Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

விதை நெல்லைப் பழிக்கும் கூட்டம்

$
0
0

vedasமக்களின் பேச்சு மொழியாகப் பயன்படவில்லையே; பின் எதற்காக சம்ஸ்கிருதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்வது சமைக்கத்தான் பயன்படுவதில்லையே; விதை நெல்லை எதற்காகப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்பதைப் போன்றது. இந்து, பவுத்த, சமண மதங்களின் பெரும்பாலான படைப்புகள் சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. இந்தியாவின் கடந்த கால அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. விஞ்ஞான உலகின் அறிவுத்துறைகளுக்கான மொழியாக ஆங்கிலம் எப்படி இன்று இருக்கிறதோ அதுபோலவே கடந்த கால அறிவுச் செல்வத்துக்கான மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தைப் பழிக்கும் ஓர் இந்தியர் அவருடைய முன்னோர்களின் அறிவை, வாழ்க்கையை, அனுபவத்தைப் புறக்கணிக்கிறார் என்றே அர்த்தம்.

சம்ஸ்கிருதத்துக்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. அது வழிபாட்டு மொழியாக இருக்கிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க நாம் அன்றாடம் பேசும் மொழியைவிட புரியாமல் இருக்கும் மொழியே சிறந்தது. அதுதான் அந்தச் சடங்குக்கு ஒருவித பூடகமான தன்மையை அளிக்கும். கண்ணால் காண முடிந்தவர்களுடன் பேச ஒரு மொழி. காண முடியாத இறைவனுடன் பேச புரிந்துகொள்ள முடியாத மொழி. தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சடங்குகளே உகந்தது.

இறைவனின் இருப்பையே நிராகரிக்கும் நாத்திகம் இறைவனை வணங்க சம்ஸ்கிருதம் மட்டும் கூடாது என்றெல்லாம் சொல்லமுடியாது. பிற மொழிகளையுமே அந்த இடத்தில் நிராகரிக்கவே செய்யும். செய்ய வேண்டும். அது வேறு வகையான விவாதத்துக்கான விஷயம். ஆனால், இறைவனின் இருப்பை ஏற்பவர்களுக்குத் தாய் மொழியைவிட சம்ஸ்கிருதத்தில் பிரார்த்தனைகள் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கமுடியாது. சூத்திர, தலித் கோவில்களில் ஸ்பீக்கரில் முழங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களே இதற்கான சாட்சி. இசை நயம் மிகுந்த கம்பீரமான சமஸ்கிருத மந்திரங்கள் அளிக்கும் மன நிறைவு புரிந்த மொழிகளில் இருக்கும் மந்திரங்களில் கிடைப்பதில்லை. பூக்களால் அலங்கரித்தல், பல்வகை திரவங்களால் அபிஷேகம் செய்தல், இருண்ட கர்ப்ப கிரகத்தில் கற்பூரம் ஏற்றுதல், பொன்னிற விளக்கொளியைப் படர விடுதல் என வழிபாட்டைக் கலையாக வளர்த்தெடுத்த குலம் பூஜைக்கான மொழியாக சம்ஸ்கிருதத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் சம்மதத்தோடுதான் முன்வைத்திருக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் அது இந்துக்களின் குறிப்பாக பிராமணர்களின் மொழி என்ற மேலோட்டமான புரிதல்தான். இந்து மதம் மீதும் பிராமணர்கள் மீதுமான வெறுப்புக்குக் காரணம் அவர்கள்தான் சாதி அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தார்கள் என்ற அரசியல் தீர்மானம்தான். இந்த உலகில் மதவெறி, இன வெறி, நிற வெறி, மொழி வெறி என ஏராளமான வெறிகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சாதி வெறி கடைசித் தட்டில் இருக்கும் ஒன்றுதான். ஆனால், மதம், இனம், நிறம், மொழி என அனைத்துவகை வெறியிலும் சிறந்து விளங்கும் கிறிஸ்தவ மேற்கத்திய சக்திகள் சொல்லிவிட்டன என்பதால் சாதி வெறியே உலகில் மிகவும் கொடூரமானது என்று இந்திய அறிவுஜீவி வர்க்கமும் கிளிப்பிள்ளைபோல் கூவிக்கொண்டு வருகிறது. தமது தவறை மறைத்துக் கொள்ள விரும்பும் சூத்திர தலித் ஜாதிப் போராளிகள், ஏகாதிபத்திய வெறி கொண்ட மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகள் இவற்றோடு வீசும் காற்றுக்கு ஏற்ப பாய் விரிக்கும் சமத்காரம் மிகுந்த அக்ரஹாரத்து அம்பிகள் என அனைத்து முனைகளிலும் இந்து/பிராமண மதிப்பீடுகளும் வாழ்க்கை முறையும் கட்டம் கட்டித் தாக்கப்படுகின்றன.

தொழில் புரட்சிக்கு முன்வரையான மன்னராட்சி காலகட்டத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் உலகின் எல்லா இடங்களிலும் எல்லாமும் தீர்மானமான நிலையிலும் இந்து சாதி அமைப்பு மட்டுமே கொடூரமானது என்றும் அதற்கு பிராமணர்களே காரணம் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் குணத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்கிவந்த வர்ணாஸ்ரம தர்மத்தை சாதியின் தோற்றுவாயாக முத்திரை குத்தித் தாக்கி வருகிறார்கள்.

இன்றைய நவீன சமூகம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகூடாது என்று சொல்வதைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் சொல்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதுவே நடைமுறையில் இருந்தது. அனைவருக்கும் அனைத்துவிதமான கல்வி தரப்பட்டது. திறமைக்கும், விருப்பத்துக்கும், குண இயல்புக்கும் ஏற்ப வேலைகள் தீர்மானமாகின. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அனைவரும் கூடிக் கலந்து உரையாடி, வேலைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வரவே ஒரு தலைமுறைக்கு ஒரு வேலை என்று தீர்மானமானது. பல நூறு வருடங்கள் கழித்த பிறகு பெற்றோரின் தொழிலே பிள்ளைகளுக்கும் என்று தீர்மானமானது (அதாவது சாதி அமைப்பாக ஆனது).

ஒவ்வொரு தனி மனிதரும் தமது உள்ளார்ந்த வலிமையால் மேலெழ முடியும் என்றாலும் மரபணு, சுற்றுச் சூழல் ஆகியவையே ஒரு மனிதனுடைய சிந்தனையையும் செயல்பாடுகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. புரோகிதத் தொழில் போலவே எல்லாத் தொழிலும் உயர்ந்தவை என்பதை ஏற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம், எல்லாத் தொழிலும் சமூக மரியாதைக்கு உரியவையாக உயர்த்தப்பட முடிந்தவையே என்பதையாவது புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருக்கிறது. கூடவே, எந்தத் தொழிலையும் உயர்த்திக் கொள்ள முடியாமல் யாரும் தடுத்திருக்கவில்லை என்ற உண்மையையும் சேர்த்து.

மேலும் நிறவெறி, மதவெறி, இன வெறி போன்றவை அதிகாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டவை. சாதி அமைப்போ அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அது எந்த நிலையிலும் பிற வெறிகளைப் போல் கொடூரமாக ஆனதும் இல்லை. இனி எப்போதும் ஆகவும் போவதில்லை. சாதிகளை ஒருங்கிணைத்து ’இந்து மதம்’ உருவானதுபோல் மொழிவாரி மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்திய தேசியம் உருவாகிவருகிறது. இன்று அதீத பிராந்திய (மொழி) தேசியம் பேசுபவர்கள் ஒருவகையில் சாதி வெறியாளர்களின் அப்கிரேடட் (டவுன்கிரேடட்?) வெர்ஷன்களே.

இந்து சாதி அமைப்புதான் பன்முகத்தன்மையை உயிர்ப்புடன் தக்கவைத்திருக்கிறது. இந்து சாதி அமைப்பு வழங்கியிருக்காத சமத்துவத்தை இஸ்லாமும், கிறித்தவமும் கூட வழங்கியிருக்கவில்லை. பாரம்பரிய வழிமுறையை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லீமாகவும், கிறிஸ்தவராகவும் ஒருவர் மாறினால்தான் சமத்துவம் கிடைக்கும் என்றால் அதன் பெயர் சமத்துவம் அல்ல. கையூட்டு, அழித்தொழிப்பு அல்லது பச்சை சந்தர்ப்பவாதம். இந்து சாதி அமைப்பு அப்படியான ஒரு சமத்துவத்தை முன்வைக்காததை அதன் பலமாகவே கொள்ளவேண்டும்.

இவையெல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஒருவருக்கு பிறப்பின் அடிப்படையில் வேலைகளைத் தீர்மானிப்பது தவறு என்ற நவீன மதிப்பீட்டைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைத்திருக்கிறது என்ற உண்மையும் இந்திய சாதி அமைப்பு ஒப்பீட்டளவில் குறைகள் குறைந்த சமூக அமைப்பு என்ற உண்மையும் புரியவரும் (அவருக்கு அதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எப்போது வரும் என்பது மேலை நாடுகளில் அந்தக் கருத்து எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்தது என்பது வேறு விஷயம்). அந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவமும் மேன்மையும் புரியவரும்.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!