Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

அணு ஆயுதப் போர் – தப்பிக்கும் வழிகள்

$
0
0

உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாகப் பாதிக்கும். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாகத் தீராத சிக்கல்கள் உள்ளன. ஏற்கெனவே, மூன்று முறை  இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும் இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுதப் பிரயோகம் நிகழ்ந்தால் 200 கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமானோர் கொல்லப்படலாம்.

சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்களின் கருத்து இது.

Nuclear-War-Americaஇரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில்தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால்,  மூன்றாம் உலகப் போர் அல்லது அடுத்த இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றால், அதன் தொடக்கத்திலேயே அணு ஆயுதம் பயன்படுத்தப்படலாம். அப்போரில் பரிதாபமாகப் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே.

அணு ஆயுதத்தின் கொடூர விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கூகுள் உதவியால், ஐப்பானில் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் விழுந்த அணுகுண்டுகளின் பின்விளைவுகளைப் பார்க்கவும். அவை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுகள். இப்போது போர் மூண்டால் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட நவீன அணுகுண்டுகள்தானே பயன்படுத்தப்படும். அவற்றின் தாக்கம் 50 மடங்குகளுக்கும் அதிகமாக இருக்கும்.

உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், உலக அரசுகள் அவ்வாறு விரும்புகின்றனவா? சின்ன நாடுகள் கூடத் தன் வலிமையை ஆயுதத்தின் வழியாகத்தான் உலகுக்குக் காட்ட விரும்புகின்றன. உலகப் போர்களைப் பேசித் தீர்த்துக்கொள்ள எந்த நாடும் விரும்புவதில்லை. எந்த நாடும் தன் ஆயுதப் பலத்தால்தான் பெரும்போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. அணு ஆயுதத்தால் விளையும் அமைதி மயான அமைதி. அந்த அமைதியைத் தரிசிக்க வெட்டியான் கூட மிஞ்சமாட்டான்.

அணு ஆயுதப் போர் தொடங்கினால் அரசால் போரை முன்னின்று நடத்துவதற்குத்தான் நேரமிருக்கும். முதன்மைத் தலைவர்கள் தப்பியோடவே முனைப்பாக இருப்பர். அவர்களுக்குப் பொதுமக்களைக் காக்கும் வழி தெரியாது. அணு ஆயுதப் போரிலிருந்து இறைப் பிராத்தனைகளாலோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகளாலோ தப்பிவிட முடியாது. தன் கையே தனக்கு உதவி எனப் பொதுமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எப்படி?

அணு ஆயுதப் போருக்கான முகாந்திரம் தெரியவந்தால் உடனடியாகப் பொதுமக்கள் பின்வரும் 15 வழிமுறைகளை ஒருமனதாக மேற்கொள்ளவேண்டும்.

  1. உங்களுக்கு அசையாச் சொத்துக்கள் இருந்தால் உடனடியாக யார் கேட்டாலும் கேட்ட விலைக்கு விற்றுப் பணமாக்கவும்.
  2. உங்களின் இருக்கும் அசையும் சொத்துக்களை முடிந்தால் விற்கவும் அல்லது எடைக்குப் போட்டுப் பணமாக்கவும்.
  3. பாண்டுப் பத்திரங்கள் இருந்தால் முடிந்தால் அவற்றை உடனடியாகத் திருப்பிக் கொடுத்துப் பணமாக்கிக்கொள்க.
  4. வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தால் உடனடியாக வசூலித்துக்கொள்க. வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தால் வழக்கம்போல அதனைத் திருப்பிக்கொடுக்க மறந்துவிடுங்கள்.
  5. பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்திருந்தால் நஷ்டமானாலும் அனைத்துப் பங்குகளையும் விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  6.  தனியார் சிட்பண்டு, வங்கி, தபால்துறையில் பணம் வைத்திருந்தால் அவற்றை முழுவதுமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
  7. வீட்டில் உள்ள, தங்களின் உடலில் உள்ள அனைத்து தங்க, வைர நகையையும் விற்று விடவும். வெள்ளிப்பொருட்களையும் விற்கவும்.
  8. இப்போது தங்கள் கையில் 50,000த்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதியுள்ள அனைத்து தொகைக்கும் (நிலம், வீடு, அசையும் சொத்துக்கள், நகைகளை விற்ற தொகை, பங்குச் சந்தையில் பெற்றவை போன்ற அனைத்து வகையிலும் வந்த முழுத் தொகைக்கும்) தரமிகுந்த வைரக் கற்களை வாங்கிப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எக்காலத்திலும் எந்தநாட்டிலும் மீண்டும் விற்கக்கூடிய, விலையுயர்ந்த, சுமைகுறைந்த, மறைத்துவைக்க ஏற்ற பொருள் அது மட்டுமே.
  9. ஆளுக்கு மூன்று ஜோடி துணிமணிகளும் நடுநாள் கெட்டுப் போகாத தரமிகுந்த, சத்துநிறைந்த உணவுப் பொருட்களை உங்களால் சுமக்க முடிந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நோயாளிகளாக இருந்தால் மருந்து, மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  10. முக்கியமானப் பொருட்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் எவற்றையும் எடுத்துச் செல்லாதீர்கள். அவற்றை மனத்தில் மட்டுமே சுமந்துகொள்ளுங்கள். உங்களின் சுமை வைரமாகவும் உணவாகவும் மட்டுமே இருக்கட்டும்.
  11. உங்கள் வீட்டாரில் யாரேனும் நெடும் பயணத்திற்கு ஏற்றவராக இல்லை எனில் கல்மனத்தோடு அவர்களை அங்கேயே விட்டுவிடுங்கள். அதற்காக மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
  12. உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்குப் பிரியாவிடை தந்துவிடுங்கள்.
  13. அணுஆயுதப் போரின்போது பதுங்கு குழிகள் அமைத்துத் தப்பிக்க முடியாது. அணுக்கதிர்வீச்சு சில ஆண்டுகள் வரை வீரியமாகவே இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப் பதுங்கு குழிக்குள் உங்களால் இருக்க முடியும்?  ஆதலால், நாட்டை விட்டுச் செல்லுதலே சிறப்பு. (புலம்பெயர்தல் தமிழர்களுக்குப் புதிதல்லவே). “தாய்மண்ணே வணக்கம்!“ என்று நம் நாட்டுக்கு ஒரு கிரேட் சல்யூட் அடித்துவிட்டுப் புறப்படுங்கள்.
  14. வான்வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றுவிடவும். அல்லது லட்சத்தீவுகளுக்கு அல்லது போரின் சுவடு இல்லாத ஏதாவது ஒரு குட்டி நாட்டுக்கு ஓடிவிடவும். பெரிய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். காரணம், அங்கும் அணுகுண்டு விழலாம்.
  15. சட்டப்படியோ அல்லது அகதியாகவோ அங்கேயே சில ஆண்டுகள் தங்கிவிடுங்கள். அல்லது அங்கேயே வேர்ப்பதித்துக் கொள்ளுங்கள். மக்கள்தான் நாட்டுக்குச் சொந்தமில்லை. ஆனால், உலகம் அனைத்துயிருக்கும் (மக்களுக்கும்) சொந்தம்தானே!

உலக அரசுகளே! உணவுப் பொருட்களைப் போல ஆயுதங்கள் கெட்டுப்போகும் பொருட்கள் அல்ல. ஆதலால், அவற்றைத் தங்களால் முடிந்த அளவிற்குப் பயன்படுத்தாமலே வைத்திருங்கள்.

நம்காலத்திலும் நமக்குப் பின்னான காலத்திலும் போர், குறிப்பாக அணுஆயுதப்போர் நிகழாமல் இருக்க உலக அரசுகளை (இறைவனை அல்ல) வேண்டுவோம்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!