Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

உறங்கிவிழித்த வார்த்தைகள்

$
0
0

eye-photosகாதல் அணுக்கள் /அத்தியாயம் 10

(அதிகாரம் – கண்விதுப்பழிதல்)

 குறள் 1171:

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

 

அவனைக் கண்டதும்

காதல்கொண்ட கண்

அவனைக் காணாது

கண்ணீர் கொண்டது.

 

*

 

குறள் 1172:

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

 

தீதும்நன்றும் பிறர்தர

வாரா என்ற சங்கதி

சரிவரப் புரிவதில்லை

முட்டாள் கண்களுக்கு.

 

*

 

குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

 

கண்களின் அவசரம்

கண்ணீரில் முடியும்

நகை முரண்களால்

நிறைந்தது காதல்.

 

*

 

குறள் 1174:

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

 

தீராக்காதல் தந்து

தீர்ந்து போகிறது

கண்ணீர்த்திரளின்

கடைசித் துளியும்.

 

*

 

குறள் 1175:

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

 

காதல் தானமீந்த

கண் வள்ளலிடம்

தூக்கம் திருடியது

காதல் களவாணி.

 

*

 

குறள் 1176:

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

 

காதலைப் பிரசவித்த

கண்களின் வாதையில்

ரகசியமாய்க் கசிகிறது

உதட்டோரப் புன்னகை.

 

*

 

குறள் 1177:

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

 

அவனைப் பார்த்து

ப்ரியம் விதைத்த

கண்களிரண்டும்

நாசமாய்ப் போக!

 

*

 

குறள் 1178:

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

 

நீ மெய்யோ பொய்யோ

உனைத் தேடிக் தவித்த

களைப்பிலும் தூங்காது

நீர் கோர்க்கும் கண்கள்.

 

*

 

குறள் 1179:

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

 

பிரிந்து போனாலும்

திரும்பி வந்தாலும்

கண்களின் சாபம்

உறங்காதிருப்பதே!

 

*

 

குறள் 1180:

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

 

கண்களுடைய எவரும்

அதில் மிதக்கும் சோகம்

கடந்து காதல் ரகசியம்

காக்க முடிவதில்லை.

 

***

 

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!