம் ஷோ..!

ஆண் அறிவிப்பாளர் : வந்தனமய்யா வந்தனம். வந்த சனமெல்லாம் குந்தணும்.
கிண்ணத்தில இருக்கு சந்தனம்… பூசிக்கிட்டு குந்தணும்…

(பின்னணி இசையில் உறுமி மேளம் வெளுத்து வாங்குகிறது).

ஆண் (இசையை சட்டென்று நிறுத்தச் சொல்லி) : போதும் இதுக்கு மேல அடிச்சா நம்ம அக்கா, கரகத்தை எடுத்து வெச்சு ஆட ஆரம்பிச்சிடுவாங்க. அதனால நாம ஷோவுக்குப் போவோம்…

பெண் (புடவையை இடுப்பில் செருகியபடி சண்டைக்கு போகும் பாணியில்) : என்னது நான் உனக்கு அக்காவா..? பொக்கை வாயை பல் செட் வெச்சி மறைச்சிருக்க. தலைக்கு வெச்சிருக்கற விக்குக்கே நரைச்சுப் போச்சின்னு டை அடிச்சிட்டு வந்திருக்க. இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்துட்டு இருக்கற உனக்கு நான் அக்காவா..?

ஆண் : ஐய்யோ… கேமரா ஓடிட்டிருக்கு. எல்லாரும் பாக்கறாங்க. ஷோவை ஆரம்பிப்போம்.

பெண் : ஷோ கெடக்கட்டும். இதுக்கு நீ பதில் சொல்லு. நான் உனக்கு அக்காவா..?

ஆண் : அப்ப உன்னை கரகாட்டக்காரின்னு சொன்னதுல கோபம் இல்லையா… நல்லதாப் போச்சு.

பெண் : அது அடுத்த எபிசோட். என்னை அக்கான்னு நீ எப்படிச் சொல்லலாம்? அதுக்கு மொதல்ல பதில் சொல்லு.

ஆண் : ஐய்யோ சரி விடு… அக்கான்னு சொன்னது தப்புத்தான். இனிமே ஆயான்னே கூப்பிடறேன். என்னை மன்னிச்சிடு.

பெண், செல்லக் கோபத்துடன் அடிக்க விரைகிறார். ஆண் பொய்யாகப் பயந்தபடியே ஓடுகிறார். சிறிது நேர கொஞ்சலுக்குப் பிறகு இருவரும் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். சரி, நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வெச்சுப்போம். நாம நேரா நிகழ்ச்சிக்குப் போவோம். மொதல்ல லெட் அஸ் வெல்கம் அவர் சீஃப் கெஸ்ட்ஸ்.

பின்னால் இருக்கும் படுதாவின் மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. இசைக்கருவிகள் உச்சத்தில் முழங்குகின்றன. மெள்ள திரை விலகுகிறது. கோட் சூட் அணிந்தவர் கம்பீரமாக நடந்து வருகிறார். அவருக்குப் பின்னால் இருவர் வருகிறார்கள். அந்த இருவர் வரும்விதத்தைப் பார்த்தால் கோட் சூட் அணிந்தவரின் அடப்பக்காரர்கள் போல் நடை உடையில் அவ்வளவு பணிவு… பவ்யம்.

அறிவிப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு ‘பொக்கே’ கொடுக்கிறார்கள்.
ஆண் (மூவரில் ஒருவரை முன்னால் வரச் சொல்கிறார்) : நம் இன்றைய சிறப்பு விருந்தினர்களில் முதலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மனை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் (இசைக்கருவிகள் காது அதிரும் அளவுக்கு முழங்குகின்றன).

யூனியன் கார்பைடு சேர்மனை உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்கும். ஆயிரக்கணக்கானவர்களைச் சர்வ சாதாரணமாகக் கொன்னவர்.

லட்சக்கணக்கானவங்களை கண்ணு தெரியாதவங்களாகவும், சுவாசிக்க முடியாதவங்களாகவும் பைத்தியமாகவும் ஆக்கியவர். தி கிரேட் வாரென் ஆண்டர்சன்.

(ஆண்டர்சன் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மக்கள் கூட்டத்தின் முன் கைகளை உற்சாகமாக அசைத்து வாழ்த்துத் தெரிவிப்பதுபோல் பார்வையாளர்களைப் பார்த்து கைகளை அசைக்கிறார். கூட்டம் கை தட்டி வரவேற்கிறது).

அடுத்தது நம் புண்ணிய பூமியாம் பாரத தேசத்தின் தவப்புதல்வர்… சீக்கிய சிங்கம்… மானினிய ஸ்ரீமான் மன்மோகன் சிங்ஜி…

(பின்னணியில் பல்லே பல்லே… என்று சீக்கிய பாங்ரா இசை ஒலிக்கிறது. மன்மோகன் சிங்ஜி தலை குனிந்து வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்)

அடுத்தது நம் இந்து சாம்ராஜ்ஜியத்தின் நவீன சிவாஜி… ரத யாத்திரை மன்னன்… ஆதர்ணிய அத்வானிஜி…

(பின்னணியில் ஓம் என்ற முழக்கம்… சங்கு ஒன்று உரத்து ஒலிக்கிறது. அத்வானிஜி கூட்டத்தினரைப் பார்த்து வணக்கம் சொல்கிறார்)

ஆண் : ஓ.கே. சார். இந்த நிகழ்ச்சிக்கு வந்து எங்களை கவுரவிச்சதுல ரொம்பவும் சந்தோஷம்.

அத்வானிஜி : உண்மையிலயே  இந்த மாதிரி மக்களுக்கு மிகவும் அவசியமான நிகழ்ச்சியை நடத்தற உங்க தொலைக்காட்சி நிலையத்துக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்.

ஆண் : தேங்யூ சார்… தேங்யூ. சரி… ப்ளீஸ் டேக் யுவர் சீட்.

அவர்களை அழைத்துக் கொண்டு சென்று இருக்கையில் அமரவைக்கிறார்.

ஆண் (சக அறிவிப்பாளரைப் பார்த்து) : அக்கா… சீ… ஆயா… தப்பு தப்பு… ஏ பொண்ணே… இப்பச் சரியா..? (பெண் அவரை முறைக்கிறார்). உனக்கு போபால் தெரியுமா..?

பெண் : போபாலா அப்படின்னா..? எனக்கு கோபாலைத் தான் தெரியும்.

ஆண் : எது இந்த கோபால் பல்பொடியா..? அதெல்லாம் பல் தேய்க்கறவங்களுக்குத் தான தெரியும். ஓ… நீ விளம்பரங்கள்ல பார்த்திருப்ப இல்லை.

பெண் (அடிக்கக் கையை ஓங்கியபடியே) : அந்த கோபால் இல்லை… (சரோஜா தேவி ஸ்டைலில்) கோபால்… நீங்க இல்லைன்னா என்னால உயிர் வாழ முடியாது! அந்த கோபால்.

ஆண் : ஓ அந்த கோபாலா..? சரி. ஆனா நாம் இன்னிக்கு பாக்கறப்போறது போபால். அது பல்பொடியும் இல்லை… ஆளும் இல்லை… ஒரு இடம்.

பெண் : இடம்னா..?

ஆண் : இடம்னா… இடம்தான்.

பெண் : அது தெரியும் டுபுக்கு… நாடா… மாநிலமா..? மாவட்டமா..?

ஆண் : குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. டைரக்டர் சொல்லித் தர்றதை நான் சொல்றேன். பேசாம அதை கேட்கணும். சரியா..? கையைக் கட்டு (பெண், முன்னால் வந்து ஆணின் கையைக் கட்டுகிறார்) என் கையை இல்லை. உன் கையை. (பெண் தன் கையைக் கட்டிக் கொள்கிறார்). வாயில விரலை வை (விரல் சூப்பிக் கொள்வதுபோல் வைக்கிறார்) ஐய்யோ… ஐய்யோ… அப்படி இல்லம்மா (கையைக் கட்டிக் கொண்டு, ஆட்காட்டிவிரலை மட்டும் உதட்டில் வைத்து செய்து காட்டுகிறார். பெண்ணும் அப்படியே செய்கிறார்).

ஆண் : ஷோ முடியறவரை இப்படியே இருக்கணும். அசைஞ்சா கொன்னுப்புடுவேன். (பார்வையாளர் பக்கம் திரும்பி) : போபால்ல ஆயிரக்கணக்கானவங்க செத்துப் போயி இன்னிக்கோட 29 வருஷங்கள் ஆயிடிச்சு. அந்த சில்வர் ஜூப்ளி கொண்டாட்டத்துக்காக நாம நடத்தப்போறதுதான் இந்த ஷோ. எல்லாரும் ஜோரா கை தட்டுங்க (அரங்குக்கு அழைத்து வரப்பட்ட பார்வையாளர்கள் தங்கள் மீது கேமரா திரும்பியதும் வாயெல்லாம் பல்லாக ஜோராகக் கை தட்டுகிறார்கள்) போபால் சம்பவம் பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அந்த நிகழ்வுக்கு யார் காரணம் அப்படிங்கறது தான் இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியோட  தீம். அதுக்கு முன்னால நாம போபால்ல நடந்த சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம் (திரையில் கிளிப்பிங்குகள் ஓடுகின்றன).

பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகள். வேதனை தோய்ந்த விவசாயிகளின் முகங்கள்… விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி… புதிய வீரிய பூச்சிக் கொல்லி கண்டுபிடிப்பு… பூச்சிக் கொல்லியால் சாகும் பூச்சிகள். பச்சைப் பசேல் என்று காற்றில் தலை அசைக்கும் பயிர்கள். வாயெல்லாம் பல்லாக விவசாயிகள். ஆண்டர்சன் கையை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார்.

பிரமாண்ட தொழிற்சாலை… அதன் அடிக்கல் நாட்டு விழா… சந்தோஷமான பணியாளர்களின் குரூப் ஃபோட்டோ… ஃபேக்டரி காம்பவுன்ட் சுவரைத் தொட்டடுத்த இடத்தில் சேரிகள்…

1984, டிசம்பர், 2-3… இரையைப் பிடிக்க பதுங்கிப் போகும் நாகம் போல் நச்சுப் புகை பரவுகிறது. தூக்க்கத்தில் இருந்த மக்கள் கண் எரிச்சல் தாங்காமல் எழுந்திருக்கிறார்கள். இருமல் ஆரம்பிக்கிறது. அடக்க முடியாமல் தொடர்கிறது. மயங்கி விழுகிறார்கள். அலறியடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். வழியெங்கும் பிணக்குவியல். தாயின் மார்பில் விழுந்து கிடக்கும் குழந்தை. வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் முதியவர்கள்… வயிறு வீங்கி இறந்து கிடக்கும் ஆடு மாடுகள்… நிற்காமல் தொடரும் இருமல்கள்… முடிவற்று எரியும் சிதைகள்… குப்பை போல் லாரியில் அள்ளப்பட்டு வந்த பிணக்குவியலை ஒரே குழியில் போட்டுப் புதைக்கிறார்கள் … இறந்து போனவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களின் அணிவகுப்பு… இறந்தவர்களின் எண்ணிக்கை… 3,287 (அரசு தரப்பு தகவலின்படி) என்று சப் டைட்டில் காட்டப்படுகிறது. ஆண்டர்சன் இரண்டு கைகைளையும் உயர்த்தி ‘டபுள் வெற்றி’ என்று காட்டுகிறார்.
பூச்சிக் கொல்லியைச் சுவாசிப்பதால் துடிக்கும் பூச்சிகள்… நச்சு வாயுவை சுவாசித்ததால் திணறும் மனிதர்கள். நூற்றுக்கணக்கான பூச்சிகள் செத்து விழுந்து கிடக்கும் காட்சி. நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இறந்து கிடக்கும் காட்சி…என காட்சிகள் மாறி மாறிக் காட்டப்படுகின்றன.

பொயட்டிக் ஜஸ்டிஸ்..? – என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிகிறது.

ஆண்டர்சன் (எழுந்து நின்று கைகளைத் தட்டியபடியே) : அருமையான ப்ரசண்டேஷன்.
சிங்ஜி : சிந்தனையைத் தூண்டும்  படம். மனுஷங்க நல்லா இருக்கறதுக்காக, அதைவிடக் கீழான  பூச்சிகளைக் கொல்றதுல எந்தத் தப்புமே இல்லை. அதுமாதிரி மேலான மனிதர்களான அமெரிக்கர்களின் நலனுக்காக மத்தவங்களைக் கொல்றதுல தப்பே கிடையாது அப்படிங்கறதை அழகா காட்டியிருக்கீங்க.

ஆண்டர்சன் : சரியாச் சொன்னீங்க. ஆனா, சின்ன ஒரு மிஸ்டேக். இறந்தது சுமார் 3000 பேர் அப்படிங்கற டேட்டா தப்புன்னு நினைக்கறேன். எண்ணிக்கை ரொம்ப அதிகமாத்தான் இருக்கும். ஏன்னா ஒரு குடும்பத்துல ஒருத்தர் இறந்திருந்து மத்தவங்க தப்பிச்சிருந்தா அவங்க வந்து இன்னார் செத்துப் போயிட்டாருன்னு சொல்லுவாங்க. கணக்கு வெச்சுக்க முடியும். அம்மா இறந்துடாங்கன்னா அப்பா வந்து சொல்ல முடியும். குழந்தைகள் மட்டும் இறந்திருந்தா அப்பா அம்மா சேர்ந்து வந்து சொல்லியிருக்க முடியும். ஒரு குடும்பமே செத்திருந்தா யார் வந்து சொல்ல முடியும்.

ஆண் : அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வந்து சொல்லியிருக்கலாமே..?

ஆண்டர்சன் : அவங்களும்தான் செத்திருப்பாங்களே.

ஆண் : அப்போ செத்தவங்களோட எண்ணிக்கையை கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்திருக்கும். இல்லையா..? இப்படி நீங்களே நிறைய இருக்கும்னு சொன்னா நஷ்டஈடு அதிகம் கொடுக்க வேண்டியிருக்குமே.

ஆண்டர்சன் : அதெல்லாம் தேவையே இருக்காது. நிறைய பேர் செத்திருப்பாங்கன்னு சொல்றது சும்மா ஒரு ஆக்யுரஸி ஆஃப் டேட்டாவுக்காகத்தான். வளரும் நாடுகள்ல… அஃப்கோர்ஸ் எனக்கு இந்த வார்த்தையில அவ்வளவா உடன்பாடு கிடையாது. இந்த உலகத்துல வளர்ந்த நாடுகள்… வளரக் கூடாத நாடுகள் அப்படின்னு ரெண்டு பிரிவுதான் உண்டு. அந்த நாடுகள்ல இறக்கும்போது அதை நாம கண்டுக்க வேண்டியதே இல்லை.
சிங்ஜி : யெஸ்… ஹி  இஸ் ரைட். உதாரணத்துக்கு ‘டவ்’ கம்பெனியையே எடுத்துக்கோங்களேன்.  யூனியன் கார்பைடை அவங்க வாங்கிக்கிட்டாங்க. அப்போ கார்ப்பரேட் விதிகளின்படி எந்த நிறுவனத்தை வாங்கறோமோ அந்த நிறுவனத்தோட கடன்களையெல்லாம் நாமதான் அடைச்சாகணும். அதன்படி யூனியன் கார்பைடோட ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி தொடர்பான வழக்குகளுக்கு கோடிக்கணக்குல நஷ்டஈட்டைக் கொடுத்திருக்காங்க. இத்தனைக்கும் அங்க யாருமே சாகலை. போபால்ல ஆயிரக்கணக்கானவங்க செத்திருக்காங்க. ஆனா நஷ்ட ஈடு கேட்டபோது ‘டவ்’ கம்பெனிக்காரங்க அழகா, அது போன மாசம்… இது இந்த மாசம்… அப்படின்னு சொல்லிட்டாங்க. யாரை எங்க வைக்கணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

ஆண்டர்சன் : அதுவும் போக நிவாரணத்தை நாங்க கொடுக்கப் போறதில்லையே. இந்திய அரசுதான கொடுக்கப் போறாங்க. அவங்க கிட்ட நிச்சயமா அதைச் சமாளிக்க நல்ல வழி இருக்கும், இல்லையா மிஸ்டர் மன்மோகன் ஜி.

சிங்ஜி :  ஆமாம். இருக்கு இருக்கு. நிவாரணம் கேட்டு விண்ணப்பம் கொடுக்கறவங்க கிட்ட நீங்க சம்பவம் நடந்தபோது அங்கதான் இருந்தீங்கங்கறது என்ன ஆதாரம்னு ஒரு சிம்பிள் கேள்வி கேட்டாப் போதும். ப்ராப்ளம் சால்வ்ட். அவங்களால எப்படி நிரூபிக்க முடியும் சொல்லுங்க. புகைமூட்டத்துக்கு முன்னால நின்னு எடுத்த போட்டாவா அவங்க கிட்ட இருக்கும்?

ஆண் : அப்போ இந்திய அரசு நிவாரணம் தருவேன்னு அறிவிச்சிருக்கே. அதை எப்படிக் கொடுப்பாங்க.

மானினிய மன்மோகன் சிங்ஜி : அதையெல்லாம் கட்சிக்காரங்க பார்த்துப்பாங்க. எதுலயும் ஒரு நியாயம் தர்மம்னு இருக்கு இல்லையா..? தலைவர்கள் மட்டுமே கொள்ளை அடிச்சா போதுமா..? அடிமட்டத் தொண்டர்களுக்கும் ஒரு வாய்ப்பு வேணும் இல்லையா..?

ஆண் : ஆனா அவங்க பத்து லட்சம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பிச்சதுல ஐஞ்சு லட்ச மனுவை நிராகரிச்சிட்டாங்களே… அது ஏன்?

ஆண்டர்சன் : ஆனாலும் உங்க ஊர்ல இந்த விஷயத்துல ரொம்பவே ஓவர்தாம்ப்பா.  இலவச வேட்டி சேலைக்கு க்யூல நிக்கற மாதிரி எல்லாரும் நிவாரண முகாம்ல லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலரு, செத்துப் போன ஒருத்தரோட உருவத்தை நாலு ஆங்கிள்ல போட்டோ எடுத்து நாலு பேருக்கான நிவாரணத்தை வாங்கிட்டிப் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். இதைவிட இன்னொரு வேடிக்கை என்னன்னா விபத்து நடந்த மறு நாளே ஊரே செத்துக் கிடக்குது… எங்க பார்த்தாலும் வாந்தி பேதி மயக்கம்னு கிடக்குது. திருடங்க நமக்கு நல்ல சான்ஸ் கிடைச்சதுன்னு வாசல்ல இறந்து கிடந்தவங்களை ஓரமா தள்ளி வெச்சுட்டு வீட்டுக்குள்ள புகுந்து இருந்ததையெல்லாம் திருடிட்டுப் போயிருக்காங்க.

ஆண் : இதெல்லாம் உண்மையிலயே நடந்ததா..?

ஆண்டர்சன் : யாருக்குத் தெரியும். சும்மா கொளுத்திப் போடவேண்டியதுதான். அப்பாவிங்களை இப்படி கொன்னுட்டீங்களேன்னு நாளைக்கு உலகத்துல எந்த மூலைல இருந்து யாராவது நாக்கைப் பிடுங்கற மாதிரி கேள்வி கேட்டுடக்கூடாது இல்லையா..? இந்த மாதிரி அப்பாவிங்களைப் பற்றி அப்பப்ப அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கணும்.

ஆண் : ஆனா யாரோ ஒருத்தர் கூடக் கேட்டாரே… பாதிக்கப்பட்டது உண்மையிலயே 1.5 லட்சம் பேருதான். ஆனா, ஐந்து லட்சம் பேருக்கு நிவாரணம் கொடுக்க முடிவு பண்ணியிருக்கு. இதனால உண்மையிலயே பாதிக்கப்பட்டவங்களுக்கு ரொம்பவும் குறைச்சலாத்தான் நஷ்டஈடு கிடைக்கும் அப்படின்னு சொல்றாரே.

மன்மோகன்சிங்ஜி : அவருக்கு அரசியல் தெரியாதுங்க. அப்படித்தான் பேசுவாரு. எங்கள் அரசு உண்மையிலயே பாதிக்கப்பட்ட பழைய காலனி முஸ்லிம் மக்களுக்கு மட்டுமில்லாமல் புதிய காலனியில இருக்கற இந்துக்களுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கறதைத் தாங்க முடியாம பொறாமையில அப்படிச் சொல்றாரு.

ஆண் (ஆண்டர்சனைப் பார்த்து) : அது எப்படி சார் உங்களால இவ்வளவு பெரிய சாதனையைச் செய்ய முடிஞ்சது.

ஆண்டர்சன் (கொஞ்சம் வெட்கப்பட்டபடியே) : ஓ நோ… நீங்க என்னை ரொம்பவே புகழறீங்க. அவ்வளவு பேர் செத்ததுக்கு நாங்க முக்கிய காரணம்னாலும் அது என் ஒருத்தனால மட்டுமே நடந்த காரியமில்லை. அது ஒரு டீம் எஃபர்ட். (மற்ற இரண்டு விருந்தினர்களை அழைத்து அவர்கள் தோளில் கையைப் போட்டு) உங்க நாட்டோட பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் மட்டும் இல்லைன்னா இது நடந்திருக்கவே முடியாது. அதனால எனக்கு தர்ற பாராட்டுல பாதியை இவங்களுக்குக் கொடுக்கறதுதான் முறை (அவர்கள் இருவரும் மிகவும் பூரித்துப் போய் அந்த பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறார்கள்).

ஆண் அறிவிப்பாளர் : தாட்ஸ் தி ஸ்பிரிட். உங்களோட பெருந்தன்மையை நாங்க ரொம்பவும் பாராட்டறோம். அமெரிக்கா ஏன் உலகத்துல ஒரே வல்லரசா நிலைச்சு இருக்கு அப்படிங்கறதுக்கு இதைவிட வேற உதாரணமே தேவையில்லை. மேலும் மேலும் நீங்க இது மாதிரி நிறைய சாதனைகள் செய்ய எங்கள் நிலையத்தின் சார்பாகவும் தேசத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

ஆண் அறிவிப்பாளர் திரும்பவும் மேடையின் மையப்பகுதிக்கு வருகிறார். பெண் பொம்மைபோல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார். (ஆண் சிரித்தபடியே பரிதாபப்பட்டு) இனிமே ஒழுங்க இருப்பியா..? (பெண் தலையை ஆட்டுகிறார்) கோக்கு மாக்கா கேள்வி கேக்க மாட்டேன்னு சத்தியம் செய்.

பெண் : உன் மேல் சத்தியமா இனிமே உன்னை மாதிரி கேள்வி கேட்கமாட்டேன்.

ஆண் : ஆங்… அது..! (சட்டென்று திடுக்கிட்டு) என்ன சொன்ன..? என்ன மாதிரி கேள்வி கேட்கமாட்டியா..? அப்ப நான் கோக்கு மாக்காவா கேள்வி கேட்கறேன்?

பெண் : அதை நான் என் வாயால வேற சொல்லணுமா..? ஊருக்கே தெரியுமே அந்த சிதம்பர ரகசியம்.

(தொடரும்)

Share/Bookmark

நாற்காலி சொல்லித்தரும் பாடம்

$
0
0

child-sitting-books-18438969அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 11

நாற்காலிகளில் பல வகைகள் உண்டு. ஓர் உதாரணத்துக்காக, அதில் இரண்டு வகைகளைமட்டும் எடுத்துக்கொள்வோம்:

* மர நாற்காலி
* பிளாஸ்டிக் நாற்காலி

இந்த இரண்டுக்கும் இடையே என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?

இரண்டும் நாற்காலிகள்தாம். உட்காரப் பயன்படும். நான்கு கால் இருக்கும், முதுகு இருக்கும், கைப்பிடிகள் இருக்கலாம், உட்காரும் இடத்திலும் முதுகு வைக்கும் இடத்திலும் குஷன் தைத்திருக்கலாம், பிளாஸ்டிக் நாற்காலி விலை மலிவு, மர நாற்காலி காஸ்ட்லி…

அதையெல்லாம் விடுங்கள். முக்கியமான வித்தியாசம், மர நாற்காலி பல பாகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது, ஆனால் பிளாஸ்டிக் நாற்காலி அப்படியே முழுமையாகச் செய்யப்பட்டது.

அதாவது, முதல் நாற்காலியில் ஒரு தச்சர் நான்கு கால்கள், கைப்பிடியின் துண்டுகள், முதுகின் துண்டுகள், உட்காரும் பலகை என்று எல்லாவற்றையும் மரத்தால் தனித்தனியே செய்திருக்கிறார், அவற்றைச் சரியாகப் பொருத்தி மர ஆணிகளை அடித்து நாற்காலியாக உருமாற்றியிருக்கிறார்.

நீங்கள் விரும்பினால், அந்த மர நாற்காலியைத் தனித்தனியே பிரித்துவிடலாம், திரும்பவும் பழையபடி பூட்டிவிடலாம்.

கொஞ்சம் பொறுங்கள். நீங்கள் விரும்பினால்மட்டும் போதாது, எங்கே பிரிக்கவேண்டும், எப்படிப் பிரிக்கவேண்டும், எப்படி மறுபடியும் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

இதெல்லாம் தெரியாவிட்டால், மர நாற்காலி முழுவதும் ஒரே பாகமாகதான் உங்களுக்குத் தோன்றும். அதில் ஒரு கால் உடைந்துவிட்டாலும், மொத்த நாற்காலியையும் தூக்கிப் போட்டுவிட நினைப்பீர்கள்.

அதே உடைந்த நாற்காலியை ஒரு தச்சரிடம் காட்டினால், ‘இதென்ன சார் பெரிய மேட்டர்? உடைஞ்ச காலைப் பிரிச்சு எடுத்துட்டு, வேற மரத்துல புதுக் கால் செஞ்சு போட்றலாம்’ என்பார்.

‘அட, இது எனக்குத் தோணலியே!’

உண்மைதான். காரணம், அந்த நாற்காலியை நீங்கள் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்கவே இல்லை. அதனை ஒரே பொருளாகதான் பார்க்கிறீர்கள்.

அதேசமயம், பிளாஸ்டிக் நாற்காலியை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒன்றாகதான் பார்த்தாகவேண்டும். காரணம், அது நிஜமாகவே ஒரே பொருள், தனித்தனி பாகங்கள் ஒருங்கிணைந்தது அல்ல. ஏதாவது உடைந்துவிட்டால், முழு நாற்காலியையும் தூக்கி வீசவேண்டியதுதான்.

இலக்கணப் பாடத்தை நிறுத்திவிட்டு நாம் தச்சுக்கலை பயிலத் தொடங்கியது ஏன் என்று குழம்பவேண்டாம். பகுபதம், பகாப்பதம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்குதான் இந்த நாற்காலி உதாரணங்கள்.

அதென்ன பதம்?

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொல்கிறோம். அங்கே ‘பதம்’ என்றால், சரியாக வெந்துள்ளது என்று அர்த்தம். ‘பார்த்துப் பதமா நடந்துக்கோ’ என்று சொல்வதும் இதே அர்த்தத்தில்தான், ’சரியாக நடந்துகொள்’.

‘பாதம்’ என்பதைப் ‘பதம்’ என்று சொல்வதும் உண்டு. ‘பாவை என் பதம் காண நாணமா?’ என்று புகழ் பெற்ற நாதஸ்வர வித்வானைக் கிண்டலடிப்பார் தில்லானா மோகனாம்பாள்.

ஆனால் இங்கே நாம் பார்க்கும் ‘பதம்’ என்ற சொல்லுக்கு இந்த இரண்டு அர்த்தங்களும் இல்லை. ’எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதமாம்’ என்கிறது நன்னூல்.

அதாவது, ஓர் எழுத்து தனியாகவோ, அல்லது மற்ற எழுத்துகளுடன் சேர்ந்தோ ஒரு பொருளைத் தந்தால், அது ‘பதம்’ எனப்படும். நமக்குப் புரியும்படி சொல்வதென்றால், ’பதம்’ என்றால், இப்போது நாம் பயன்படுத்துகிற ’சொல்’ அல்லது ‘வார்த்தை’ என்று அர்த்தம்.

இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயம் அல்ல. ‘எதிர்ப் பதம்’ என்று பள்ளியில் படித்திருப்போம், opposite word என்பதுதானே அது?

அடுத்து, ’பகுத்தல்’ என்றால் ’பிரித்தல்’ என்று அர்த்தம். ‘பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்பார் திருவள்ளுவர்.

ஆக, ‘பகுபதம்’ என்றால், பிரிகிற, நம்மால் பிரிக்கக்கூடிய பதம் (மர நாற்காலி), ‘பகாப் பதம்’ என்றால், பிரியாத, பிரிக்கமுடியாத, சொல்லப்போனால் பிரிக்கக்கூடாத பதம் (பிளாஸ்டிக் நாற்காலி).

உதாரணமாக, ‘படித்தான்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இது மர நாற்காலியா, அல்லது பிளாஸ்டிக் நாற்காலியா? இதைப் பிரிக்கமுடியுமா?

மேலோட்டமாகப் பார்த்தால், பிரிக்கமுடியாது என்றுதான் தோன்றும். காரணம், நமக்கு அதன் பாகங்கள் தெரியவில்லை. ஆகவே, பிளாஸ்டிக் நாற்காலி என்று நினைத்துவிடுகிறோம்.

ஆனால் உண்மையில், இது மர நாற்காலி. இதனைப் படி + த் + த் + ஆன் என்று பிரிக்கலாம்.

ஏன் அப்படி? ப + ட் + இத் + தான் என்று பிரிக்கக்கூடாதா?

கூடாது. மர நாற்காலியை நம் இஷ்டம்போல் பிரித்தால், கையோ காலோ வெட்டுப்பட்டுப் பயனின்றிப் போய்விடும். அதற்கென்று உள்ள வழிமுறைகளை அறிந்து அதன்படிதான் பிரிக்கவேண்டும்.

இன்னோர் உதாரணம் வேண்டுமென்றால், உங்கள் பள்ளி வேதியியல் வகுப்பை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வெவ்வேறு வேதிப் பொருள்கள் சேர்ந்து இன்னோர் வேதிப் பொருள் உருவாகும்போது, எது எதனுடன் எப்படிச் சேரவேண்டும் என்பதற்குத் தெளிவான வரையறைகள் உண்டல்லவா?

அதுபோல்தான் இங்கேயும். சொல்லைப் பிரிப்பது எப்படி என்று பின்னால் விரிவாகப் பேசுவோம். இப்போதைக்கு, ‘படித்தான்’ என்பதைப் ‘படி + த் + த் + ஆன்’ என்று பிரிக்கமுடிகிறது என்பதுதான் மேட்டர்.

இதில் உள்ள ‘படி’ என்ற சொல்லைமட்டும் எடுத்துக்கொள்வோம். இதைப் பிரிக்கமுடியுமா? இது மர நாற்காலியா, அல்லது பிளாஸ்டிக் நாற்காலியா?

‘படி’ என்ற சொல்லை இதற்குமேல் பிரிக்கமுடியாது. அது பிளாஸ்டிக் நாற்காலிதான். (முன்பு மர நாற்காலியில் அது ஒரு பாகமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.)

ஆக, ‘படித்தேன்’ என்பது மேலும் பிரிக்கக்கூடிய பதம், அதாவது பகுபதம், ‘படி’ என்பது இதற்குமேல் பிரிக்கமுடியாத பதம், அதாவது பகாப்பதம்.

இதைச் சுலபமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ஒரு மொக்கைக் கவிதை தரட்டுமா?

‘என் அன்பே,
தமிழாசிரியர் சொல்கிறார்,
’நாம்’ என்பது பகாப்பதமாம்,
பிரிக்கமுடியாதாம்,
பிரிக்கக்கூடாதாம்!
அவருக்கு நம் காதல் விஷயம் எப்படித் தெரிந்தது?’

அடிக்க வராதீர்கள். கவிதை(?) சுமாராக இருந்தாலும், மேட்டர் மனத்தில் பதிந்திருக்கும். அதுதானே நமக்கு முக்கியம்?

அது சரி, பகுபதம், பகாப்பதத்தை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஏற்கெனவே நாற்காலி உதாரணத்தில் நாம் பார்த்ததுபோல், ஒரு சொல்லைப் பிரிக்கத் தெரிந்துகொண்டால், அதன் வேர்ச்சொற்களை அடையாளம் காண்பது சுலபம், அதை ரிப்பேர் செய்து வேறுவிதமாக மாற்றுவதும் சுலபம்.

உதாரணமாக, படி + த் + த் + ஆன் என்ற பகுபதத்தில் ‘ஆன்’க்குப் பதில் ‘ஆள்’ சேர்த்தால் என்ன ஆகும்?

படி + த் + த் + ஆள், அதாவது, படித்தாள். ஆண்பால் மாறிப் பெண்பால் ஆகிவிடுகிறது.

இதே உதாரணத்தில் ‘ஆன்’க்குப் பதில் ‘அது’ சேர்த்தால்?

படி + த் + த் + அது, அதாவது, படித்தது, உயர்திணை மாறி அஃறிணை ஆகிவிடுகிறது.

இதேபோல், நடித்தான், நடந்தான், வந்தான், போனான் என்று பல சொற்களில், கடைசியாக வரும் ‘ஆன்’ என்பதை எடுத்துவிட்டு ‘ஆள்’ சேர்த்தால், பெண்பால் வந்துவிடுகிறது, ‘அது’ சேர்த்தால் அஃறிணை வந்துவிடுகிறது.

ஆக, ‘ஆன்’ என்ற பாகம் ஏதோ ஒருவிதத்தில் ஆணைக் குறிக்கிறது, அதே முறைப்படி ‘ஆள்’ என்ற பாகம் பெண்ணைக் குறிக்கிறது, ‘அது’ என்ற பாகம் அஃறிணையைக் குறிக்கிறது.

அடுத்து, இதே படி + த் + த் + ஆன் என்ற பகுபதத்தின் தொடக்கத்தில் வரும் ‘படி’ என்பதை நீக்கிவிட்டு, அங்கே ‘கடி’ என்றோ, ‘கொடு’ என்றோ இன்னொரு பதத்தைச் சேர்த்தால் என்ன ஆகும்?

‘படித்தான்’ என்று இருந்த சொல் மாறி, ‘கடித்தான்’, ‘கொடுத்தான்’ என்று ஆகிவிடுகிறது.

ஆக, ஒரு பகுபதத்தின் முதல் பாகத்தை மாற்றினால், அதன் அர்த்தமே மாறுகிறது. நிறைவுப் பாகத்தை மாற்றினால், ஆண், பெண், உயர்திணை, அஃறிணை வித்தியாசம் ஏற்படுகிறது.

இதுவரை நாம் குத்துமதிப்பாகப் பார்த்த விஷயங்களை, பகுபதம்பற்றிய அத்தியாயத்தில் இன்னும் விரிவாகப் பேசுவோம், சரியான உதாரணங்கள், விதிவிலக்குகளுடன் தெரிந்துகொள்வோம். இப்போதைக்கு, ஒரு பதத்தைப் பிரித்து அறியப் பழகுவது அவசியம் என்பதுமட்டும் புரிந்தால் போதும்.

தொடர்ந்து படிப்பதற்குமுன்னால், உங்கள் திறமையைப் பதம் பார்க்க ஒரு சின்னப் பரீட்சை, ‘விசு’த்தனமான ஒரு கேள்வி: ‘பகுபதம்’ என்ற பதம், பகுபதமா அல்லது பகாப்பதமா?

தமிழில் இந்தக் குழப்பமே வராத சொற்கள் சிலது உண்டு. உதாரணமாக, இவையெல்லாம் பகுபதங்களா அல்லது பகாப்பதங்களா? : பூ, வா, போ, நீ, பை, தீ, கை…

என்னய்யா? எங்களை வெச்சுக் காமெடி கீமெடி பண்றீங்களா? இங்கே ஒவ்வொரு சொல்லிலும் இருப்பதே ஓர் எழுத்துதான், அதை எப்படிப் பகுக்கமுடியும்?

‘பதம்’க்கு விளக்கமாக முன்பு நாம் பார்த்த நன்னூல் சூத்திரத்தை இங்கே மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும்…’. அதாவது, எழுத்து தனியாக இருந்தும் பொருள் தரலாம். அதற்கு ‘ஓரெழுத்து மொழி’ என்று பெயர்.

மேலே நாம் பார்த்த பூ, வா, போ, நீ போன்ற ஓரெழுத்து மொழிகள் எல்லாருக்கும் தெரிந்தவை. ஆனால், அதிகப் பேர் அறியாத, சுவாரஸ்யமான சில ஓரெழுத்து மொழிகள் இங்கே:

* கா : காப்பாற்று
* ஈ : கொடு (உதாரணம்: ஈதல் இசைபட வாழ்தல்)
* ஐ : தலைவன் (உதாரணம்: ஐயன் வள்ளுவன்)
* மா : பெரிய (உதாரணம்: மாமகம்), மாங்காய்
* நை : நைந்துபோதல்
* நோ : வருந்துதல், நோதல்
* ஆ : மாடு (உதாரணம்: ஆவின் பால்)
* நா : நாக்கு
* கோ : அரசன் (உதாரணம்: கோமகன்)
* மீ : அதிகம் (உதாரணம்: மீச்சிறு மடங்கு)

ஓரெழுத்து சரி. ஈரெழுத்துக்கு வருவோம். தேர்தல் கூட்டணி, கொள்கைக் கூட்டணிமாதிரி கொஞ்சம் விவகாரமான விஷயம் அது.

அதாவது, ஓர் எழுத்து தனியே இயங்கினால் எந்த வம்பும் இல்லை. பக்கத்தில் இன்னோர் எழுத்து வந்து நின்றால்தான், அது சரியா, தவறா என்கிற மயக்கம் ஏற்படும்.

உண்மையில், தமிழ் இலக்கணம் இந்தத் துறையையே ‘மயக்கம்’ என்றுதான் அழைக்கிறது. அதாவது, ஓர் எழுத்தும், இன்னோர் எழுத்தும், ஒரு சொல்லை உண்டாக்குவதற்காக ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நிற்பது.

உதாரணமாக, ‘ஏ’ என்ற எழுத்து, ‘ர்’ என்ற இன்னோர் எழுத்துடன் சேர்ந்து மயங்கி, ‘ஏர்’ என்ற சொல்லை உருவாக்குகிறது. இதேபோல் மூன்று, நான்கு எனப் பல எழுத்துகள் ஒரு சொல்லில் சேரலாம்.

ஆனால், இப்படி எழுத்துகள் ஒன்றோடொன்று சேரும்போது, இதற்குப் பக்கத்தில் இதுதான் வரும், இந்தக் கூட்டணிகளுக்குதான் அனுமதி என்று சில நெறிமுறைகள் தமிழில் உண்டு. அவற்றை மீறினால் காது வலிக்கும்.

உதாரணமாக, சிலர் ‘அதற்க்கு’ என்று எழுதுவார்கள். உண்மையில் அது ‘அதற்கு’ என்று இருக்கவேண்டும். இரு சொற்களையும் உச்சரித்துப்பாருங்கள், பிரச்னை புரியும்.

எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளுடன் கூட்டணி சேரும்? எவை எவற்றுடன் சேராது? இதைச் சொல்லித்தருவதுதான் ”மயக்கம்”.

இப்படி ஆரம்பிப்போம், உயிர் + மெய், மயங்குமா?

நிச்சயமாக, ‘ஏர்’ என்று நாம் சற்றுமுன் பார்த்த உதாரணமே உயிர் + மெய் அருகருகே வரும் கூட்டணிதானே?

அடுத்து, மெய் + உயிர், மயங்குமா?

தாராளமாக மயங்கும். அப்படி மயங்கியதால்தான் 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றியிருக்கின்றன? க் + அ = க என்று தொடங்கி ஏகப்பட்ட உதாரணங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

அடுத்து, உயிர் + உயிர், மயங்குமா?

ம்ஹூம், எப்போதும் ஓர் உயிரெழுத்துக்குப்பிறகு இன்னோர் உயிரெழுத்து வராது. ஆக, ‘உயிர் மயக்கம்’ என்று ஒன்று தமிழில் கிடையாது.

கொஞ்சம் பொறுங்கள். அளபெடைகளைப்பற்றிப் பேசும்போது நெடிலைத் தொடர்ந்து குறில் வரும் என்று பார்த்தோம். அப்படியானால் ‘ஆஅ’, ‘ஈஇ’ என்றெல்லாம் எழுதுவது சாத்தியம்தானே? அப்போது, இரண்டு உயிரெழுத்துகள் அடுத்தடுத்து வருமே!

உண்மைதான். ஆனால், அங்கே இரண்டாவதாக வரும் குறில் முதலில் வரும் நெடிலின் ஒலியை நீட்டிப்பதற்கான குறியீடுமட்டுமே. தனி எழுத்து அல்ல.

ஆக, தமிழில் உயிரெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்து வராது. ‘உயிர் மயக்கம்’ இல்லை.

அடுத்து, மெய் மயக்கம். அதாவது, ஒரு மெய்யெழுத்துக்குப் பக்கத்தில் இன்னொரு மெய்யெழுத்து வருவது.

உதாரணமாக, ‘அம்மா’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். முதலில் ‘அ’ உயிரெழுத்து, பின்னர் ‘ம்’ மெய்யெழுத்து, பின்னர் ‘மா’ என்ற உயிர்மெய்யெழுத்து.

அடுத்து, ‘மா’ என்ற உயிர்மெய் எழுத்தை நாம் ம், ஆ என்று பிரிக்கவேண்டும். ஆக, இது ‘அம்ம்ஆ’ என்று மாறும். ‘ம்’ என்ற மெய்யெழுத்துக்குப் பக்கத்தில் அதே மெய்யெழுத்து இன்னொருமுறை வந்துள்ளது.

ஒரு மெய்யெழுத்துக்குப் பக்கத்தில் அதே மெய்யெழுத்துதான் வரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இதற்கு இன்னோர் உதாரணம், ’கற்கண்டு’, இதை நாம் ‘க்அற்க்அண்ட்உ’ என்று பார்க்கவேண்டும். ‘ற்’க்குப் பக்கத்தில் ‘க்’, ‘ண்’க்குப் பக்கத்தில் ‘ட்’ என ஒரே சொல்லில் நான்கு வெவ்வேறு மெய்யெழுத்துகள், இரண்டு வெவ்வேறு மெய் மயக்கங்களைப் பார்க்கலாம்.

மெய் மயக்கத்தில் இரண்டு வகைகள்:

* உடன்நிலை மெய் மயக்கம் (ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது)
* வேற்றுநிலை மெய் மயக்கம் (வெவ்வேறு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது)

தமிழில் மொத்தம் 18 மெய்யெழுத்துகள் உண்டு. இவற்றில் 16 மெய்யெழுத்துகள் தன்னுடன் தானே மயங்கும். அதாவது க்க், ச்ச், த்த் என்பதுபோல் அமையும்.

16/18தானா? மீதமுள்ள இரண்டு?

ர், ழ் என்ற மெய்யெழுத்துகள்மட்டும் தன்னுடன் தானே மயங்காது. அதாவது, ‘ர்ர்’, ‘ழ்ழ்’ என்ற அமைப்பை நாம் தமிழில் பார்க்கமுடியாது. (தண்ணியடித்துவிட்டு உளறுகிறவர்கள். ‘சார்ர்ர்ர், ஒர்ரே க்ளாஸ் கழ்ழுதான் குடிச்சேன்’ என்று சொல்வது இந்தக் கணக்கில் வராது!)

உடன்நிலை மெய் மயக்கத்துக்குச் சில உதாரணங்கள் இங்கே: கத்தி (த்த்), அக்கா (க்க்), முந்நூறு (ந்ந்), கண்ணன் (ண்ண்), எவ்வளவு (வ்வ்), பள்ளி (ள்ள்).

16 மெய்யெழுத்துகளுக்கு உடன்நிலை மெய் மயக்கம் உண்டு என்று பார்த்தோம். அதில் ஆறுக்குமட்டும் மேலே உதாரணங்களைத் தந்திருக்கிறோம். மீதமுள்ள பத்துக்கும் நீங்களே உதாரணம் கண்டுபிடியுங்கள்.

உடன்நிலை மெய் மயக்கம் கொஞ்சம் ஈஸி, அதிகபட்சம் பதினெட்டு காம்பினேஷன்கள்தாம். அதோடு ஒப்பிடும்போது, வேற்றுநிலை மெய் மயக்கம் சிக்கலானது.

பதினெட்டு மெய்யெழுத்துகள், அவை ஒவ்வொன்றும், மீதமிருக்கும் 17 மெய்யெழுத்துகளுடன் கூட்டணி சேரலாம். ஆக, வேற்றுநிலை மெய் மயக்கத்தில் மொத்தம் 306 சாத்தியங்கள் உண்டு. அவற்றில் பல அனுமதிக்கப்பட்டுள்ளது, சில அனுமதிக்கப்படவில்லை. அவற்றையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் அலசலாம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* பகுபதம், பகாப்பதம்
* ஓரெழுத்து மொழி
* மயக்கம்
* உயிர் + மெய் மயக்கம்
* மெய் + உயிர் மயக்கம்
* உயிர் + உயிர் மயக்கம்
* மெய் + மெய் மயக்கம்
* உடன்நிலை மெய் மயக்கம் (16)
* வேற்று நிலை மெய் மயக்கம்

0

Share/Bookmark

மரணத்தை வெல்ல விரும்பிய மன்னர்

$
0
0
சின் ஷி ஹூவாங்

சின் ஷி ஹூவாங்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 11

4. கி. மு 1045 முதல் கி. மு.403 வரை – ஜோ வம்ச ஆட்சி

சீன வரலாற்றில் அதிக காலம், அதாவது 789 ஆண்டுகள் நீடித்த ஆட்சி இது. டி ஜின் தற்கொலைக்குப்  பின் வூ ஜோ (Wu Zhou)  என்னும் மன்னர் அரியணை ஏறினார். ஜோ வம்சாவளியைத் தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து 36 வாரிசுகள் சீனாவை ஆண்டனர். ஜோ வம்சாவளியில் சீனா கண்ட சில முக்கிய முன்னேற்றங்கள்:

ஷாங் ஆட்சிக் காலத்தில், சீனர்கள் வியாபாரத்தில் முதலில் நத்தையின் மேலோடுகளையும், அடுத்து வெண்கல நாணயங்களையும் பயன்படுத்தினார்கள் அல்லவா?  கி.மு. 900 அல்லது கி.மு. 800 காலத்தில், நாணயங்களோடு கரன்சிகளும் சேர்ந்தன. இந்த நோட்டுக்கள் காகிதத்திலும், பட்டுத் துணிகளிலும் செய்யப்பட்டிருந்தன.

ஜோ வம்ச ஆட்சியில், அறிவுத் தேடலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. கன்ஃப்யூஷியஸ், லாவோஸி ஆகிய இரு தத்துவ மேதைகளின் சித்தாந்தங்களும் செழித்துத் தழைத்தது இப்போதுதான்.

கன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார். இங்கே பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம்.

லாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.  இவரைப் பற்றி நிறையக் கதைகள் உள்ளன: ஆனால், ஆதாரங்கள் குறைவு. இவர் சித்தாந்தம் தாவோயிஸம் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.

கி.மு. 543 – இல் ஜிக்கான் (Zichan) என்பவர் அரசரின் ஆலோசகராக இருந்தார். சீனாவின் விவசாயத்திலும், வியாபாரத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் எல்லைகளை வரையறுத்தல், ஆட்சி முறைகள், மந்திரிப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான நெறிமுறிமுறைகளைத் தொகுத்துச் சட்டங்களாக்கினர்.

ஆட்சியில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முதல் முதலாக உலக வரலாற்றில் ஜனநாயகக் குரல் கொடுத்தவர் ஜிக்கான்தான். இவர் உருவாக்கிய சட்டங்கள் வெண்கலப் பாளங்களில் பொறிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் வைக்கப்பட்டன, நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன.   ஒவ்வொரு ஊரிலும் ஒரு நீதிபதி இருந்தார். குற்றங்கள், குற்றவாளிகள் பற்றி அவரிடம் தெரிவிப்பது பொதுமக்கள் கடமை. கசையடி, சித்திரவதை போன்ற தண்டனைகளை, குற்றங்களுக்கு ஏற்றபடி நீதிபதிகள் விதித்தார்கள்.

கி.மு. 500 – இரும்பு உருக்குவதும், இரும்புக் கருவிகள் செய்வதும் சீனர்கள் வசப்பட்டது. அவர்கள் முதலில் உருவாக்கிய இரும்புக் கருவி, ஏர். வீட்டு சாமான்களையும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களையும் இரும்பில் வடிவமைப்பது விரைவில் தொடர்ந்தது.

பீஜிங், ஹாங்ஜோ (Beijing-Hangzhou) ஆகிய இரு நகரங்களை இணைக்கும் கிராண்ட் கேனல் (Grand Canal)  இன்று 1776 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய செயற்கை நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் முதலில் தோண்டப்பட்டது கி.மு. 486 – இல்.

5. கி. மு. 403 முதல் கி. மு.221 வரை – உள்நாட்டுப் போர்கள் (Warring States) காலம்

கி.மு. 403 வாக்கில், ஜோ பரம்பரை அரசர்களின் பிடி தளரத் தொடங்கியது. அவர்கள் ஆட்சி நீடித்தாலும், நாடு முழுக்கப் பல குறுநில மன்னர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.  மன்னர்கள் மற்றும் மக்களுடைய மனங்களையும் நேரத்தையும் யுத்தங்களே ஆக்கிரமித்தன என்றபோதும், பிற துறைகளிலும் வளர்ச்சிகள் இருந்தன. குறிப்பாக வானியல் ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் எதிர்பார்க்கவே முடியாதவை.

கன் டே (Gan De), ஷி ஷென்  (Shi Shen) ஆகிய இரண்டு வானியல் அறிஞர்கள் விண்மீன்களின் பட்டியல் ஒன்று தயாரித்தார்கள். கி.மு. 350 வரலாற்று ஆவணங்களின் பொற்காலம். டா டே சிங் (Tao Te Ching) என்னும் வரலாற்றுப் புத்தகமும்,  சமுதாய அமைப்பு, நிர்வாகம், மதச் சடங்குகள் ஆகியவற்றை விவரிக்கும் நூலும் எழுதப்பட்டன. இந்த நூல் Record of Rites என்று இன்று அழைக்கப்படுகிறது. கி.மு. 300. எர்யா (Erya) என்னும் அகராதியும், கலைக் களஞ்சியமும் இணைந்த புத்தகம் தொகுக்கப்பட்டது. இந்த நூலின் சில பாகங்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன.

கி.மு. 5, கி.மு. 6 நூற்றாண்டுகளில் வந்த கன்ஃப்யூஷனிஸம், தாவோயிஸம் போல், கி.மு. 305 – இல் உருவான பிரபல தத்துவம் யின் – யாங் (yin yang).  மாறுபட்ட இயல்புகள் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதும் ஒத்துப்போவதும் இயற்கையின் நியதி, மனித வாழ்க்கையின் அடிப்படை  என்று இந்தக் கொள்கை சொல்கிறது.  யின்  என்பது உலகம், பெண்கள், இருட்டு, பள்ளத்தாக்குகள், நீரோடைகள். யாங்  வகையில் சொர்க்கம், ஆண்கள்,  வெளிச்சம், மலைகள்.
யின் – யாங் தத்துவம் யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பிரபலமாக இருந்தது. இதைக் கற்றுத்ததரும் பிரத்தியேகப் பள்ளிகள் இருந்தன. யின் – யாங் மத சார்பான கொள்கையாக இருக்காமல், நடைமுறையிலும், குறிப்பாகச் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையான அக்குபஞ்சரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

யின் – யாங் தத்துவப்படி, நம் உடலில் மார்பு, உள் அங்கங்கள், இடுப்புக்குக் கீழே இருக்கும் பாகங்கள், ரத்தம், உடல் சுரக்கும் திரவங்கள் யின் வகை: தலை, உடலின் பின்புறம், தோல், ஜீரண உறுப்புகள் யாங் வகை. எந்த நோய்க்குச் சிகிச்சை கொடுத்தாலும், யின் – யாங்  சமநிலையில் இருக்க வேண்டும்.
நோயாளியிடம் அவர்களுடைய சுவை, நுகர்தல், கனவுகள் ஆகியவைபற்றி விலாவாரியாகக் கேள்விகள் கேட்பார்கள்.  அதே நேரத்தில், வெவ்வேறு அழுத்தங்கள் தந்து, உடலில் பல்வேறு பாகங்களில், பல்வேறு நேரங்களில் நாடித் துடிப்பைப் பரிசோதிப்பார்கள். ரத்த சோகை நோய்க்கு இரும்புச் சத்து அளித்தல், தொழுநோய்க்கு சால்முக்ரா எண்ணெய் தருதல் ஆகிய மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள் சீனப் பாரம்பரியம் போட்ட பாதைகள்தாம்.

6. கி. மு. 221 முதல் கி. மு.206 வரை – சின் வம்ச ஆட்சிக் (Qin Dynasty) காலம்

உள்நாட்டுப் போர்கள் காலத்தில், ஏழு சிற்றரசர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சின் பிரதேச மன்னரான சின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மற்ற ஆறு அரசர்களையும் வென்றார், ஏழு பிரதேசங்களையும் தன்னுள் அடக்கிய பிரம்மாண்ட சீனாவின் அதிபதியானார். சீனா பூகோளப் பரப்பு விரிந்த ஒரே நாடானது இப்போதுதான்.

சீனா என்னும் நாட்டுப் பெயரே, சின் என்னும் வம்சப்பெயரில் வந்ததுதான். பிரதேச மன்னர்கள் தங்களைப் பிரபுக்கள்  என்று அழைத்துக்கொண்டார்கள். ஆனால், சின் ஷி ஹூவாங், இதிகாசங்களின்படி, தனக்குத் தானே, சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பட்டம், அதிகாரம் என்று அலைந்த இந்த விசித்திரமான மனிதர் செய்த நல்ல காரியங்களும் உண்டு, பைத்தியக்கார வேலைகளும் உண்டு.

சீன மொழியின் பேச்சு முறை ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாக இருந்தது. ஆனால், எழுத்து வடிவம் இடத்துக்கு இடம் மாறுபட்டது. சின் ஷி ஹூவாங் இதில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். ஒரே வடிவம், ஒரே அளவு கொண்ட எழுத்துகளை நாடு முழுக்கப் பயன்படுத்தவேண்டும் என்னும் அரசாணை பிறந்தது. தாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு சீனா முழுக்க உருவாவதற்கு இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது.

அதிகாரிகளை நியமிப்பதில் பாசம், பந்தம் ஆகியவற்றுக்கு இடமே கிடையாது, திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் கொள்கை நடைமுறைக்கு வந்தது, கண்டிப்பாக அமுல் படுத்தப்பட்டது.

இன்று கடைவீதிகளுக்குப் போய்ப் பாருங்கள். பொம்மைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் எனச் சீனத் தயாரிப்புகள் வகை வகையாக, விதம் விதம் விதமாய், மலை மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. இன்றல்ல, காலம் காலமாகவே, சீனர்கள் கண்டுபிடிப்புக் கில்லாடிகள்.  அவர்களுடைய பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், நான்கு கண்டுபிடிப்புகள் உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படுகின்றன. அவை – திசைகாட்டி, வெடி மருந்து,  காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை.

இவற்றுள், திசைகாட்டி, சின் வம்ச ஆட்சிக்காலத்தில், சுமார் கி.மு. 221 – 206 காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  காந்தக் கலை (Magnetism) இதன் அடிப்படைக் கொள்கை. கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே, சீன சோதிடர்கள் காந்தக் கற்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், திசைகாட்டிகளாகக் காந்தங்களை உபயோகப்படுத்தத் தொடங்கியது சின் ஆட்சியில்தான். முதல் திசைகாட்டியில், ஒரு கரண்டி, வெண்கலத் தட்டின்மேல் வைக்கப்பட்டிருந்தது.

இப்படிப் பல துறைகளில் முத்திரை பதித்த சக்கரவர்த்தியின் அடிமனதில் எப்போதும் பல பயங்கள் – தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ, தான் போரில் வென்ற ஆறு அண்டைப் பிரதேசங்களும் ஒன்றாகக் கை கோர்த்துத் தனக்குக் குழி பறிப்பார்களோ? ஆகவே எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னையும் நட்டையும் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்பதில் சின் ஷி ஹூவாங் உறுதியாக இருந்தார். அவருடைய பயம், இன்றும் நீடிக்கும் அற்புதமான உலக அதிசயம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த அதிசயம் – சீனப் பெரும் சுவர்.

இன்று சுமார் 8850 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் பெரும் சுவரைத் தனித் தனிப் பதுகாப்புச் சுவர்களாக சின் ஷி ஹுவாங் முதலில் கட்டினார். பல்லாயிரம் தொழிலாளிகள் இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும், கணக்கில்லாதவர்கள் வேலைப் பளுவால் இறந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. (கி.பி. 1400 – க்குப் பின் வந்த மன்னர்கள் தனிச்  சுவர்களை இணைத்து ஒரே சுவராக மாற்றினார்கள்.)

தான் மட்டுமே புத்திசாலி, தன்னோடு ஒத்துப் போகாதவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். அவர் ஆட்சிக் காலத்தில், 460 – க்கும் அதிகமான அறிஞர்களுக்கு மரண தண்டனை விதித்தார். முந்தைய ஆட்சிகள் பற்றிய சில ஆவணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

picture_e7ed8f80204f136e95991848ac96aac2b8f02961_XLதான் அழிவே இல்லாத நிரந்தர மனிதன் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். தனக்குச்  சாவே வராமல் தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க, நிரந்தர மருத்துவர் குழுவை நியமித்தார். அவர்கள் பாதரசம் கலந்த பல அமிர்தங்களை அவருக்குக் கொடுத்தார்கள். பாதரசம் உடலில் கலந்த முக்கிய காரணத்தால் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.

சாவை நினைத்துப்பார்க்கக்கூட  பயந்த மாமன்னர், தன் கல்லறையையும் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். களிமண்ணால் செய்யப்பட்ட எட்டாயிரம் போர் வீரர் பொம்மைகள் (Terracota Army என்று இவற்றை அழைக்கிறார்கள்.) தன் உடலோடு சேர்த்துப் புதைக்கப்படவேண்டும் என்பது அவர் இறுதி ஆசையாக இருந்தது. அந்த பொம்மைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கலைநயம் கொண்ட இந்த எட்டாயிரம் பொம்மைகளில், ஒரு பொம்மைகூட இன்னொன்றுபோல் இல்லை. தன் விபரீத ஆசையில்கூட,  நிர்வாகத் திறமையையும், கலை ஆர்வத்தையும் காட்டியிருக்கும் சின் ஷி ஹூவாங் நம் புரிதலைத் தாண்டிய விசித்திர மனிதர்!

கி.மு. 210-ல் சின் ஷி ஹூவாங் மரணமடைந்தபின், அவர் வம்ச ஆட்சி வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அரசு கட்டில் ஏறினார். அவருக்குத் தலைமை அமைச்சராக இருந்த தம்பி அண்ணனைக் கொன்றார்.  திறமையே இல்லாத அவரை, எதிரிப் படைகள் வீழ்த்தின. சின் வம்ச ஆட்சி  பதினைந்தே வருடங்களில் அஸ்தமனமானது. அடுத்து வந்தது – ஹான் வம்ச ஆட்சி.

0

Warring States

Share/Bookmark

புலே : கல்வி என்றொரு ஆயுதம்

$
0
0

jyotirao_phuleபுரட்சி / அத்தியாயம் 16

முக்தாபாய் என்னும் பதினான்கு வயது சிறுமி எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை முதலில் படித்துவிடுங்கள்.

. . . எங்களைவிட உயர்ந்தவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும், எங்களை வெறுக்கும் பிராமணர்களின் வாதத்தின்படி பார்த்தால் வேதம் என்பது அவர்களுக்குச் சொந்தமான ஒரு சொத்து. அவர்களுக்கு மட்டும்தான் வேதம் உரியது என்பது உண்மையானால் அது சர்வநிச்சயமாக எங்களுக்கானது இல்லைதான். ஓ, இறைவனே! உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக்கொடு. அதன்படியே வாழ நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை இந்த பூமியைவிட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.

. . . புனிதமான ஆடை என்று சொல்லி அணிந்துகொள்ளும் இந்த இரக்கமற்ற பிராமணர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டதற்காகத் துயரப்படும் எங்களுக்காக ஒரு துளியாவது கருணை கொள்வார்களா? தீண்டத்தகாதவர்கள் என்பதால் எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எங்களிடம் பணம் இல்லை. அதனால் எங்கள் துன்பங்களை நாங்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். ஓ, படித்த பண்டிதர்களே, ஞானம் குறித்த உங்களுடைய சுயநலன்மிக்க பிதற்றல்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நான் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

. . . எங்கள் பெண்கள் குழந்தைகள் பெறும்போது அவர்கள் வீட்டில் மேற்கூரை இருப்பதில்லை. குளிரிலும் மழையிலும் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் தெரியுமா! உங்களுடைய அனுபவங்களைக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள். பிரசவத்தின்போது அவர்கள் நோய்வயப்பட்டால் மருத்துவம் பார்க்க அவர்களிடம் பணமா இருக்கிறது? பணம் பெற்றுக்கொள்ளாமல் இப்படிப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்க மனிதத்தன்மை கொண்ட மருத்துவர் யாராவது உங்களிடம் இருக்கிறார்களா?
பிராமணக் குழந்தைகள் மங் மற்றும் மகர் குழந்தைகள்மீது கற்களை வீசினாலும், மோசமான முறையில் காயத்தை உண்டாக்கினாலும் அவர்கள் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். யாரிடமும் புகார்கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் மிஞ்சி போன உணவுக்காக அவர்கள் பிராமணர்கள் வீட்டுக்குத்தான் பிச்சை எடுக்கப் போகவேண்டும். ஐயோ, கடவுளே! எத்தனை கொடிய வேதனை இது! இந்த அநீதி குறித்து மேற்கொண்டு எழுதினால் நான் வெடித்து அழுதுவிடுவேன். . .

1855ல் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பிறகு முக்தாபாய்க்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. கடிதத்தின் தொனி மற்றும் எழுதப்பட்ட முறையில் இருந்து முக்தாபாய் உறுதியும் தெளிவும் மிக்க ஒரு பெண் என்பது நமக்குத் தெரிய வருகிறது. 19ம் நூற்றாண்டு மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணாகவும் தீண்டத்தகாதவளாகவும் இருந்துகொண்டு துணிச்சலுடன் இப்படி ஒருவர் எழுதுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதுதான்.

தீண்டக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி தேவையில்லை என்னும் கருத்தாக்கம் வலுவாக இருந்த காலகட்டம் அது. மகாராஷ்டிராவில் உள்ள மகர் பிரிவினர் இந்து மதத்தின் படிநிலை வரிசையில் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய வாழ்நிலை எப்படியிருந்தது என்பதை 1900களின் தொடக்கத்தில் தி இம்பீரியல் கஸெட்டர் ஆஃப் இந்தியா நாக்பூர் மாவட்டம் குறித்து பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.  ‘மொத்தமுள்ள மக்கள்தொகையில் மகர்கள் ஆறில் ஒரு பங்கு இருந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் இருந்தனர். கிராமப்புற மகர்கள் இன்னமும் அசுத்தமானவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். கிராமத்தின் கிணற்றிலிருந்து நீர் எடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை. இந்து குழந்தைகளுடன் அவர்களுடைய குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கமுடியாது.’

பிற்போக்கான இந்தச் சமூகத்தைத் திருத்தமுடியாதா என்னும் ஏக்கத்தோடு பணியாற்றிய சீர்திருத்தவாதிகள் மத்தியில் ஜோதிராவ் புலே (11 ஏப்ரல் 1827 – 28 நவம்பர் 1890) தனித்துவமிக்க ஒரு போராளியாகத் திகழ்கிறார். அங்கே, இங்கே என்று சில மாற்றங்களைக் கொண்டு வருவது போதாது, அனைத்து பிரச்னைகளுக்குமான ஆணிவேரைத் தேடிப்பிடித்து கடுமையாகப் போரிடவேண்டும் என்றார் புலே. அவர் கண்டறிந்த அந்த ஆணிவேர், சாதிய ஒடுக்குமுறை. சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும் ஏனையோர் கீழ்நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தையும் தார்மிக நியாயத்தையும் சாதியம் அளிப்பதை அவர் கண்கூடாகக் கண்டார். ஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அடித்தட்டு மக்களையும் தீண்டத்தகாதவர்களையும் அவர்களுடைய சங்கிலிகளை உடைத்தெறிந்து விடுவிக்கவேண்டியது தன்னுடைய கடமை என்று வரிந்துகொண்டார். இதே காரணங்களுக்காக அவர் அம்பேத்கர், பெரியார் ஆகியோரோடு இணைத்து இன்று நினைவுகூரப்படுகிறார்.

ஜோதிராவின் தந்தை கோவிந்த்ராவ் புனேயில் ஒரு காய்கறி வியாபாரியாக இருந்தவர். மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்னும் மாவட்டத்தில் இருந்து குடியேறிய குடும்பம் அவருடையது. கோவிந்த்ராவ் மற்றும் அவருடைய சகோதரர்கள் மலர் வியாபாரம் செய்துவந்ததால் புலே என்னும் பெயர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டது. ஜோதிராவுக்கு ஒரு வயது நிறைவடைவதற்குள் அவருடைய தாயார் இறந்துபோனார். ஆரம்ப கல்வியை மட்டும் முடித்துக்கொண்டு தன் தந்தைக்கு உதவி செய்ய வந்துவிட்டார் ஜோதிராவ். பதின்மூன்று வயது நிறைவடைவதற்குள் அவருக்குத் திருமணமும் முடித்து வைத்துவிட்டார்கள்.

ஜோதிராவின் அறிவுத் தேடலையும் புத்திசாலித்தனத்தையும் கண்டுகொண்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரும் ஒரு கிறிஸ்தவரும் தங்களுடைய நண்பரான கோவிந்த்ராவிடம் சென்று ஜோதிராவைத் தொடர்ந்து படிக்கவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். 1841ல் புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார் ஜோதிராவ். இங்குதான் சதாஷிவ பல்லால் கோவந்தே என்னும் பிராமண மாணவரின் நட்பு கிடைத்தது. வாழ்நாள் முழுவதும் இந்த நட்பு நீடித்தது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தாமஸ் பெய்னின் தி ரைட்ஸ் ஆஃப் மேன் புத்தகத்தை விரும்பி வாசித்தார்கள். 1847ல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோதிராவ் புலே, அரசு உத்தியோகத்தை நாடிச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தார்.

ஒரு நாள் பிராமண நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார் ஜோதிராவ் புலே. மாப்பிள்ளை ஊர்வலமாகச் செல்லும்போது அவருடைய உறவினர்களின் மத்தியில் ஜோதிராவும் கலந்துகொண்டார். இதனை அவர்கள் கவனித்துவிட்டார்கள். மில் என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் நம்மில் ஒருவராக வருவதா என்று சினம்கொண்ட அவர்கள் ஜோதிராவை அவமானப்படுத்தி விலக்கி வைத்தார்கள். கண்களில் அழுகையும் நெஞ்சம் முழுக்க கோபமும் பொங்க ஜோதிராவ் வீடு திரும்பினார். 1848ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்மூலம் சாதிய ஏற்றத்தாழ்வையும் மேலாதிக்கத்தையும் அவர் கண்கூடாக உணர்ந்துகொண்டார்.

மனிதர்களை மனிதர்களாக வாழவிடாத சாதிய ஒடுக்குமுறையைக் களைந்து சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் விடுதலை வாங்கித் தருவதை லட்சியமாகக் கொண்டு ஜோதிராவ் புலே பணியாற்றத் தொடங்கினார். சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் எஜமானர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் கடவுளுடன் உரையாடுபவர்கள் என்றும் தாம் கருதிவரும் மேல் சாதியினரை எதிர்த்துப் போராடவேண்டியது அவசியம்; இந்தச் சமமற்ற சமூக நிலைமையை சீர்திருத்தமுடியாது, புரட்சிகரமாக மாற்றியமைப்பது மட்டுமே விடுதலையை அளிக்கும் என்று புலே முடிவு செய்தார். இந்தப் போராட்டத்தில் ஒன்றுமற்ற நிராதரவான தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி பலமிக்க, செழிப்பான உயர் சாதியினருடன் போராடமுடியும்? இந்தப் போரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தவேண்டிய ஆயுதம் என்ன?

ஏப்ரல் 1883ல் புலே எழுதுகிறார். ‘கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் (செல்வம்) இல்லை. செல்வம் இல்லாததால்தான் சூத்திரர்கள் தாழ்வுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஆக கல்வி இன்மையே இந்தச் சீர்கேட்டுக்கெல்லாம் காரணம்.’

புலே சுட்டிக்காட்டும் கல்வி என்பது பள்ளி, கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் புத்தக அறிவு மட்டுமல்ல. சமூகத்திடம் இருந்து நேரடியாகக் கற்கவேண்டும், தாம் தாழ்நிலையில் இருப்பது ஏன், அதற்கு யார் காரணம் என்பதையும் கண்டறியவேண்டும். ஜூலை 1881ல் வெளியான ஒரு மராத்தி நூலின் (இதன் தலைப்பை, விவசாயிகளின் சாட்டைவார் என்று மொழிபெயர்க்கலாம்) முன்னுரையில் புலே எழுதுகிறார். ‘இந்த நூலை எழுதியதன் நோக்கம் இன்றைக்கு சூத்திர விவசாயிகள் முற்றிலும் சீரழிந்து கிடப்பதற்கு பல மத, அரசியல் காரணங்கள் உள்ளன. அவற்றில் சில காரணங்களைக் குறித்து விவாதிப்பதே இந்நூலின் நோக்கம். ஏறக்குறைய எல்லா அரசாங்க துறைகளும் பார்ப்பன அதிகார வர்க்கத்தினராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அவர்களின் மத நடைமுறைகள் போலியானவையாக, ஒடுக்கும் தன்மையனவாக உள்ளன. இவ்வாறு பட் புரோகித வகுப்பால் சூத்திர விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். பெரும்பாலான ஆங்கில (அரசாங்க) அதிகாரிகள் சோம்பலும் ஆடம்பரமும் ஆன வாழ்க்கையில் திளைத்துக் கிடக்கிறார்கள். இதனால் சூத்திர விவசாயிகள் பார்ப்பன அதிகார வர்க்கத்தினரால் மேலும் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள். . . சூத்திர மக்கள் மேற்சொன்ன ஆதிக்கம் மற்றும் சுரண்டலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.’

புலேயைப் பொருத்தவரை கல்வி என்பது ஒரு வலுவான, புரட்சிகர ஆயுதம். பிராமணர்களின் ஆதிக்கத்தையும் இந்து மதத்தின் பிற்பாக்குத்தனத்தையும் வீழ்த்துவதற்கான ஓர் அறிவாயுதம். தன் வாழ்நாள் முழுக்க புலே இந்த ஆயுதத்தையே பிரயோகித்தார். ஒருமுறை, புண்ணியம் என்பதன் சரியான விளக்கம் என்ன என்று கேட்கப்பட்டபோது புலே கீழ்வருமாறு பதிலளித்தார். ‘நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நம் சக மனித உயிர்களை உள ரீதியாகவோ உடல் ரீதியாகவோ வதைக்காமல் இருந்தால் அதுவே ஒரு புண்ணிய காரியம் ஆகும்.’ ஆனால் இந்து மதமும் இதைத்தானே சொல்கிறது? ‘மற்றவர்களுக்கு உதவுவது புண்ணியமானது. மற்றவர்களைத் துன்புறுத்துவது பாவ காரியம் என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? ’ புலே அளித்த பதில் இது. ‘இதுதான் உங்கள் சாத்திரங்கள் கூறும் நெறி என்னும்போது ஏன் ஆரிய பார்ப்பனர்கள் சமூகத் தீட்டுகள் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்? ஏன் மற்றவர்களிடம் இருந்து தம்மைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள்? ஏன் கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும், சூத்திரர்களையும், ஆதிசூத்திரர்களையும் கண்டனம் செய்கிறார்கள்? ஏன் அவர்களை எல்லாவிதமான தொல்லைகளுக்கும் உட்படுத்துகிறார்கள்?’

சிந்தனை வேறு, செயல் வேறு என்று இருக்கும் பெரும்பாலானோர் மத்தியில் புலே ஒரே மாதிரி சிந்திப்பவராகவும் செயல்படுபவராகவும் இருந்தார் என்கிறார் கெயில் ஓம்வெட். பெண்கள் கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை அவர் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தன் மனைவி சாவித்திரிபாய்க்கு தானே ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார். பெண்களுக்கான ஒரு பிரத்தியேகக் கல்விக்கூடத்தை சாவித்திரிபாய் தொடங்கி நடத்தும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்தார். இவர்களுக்குக் குழந்தையில்லை என்பது தெரிந்ததும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு குடும்பத்தினரும் சமுதாயாத்தினரும்  புலேவை நிர்பந்தித்தபோது அதை ஏற்காமல் உறுதியுடன் இருந்தார்.

புலே ஏற்படுத்திய கல்விப் புரட்சியின் விளைவுகள் அவர் காலத்திலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டன என்பதற்கு நாம் தொடக்கத்தில் சந்தித்த முக்தாபாய் ஓர் உதாரணம். லட்சக்கணக்கான பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கிடைக்காத அறிவும் தெளிவான பார்வையும் போராட்ட குணமும் முக்தாபாய்க்கு கிடைத்தற்குக் காரணம் அவர் புலே நடத்திய பள்ளியில் படித்ததுதான். அந்த வகையில் புலேயின் படைப்புகள் மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையுமேகூட நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொன்றும் முக்தாபாய் போல் பிரகாசிக்கும் அறிவு பெறவேண்டுமானால் புலேயை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும், மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அறிமுகம் செய்யவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இருளைப் போக்கவேண்டுமானால் நாம் முதலில் செய்யவேண்டியது,நாம் இருளில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும், ஒளியைப் பெறுவது அவசியம் என்பதை உணர்வதும்தான்.

(அடுத்த பகுதி : புலே : அடித்தட்டு மக்களுக்கான குரல்)

Share/Bookmark

நினைத்தால் நடக்கும்

$
0
0

raceபேசு மனமே பேசு / அத்தியாயம் 19

எந்த ஒரு விஷயத்திலாவது ‘எப்படியும் முடிப்பேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, காரியத்தை முடித்திருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால், ‘தன்னோடு பேசுதல்’ முறையை உங்களது பாணியில் நடத்து வெற்றி கண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதேபோல ‘குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து, பயந்து, தயங்கி ‘எங்கே நடக்கப் போகிறது?’ என்று தொடர்ந்து நினைத்து இருக்கிறீர்களா? முடிவில் ‘எதிர்பார்த்தது’ போலவே, நடக்காமல் போயிருக்கிறதா? இவ்வாறு நிகழ்ந்து இருந்தால், ‘தன்னோடு பேசுதலை’ எதிர்மறையாகப் பயன்படுத்தி, அதற்கான விளைவை சந்தித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஒரு ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டும் போட்டியாளர் வேலரி புரூமெல் கலந்து கொண்டார். அப்போதைய சோவியத் ரஷ்ய நாட்டின் சார்பில் அவர் கலந்து கொண்டார். இத்தாலியில் நடந்த அந்தப் போட்டியில், நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. பத்திரிகைகள், பார்வையாளர்கள், விளையாட்டு நிபுணர்கள் ஆகிய அனைவராலும்  எதிர்பார்க்கப்பட்ட வீரர் அமெரிக்காவின் நிக் ஜேம்ஸ்.

சூழ்நிலை புரூமெல்லிக்குக்கு எதிராக இருந்த விதத்தை அவரது வார்த்தைகளில் குறிப்பிடுவதனால், ‘இத்தாலியப் பத்திரிகைகள், போட்டி நடக்க வேண்டிய அன்று காலையில், நிக் ஜேம்ஸின் படத்தை மட்டுமே தாங்கி வந்தன.’ இது போதாதென்று நிக் ஜேம்ஸ் பேட்டியின்போது, ‘எனக்குரிய சாம்பியன் பட்டத்துக்கான தங்கப் பதக்கத்தை எடுத்துச் செல்லவே வந்தேன்’ என்று நம்பிக்கை பொங்க, உற்சாகமாகக் கூறியிருந்தார்.

போட்டி ஆரம்பித்தது. ஆரம்பித்தில் தாண்ட வேண்டிய உயரம் 203 செ.மீ.யில் துவங்கியது. பிறகு 209 ஆக உயர்த்தப்பட்டது. புரூமெல் தாண்டிய இரு சமயங்களிலும் கம்பம் விழுந்தது. ‘எனக்குள் அச்சம் பரவியது. யாரோ என் நெற்றியில் துப்பாக்கி வைத்திருப்பது போல உணர்ந்தேன். ஏதும் தோன்றாத நிலையில் கம்பத்தையே பார்த்துக் கொண்டிந்தேன்’ என்று புரூமெல் அப்போதைய தன் நிலையை பின்னாளில் விவரித்தார். இந்த பயம் அடிப்படையில்லாதது என்று அப்போதைய சூழ்நிலையை வைத்துச் சொல்ல முடியாது.

சோவியத் ரஷ்யாவை ஆண்டது கம்யூனிஸ்ட் கட்சி. அப்போதைய நிலவரப்படி, இது போன்ற விளையாட்டில் சந்திக்கும் தோல்விகள்கூட, நாட்டுக்கு செய்யும் துரோகங்களாக, மிக எளிதில் உருவகப்படுத்தப்படும் நிலை இருந்தது. சம்பந்தப்பட்ட வீரர் மேல், அரசின் சந்தேகம் விழுமானால், அவர் தன்னைப் பாதுகாக்க பத்திரிக்கை, நீதிமன்றம் என்று போக வழி இருக்கவில்லை. மாறாக, அவமானம் என்று அரசு முடிவு செய்யுமானால், தண்டனை நிச்சயம். இதையும் எண்ணியே வேலரி புரூமெல் அச்சத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

புரூமெல் என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் ஸ்தம்பித்து நின்றபோது, ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்டே அவரிடம் வந்து, ‘ஏதும் செயல்படாமல் இருக்காதே, வேகமாக வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்’ என்று ஆலோசனை கூறினார். இந்த உடற்பயிற்சியால், உடலின், மனத்தின் இயக்கங்கள் உயிர் பெற்றன. திடீரென்று தனக்குள் (பேசி) சொல்லிக்கொண்டார் புரூமெல். ‘மாட்டேன் விடமாட்டேன்’, ‘ஜெயித்தே தீருவேன்’ இந்த வேகத்திலேயே இரண்டாவது முறை ஓடித் தாண்டினார். இம்முறை, முன்பை விட எளிதாகத் தாண்ட முடிந்தாலும், கடைசி நேரத்தில், உடலில் கம்பம் பட்டு விழுந்தது.

அதே சமயம் நிக் ஜேம்ஸ், முதல் முயற்சியாக ஓடி வந்து தாண்டினார். முடியாமல் கம்பத்தோடு கீழே விழுந்தார். கோபத்துடன் தன்னையே திட்டிக் கொண்டு (பேசிக்கொண்டு) கைகளை உதறி, மிகுந்த எரிச்சலோடு அப்பால் சென்றார். ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்சேவின் முறை அடுத்ததாக வந்தது. அவர் அமைதியாக ஒரு நிமிடம் நின்று, நிதானப்படுத்திக் கொண்டு பின்னர் ஓடி வந்து தாண்டினார். அவர் தாண்டி விழுந்தவுடன், கம்பம் சிறிது நேரம் நடுங்கி, ஆனால் விழாமல் நின்றது. புரூமெல் யாரைக் கண்டு பயந்தாரோ, அந்த நிக் ஜேம்ஸின் முயற்சி இரண்டாவது முறையும் தோல்வியில் முடிந்தது.

இதைப் பார்த்த புரூமெல்லுக்கு, அமெரிக்க வீரர் போட்டியாளராகத் தெரியவில்லை. நிக் ஜேம்ஸ் தனது ஆர்வத்தை இழந்து விட்டதுபோல தோன்றினார். அவர் தன்னையே நொந்து கொள்வதும், ஆத்திரப்பட்டுக் கொண்டு முணுமுணுப்பதும்  அவரது முயற்சிகளை வீணாக்கின. புரூமெல்லின் முறை வந்தது.

நான் பயிற்சியின்போது பெற்ற அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை ஒருமுறை மனத்துக்குள் சொல்லிப் பார்த்தேன். ‘கால்களை முழுமையாகப் பயன்படுத்துவேன். சரியான சமயத்தில் உடலை மேலே எடுத்து எறிவேன்’ என்று புரூமெல், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு (தன்னோடு பேசிக்கொண்டு) ஓடி வந்து தாண்டினார். அவரது சகாவான விட்சேவுக்கு தங்கப் பதக்கமும், புரூமெல்லுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

சரியான சமயத்தில் தேவையான விதத்தில், ‘தன்னோடு பேசுதலை’ நிகழ்த்தினால், நினைத்ததை நடத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஒரு உதாரணம் தான் ரஷ்ய வீரர் வேலரி புரூமெல். அவருக்கான சூழ்நிலை விளையாட்டு. ஆனால் அதில் இருந்த பிரச்னைகள், சவால்கள் ஆகியன, சாதாரணமானவர்களின் பிரச்னைகளை ஒட்டியதுதான்.

வேலை செய்யும் இடத்தில், குறிப்பிட்ட நபரால் பெரும் பிரச்னை. என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த சமயத்தில், ‘என்ன செய்தாலும் அவன்தான் ஜெயிக்கப் போகிறான்’ என்கிற ரீதியிலான அணுகுமுறை எதிர்மறை அணுகுமுறையைச் சார்ந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், எதிர்மறை அபிப்பிராயங்களால், பிரச்னை தீராது. இது போன்ற சிந்தனைகளால் (தன்னோடு பேசுதலால்) நினைத்தது போலவே நடக்கும். அதாவது ‘காரியம் நடக்காது, நஷ்டம் ஏற்படும்’.

அதே போல ‘இன்னைக்கு எழுந்ததிலிருந்து நேரமே சரியில்லை’, ‘இருக்கிற வேலையைச் செய்யறத்துக்கே நேரம் போதவில்லை. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலை’ என்றோ…
‘என்னால, அவனை/அவளை/நண்பனை/தோழியை பொறுத்துக்கொள்ளவே முடியல. பேசவும் மனசில்லை. பேசாமல் இருக்கவும் முடியல’ என்றோ… இப்படியான சொற்றொடர்களை தொடர்ந்து சொல்லிக் கொள்வதன் மூலம், நமக்குப் பிடிக்காததை, அது நடந்து  விடுவதற்குச் சாதகமாக, நம்மையும் அறியாமல் ‘உதவி’ செய்கிறோம். இவற்றைச் சரியான விதத்தில் மாற்றி யோசித்தால், அதாவது பேசிக்கொண்டால் விளைவுகள் நல்லதாக இருக்கும்.

‘காலையில் எழுந்ததிலிருந்து என்னால், சவால்களைச் சரியாக சமாளித்து வெற்றி பெற முடிகிறது’ ‘இன்றைக்கு நேரமே சரியில்லை’ என்பதற்குப் பதிலாக, ‘இன்றைக்கு எல்லாமே நன்றாக இருந்தது. பிரச்னைகளைச் சமாளித்த விதம் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. நாளைக்கு இன்னும் நன்றாக இருக்கும்’

இவ்வாறெல்லாம் மாற்றிச் சொல்வதன் மூலம், இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, பிரச்னைகளை ஒதுக்குவது, மூடி மறைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதாக அர்த்தமாகாது. இதன் நோக்கம், பிரச்னைகளை உங்களுக்கு மேலே, உயரத்தில் நிறுத்திப் பார்ப்பதற்குப் பதில், உங்களை மேலே, உயரே நிறுத்திக் கொள்கிறீர்கள் அவ்வளவுதான். இவ்வாறு செய்தால்தான் நினைப்பதை நடத்திக்கொள்ள முடியும்.

0

Share/Bookmark

Viewing all 405 articles
Browse latest View live