காதல் அணுக்கள் / அத்தியாயம் 21
அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
உள்ளக்களித்தலும்காணமகிழ்தலும்
கள்ளுக்கில்காமத்திற்குண்டு.
மது போலில்லை
பார்வை போதும்
நினைப்பு போதும்
காதல் வெறியேற.
*
குறள் 1282:
தினைத்துணையும்ஊடாமைவேண்டும்பனைத்துணையும்
காமம்நிறையவரின்.
பிரபஞ்சமாய்ப் பிரியம்
பெருகுகையில் பிளவு
கூடாது அணுவளவும்
அதனின் துகளளவும்.
*
குறள் 1283:
பேணாதுபெட்பவேசெய்யினும்கொண்கனைக்
காணாதமையலகண்.
ரோமதிற்கொப்பு தான்
நானவனுக்கு எனினும்
அவனையே தேடித்
துடித்தலையும் கண்கள்.
*
குறள் 1284:
ஊடற்கண்சென்றேன்மன்தோழிஅதுமறந்து
கூடற்கண்சென்றதுஎன்னெஞ்சு.
கோபத்தின் கதிர்கள்
தாபமாய்க் குவியும்
விசித்திரமான ஆடி
ஒரு காதல் சந்திப்பு.
*
குறள் 1285:
எழுதுங்கால்கோல்காணாக்கண்ணேபோல்கொண்கன்
பழிகாணேன்கண்டஇடத்து.
தெளிவுப் பார்வையின்
நீச தூரமாய் அருகே
வந்ததும் மாயமாகும்
அவன் பிரிவுப்பிழை.
*
குறள் 1286:
காணுங்கால்காணேன்தவறாயகாணாக்கால்
காணேன்தவறல்லவை.
நெருங்கி வந்தால்
அவன் நிரபராதி;
விலகிப் போனால்
பெருங்குற்றவாளி.
*
குறள் 1287:
உய்த்தல்அறிந்துபுனல்பாய்பவரேபோல்
பொய்த்தல்அறிந்தென்புலந்து.
சுனாமி நீச்சலாய்
தோல்வி அறிந்து
களமாடும் சாகசம்
ஊடல் யுத்தம்.
*
குறள் 1288:
இளித்தக்கஇன்னாசெயினும்களித்தார்க்குக்
கள்ளற்றேகள்வநின்மார்பு.
எத்தனை உதாசீனம்
எத்தனை அவமானம்
மறந்து கிறங்கடிக்கும்
மார்பின் மயிர்கற்றை.
*
குறள் 1289:
மலரினும்மெல்லிதுகாமம்சிலர்அதன்
செவ்விதலைப்படுவார்.
பூவை விட, பஞ்சை விட,
மேகத் துணுக்குகளை விட
மென்மையின் உச்சம் காமம்
புரிந்தவன் புன்னகைக்கிறான்.
*
குறள் 1290:
கண்ணின்துனித்தேகலங்கினாள்புல்லுதல்
என்னினும்தான்விதுப்புற்று.
என்னை விட வேகமாய்
முரடாய்த் தழுவுகிறாள்
கண்களில் பிடிவாதமாய்
சினங்கொண்ட சிநேகிதி.
***