Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all 405 articles
Browse latest View live

சாதிகளும் உட்சாதிகளும்

$
0
0

tribalsபறையர்கள் / அத்தியாயம் 5

இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்த ‘அற நூல்கள்’ எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின.

இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு கால நிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. தன்னைத் தானே ஒரு சாதியாகவும் அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப்பெரியனவாகவும் மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமும் ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்து என்பது தத்துவார்த்த அளவில் தாராளத் தன்மையுடையதும், சமூகப் பழக்க அளவில் கெடுபிடியான கட்டுத் திட்டங்கள் கொண்டதுமான ஒரு மதமாகும். இதனால்தான் நாத்திகம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களையும் இது தனது தத்துவமாக உள்ளடக்கி அறிவிக்கும் அதே வேளை, சாதியக் கட்டமைப்பில் மட்டும் கறாரான கட்டுத் திட்டங்களைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. இதனாலேயே இந்துக்கள் தங்கள் இருப்பைச் சாதிய வடிவிலேயே வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த இந்துக்களும் உலகம் முழுக்க, இந்தியா முழுக்க வாழ்ந்தாலும் இவர்களும் மத அடிப்படையை வைத்து அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக தேசிய இனத்தை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வங்காளி, குஜராத்தி என்றே அறியப்படுகிறார்களே யொழிய பொதுவில் இந்துக்கள் என்று அல்ல.

இன்றைய சமூகத்தில் இந்து மற்றும் இந்துத்துவத் தாக்கமுள்ள எந்த ஒரு மக்கள் பிரிவும் சாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது. மனிதனின் சாதிய அடையாளமே மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. மனிதன் பிறந்து பெயர் வைக்கும் முன்பே ஏன் பிறக்கும் முன் கருவிலேயே மனிதனின் சாதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி அகமண முறையில் கெட்டித்தட்டிப் போயும், இறுக்கமடைந்தும் மாற்றமுடியாததாகவும், நிலவும் சாதியக் கட்டமைப்புக்குள் மனிதனுக்கு சுதந்தரம், சனநாயகம், சமத்துவம் எதுவும் இல்லை.

சாதி அமைப்பு என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுகளை கொண்டது. சாதாரண நோக்கில் பார்ப்பன சாதி, பார்ப்பனரால்லாத மேல்சாதி, பிறப்படுத்தப்பட்ட சாதி, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி இன்னும் அதற்குள்ளே நிலவும் உட்சாதி ஆகிய எந்த சாதியை எடுத்துக்கொண்டாலும் இந்த சாதிக்குள் சமத்துவம் இல்லை என்பதோடு இது படிநிலை வரிசையுடையதாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் இதுவே சமூகத்தில் அதன் இருப்பை தெளிவுப்படுத்துவதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளில் மிகக் கொடூர அல்லது மிக இழிந்த வடிவமே தீண்டாமை என்பது. என்றாலும் மேலே சொன்ன படிநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீண்டாமைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மேலே சொன்ன சாதிகளெல்லாம் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தொட்டால் தீட்டு என்னும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.

எனவே, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் மத்தியில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும், தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாருக்குமான படிநிலை ஏற்றத்தாழ்வையும் தீண்டாமைக் கொடுமையையும் ஒன்றாக்கி அதாவது சமப்படுத்திப் பார்த்துக் கொள்ள முடியாது. பார்த்துக்கொள்ளக் கூடாது.

சமுதாயத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வுகள் தோன்றும் முன்பே சாதி இருந்தது. அது இன்று நாம் காணும் சாதி என்னும் நோக்கில் அகமண முறையில் கட்டமைக்கப்பட்ட சாதியாக இல்லாமல் இந்திருக்கலாம். தொழில் ரீதியில் மற்றும் வேறுபல ரீதியில் பிரிவினையாக இருந்திருக்கலாம். இப்பிரிவினையே முதலில் தோன்றியது.

சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் உற்பத்தி உறவு என்கிற வகையில் புற நிலையாகவும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு வடிவம் என்கிற வகையில் அகநிலையாகவும் செயல்படுகிறது என்பது கிட்டத்தட்ட பெரும்பாலான சமூக ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இதிலும் உற்பத்தி என்பதை மனித உற்பத்தி, பொருள் உற்பத்தி என இரு வகையாகக் கொண்டு நோக்க, இவ்விரண்டிலுமே சாதியச் செயல்பாடுகள் நிலவுவது தெரியவரும். இங்கு மனித உற்பத்தி என்பது சொந்த சாதிகளின் வடிவில் அதாவது அகமண உறவில் நிகழ்கிறது. பொருள் உற்பத்தி என்பது பெருமளவும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் இன்னும் சில சாதிய அடிப்படையிலேயே நீடிக்கிறது. பொதுவான தொழில் கட்டமைப்பும் சாதி சார்ந்தே நிலவுகிறது.

வருணக் கோட்பாடு என்பது சாதியத்தை, தீண்டாமையை வலியுறுத்தும் ஒன்று. பார்ப்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்கிற படிநிலை வரிசையைக் கொண்டுள்ளது. இது பிறப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்கிற ஒரு கோட்பாடாகும்.

இப்படி இது கீழ் மேல் அடுக்கு வரிசைகளைக் கொண்டுள்ளதால் இப்படிநிலை வரிசையில் இடையில் உள்ள ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்களை எதிர்க்க விரும்பும் அதே வேளை, தங்களுக்கு கீழுள்ளவர்களைக் கண்டு நிறைவுற்று அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி அதிலேயே அகமகிழும் போக்கும் இருந்து வருகிறது.

0

சடங்கு புரோகிதர்களாக விளங்கிய பிராமணர்கள் ஒரு நாட்டின் அரசனைக் காட்டிலும் மேலானவர்களாக மாறிய நிலைதான் சாதியத்தின் அடித்தளம்.பொருளியியல் நிலையிலும் அரசியல் மேலாண்மையிலும் எஜமானர்களாகத் திகழ்ந்த அரசர்களின் ‘அதிகாரம் என்னும் தளமானது ஆன்மிகம், வேள்வி/யாகம், சடங்கு இவற்றைக் கொண்டு மன்னனுக்கும் – அரசனுக்கும் நாட்டுக்கும் மேன்மை ஏற்படுத்திய பிராமணர்களின் ‘சமூகத் தகுதி’ என்னும் தளத்தோடு கொண்ட உறவே சாதியத்தின் அடித்தளம் என்பார் துய்மோன் (1980:2).
‘சாதி என்பது குல – இனக்குழு அமைப்பின் எஞ்சிய வடிவங்களில் ஒன்று’ என்பார் கார்ல் மார்க்ஸ்.

‘சாதி என்பது ஒரு அமைப்பு முறை. இந்த அமைப்பில் ஆண் – பெண் எந்த குறிப்பிட்ட குழுவில் பிறந்தனரோ அந்தக் குழுவின் மூலமாகவே அவர்களுக்குச் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. சமூகப்படிவரிசையில் ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தொழில் – அல்லது தொழில்கள் உள்ளன. அக்குழுவுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்’ என்கிறார் கெய்ல் ஓம்வெட் (நூல்: வர்க்கம், சாதி, நிலம். பக்.60).

சாதி என்பதற்கு குலம், வருணம், இனம், ஓரினப்பொருளின் பொதுவாகிய தன்மை, திரள் என்றெல்லாம் தமிழ் லெக்சிகன் அகராதி (பக்.1367) பொருள் கூறுகிறது.

ஆறு பேரினமாக, ஒன்பது கிளையினமாக இருந்து பின்னர் நான்கு மொழியினமாக மாறிய இந்திய சமூகத்தில் சாதிகள் படிப்படியாக வளர்ந்து பெருகலாயின. பின்னர் மதங்கள் தோன்றின. குலக்குறி வழிபாடுகளால் பிரிந்து நின்ற மனிதன் மதங்களால் மேலும் பிரிந்தான்.
ஆரியர்கள் வருணாசிரம கோட்பாடுகளைப் புகுத்தினர். தொழில் அடிப்படையில் இருந்த சாதிகள் பிறப்பு அடிப்படைக்கு மாற்றப்பட்டன.

ஒரு சாதியில் பிறப்பதற்கு அந்த மனிதன் முற்பிறவியில் செய்த கர்மவினைகளே காரணம் என்றும், இழிவான நிலையில் பிறப்பதே – வாழுவதே இறைவன் ஒரு சில சாதிகளுக்கு இட்ட கட்டளை என்றும் போதனைகள் செய்யப்பட்டன.

ஆரியர் வருகைக்குப் பின்னர் தொழில் அடிப்படையில் தோன்றியதாகச் சொல்லப்பட்ட சாதிகளைப் பற்றி மண்டல் கமிஷன் அளிக்கும் புள்ளிவிவரம் இது. 3741 பிற்படுத்தப்பட்ட சாதியினரும், அவர்களுள் 2105 மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மற்றும் 1088 ஷெட்யூல்டு இனத்தவரும் 648 மலைவாழ் இனத்தவரும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 85% சூத்திர – தீண்டப்படாதவர்கள் என்றும், இங்குள்ள 11 கோடி முஸ்லிம்களில் 10 கோடி பேர் இந்துக்களாக இருந்து இஸ்லாத்துக்கு சென்றவர்களென்றும், அதில் பெரும்பாலோர் தீண்டப்படாத இனத்தவர் என்பதும் ஏற்கவேண்டிய உண்மையாகும்.

அக் காலத்திலே பல சாதிகள் இருந்ததை நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்தின்மூலம் அறிய முடிகிறது. சமயம், இலக்கியம், கல்வி என பல்வேறு கட்டுமானங்கள் இருந்தபோதும் சாதியை ஒழிக்க முடியவில்லை. சாதிப் பூசல்கள் மட்டுமின்றி சமய சண்டைகளும் நம் நாட்டில் இன்றுவரை நடந்துவருவது வேதனையானது.

‘இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம்’ 1985ல் இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் இனவரைவியல் மதிப்பாய்வினை ‘இந்தியாவின் மக்கள்’ என்னும் திட்டத்தில் வழியாகத் தொடங்கியது. இவ்வாய்வின்படி இந்தியாவில் இன்று 4635 சமூகங்கள் உள்லன. (சிங் 1992).
‘ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் காந்தியடிகள் தமது ‘அரிஜன்’ (16.11.1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ‘இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய வர்ணாசிரம விதி முறைகளுக்கு நேர் எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக் கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்களவு நாட்டுக்கு நல்லது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு கட்டுரையில் காந்தியடிகள், ‘பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய சாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர் ஜாதி – கீழ் ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக இழிவை இழிவுபடுத்தி விட்டது’ என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார் (அரிசன் – 2.5.1936).

டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது ‘சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறானது. உட்சாதிகளை ஒழித்துவிடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்து விடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதற்கு மாறாக சாதி ஒழிப்பு, உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால் உட்சாதிகளை ஒழிப்பது சாதிகளை வலுப்படுத்தவே துணைபோகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்’ என்று குறிப்பிட்டார்.

0

Share/Bookmark


இருண்ட கண்டம், இருண்ட உண்மை

$
0
0

bad-thoughts-72பேசு மனமே பேசு / அத்தியாயம் 5

மனித மூளையில் வரை திட்டங்களாக (programmes) இருக்கும் பல்வேறு சிந்தனைக்கூறுகள், பல்வேறு வழிகளில் உள்ளே செல்கின்றன. பிறரின் அபிப்பிராயம், விமரிசனங்கள், அறிவுறுத்தல்கள், கேள்விகள், பதில்கள், நமது சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பற்றிய நமது புரிதல்கள் போன்றவை இதில் அடங்கும். இவை உருவாக்கும் சிந்தனைக் கூறுகள், மனத்தில் எண்ணங்களாக, நம்பிக்கைகளாக, பல்வேறு உணர்ச்சிகளாக உருமாறி, நமது முடிவுகளை, வாழ்க்கைப் பாதையை, நடத்தைகளை தீர்மானிக்கின்றன. இவற்றைத்தான் நாம் சுய உருவகமாகப் புரிந்துகொள்கிறோம். நமது புரிதலின்படி வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறோம்.

நாற்பது வயதை எட்டிய மனோகரன், சிறந்த ஓவியக் கலைஞர். கலைகளின் மையமான, பாரிஸ் சென்று இக்கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர். அங்கேயே சில வருடங்கள் வாழ்ந்தும் இருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் திருமணம் என்பது வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வந்தார். பெற்றோர்களும், மற்றவர்களும் வலியுறுத்தியும் பயனில்லாமல் போனது. இவரை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வழி தெரியாமல் வயதான பெற்றோர்கள் திணறினர். நண்பர்களில் ஒரு சிலர், தொடர்ந்து வலியுறுத்தியதால், இதுபற்றி ஆலோசிக்க மனோதத்துவ நிபுணரை சந்திக்க சம்மதித்தார்.

மனோதத்துவ மருத்துவருடன் பல அமர்வுகளுக்குப் பிறகு, மனோகரனின் திருமணத் தயக்கத்துக்குக் காரணம் தெரிய வந்தது. அவரது 16ம் வயதில், விளையாடிக்கொண்டிருந்தபோது, பிறப்புறுப்பின் மேல் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சைக்காக சில நாட்கள் தங்க நேர்ந்தது. அப்போது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் கண்ணை மூடிப் படுத்திருந்ததைத் தூங்குவதாக நினைத்துக்கொண்டு, ஒரு நர்ஸ் மற்றவரிடம், ‘பாவம், பையன் வாழ்க்கையே போச்சி. இவன் கல்யாணம் செய்துகொண்டால் பிரச்னைதான். ஆண்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்று சொல்வதை மனோகரன் கேட்டிருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை நடந்தது. ஆனால் அந்த உரையாடல் இவரிடம் தங்கிவிட்டது. அந்த வயதில் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருத்து, சந்தேகம், கேள்விக்கு உட்படுத்தப்படாமல் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘தான் ஆண் மகனாக, எந்தப் பெண்ணிடமும் நடந்துகொள்ளமுடியாது’ என்ற நினைப்பு, திருமணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வரக் காரணமானது. அவரது இந்த சுய உருவகம்தான், வாழ்க்கையின் பாதையைத் தீர்மானித்தது.

விஷயத்தைத் தெரிந்துகொண்ட மனோதத்துவ நிபுணர், மருத்துவ ரீதியாக அவரை பரிசோதனைக்கு உட்பட வைத்து அவரது பயத்துக்குக் காரணம் ஏதுமில்லை என்பதை நிரூபித்துப் புரிய வைத்தார். இதன் பிறகுதான், மனோகரன் திருமணத்துக்கு சம்மதித்தார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

நமக்குள்ளே, ஏற்கெனவே உண்டாகி இருக்கும் சந்தேகங்கள், பயங்கள், நம்பிக்கைகள் ஆகியன, எத்தனை வயதானாலும், தகுதிகள் கூடினாலும் மாறுவதில்லை, மறைவதுமில்லை. அதனால்தான், உத்வேகப் பேச்சுகள், எழுத்துகள் ஆகியன எதிர்பார்த்த அல்லது நீடித்த பலன்களை அளிப்பதில்லை. இதை மாற்றுவதற்கு நமக்குள் இருக்கும் பழை படிமங்களை, நினைவுகளை, வரை திட்டங்களை முதலில் மாற்ற வேண்டும். எழுது பலகையில் புதிதாக எழுத வேண்டுமானால், ஏற்கெனவே இருப்பதை அழித்தால்தானே, புதிதாக எழுத முடியும்? அது போலத்தான், புதிய எண்ணங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றை புகுத்துவதற்கு முன்பாக, பழைய எண்ணங்களை அழிக்க அல்லது மாற்ற வேண்டும். இதற்கு, முதலில் முன்னேற்றத்தை தடை செய்யும் எண்ணங்கள், எந்த வடிவங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? எந்த விஷயமாக இருந்தாலும், அது தொடர்பானவற்றை அணுகும்போது எப்படிப்பட்ட மனநிலையுடன், நம்மால் அணுக முடிகிறது என்பது பற்றி நம்மால் கவனித்து அறியமுடியும். இந்த மனநிலை குறிப்பிட்ட தடையுடன் தொடர்பு உடையதாக இருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. நமது மூளைத்திறனை இதற்காக செலவழித்தால் போதுமானது.

எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும், நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான் அடையாளம் காணப்படுகிறோம். நமது நடத்தை என்பதில், செயல், பேச்சு, சைகைகள், உடல்மொழி ஆகியன அடங்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அல்லது நடந்துகொள்ள முடியாமல் போகிறது. அதற்கான சரியான காரணத்தையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. சூழ்நிலை பற்றி நமது புரிதலின் விளைவாக எழுந்த முடிவை, நம்மால் செயல்படுத்த முடிவதில்லை. நமது மனம், நமக்கு உணர்த்தும் அறிவுரையை நாமே கேட்காத, அல்லது கேட்க முடியாததற்குக் காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவைதான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை உணரலாம். இவற்றிற்குப் பெயர்தான் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் என்று கூறலாம். இப்படியாக இருக்குமானால், நமது அறிவுத்திறன் வெளிப்படும் மூளை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழும்.

மனித மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் அனைவரும், ஒரு விஷயத்தைப் பற்றித் தீர்மானமாகக் கூறுகின்றனர். நமது மூளை, நாம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி, கேள்வி எதுவும் கேட்காமல் காரியங்களை நிறைவேற்ற உடலுக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால், மூளைக்கு வேறு வழி எதுவும் தெரியாது. ஏதோ ஒரு வகையில் உருவான அபிப்பிராயம் மூளைக்குள் உறைகிறது. அதற்கு ஏற்ப, நமது செயல்கள், பேச்சுகள் ஆகியன அமைகின்றன. கணிணியில் நாம் என்ன விதமான வரை திட்டங்களை உருவாக்குகிறோமோ, அதை வைத்துதான் கணிணியைப் பயன்படுத்த முடியும். மூளையும், கணிணியும் பல விதங்களில், ஒரே மாதிரியானவை. மனித மூளையில் உதித்த கணிணி, அதைப்போலவே செயல்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மூளையில் உள்ள எண்ணப் பதிவுகள், நம்பிக்கைகள் ஆகியன பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கி, அவற்றையும் சேர்த்தே வரைதிட்டங்களாகப் பாதுகாக்கிறது. மூளைக்குள் புதிதாக வரும் தகவல்கள், எந்த விதமான உணர்ச்சிகளை தட்டி எழுப்புகிறதோ, அதன் வடிவத்தை அத் தகவல்கள் பெறும். இவற்றை கேள்விகளுக்கு உட்படுத்தும்போது, அவை உண்மைகளாக, நம்பிக்கைகளாக மாறுகின்றன.

வெகு காலத்திற்கு ஆப்பிரிக்கா என்ற கண்டம் இருந்ததே ஐரோப்பியர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, அந்த கண்டம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கு ‘இருண்ட கண்டம்’ என்று பெயரிட்டனர். அவர்களது மூளையில், அந்த கண்டம் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி சூனியமாக, இருளாக இருந்ததால், அதைப் பிரதிபலிக்கும் வகையில், ‘இருண்ட கண்டம்’ என்ற பெயர் உருவானது. ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரிகம், உலகத்தின் கம்பீரமான மற்றும் மிக நீளமான நதிகளில் ஒன்றான நைல் நதிக்கரையில்தான் தழைத்தோங்கியிருந்தது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் இருந்தது. மூளையில் ஏற்படும், அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்கள் கேள்வி கேட்காமல் கருத்தாக வெளிப்படும்போது இவ்வாறும் நடக்கும்.

மூளைக்குச் செல்லும் தகவல், அது புரிந்துகொள்ளப்படும் விதம், ஆகியன சங்கிலித் தொடர்போல செயல்படக்கூடியவை. இவற்றில் மாற்றம் வேண்டுமானால், சங்கிலித் தொடரில் மாற்றம் வேண்டும். அல்லது புதிய தொடர்புகள் இணைக்கப்பட வேண்டும். இதைத் தன்னோடு பேசுதல் மூலம் செய்ய முடியும். இதன் மூலம் புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றாற்போல், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் மாற்றங்கள் தானாக வரும். மாற்றம் நிகழ, அதன்படி உருவகங்கள் மாற்றம் பெற நம்முள் நிகழும் உரையாடல்கள்தாம் காரணமாக இருக்க முடியும். இதை எப்படிச் செய்வது?

0

Share/Bookmark

கார்ப்பரேட் சி.இ.ஓவும் சில கலைப்படங்களும்

$
0
0

veerapandiya_kattapomman_tamil_king_statue_tamil_naduஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5

ஜே சம்பந்தப்பட்டு நான் பங்கேற்கும் இரண்டாவது பொதுக்கூட்டம் இது. அதுவே அவருடைய அஞ்சலிக் கூட்டமாக ஆனதில் நிறைய வருத்தமே. இரண்டு கூட்டத்திலும் அழையா விருந்தாளியாகவே கலந்துகொண்டிருக்கிறேன். முதலில், ஜே நடத்திய திரைப்பட இதழின் 25 ஆண்டுவிழாவுக்கு நான் போனபோது அங்கே யாருக்கும் என்னைத் தெரிந்திருக்கவில்லை. பார்வையாளர்கள் பங்கேற்ற விவாத நேரத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஓரிரு தலைகள் திரும்பிப் பார்த்தன அவ்வளவுதான். வேறு கூட்டமாக இருந்திருந்தால் அந்த நிமிடமே அந்த அரங்கமானது என்னுடைய நாற்காலியை மையமாகக்கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும். ஆனால், ஜேயின் கூட்டத்தில் நான் பார்வையாளனாகவே கடைசிவரை இருந்தேன்.

வணிகப் படங்கள் மீது குறை சொல்லியபடியே இருக்கிறீர்களே… கடந்த தலைமுறையில் சிற்றிதழ் இயக்கமும் வெகுஜன பத்திரிகைகளைப் பழித்தபடியே நடந்துகொண்டதுபோல் நீங்களும் செயல்படுகிறீர்களே. அப்படித் தனித்தீவாக அவர்கள் இயங்கியதில் சூழலுக்குப் பெரும் பங்கு உண்டு என்றாலும் தீவிர படைப்பாளர்கள் கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம். அதிகம் பேர் படிக்கும் இதழ்களில் அவர்களுடைய பங்களிப்பு இடம்பெற்று அதன் மூலம் வாசகர்களின் ரசனையில் மாற்றம் வந்திருக்கும். அதிகம் பேர் சம்பந்தப்பட்ட இடத்தை நோக்கி நகரும்போது சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், சமரசத்தைவிடக் கூடுதலாகச் சாதித்திருக்கமுடியும் என்று சொன்னேன்.

எதிர்பார்த்தது போலவே, அந்தக் கூட்டத்தில் அது தொடர்பாக எதிர்மறைக்கருத்துகளே அதிகமும் வந்தன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… எங்கள் நிறுவனத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆளற்ற வனாந்தரங்களில் பொழியும் அருவிகள் ஊருக்குள் பாய்ந்து கொஞ்சம் குப்பை மலைகளை இடம்பெயர்த்திருக்கலாம்… சாக்கடைகளை நீர்க்கச் செய்திருக்கலாம் என்பதுதான் என் எண்ணம். இது தொடர்பாக என்னால் முடிந்தவற்றை மனப்பூர்வமாக நான் செய்திருக்கிறேன்.

இதற்கு முன்பாக ஜேயுடனான என் முதல் சந்திப்பை நினைவுகூரவிரும்புகிறேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள், குறும்படச் செயல்பாடுகள், திரைப்பட விழா முயற்சிகள் ஆகியவற்றைப் பல வருடங்களாகக் கவனித்துவந்திருக்கிறேன். அதோடு அவருடைய அதிரடிச் செயல்பாடுகள் அவரைப் பற்றி ஒரு சித்திரத்தை என் மனத்தில் அழுத்தமாகப் பதியவைத்திருந்தது. ஆனாலும் வேறு காடுகளில் தலை தெறிக்க ஓடிய எத்தனையோ குதிரைகள் எங்கள் லாயங்களுக்குள், வீசும் புல்லுக்கட்டுக்காக சேணம் பூட்டி தலை குனிந்து நிற்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒருநாள் போன் செய்து உங்களைச் சந்திக்கவிரும்புகிறேன். முகவரி சொல்லுங்கள், கார் அனுப்புகிறேன் என்று சொன்னேன். பொதுவாக, எல்லோரும் என்னைச் சந்திக்கத்தான் நாட்கணக்கில் காத்திருப்பது வழக்கம். நான் யாரையாவது சந்திக்க விரும்புவதாகச் சொன்னால், தொலைபேசியை நான் கீழே வைப்பதற்கு முன்பாக அவர்கள் விழுந்தடித்து என் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

ஜேயும் நான் முகவரி கேட்டதும் ‘சொல்கிறேன்’ என்று சொன்னார். இவரைப் பற்றி நிறைய பூச்சாண்டிகள் காட்டினார்களே… இவரும் அழைத்தால் வருபவர்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், அடுத்ததாக ஜே சொன்ன வாக்கியம் அவர் யார் என்பதை எனக்குக் காட்டியது. ‘முகவரியைச் சொல்கிறேன். அந்த காரிலேயே நீங்களும் வந்துவிடுங்கள்’ என்று சொன்னார். இப்படியான ஒரு மூக்குடைப்பை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், முகவரியைச் சொல்லுங்கள் என்று வாங்கிக்கொண்டு போனை வைத்துவிட்டேன்.

சிறிதுநேரம் யோசித்தேன். உட்காரச் சொன்னால் காலில் விழுபவர்கள் மத்தியில் அவர் கொஞ்சம் நிமிர்ந்து நின்றது என்னைக் கவர்ந்தது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அந்தப்புரத்தில் சல்லாபத்தில் ஈடுபடும்போது சற்று தள்ளி திரைக்கு அப்பால் இருந்துகொண்டு கலைஞர்கள் வாத்தியம் இசைப்பதைப் படித்திருப்பீர்கள். அந்தக் கலைப் பாரம்பரியத்தின் வாரிசுகள் நவீன யுகத்திலும் கோலோச்சுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும் சில நவீன கலைஞர்கள் ஜலக்கிரீடை செய்ய விரும்பும் மன்னருக்கு எண்ணெய் தேய்த்துவிடும் மகளிரைப்போல, கூடுதல் சேவைகளுக்கும் தயாராகவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆணாகப் பிறந்துவிட்டோமே என்ற கவலை அவர்கள் உள்ளுக்குள் ஓடுகிறதோ என்று நாம் நினைக்கும்வகையில் நடந்துகொள்வார்கள். உலக இலக்கியங்கள், சர்வதேசப் படங்கள் என பக்கம் பக்கமாக கதை அளந்தாலும் திரைப்பட டிஸ்கஷனுக்கு வரும்போது நல்ல பிள்ளையாக செருப்புடன் சேர்த்து கலைக்கிரீடத்தையும் கழட்டிவைத்துவிட்டு நுழையும் அவர்களுடைய சமத்காரம் எனக்கு நன்கு தெரியும். என் அரண்மனையில் அப்படியான ஆஸ்தான வித்வான்கள் பலர் உண்டு. ஒருவகையில் அவர்களால் நான் சோர்வடைந்து போயிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். ஜே, வேறுவகை ரத்தம் ஓடும் உடலைக் கொண்டவர்… என் லாயத்துக்குள் இந்தக் குதிரை முடங்காது என்பது நன்கு தெரிந்தது. உடனே, காரை எடுத்துக்கொண்டுபோய் சந்தித்தேன்.

ஒரேயடியாக மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியாது. படிப்படியாக முயன்று பார்ப்போம் என்று சொன்னேன். 25 வருடங்கள் பேரலல் மூவ்மெண்ட் ஒன்றை நடத்திய களைப்பு அவரில் படிந்திருந்தது. அது ஒருவேளை என் மன மயக்கமாகக்கூட இருக்கலாம். மாற்றுவழி ஒன்றைத் தேடும் மனநிலையில் அவர் இருந்திருக்கலாம். எதிர்பார்த்ததைவிட இதமாகவே பேசினார்.  எடுத்துக்கொள்ளும் விஷயத்தை மலினப்படுத்திவிடுவதுதான் வணிகப்படங்கள் தொடர்பாகத் தனக்குப் பெரிய குறையாகப்படுவதாகச் சொன்னார். எனக்குமே அந்த எண்ணமே இருந்தது. நாலைந்து படங்கள் எங்களுடன் பணியாற்றுங்கள். அதன் பிறகு நீங்கள் விரும்பும்படியான ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அப்படித்தான் எங்கள் நிறுவனத்தில் அவருடைய பங்களிப்பு ஆரம்பித்தது. முதலில் நாலைந்து வணிகப்படங்கள்… அதன் பிறகு அவர் விரும்பும் கலைப் படங்கள். அதன் பிறகு அவருடைய அரசியல் படங்கள்… இதுதான் நான் அவரிடம் சொன்ன வழிமுறை.

உண்மையில் கலை சார்ந்து அவர் முன்வைக்கும் மதிப்பீடுகளை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசியல் சார்ந்து அவர் சொன்னவற்றை நெருங்க முடியவில்லை. பிறவி படம் பற்றி அவர் எழுதிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள்.

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன் விடுமுறைக்கு வீட்டுக்குத் திரும்பியிருக்கமாட்டான். அவனுடைய வயதான தந்தை காலையில் இருந்து இரவு வரை  பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதில் இருந்து படம் தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த கல்லூரி மாணவன் காவல் துறையினரால் ஒரு வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவரம் தெரியவரும். வயதான தந்தை தனக்குத் தெரிந்த மந்திரி ஒருவரைச் சென்று சந்தித்து, மகன் வீடு திரும்பாமல் இருப்பது பற்றிச் சொல்வார். மந்திரியும் காவல்துறை ஆணையரைச் (ஜேயின் வார்த்தையில் காவல்துறை ஆணையன்) சென்று சந்திக்கும்படி கடிதம் எழுதிக்கொடுப்பார். காவல்துறை அதிகாரியோ அப்படி யாரையும் கைது செய்யவே இல்லை. விசாரணைக்கு அழைத்துச்சென்று அன்று மாலையே விடுவித்துவிட்டார்கள். பையன் எங்காவது நண்பர்கள் வீட்டுக்குப் போயிருப்பான். வந்துவிடுவான். கவலைப்படாமல் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்.

வயதான தந்தையும் அதை நம்பி வீட்டுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், பேருந்து நிலையத்தில் தினமும் வந்து காத்திருப்பதை நிறுத்தமாட்டார். அந்த கல்லூரி மாணவரின் அக்கா அவனைத் தேடி அவன் படித்த கல்லூரிக்குச் செல்வாள். கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் அந்தப் பையனும் அவனுடைய மூன்று நண்பர்களும் மந்திரி ஒருவரை கேலி செய்து பாட்டுப் பாடியிருப்பார்கள். மந்திரி அந்த மாணவர்களைக் கொஞ்சம் கவனிக்கும்படி காவல்துறைக்கு சொல்லியிருப்பார். நால்வரையும் அழைத்துச்சென்று கவனித்ததில் மூவர் அடிகளை வாங்கிக் கொண்டு உயிருடன் வீடு திரும்பியிருப்பார்கள். இந்த மாணவன், பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலோ அடி பலமாகக் கிடைத்ததாலோ என்னவோ லாக் அப்பிலேயே இறந்திருப்பான். காவல்துறையோ நால்வரையும் விடுதலை செய்துவிட்டதாக வழக்கை மூடிவிட்டிருக்கும்.

இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட கல்லூரி மாணவனின் சகோதரி சோகத்துடன் வீடு திரும்புவாள். இனி அவன் வருவான் என்று காத்திருக்க வேண்டாமென்று அப்பாவிடம் சொல்வாள். அவரோ எப்படிக் காத்திருக்காமல் இருக்க முடியும். நான் அவனுடைய தந்தை ஆயிற்றே. இவள் அவனுடைய தாய் ஆயிற்றே… நீ அவனுடைய அக்கா ஆயிற்றே நாம் காத்திருக்காமல் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பார். கடைசியில் என்ன ஆகும் என்றால் காத்திருந்து காத்திருந்து அவருடைய சித்தம்கலங்கிவிடும். தன் மகன் திரும்பி வந்துவிட்டதாகவும், அவனுடைய பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்து வீட்டில் பூட்டி வைக்கவேண்டும் என்றும் இனிமே அவனை எங்கும் அனுப்பக்கூடாது என்றும் பேச ஆரம்பித்துவிடுவார். அவருடைய மகள் வாய் பொத்தி அழுதபடியே உறைந்து நிற்பாள். படம் அதோடு முடியும்.

எளிய நேர்கோட்டு பாணியிலான கதை. எந்த ஆர்பாட்டங்களும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்ட படம். படத்தின் மைய கதாபாத்திரமான அந்த கல்லூரி மாணவனுடைய சிறு புகைப்படம்கூடப் படத்தில் காட்டப்பட்டிருக்காது. ஆனால், அவனுடைய இழப்பு பார்ப்பவர் அனைவரும் உணரும்வகையில் சித்திரிக்கப்பட்டிருக்கும். அதிலும் வயதான தந்தையாக நடித்த பிரேம்ஜி படத்தில் நடிக்கவில்லை… வாழ்ந்திருக்கிறார். தேய் வழக்குதான் என்றாலும் அதை வேறு வார்த்தைகளில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

ஒரு காட்சியில் பரிசலில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு வீல் என்று கதறி அழுதுகொண்டிருக்கும். எதிரில் அமர்ந்திருக்கும் பிரேம்ஜிக்குத் தன் மகனுடைய நினைவுகளை அந்த அழுகை கிளறிவிடும். பற்களைக் கடித்தபடி அழுகையை அடக்கிக்கொள்வார். கண்களில் நீர் தாரையாக வழியத் தொடங்கும். ஒரு வார்த்தைகூடப் பேசப்படாமல், பார்க்கும் நமக்கும் அந்த அழுகை தொற்றிக்கொள்ளும். நிஜ வாழ்க்கையில் சோகமும் உணர்வெழுச்சிகளும் அப்படியாகத்தானே நம்மால் உணரவும் வெளிப்படுத்தவும்படுகின்றன. கலை என்பது திரையில் காட்டப்படும் கதாபாத்திரத்தின் உணர்வுடன் நம்மை ஒன்றச் செய்வதுதானே.

ஒரு காட்சியில் ஒரு சிறு கதாபாத்திரம் தலையில் தேங்காய் மூட்டையைச் சுமந்தபடி வேகமாக ஓடும். ஓரிரு காட்சிகள் கழித்து அந்த கதாபாத்திரம் தலையில் சுமை எதுவும் இல்லாத நிலையிலும் சிறு கேனொன்றைப் பிடித்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். அதாவது, அந்த உழைப்பாளி கதாபாத்திரத்துக்கு இயல்பான நடை என்பதே இல்லாமல் போய், எப்போது பார்த்தாலும் பெரும் சுமையைச் சுமந்து கொண்டிருப்பதுபோல ஓடிக்கொண்டே இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சாப்ளின் ஒரு படத்தில் தொழிற்சாலையொன்றில் அசெம்பிளி லைனில் ஸ்க்ரூவை முறுக்கும் பணியில் இருப்பார். மெஷின் ஓடுவது நின்ற பிறகும் இவருடைய கைகள் நிற்காமல் தொடர்ந்து ஸ்க்ரூவை முறுக்கிக்கொண்டே இருக்கும். ஒரு மனிதன் தன்னுடைய படைப்பூக்கத்தை இழந்து ராட்சச முதலாளித்துவ இயந்திரத்தின் ஓர் அங்கமாக ஆகிபோகும் அவலத்தை அதில் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தக் காட்சியின் நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு மெளனமான வலி இருக்கும். இந்தக் கதாபாத்திரமும் அப்படியான ஒரு நிலையில்தான் இருக்கும். இரண்டே ஃப்ரேம்களில் மட்டும் வரும் இந்தக் கதாபாத்திரம், ”பாட்டாளியின் கண்ணீரால்தான் கடல் உப்புக் கரிக்கிறது… அரிவாளை எடு… சுத்தியலைப் பிடி’ வகையறா புரட்சிகீதங்களைவிட அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கலையின் இயங்குதளமே அதுதானே.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு பெரு மழையின் புயல் சீற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வயல்வெளியில் நெற்கதிர்கள் படபடவென அடித்துக் கொள்ளும். நூலகத்தின் போர்டு காற்றில் அலைபாயும். ஜன்னல்கள் பட் பட் என்று சாத்திக்கொள்ளும். செய்தித்தாள்கள் வீசும் பேய்க்காற்றில் வீசி எறியப்படும். ஒரு கறுப்பு நிறப் பூனை பயந்து நடுங்கியபடியே ஒரு தடுப்புக்குப் பின்னால் ஓடி ஒளியும். படத்தின் ஒட்டுமொத்த உணர்வும், கதையின் கருவும் வெகு இயல்பாக, அருமையான குறியீட்டு ரீதியில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கடைசி காட்சியில் ஓடம் ஒன்று நதியின் நடுவில் அநாதையாக அலைபாய்ந்து கொண்டிருப்பது காட்டப்பட்டிருக்கும். இப்போது வரும் படங்களுக்கு, நம் இலக்கிய சாம்ராட்கள் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி முட்டுக்கொடுக்கும் பொழிப்புரைபோன்ற குறியீடுகள் அல்ல. மிக எளிய காட்சிகள். எளிய மனம்கூடப் புரிந்துகொள்ளும்படியான படிமங்கள். அந்தக் குறியீட்டைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அடிநாதமான உணர்வைக் கடத்திவிடும் தன்மை கொண்டகாட்சிகள். கலையின் மேதைமை என்பது அதுதானே. காளிதாசனின் சைகைகளுக்கெலாம் தத்துவ விளக்கம் தந்த  பாண்டித்தியம் போன்றது அல்லவே அது.

ஜே அந்தப் படத்தின் கலாபூர்வமான காட்சிகளை எல்லாம் பாராட்டிவிட்டு, லாக் அப் டெத் விஷயத்தை இப்படி மயிலிறகால் வருடியதுபோல் எடுத்தது தவறு என்று சொல்லியிருந்தார். அதிகார மையத்தை எதிர்க்க முடியாத ஏழை நம்பூதிரிக் குடும்பத்தின் கையறு நிலையே படத்தின் அடிநாதம். இருண்ட மலைப்பாதையில் நடந்து செல்லும்போது, முன்னால் இருக்கும் பயங்கரமான பள்ளத்தாக்கை ஒரு மின்னல் வெட்டில் பார்க்கும்போது ஏற்படும் அதிர்ச்சியைப்போல் இந்தப் படத்தில் அதிகாரமையத்தின் சுயரூபம் சட்டென்று தோன்றி மறையும். ஜே அந்த அம்சத்தை நிறுத்தி நிதானமாகச் சித்திரித்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

காவல்துறை அந்த வழக்கை மூடிவிட என்னவெல்லாம் தகிடு தத்தங்கள் செய்தது? அரசியல்வாதியின் அராஜகம் எப்படிப்பட்டது? அடித்துக் கொல்லப்பட்ட மகனின் உடலைப் பார்த்து அல்லது புகைப்படங்களைப் பார்த்து தந்தைக்கு சித்தம் கலங்கியதாகக் காட்டியிருக்கலாம். அரசியல் தலைவரின் மிரட்டலால் சொந்த மகனின் சடலத்தைப் பார்த்தும், ”இவன் என் மகன் இல்லை… அவன் கண் காணா தேசத்துக்கு போயிருக்கிறான். காசிக்கு புனித யாத்திரை போயிருக்கிறான். திரும்பி வந்துவிடுவான். இந்த உடல் அவனுடையது அல்ல’ என்று சொல்லி அழுதபடியே வருவதாகக் காட்டியிருக்கவேண்டும் என்பது ஜேயின் கருத்து. உண்மையில் அவர் அந்தப் படத்தை தமிழ் சூழலுக்கு மாற்றுவது தொடர்பாக எழுதிய விமர்சனக் கட்டுரை அது. எனவே, கலை சார்ந்து சில பிராந்திய மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லியிருந்தார். தமிழில் கருணாநிதி ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வெளிப்படையாகச் சொல்லி இந்தப் படத்தை மொழிமாற்றம் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இப்படிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியை அல்லது அதிகாரமையத்தை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினால் அந்த கட்சிமட்டுமே தவறு செய்ததுபோல் ஆகிவிடும். கூடவே, எதிர்கட்சியின் அடியாள் என்ற முத்திரையும் விழுந்துவிடும். எனவே, எந்த அதிகாரமையத்தையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாமல் எல்லா அதிகார மையத்தையும் சேர்த்து விமர்சிக்கும் தொனியில் படமாக்குவதே சரி என்பதுதான் என் கருத்து. ஆனால், ஜே யோ இந்தக் கேள்விக்கு அவருக்கே உரிய லாகவத்துடன் ஒரு பதில் சொன்னார். ஒரு அதிகார மையத்தை வெளிப்படையாக சித்திரிப்பதால், இன்னொரு அதிகார மையத்தின் ஆதரவாளர் என்ற பெயர் வருமென்றால், இன்னொரு படத்தில் அந்த இன்னொரு அதிகாரமையத்தை எதிர்த்துவிட்டால் அப்படி ஒரு பேச்சு வராது அல்லவா? இது ஜேயின் டிபிக்கல் ஸ்டாண்ட்.

சுருக்கமாகச் சொல்வதானால், கலை என்பது அதிகார வர்க்கத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணிவில்லாமல் பதுங்கிக் கொள்வதற்காகப் பயன்படும் போர்வையாக இருக்கக்கூடாது.  உங்கள் படைப்புகள் தடை செய்யப்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு கலைஞனாக இருக்கமுடியாது என்று ஜே முழங்கினார். ஆனால், கோடிகளைக் கொட்டிப் படமெடுக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான எனக்கு அது அதிகப்படியானது. எனவே, ஜே மைனஸ் அரசியல் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஜேயோ கலை வாங்கினால் அரசியலும் இலவசம் என்ற பாணியில் இன்னும் சரியாகச் சொல்வதானால், அரசியல் வாங்கினால்தான் கலையே கிடைக்கும் என்று அடம்பிடித்தார்.

பேச்சுவாக்கில், அப்போது நாங்கள் எடுக்கத் தீர்மானித்திருந்த ப்ராஜெக்ட் பற்றி லேசாகச் சொன்னேன். உண்மையில் எந்தப் பெரிய நம்பிக்கையும் இல்லாமல்தான் அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஆனால் ஜே அந்தக் கதையில் சொன்ன சிறிய மாற்றம் எங்கள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் படத்தின் கதையைத் தழுவி ஒரு படம் எடுக்கத் தீர்மானித்திருந்தோம். அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்த அந்தப் படத்தின் வில்லனை கொஞ்சம் தரையில் கால் பதிக்க வைத்தார். நமது இந்தியா அப்படியான வில்லன்களின் சொர்க்கபூமி அல்லவா… ஒவ்வொருமொழிக்கும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் அடிப்படைவாத சக்தியை வில்லனாக வைத்துக்கொண்டோம். படத்தின் விளம்பரப் பொறுப்புகளை அவர்களே எடுத்துக்கொண்டார்கள். படம் இந்தியாவிலேயே அதிக மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம் என்ற பெருமையையும் ஒரு சேர தட்டிச்சென்றது.

அதற்கு பிரதியுபகாரமாக அவர் விரும்பும் ஒரு படமொன்றைத் தயாரிக்க முன்வந்தேன். நாலைந்து வருடங்கள் சேர்ந்து பணிபுரிந்த பிறகுதான் உங்களுடைய படம் என்பதுதான் எங்களுடைய முதல் ஒப்பந்தம். ஆனால், முதல் படம் மூலம் கிடைத்த வெற்றி எங்களைத் திக்குமுக்காடவைத்துவிட்டது. எனவே, ஒப்பந்தத்தை சிறிது மாற்றிக்கொண்டேன். அடுத்தது உங்க படம்தான் ஜே என்றேன்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எடுங்களேன் என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அதுதான் ஏற்கெனவே எடுக்கப்பட்டாச்சே என்றேன். அது கணேசனோட கட்டபொம்மன். நான் நிஜமான கட்டபொம்மனைச் சொல்றேன் என்றார். என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்… தமிழக மக்களுக்கு கட்டபொம்மன் என்றால் உடனே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன்தானே… என்று கேட்டேன். அது கட்டபொம்மனின் தவறு அல்ல. பெரியார்ன்னு சொன்ன்னதும் எனக்கு சத்யராஜ்தான் நினைவுக்கு வருவார் என்று யாரேனும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று சரமாரியாகப் பிடித்துக்கொண்டுவிட்டார்.

பாளையக்காரரான கட்டபொம்மனை சாதா வேஷ்டியும் துண்டும் கட்டினவராகக் காட்டவேண்டும் என்பதில் இருந்து ஆரம்பித்தார். பானர்மேன் கட்டபொம்மனை நிற்க வைத்து கேள்விகள் கேட்டதையும் எட்டப்ப மகாராஜா பற்றி புனையப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளை நீக்கியும் காட்டவேண்டும் என்றார். கட்டபொம்மன் உண்மையில் எப்படிப்பட்ட வீரனாக இருந்தானோ அதை, அதிகாரபூர்வமாக என்ன ஆவணங்கள் கிடைத்திருக்கின்றனவோ அதன் அடிப்படையில் காட்டுவோம். சுதந்தரப் போராட்ட காலத்தில் வெளிவந்திருந்தாலாவது கணேசனின் கட்டபொம்மனைச் சில சலுகைகள் தந்து சிரமப்பட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். 1960களில் தமிழ் நாட்டில் இருந்த வாய்ச் சொல் வீரர்களைப் போலவே அவரைச் சித்திரித்தது பெரும் துரோகம். கட்டபொம்மனின் ஆன்மா பெரும் துயரத்தில் அலைந்துகொண்டிருக்கும். அதை சாந்தப்படுத்தவேண்டும் என்றார். அப்படிச் செய்ய முயன்றால் சிவாஜியின் ஆவி நம்மைச் சும்மாவிடாதே… என்று சொல்லிச் சமாளித்தேன்.

ஆனால், ஜேக்குக் கொடுத்த வாக்கை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. வேறொரு கதை சொல்லுங்கள் என்றேன். அப்போதுதான் காணி நிலம் பற்றிச் சொன்னார். இந்தப் படத்துக்கு வேறு பிரச்னை எழுந்தது. படத்தை எடுக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், என் நிறுவனம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பட்ஜெட் குறைவு என்பதால், என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். எனக்கு இருந்த செல்வாக்கு என் பதவியினால் வந்ததுதான் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. இருந்தும் இந்தப் படத்தை எடுப்பதற்காக என் பதவியை இழக்க நேருமென்ற நிலைவந்தபோது நான் அதையே தேர்ந்தெடுத்தேன். ஜேவை என் இடத்துக்குக்கொண்டு செல்ல நான் விரும்பினேன். ஜே என்னை அவரிடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். ஆனால், பிழையான திசையில் காத தூரம் ஓடுவதைவிட சரியான திசையில் ஓர் அடி எடுத்து வைப்பது மேல் அல்லவா… நான் வந்துவிட்டேன். இப்போது பார்த்து ஜே போய்விட்டார். அவர் போனால் என்ன… அவர் விட்டுச் சென்றவை நம்முடன் இருக்கின்றன. அதில் பத்தில் ஒரு பங்கை நாம் நிறைவேற்றினால்கூட போதும். அதுவே அவருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

0

Share/Bookmark

ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி – II

$
0
0

gladiatorபுரட்சி / அத்தியாயம் 4

பொயுமு 73 வாக்கில் இத்தாலியின் தெற்கு கரைப் பகுதியில் கூடாரமிட்டிருந்தது ஸ்பார்டகஸின் படை. இத்தாலி, ஆல்ப்ஸ் ஆகியவற்றைக் கடந்து கால் (இப்போது பிரான்ஸில் உள்ள இப்பகுதி அப்போது ரோமின் ஆளுகைக்கு முழுக்க ஆட்படாமல் இருந்தது) நோக்கி முன்னேறி தப்பிப்பதே ஸ்பார்டகஸின் திட்டம்.

ஸ்பார்டகஸை இனியும் முன்னேறவிடக்கூடாது என்பது ரோம் செனட்டின் தீர்மானமான திட்டம். பலம் வாய்ந்த இரு படைப் பிரிவுகளை இந்த முறை ரோம் ஸ்பார்டகஸை நோக்கி அனுப்பிவைத்தது. ஆனால், இதைக் காட்டிலும் பெரிய சவலை ஸ்பார்டகஸ் தன் தரப்பில் இருந்தே எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கமாண்டர் கிரிக்சஸ் ஸ்பார்டகஸின் தலைமையை ஏற்க மறுத்து 30,000 அடிமை வீரர்களைத் தனியே பிரித்துச் சென்றான். புளூடார்க்கின் குறிப்புகளின்படி கிரிக்சஸ் தன் பலத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டவனாக அப்போது மாறியிருந்தான். முந்தைய வெற்றிகள் கொடுத்த துணிச்சல் இது. ஸ்பார்டகஸின் திட்டத்தையும் தலைமையையும் ஏற்க அவன் மறுத்தான். எதற்காக ஸ்பார்டகஸின் கீழ் பணிபுரியவேண்டும், நானே ஒரு தலைவன்தான் என்று கிரிக்சஸ் நினைத்திருக்கவேண்டும். இந்த நினைப்போடு இத்தாலிக்குள் நுழைந்த கிரிக்சஸும் அவனுடைய வீரர்களும் உற்சாகமாக நகரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

ரோம் செனட் தனது திட்டத்தை மாற்றியமைத்தது. ஸ்பார்டகஸை நோக்கி ஏவிவிடப்பட்ட இரு படைப் பிரிவுகளும் இப்போது கிரிக்சஸை நோக்கி திருப்பிவிடப்பட்டன. தான் செய்தது சாதாரணத் தவறல்ல பெரும் தவறு என்று கிரிக்சஸ் உணர்வதற்குள் அவன் படையில் இருந்த 20,000 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கிரிக்சஸையும் கொன்ற ரோம ராணுவம் தனது முதல் பெரும் வெற்றியை ஈட்டியது. ஆனால் அதே வேகத்தில் ஸ்பார்டகஸை நோக்கிப் பாய்ந்து வந்த இந்த இரு படைகளும் திட்டவட்டமாக முறியடிக்கப்பட்டது.

கிரிக்சஸைத் தோற்கடித்த ரோமால் ஸ்பார்டகஸைத் தோற்கடிக்க முடியாததற்கான காரணங்கள் ஆலன் உட்ஸின் ஆய்வில் கிடைக்கின்றன. கிரிக்சஸ் தலைமைக்குக் கீழ்படிய மறுத்தான். அதே சமயம், ஒரு நல்ல தலைவனாக வளரவும் அவனால் இயலவில்லை. தான் பிரித்துச் சென்ற முப்பதாயிரம் வீரர்களை ஒன்றுபடுத்தி ஒரே இலக்கை நோக்கி நகர்த்த அவனுக்குத் தெரியவில்லை. அதற்கும் மேலாக, அவன் ஒழுக்கமற்றவனாக இருந்தான். வர்க்க நலன் அல்ல, சுயநலனே அவனை உந்தித்தள்ளியது. அதுவே அவனை வீழ்த்தவும் செய்தது.

மாறாக, ஸ்பார்டகஸ் தன்னிடம் இருந்த வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஒழுங்குபடுத்தியும் தொகுத்தும் வைத்திருந்தார். நம்பிக்கையையும் ஊக்கத்தையும் மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் அவர்களுக்கு ஊட்டியிருந்தார். ரோமப் படைகளைத் தொடர்ச்சியாக வென்றபோதும் ஸ்பார்டகஸ் கர்வமோ குருட்டு துணிச்சலோ கொள்ளவில்லை.வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக அணுகி, இரண்டில் இருந்தும் பாடங்கள் கற்று, இரண்டையும் கடந்து தன் வழியில் அவர் முன்னேறிக்கொண்டிருந்தார். இறுதிவரை ஒரே இலக்கு. அடிமைகளின் விடுதலை. தன்னை எதிர்த்து வெளியேறிய கிரிக்சஸின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஸ்பார்டகஸ் தயங்கவில்லை. அந்த வகையில், ஒரு வீரனாகவும் திறமையாளனாகவும் மட்டுமின்றி மனிதாபிமானம் மிக்க மனிதானாகவும் ஸ்பார்டகஸ் திகழ்ந்தார்.

இதற்கிடையில் கால் நோக்கி முன்னேறத் திட்டமிட்டிருந்த ஸ்பார்டகஸ் திடீரென்று மீண்டும் இத்தாலியை நோக்கி திரும்பத் தொடங்கியது ஏன் என்பதற்கு விளக்கங்கள் இல்லை. ஒருவேளை ஸ்பார்டகஸ் கால் வழியாக ஜெர்மனிக்குச் சென்றிருந்தால் ரோமிடம் இருந்து முற்றிலுமாகத் தப்பியிருக்கலாம். அருகில் ஸ்பெயினில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எழுச்சி ஆரம்பமாகியிருந்தால் அங்கும்கூட அவர் பாதுகாப்பாக இருந்திருக்கலாம்.

இத்தாலி நோக்கி நகர ஆரம்பித்த ஸ்பார்டகஸின் படை இப்போது பலவீனமடைந்திருந்தது. காரணம், பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று அடிமைகளின் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இப்போது ஸ்பார்டகஸின் பயணத்தில் இணைந்திருந்தனர். அவர்களுடைய வரவால், பயணத்தின் வேகம் குறைந்தது. அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டிய கூடுதல் பொறுப்பும் இப்போது வீரர்களுக்குச் சேர்ந்திருந்தது.

மற்றொரு பக்கம், தன் எதிரியின் பலத்தை இப்போது நன்கு உணர்ந்திருந்த ரோம் தன் பலம் அனைத்தையும் திரட்டி பாய்ந்து வந்தது. ஒரு மோதலின்போது ஸ்பார்டகஸ் ரோம ராணுவக் கைதி ஒருவனை சிலுவையில் அறைந்து தண்டித்தார். உடனே ரோமில் பிரசார இயந்திரம் வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. அடிமைகளின் ‘குரூரமான, காட்டுமிராண்டித்தனமான’ செய்கைகள் குறித்து அவர்கள் அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள். அடிமைகளை இத்தனை காலம் அழுத்தி வைத்திருந்ததன் காரணம் இப்போது புரிகிறதா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள். பல நூறு அடிமைகளை அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதை வசதியாக அவர்கள் மறந்துபோனார்கள். நடைபெற்றது போர் என்பதையும் ஸ்பார்டகஸ் நிறைவேற்றியது போர்க்காலத் தண்டனை என்பதையும் அவர் தண்டித்தது ஒரு போர் வீரனைத்தான் என்பதையும் அவர்கள் மறைத்தார்கள்.

மிகத் திறமையாகவும் வஞ்சகத்துடனும் அவர்கள் செய்த இன்னொரு காரியம், ரோம ராணுவத்தின் வன்முறையையும் அதனை எதிர்த்தும் அதிலிருந்து மீண்டெழவும் ஸ்பார்டகஸ் செலுத்திய வன்முறையையும் ஒன்றாக்கிச் சமன்படுத்தியது. ஸ்பார்டகஸ் காலம் தொடங்கி இன்றுவரை தொடரும் பிரசாரப் போக்கு இது. ஆதிக்கசக்திகளின் அழுத்தத்தையும் அதற்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வினையையும் பலர் இன்றும் சமமாகவே பாவிக்கிறார்கள்; சமமாகவே மதிப்பிடுகிறார்கள். இந்த இரு போக்குகளையும் மறுதலிக்கிறேன் என்று சொல்லி ‘நடுநிலை’ வகிக்கவும் சிலரால் முடிகிறது.

இந்தப் பின்னணியில், அடிமைகளின் தலைவன் என்னும் பெயரோடு காட்டுமிராண்டி என்னும் பெயரும் இப்போது ஸ்பார்டகஸுக்குச் சேர்ந்திருந்தது. புரட்சியை முன்னெடுக்கும் யாவருக்கும் அவப்பெயரும் சேர்ந்தே வரும் என்பது வரலாற்று உண்மை அல்லவா?

ரோம் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றது. அடிமைகள், எஜமானர்கள். அல்லது, அடிமை முறையால் நலன் பெறும் ஆளும் வர்க்கம், ஸ்பார்டகஸின் கிளர்ச்சியால் தூண்டப்பட்ட அடிமை வர்க்கம். ஸ்பார்டகஸை வளரவிடுவது தம் வர்க்க நலன்களுக்கு எதிரானது என்று கருதிய செல்வந்தர்களில் ஒருவனான லிசினியஸ் கிராசஸ் முன்பைவிடத் தீவிரமாக ரோமப் படைகளைத் திரட்டிக்கொண்டான். பலமுறை ரோமப் படைகளை வீழ்த்திவிட்ட ஸ்பார்டகஸோடு நேருக்கு நேர் மோதுவதைவிட மறைமுகமாக பலவீனப்படுத்தலாம் என்று கருதிய கிராசஸ், மிகப் பலமான தடுப்புச் சுவர் ஒன்றை அமைத்தான்.ஒரு பக்கம் சுவர், இன்னொரு பக்கம் ராணுவம், மற்ற பக்கங்களில் கடல். ஸ்பார்டகஸை ஒரு சிறிய மூலையில் தனிமைப்படுத்தி வீழ்த்துவதே அவன் திட்டம். தொழில்நுட்பரீதியிலும் சரி, போர்முறையிலும் சரி, நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட வியூகம் இது. ஸ்பார்டகஸால் சுவரையும் உடைக்கமுடியாது. உணவு கிடைக்க மார்க்கமில்லை என்பதால் இருக்கும் இடத்தில் தங்கியிருக்கவும் முடியாது. ஒன்று, பசியால் சாகவேண்டும் அல்லது, திரண்டிருக்கும் ரோம ராணுவத்தின் முழு வலிமையையும் எதிர்கொண்டு சாகவேண்டும்.

ஸ்பார்டகஸ் கிராசஸின் நுட்பமான வியூகத்தை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டார். சுவருக்கு அருகில் பள்ளங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் சாய்க்கப்பட்டன. பள்ளங்களில் மரங்களை நிறுத்தி, வீரர்கள் மேலே ஏறத் தொடங்கினார்கள். மூன்றில் ஒரு பங்கு படையை ஸ்பார்டகஸ் இவ்வாறு கடத்திச்சென்றான் என்கிறார் புளூடார்க். கிராசஸ் நடுங்கிவிட்டான். அடுத்து ரோமுக்குள் நுழைந்து ஆட்சியையும் கைப்பற்றிவிடுவார்களா அடிமைகள்?

ஆனால், கிராசஸ் நம்பிக்கை இழக்கவில்லை. த்ரேஸில் இருந்தும் போம்பேயிடம் இருந்தும் கூடுதல் படைகள் வேண்டி முன்கூட்டியே கிராசஸ் விண்ணப்பித்திருந்தான். இறுதிப்போரில் வெல்லப்போவது தானே என்பது அவனுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது. அதே சமயம், அவனுக்குள் புதிதாக வேறொரு பயம் புகுந்திருந்தது. போம்பேயை (Pompey) அழைத்தது தவறோ? போர் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் உள்ளே புகுந்து ஸ்பார்டகஸை வீழ்த்தி ஒட்டுமொத்த புகழுயும் போம்பே அபகரித்துவிடுவானா? ஆலன் உட்ஸ் இந்த மனநிலையைத் துல்லியமாகப் படம்பிடித்து காட்டுகிறார். புகழ் சேர்க்க ஒரே சிறந்த வழி, போர். அது யாரை எதிர்த்து நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது என்பதெல்லாம் முக்கியமில்லை. வெற்றி மட்டுமே முக்கியம். கிராசஸ் மட்டுமல்ல இன்றுவரை தலைவர்கள் தங்கள் புகழை உயர்த்திக்கொள்ள போரையே நாடிச் செல்கிறார்கள்.

கிராசஸ் பயந்ததைப் போலவே அடிமைகளின் எழுச்சியை வீழ்த்திய பெருமையை கடைசி நேரத்தில் போம்பே தட்டிச்சென்றான். கிராசஸுக்குச் சாதாரண வரவேற்பும் போம்பேவுக்கு அரசு மரியாதையும் (போம்பே தி கிரேட் என்று அவன் அழைக்கப்பட்டான்) வழங்கப்பட்டன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீஸரின் மகளைத் திருமணம் செய்துகொண்ட போம்பே, ஒரு கட்டத்தில் ரோமக் குடியரசைக் கைப்பற்ற சீஸருடனும் போட்டியிடத் தொடங்கினான். இருவருக்குமான பகை ரோமில் சிவில் யுத்தத்தை ஏற்படுத்தியது. இறுதியில் தோல்வியுற்ற போம்பே எகிப்துக்குத் தப்பிச்சென்று, அங்கேயே கொல்லப்பட்டான். ஆளும் வர்க்கம் தனது வர்க்க எதிரிகளுக்கு எதிராக முதலில் போரிடுகிறது. பிறகு அதிகார வெறிõயல் உந்தப்பட்டு தனது வர்க்கத்தைச் சார்ந்தவர்களையே வீழ்த்தத் துடிக்கிறது. இந்த வழக்கமும் இன்றும் தொடர்வதுதான்.

ஸ்பார்டகஸ் தனது இறுதிக் கட்டப்போரில் மேலும் ஒரு பிளவைச் சந்தித்தார். அவனது படைப் பிரிவில் இருந்து மேலும் ஒரு குழு பிரிந்து சென்றது..அவர்களும் தோல்வியையே சந்தித்தனர். மரணத்துக்குப் பிறகு ஸ்பார்டகஸின் கூடாரத்தில் இருந்து மூவாயிரம் ரோம ராணுவக் கைதிகளை உயிருடன் மீட்ட ரோம ராணுவத்தால் நிச்சயம் வெட்கம் அடைந்திருக்கமுடியாது; ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் திகைத்திருக்கவேண்டும். காரணம், ரோம அதிகாரிகள் வழியெங்கும் தொடர்ச்சியாக அடிமைகளைக் கொன்றொழித்து வந்தனர். ஒருமுறை கபுவா, ரோம் வழித்தடத்தில் கிராசஸ் ஆறாயிரத்துக்கும் அதிகமான அடிமைகளைச் சிலுவையில் அறைந்து கொன்றான். அவர்களுடைய உடல்களைக்கூட அகற்ற உத்தரவிடாததால் அந்தத் தடத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வீரர்களின் உடல்களைத் தரிசித்தபடியேதான் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

spartacus-representative-of-proletariat-2போரில் இறுதியாக வென்றது ரோம்தான் என்றாலும் அடிமைகளின் எழுச்சி அவர்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. வரலாற்று உண்மைகள் உணர்த்தும் இந்தப் பாடங்கள் உலகப் பொதுவானவை. எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் சரி, தொடர்ச்சியாக ஒரு பிரிவினரை யாராலும் ஒடுக்கிவைத்திருக்கமுடியாது. அசைக்கமுடியாத பெரும்பலம் என்று இந்த உலகில் எதுவுமில்லை. திராணியற்ற உதிரிகள் ஒரு வர்க்கமாகத் திரளும்போது பெரும் சக்தியாக உருமாறுகிறார்கள். அடிமைகள் எப்போதும் அடிமைகளாக நீடிப்பதில்லை.

காலப்போக்கில் ரோம சாம்ராஜ்ஜியம் தனது பளபளப்பையும் செல்வாக்கையும் இழந்து உதிர்ந்துபோனது. பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அனைத்துக்கும் இதுவே நிலை என்பதை வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. அதே வரலாறு, ஸ்பார்டகஸைத் தோற்கடிக்கப்பட்டவனாக நமக்கு இன்று அடையாளம் காட்டவில்லை. ஒரு வர்க்கத்தை எழுச்சி கொள்ள வைத்த தலைவனாகவும் உத்வேகமூட்டும் ஒரு வலிமையான சக்தியாகவும் உயர்த்திக் காட்டுகிறது.

27 பிப்ரவரி 1861 அன்று கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட போம்பே புழுதியாக மாறியதையும் ஸ்பார்டகஸ் சக்தியுடன் உயர்ந்து நிற்பதையும் கோடிட்டுக் காட்டினார். ‘பண்டைய வரலாற்றிலேயே ஸ்பார்டகஸ்தான் ஒரே முக்கியக் கதாபாத்திரமான எழுந்து நிற்கிறார்… அவர் தலைசிறந்த ராணுவ ஜெனரல் மட்டுமல்ல, அவர் காலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியும்கூட.’

(அடுத்த பகுதி : இந்தியாவின் முதல் புரட்சியாளர்)

Share/Bookmark

பிரமிப்போடு நிறுத்திவிடாதே!

$
0
0

impஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 6

Determination, Passion இரண்டும் எனக்கு இயல்பாகவே உண்டு. இந்த இரண்டையும் ஒட்டித்தான் என்னுடைய வாழ்க்கைப் பயணமே. சுயபச்சாதாபத்துக்கு என்றைக்குமே நான் இடம் கொடுத்ததில்லை.

‘எது வரையிலும் நீங்கள் போராடுவீர்கள்?’ என்று யாராவது என்னை கேள்வி கேட்டால்… ‘வெற்றி கிடைக்கும் வரை… அல்லது உயிரோடு உள்ளவரை’ என்பதே என் பதிலாக இருக்கும்.

‘வாழும் வரை போராடு… வழி உண்டு என்றே பாடு’ என்பதுதான் இந்த விஷயத்தில் என் கொள்கை.

+1 மற்றும் +2 வகுப்பு இரண்டுமே நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் அதன் மூலம் எனக்கு ஆங்கிலத்தில் fluency என்று சொல்லப்படும் புலமை ஏற்படவில்லை. தட்டுத் தடுமாறி திக்கித் திணறித்தான் ஆங்கிலம் பேசிவந்தேன். ஆனால் அது ஆங்கிலத்தில் எனக்கு இருக்கும் பற்றை எள்ளளவும் குறைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

எங்கள் வகுப்பில் மொத்தம் 110 பேர். அங்கே டிசில்வா என்று ஒரு பேராசிரியர் இருந்தார். 110 பேருக்குமான வருகைப் பதிவேட்டை ஓர் ஒன்றரை நிமிஷத்துக்குள் டக் டக்கென்று எடுத்து விடுவார். அவரைப் பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்லலாம்.

அவரது ஆங்கிலம் பேசும் ஸ்டைல். அவர் மொழி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். அடுத்து அவருடைய தோற்றம். கை கடிகாரத்திலிருந்து, ஷூ வரைக்கும் எல்லாமே போட்டிருக்கும் உடைக்கு தகுந்தாற்போல் மேட்ச்சிங்காக இருக்கும்.

அவர் பாடம் நடத்தும்போது வகுபே பின்டிராப் சைலன்ஸ்ஸில் இருக்கும். பாடம் நடத்தும்போதும் நடத்தி முடித்த பின்னரும், கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்.

அவருடைய கேள்விகளுக்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்கும் நான்கைந்து ஸ்டூடண்ட்ஸ் மட்டும்தான் எப்போதும் பதில் கூறுவார்கள். மற்றவர்கள் அமைதியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் அது vocabulary சம்பந்தமாகத்தான் இருக்கும். எனக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியாது.

ஒரு பக்கம் ஆங்கிலத்தின்மீது தீராத தாகம். மறுபக்கம் இந்தப் புரியாமை நிலைமை. இந்த இரண்டுக்கும் இடையில்தான் எனது பெரும்பாலான இங்கிலீஷ் வகுப்புகள் கடந்தன. இதனால் டிசில்வா சாரின் வகுப்புகளில் என்னால் மன ரீதியாக மனமொன்றி பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மணிநேரமும் வீணாகக் கழிந்தது.

ஒவ்வொரு முறையும் அவர் கேட்கும் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லிவிடவேண்டும் என்று மனத்துக்குள் சபதம் செய்து தயாராவேன். ஆனால் இறுதியில் வாய் பேசா ஊமையாகவே இருந்து விடுவேன்.

இப்படியே சில காலம் உருண்டது. இரண்டு செமஸ்டர்கள் முடிந்து மூன்றாவது செமஸ்டர் தொடங்கியது.

இடைப்பட்ட காலங்களில் என்னுடைய ஆங்கில சொல் திறனை வளர்த்துக்கொண்டேன்.

ஒரு நாள் டிசில்வா சார், ‘தி பாரடைஸ் லாஸ்ட்’ என்கிற பாடம் நடத்தினார். அப்போது ஒரு கேள்வி கேட்டார்.

அதாவது Imp என்றால் என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் கேள்வி, கேட்டால் பொதுவாக ஐந்து அல்லது ஆறு நொடிகள்தான் காத்திருப்பார். சில விதி விலக்கான சமயங்களில் மட்டும், மாணவர்கள் சரியான பதில் சொல்கிறவரைக்கும் காத்திருப்பார். மாணவர்கள் எப்படியாவது அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பார்கள். இதனால அவருடைய ஒவ்வொரு கிளாஸுமே எல்லாருக்கும் சவாலாவே இருக்கும். குறிப்பா எனக்கு…

அதனால் ‘imp என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதுதான் தாமதம், நான் உடனே கை தூக்கி விட்டேன்.

அவர் உடனே என்னை பார்த்து, ‘எஸ்…’ என்றார். அவர் கேட்கும் விதமே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

நான் உடனே, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் imp என்றால் பேபி டெவில் என்று கூறினேன்.

அவர், ‘அப்சல்யூட்லி’ என்றார் உடனே.

அந்த நொடி நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நிகழ்வு சாதாரணமாகத் தெரியலாம். ஆனா, இது போன்ற அனுபவத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் உண்மையனா மதிப்பு புரியும்!

இது விஷயமாக நான் சொல்ல ஆசைப்படுவது ஒன்றுதான்.

அதாவது விடாமுயற்சி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிலும் ‘டிசில்வா சார் கேள்விக்கு இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடணும்’, ‘இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடனும்’ என்று ஒரு வெறியுடனேயே நான் காத்திருந்திருக்கிறேன். அவர் நூறு கேள்வி கேட்டிருப்பார் என்றால் அதில் பல கேள்விகளுக்கு நான் பதிலை யூகித்து சொல்ல முற்படுவதற்குள் வேறு யாராவது கையைத் தூக்கிவிடுவார்கள். ஆனாலும் என் முயற்சியை நான் விடவில்லை. என் தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மாணவர்கள் எல்லோரும் அதற்குப் பிறகு, ‘என்னய்யா… டிசில்வா கிளாஸ்லயே பேசிட்டியா நீ… பெரிய ஆளு தான்யா?’ என்று சொல்லி என்னை ஒரே குஷிப்படுத்திவிட்டார்கள். டிசில்வா சாரின் கிளாஸில் பதில் சொல்வது என்பது அந்த அளவுக்கு மிகப் பெரிய விஷயம். கௌரவம்.

இது போன்ற சாதனைகளில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை நாம் மறுக்கக்கூடாது. அதை அனுபவிக்கவேண்டும்.

மேற்கூறிய சம்பவத்துக்குப் பிறகு, டிசில்வா சார் வகுப்பில் என்னுடைய பங்கேற்பு  ஏதாவது ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தப்பாகக்கூட பதில் சொல்லியிருக்கிறேன். அவர், ‘நாட் எக்சாக்ட்லி தட்’ என்று சொல்லி அதைத் திருத்திச் சொல்வார்.

நான் முதன்முதலில் பதில் சொன்ன மேற்கூறிய அந்த imp சம்பவம் என்னைப் பொருத்தவரையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகவே மாறிப் போனது. அதாவது எனக்கும் டிசில்வா சாருக்கும் இடையே இருந்த ஒரு திரையை அது விலக்கிவிட்டது. அப்படித்தான் நான் நினைத்தேன்.

யாருடைய வகுப்பில் நாம் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல மாட்டோமா என்று ஏங்கினேனோ அவரை அவருடைய டிபார்ட்மென்ட் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து பாடம் தவிர்த்து பிற பொதுவான விஷயங்களும்கூட உரையாடும் அளவுக்கு வந்தேன்.

இதை எப்படிச் சொல்வதென்றால் அதாவது நாம் யாரைப் பார்த்து பிரமிக்கிறோமோ… ரசிக்கிறோமோ அந்த நடிகரையோ நடிகையையோ அருகில் பார்த்துப் பேசி, அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு அவர்களுடன் கூடவே ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோன்று இருந்தது மேற்கண்ட எனது அனுபவம்.

எப்படியாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லிவிட வேண்டுமென்று எனக்கு ஏற்பட்ட வைராக்கியம் கடைசியில் எங்கே கொண்டு போய் உயர்த்தியது என்று பார்த்தீர்களா! எனவே எப்போதுமே மிகப் பெரிய விஷயங்களைப் பார்த்து ‘நம்மால் முடியுமா?‘ என்கிற மலைப்போடு நிறுத்திவிடக்கூடாது. தொட்டுப்பாருங்கள்… வானமே ஒருநாள் வசப்படும்!

 

Share/Bookmark

சாதியை ஒழிக்கமுடியவில்லை!

$
0
0

gandhiபறையர்கள் / அத்தியாயம் 6

சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.

‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘மக்கள் ஆட்சி முறை’ (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு ‘கண்ணாயிரம்’ என்று பெயரிடுவது போல் நடந்து வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை. சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.’ (குத்தூசி குருசாமி கட்டுரைகள்).

போர்முனைக்குச் சென்று உயிரைவிடத் தயாராயிருக்கும் இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று போரிட மறுக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலும் கூட, சுய சாதியை விட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.

சாதியின் வடிவம் எப்போதும் சமத்துவ உணர்வுக்கு எதிரானது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிய உணர்வைக் காயப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் அது விடாது முயல்கிறது. சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும் மொழிப்பற்றையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மலிவான கட்சி அரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்துவிட்டதுதான் மிக மோசமான அவலம்.

‘என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி ‘தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார்.

‘இந்தியாவின் உயர்சாதி மக்களே உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.

‘சகல மனிதரும் சகோதரர், மனுஷ்ய வர்க்கம் ஆருயிர், இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி நான் வேறு சாதி; அவன் வேறு சாதி; எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. ஆவண சாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. இப்படியாக சாதி கூடவே கூடாது என்று கூப்பாடுப் போட்ட தேசிய, இலக்கிய, மதவாதிகளின் பேச்சை நாம் கேட்பதாகவே இல்லை.

அரசும் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் போராடித்தான் வருகிறது. 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது சமூகச் சீர்திருத்தத் துறை என்று தனித்துறையை உருவாக்கினார். கிறிஸ்துதாஸ் காந்தி தான் செயலாளர். அந்தத் துறையில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்தத் துறையை கலைத்தார். மறுபடியும் கடந்த முறை கருணாநிதி வந்ததும் அந்தத் துறையைக் கொண்டு வந்து கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்தார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மறுபடியும் இப்போது வந்த ஜெயலலிதா அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தற்போது சமூக சீர்திருத்தத் துறை திரும்பவும் செயல்படும் என்று சொல்லி ஓய்வு பெறப்போகும் கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்து உள்ளார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் ஒரே ஒருவருக்குக்கூட நன்மை ஏற்படவில்லை. மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சாதி ஒழிப்புக் கொள்கை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

0

Share/Bookmark

க்யூபா காட்டும் வழி

$
0
0

aaaaaஏழைகளின்  நிலையைப் போக்க எடுத்துக்கொண்ட பொருளாதார முயற்சிகளில் ஒரு நாடு எவ்வாறு ஒரு முற்போக்கான பாதையில் செல்லும் என்பதை க்யூபா நிரூபித்து வருகிறது. வறியவர்களுக்கான ஒரு பொருளாதார அறிக்கை எவ்வாறு நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே மாற்றும் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகில் நிலவிய பனிப்போர் முடிந்த நேரம், பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதிய சோஷ‌லிச பொருளாதாரக் கொள்கையைக் காட்டிலும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே வெற்றிக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த சுய தம்பட்ட முதலாளித்துவ மேலாண்மை உயர்வு மறைந்துவிட்டது.  அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.  ஐரோப்பிய நாடுகளோ தங்களது யூரோ கூட்டணி நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் தவித்துவருகின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போன்ற பெரும் எழுச்சிகள் அனுதினமும் குலுக்கிக் கொண்டிருப்பதும், ஐரோப்பா முழுவதும் எழுச்சிகள் நடைபெறுவதும்  முதலாளித்துவ பொருளாதாரத் திட்டம் குறித்த உண்மையை வெகுவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் நிலவும் குழப்பம், ஒரு புதிய சோஷ‌லிச பொருளாதார முறையை நோக்கி உலகை நகர்த்தி கொண்டிருக்கிறது.

இந்த வெளித் தெரியாத மாற்றத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் க்யூபா, அமெரிக்காவின் அனைத்து வகை எதிர்ப்புகளையும் ஏற்று அதற்கு எதிர் தாக்குதல் தொடுத்து, தற்போது உலகின் பல முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் பல்வேறு வகையில் பொருளாதார முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா பல்வேறு வகையில் க்யூபாவுக்கு செல்லக்கூடிய பல நாடுகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வர்த்தகப் போக்குவரத்தை தடுத்து வருவதுடன், ஜப்பானிலிருந்து மருத்துவ உபகரணங்கள், இத்தாலியிலிருந்து ரசாயனப் பொருட்கள், பிரான்சிலிருந்து எக்ஸ்ரே கருவிகள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட அனைத்துக்கும் தடைகளை உண்டாக்கி வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்த தடங்கலை எல்லாம் மீறி க்யூபா தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒரு கூட்டு முயற்சியை உண்டாக்கி தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுத்திட்ட முயற்சியின் பலனாக க்யூபாவின் திட்ட மதிப்பீடு 5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.  இது தற்போது வளர்ந்து, 60 வெவ்வெறு நாடுகளிலுள்ள 40 துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 240 திட்டங்களாக பெருகியுள்ளது.

இதை க்யூபா தன் சுய முயற்சியில் சோஷ‌லிச வழிமுறைகளில் சாதித்துள்ளது.  அதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9.6% தொட்டுள்ளது.

இன்னும் அதிகம் சொல்லலாம்.  ஆரம்பக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் பெறும்வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை க்யூபா உத்திரவாதம் செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ-வின் fact book படி க்யூபாவின் அண்டை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக படிப்பறிவு 99% உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.

அது போல மருத்துவ வசதியை உறுதி செய்துள்ளது.  க்யூபா போன்ற வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் உள்ளது போல், மருத்துவத் துறையில் உள்ள அசுத்தமும், கவனிப்பாரற்ற தன்மையும், ஊழலும் க்யூபாவில் இல்லவே இல்லை.

ஆச்சரியப்படும் வகையில், க்யூபா தனது நாட்டின் ஆண்டு நிதி நிலையில் 45 சதவீதத்தை மருத்துவத்திற்கும், கல்விக்கும் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.  ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக ஆரோக்கிய நிறுவனத்தின் (WHO) குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 4.7 என்ற விகிதத்தில் குறைந்திருப்பதாக பதிவு செய்துள்ளது.  மேற்கத்திய நாடுகளில் பல நாட்டின் நிலைமையைக் காட்டிலும் சிறந்திருப்பதை உறுதி செய்கிறது.

இன்று முதலாளித்துவ நாடுகள் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது. க்யூபா தனது சோஷ‌லிசப் பாதையில், நாட்டின் அனைத்து மக்களையும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, நோயிலிருந்து காத்திருப்பது அசாதாரண சாதனையாகும்.

சோஷ‌லிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை முற்றாக பேணுவதுடன், தனது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமிடுதலை அந்த நாட்டின் தொழிலாளர்களுடனும், உழைப்பாளர்களுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் முற்றாக கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கிறது க்யூபா.  அதுதான் உண்மையான சோஷ‌லிசப் பாதையின் உள்ளடக்கம்.  அத்தோடில்லாமல் நேட்டோ அமைப்பிலுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளையும், தனது சோஷ‌லிச வழிமுறைகளை மாதிரியாக கொண்டு திட்டமிடும் அளவுக்கு ஊக்குவித்து வருகிறது.

பெர்கலேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “அமெரிக்காக்கள் பற்றிய ஆய்வு” மையத்தின் இயக்குனர் திரு ரோஜர் பர்பேக் எழுதிய ஒரு கட்டுரையில், க்யூபா தனது சோஷ‌லிசத் திட்டங்களின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

க்யூபா போல் உலகின் எந்த நாடும் தனது பொருளாதாரத் திட்டங்களை தனது நாட்டு தொழிலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பனான மனிதாபிமானமற்ற முதலாளித்துவக் கணக்கீடுகளை சார்ந்திராமல், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனையே பேணி வருகிறது க்யூபா.

அமெரிக்க வழியில் லாபம் மற்றும் வணிகத்தில் புரளும் தொகைகளை வைத்து நாட்டு மக்களின் வாழும் நிலையை குறிப்பதென்பது ஒரு அப்பட்டமான மோசடியாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தப் புள்ளி விவரங்கள் உண்மையில் அந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை.

முந்தைய சோவியத் ரஷ்ய கூட்டணித் திட்டங்கள் சரியானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் சோஷ‌லிசத்தின் மதிப்பு, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் மூழ்கிவிடவில்லை.  மாறாக, சரியான திட்டமிடுதலால்,  சோஷ‌லிச கொள்கை இன்னும் வீறுகொண்டதாக எழும்.

மந்திர ஒலியால் கட்டுண்டு குழல் வாசிப்பவன் பின்னால் செல்லும் எலிகளைப் போல, பல்வேறு நாடுகளை தனது  சோஷ‌லிச கொள்கை திட்டங்கள் மீது ஈர்க்க க்யூபாவால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அரிந்தம் செளத்ரி, டெக்கான கிரானிக்கல், தி சண்டே இந்தியன்

தமிழில் – சித்ரகுப்தன்

Share/Bookmark

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்…’

$
0
0

பேசு மனமே பேசு / அத்தியாயம் 6

talkநாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் தள்ளிப் போனால் அல்லது செய்ய முடியாமல் போனால், அதைப் பற்றி பிறரிடம் கூறும்போது என்ன சொல்கிறோம்? ‘அவசியம் செய்யணும், அல்லது செய்திருக்கணும்’. ‘விடமாட்டேன் கண்டிப்பா செய்வேன்’. ஆனாலும் விஷயங்கள் நடக்காமல் போகின்றன. செய்ய முடியாமல் பாதியில் நிற்கின்றன. உதாரணமாக உடற்பயிற்சி, நெடுநாள் கடன் தீர்ப்பது, உறவினர்/நண்பரைப் பார்ப்பது போன்றவையும் இன்னும் பல சிறிய மற்றும் பெரிய விஷயங்கள் இந்தப் பட்டியலில் சேரும்.

இவை போன்ற காரியங்களைச் செய்ய நமக்கு விருப்பம் இருக்கிறது என்பது மட்டுமின்றி தேவையும் இருக்கின்றது. நமக்குள் பலமுறை நினைவுபடுத்தியும் கொள்கிறோம். ஆனாலும் செய்ய முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

எதைச் செய்வதற்கும் முன்னால் அதைப்பற்றி எண்ணுகிறோம். அதாவது உள்ளூக்குள் பேசிக் கொள்கிறோம். நாம் இதை அதிவேகமாகச் செய்கிறோம். ஒரு விஷயத்தை எண்ணிக்கொண்டு இருக்கும்போதே மற்ற பல விஷயங்களும் மனத்தில் எழ அனுமதிக்கிறோம். குறைந்த பட்சம் அதைத் தடுக்கக்கூட முனைவதில்லை. இதனால் செய்யவேண்டிய விஷயத்தைக் குறித்து சரியான உரையாடல் நிகழ்த்த வேண்டியது மிக அவசியம். அதாவது காரண, காரியங்களோடு அர்த்தம் மனத்துக்கு செல்கிறார்போல வாக்கியங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நாளையிலிருந்து நான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’, ‘கண்டிப்பாக, அவரைப் பார்த்தேயாக வேண்டும்’ … ‘இந்த விஷயத்தை முன்னாலேயே செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யாமல் விட்டுவிட்டேன்.’

இவையெல்லாம், மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியான, முழுமையான வாக்கியங்கள் போலவே இருக்கின்றன. ஆனாலும் இவற்றால் வேலை நடந்ததா? நாம் மாறியிருக்கிறோமா? மாற்றங்கள் ஏற்பட்டதா என்று கேட்டால், பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்ன?

நமக்குள் பல்வேறு விஷயங்கள் குறித்து எண்ணும்போது, அதாவது உள் உரையாடல்களின் போது, பிரச்னையை, செய்யவேண்டியதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறோம். குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாம் என்ன செய்வதாக இருக்கிறோம் என்பவற்றை மட்டுமே சொல்கிறோம்.

‘நாளையிலிருந்து சீக்கிரமாக அலுவலகம் செல்ல வேண்டும்’ என்று ஒருவர் நினைத்தால், இதில் பிரச்னைக்கான காரணம், தீர்வு என்று எதுவுமே இல்லாத ஒரு எண்ணம் என்று கூறலாம். இதை எப்படி நினைக்க வேண்டும்?

‘நாளையிலிருந்து அலுவலகத்துக்கு சீக்கிரமாகப் போக வேண்டும். அதற்கு காலையில் சீக்கிரமாக எழ வேண்டும். செய்தித்தாளுக்கான நேரத்தைக் குறைத்து, நேரத்தை சமன் செய்யவேண்டும். இதைத்தான் தினமும் செய்வேன்’ என்று சொல்லிக்கொள்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர, வேறு எந்தவிதமான வாக்கியமும் எதிர்பார்த்த பலனைத் தராது.

இதே உதாரணம், அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். சுருக்கமாகக் கூறினால், பிரச்னைகளை, அதற்கான காரணம் மற்றும் தீர்வுடன் முழுமையாக எண்ணிப் பாருங்கள். உங்களுக்குள் பேசினாலும் சரி, அதையே வெளியே மற்றவர்களிடம் சொன்னாலும் – இதே முறையை கடைப்பிடியுங்கள்.

நாம் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் பேசும்போது அதாவது எண்ணும்போது, அதை யார் அல்லது எது கேட்கிறது? நமது ஆழ்மனது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவும் செய்துகொள்கிறது. இந்தப் பதிவு செய்யப்பட்ட விஷயம்தான் நம்மை இயக்குகிறது. பதிவு செய்யப்படும் விஷயம் முழுமையானதாக இருந்தால், நமது ஆழ்மனதின் செயல்பாடும் முழுமையாக இருக்கும்.

இது கணிணியின் யுகம். நாம் எல்லாவற்றிற்கும் கணிணியை நாடுகிறோம். அதில் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதைப் பற்றிய கேள்வி கூட முழுமையாக இருந்தால்தான், முழுமையான பதிலும் கிடைக்கும். அதே போலத்தான் நமது ஆழ்மனதும். நமக்கு எதைப் பற்றியாவது முடிவெடுக்க வேண்டும் என்றால், அல்லது எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்குத் தேவையான விவரங்களை, முதலில் ஆழ்மனதுக்கு முழுமையாக அனுப்ப வேண்டும். அதற்கு முன்னால் இந்த முழுமையான நிலையைப்பற்றி மனத்தில் பேசி ஆய்வு செய்ய வேண்டும். அதாவது யோசனை செய்ய வேண்டும். பாதிச் செய்திகள், முழுமையில்லாத யோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், குறைகள் ஆகியனவற்றை ஆழ்மனதுக்கு அனுப்பினால் எந்தப் பயனும் இருக்காது.

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … ‘எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்’ …‘அந்த வேளையில், அல்லது சமயத்தில் சரியான யோசனை தோன்றியிருந்தால்’ … என்று ஆரம்பித்து பல விஷயங்களை, இதே பாணியில் நினைத்திருப்போம். இதுபோல அரைகுறையான விஷயங்களை உள்ளே செலுத்தினால், மாற்றங்கள் வராது. மாறாக ஏமாற்றங்களும், ஏக்கங்களும்தான் பலனாக வரும். ஏனென்றால், வாக்கியங்கள், பேச்சுக்கள் முழுமையாக இல்லாது போகும்போது, அவை ஆழ்மனதுக்குள் அதே நிலையில்தான் பதிவாகும்.

வெற்று அறையில் பேசும்போது, அவை எதிரொலியாக, அதே சமயம் குழப்படியான சத்தத்துடன்தான் திரும்ப வரும். அதுபோலவே முழுமையான அர்த்தம் தராத வார்த்தைகளும், ஆழ்மனத்தில் போய், திரும்ப வரும்போது, கூடவே வெறுமையைக் கொண்டுவரும். இவற்றை ஏக்கங்கள் என்றும், ஆதங்கம் என்றும் கூறலாம். இதைச் சரிசெய்ய மனத்துக்குள் சரியான உரையாடல் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … என்ற வாக்கியம் முற்றுப் பெறாத வாக்கியம். இதை சரி செய்வது எப்படி?

‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்… நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இல்லையே… அதனால் பணம் சம்பாதிக்கக்கூடிய முயற்சிகளைத் தொடங்கி அதைத் தொடர்ந்து செல்வேன்…’ என்று நினைக்க ஆரம்பித்தால்…. அடுத்த கட்டமான எப்படிப் பணம் சம்பாதிப்பது என்ற நிலைக்குச் செல்ல முடியும்.

அதே போல, ‘எனக்கு மட்டும் அந்த யோசனை, அந்த சமயத்தில் தோன்றியிருந்தால்… சரியான விதத்தில் பிரச்னையை, சூழ்நிலையை அணுகியிருக்கலாம். அதனால் நான் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தோன்றவில்லை. அதனால் அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இனி அதுபோன்ற சூழ்நிலை உருவாக விடமாட்டேன். அதனாலேயே, அடுத்த நிலை குறித்து யோசிக்கவும், செயல்படுத்தவும் போகிறேன்’ என்று மனத்தினுள் செலுத்தினால் அதனால் நன்மை விளையும்.

இதனால் பல லாபங்கள் உள்ளன. இறந்த காலத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும். மனத்தில் அதனால் ஏற்பட்டு இருக்கும் தேக்கநிலை, இறுக்கம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நீர்த்துப் போகும். இவை அனைத்துக்கும் மேலாக நிகழ்காலத்தின் முக்கியத்துவம் விளங்கும். இதற்கெல்லாம் அடிப்படைத் தேவை சரியான உரையாடல். இந்த உள் உரையாடல் சரியானதாக இருப்பதுபோல முழுமையாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் அதில் கடந்த காலத்தின் காயங்கள், வடுக்கள் மீதுள்ள தேவையற்ற ஆத்திரம், வருத்தம் மற்றும் வெறுப்பு போன்றவை உள்ளதா என்பதை அடையாளம் காண முடியும். இவற்றோடு நிகழும், நிகழ்கால திட்ட உரையாடல்களால் பாதிப்புகள் உண்டாகும் என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது?

0

Share/Bookmark


விசாரணை கமிஷன் / பகுதி 1

$
0
0

pic2ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5 

காட்சி எண் 1

இடம்: மலை அருவி

நேரம்: அதிகாலை

ஏராளமான மக்கள் சுற்றி நிற்கிறார்கள். அருவிக்கு அருகில் இருக்கும் பாறையில் கை கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறான் காவலன். சுற்றிலும் மரக் கிளைகளில் கழுகுகள் கூடியிருக்கின்றன. காவலனின் தலைப் பகுதி மட்டும் இல்லாத நிலையில் டாக்டரும் ஊர் பெரியவர்களும் அருவியை நெருங்கிப் பார்க்கிறார்கள். சிறு பாறை இடுக்குகள் தேங்கிக் கிடக்கும் நீரில் தலை மட்டும் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் வாயில் வெட்டப்பட்ட ஆண் குறி திணிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தது காவலன் என்பது உறுதியாகத் தெரிந்ததும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்கின்றனர். பெண்கள் குலவையிட்டு ஆடிப் பாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடைய தலைவர் அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறார். யாருக்குத் தெரியப் போகிறது என்ற தைரியத்தில் அவரையும் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது கூட்டம். ஆனால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டனர். உயிரோடு இருந்த இன்னொரு காவலனை மறந்துவிட்டனர். அவனிடம் கேமரா ஒன்று இருந்ததை மறந்துவிட்டனர். நடப்பவற்றையெல்லாம் மறைந்திருந்து அவன் புகைப்படம் எடுத்ததையும் அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களால் என்றுமே சரி செய்ய முடியாத பிழையாக அது ஆகிப்போகிறது. அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டியிருந்த விலை அவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடிந்திராத ஒன்று. அது ஆரம்பமாகிவிட்டது.

காட்சி எண் 2

இடம்: காவல் நிலையம்

நேரம்: காலை 10.00 மணி

கமிஷனரின் முன்னால் கொலை செய்யப்பட்ட காவலனின் புகைப்படங்கள் வரிசையாக பரப்பப்பட்டுள்ளன. வெறியுடன் அதையே உற்றுப் பார்க்கும் கமிஷனர் தலையை உயர்த்துகிறார். வரிசையாக காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கமிஷனர் :  மலைல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?

ஒரு அதிகாரி :  100 குடும்பங்களுக்கு மேல இருப்பாங்க சார். மொத்தம் 600 பேர்கிட்ட இருப்பாங்க.

கமிஷனர் : நீங்க மொத்தம் எத்தனை பேர்?

அதிகாரி : 150 பேர் சார்.

கமிஷனர் : அப்படின்னா ஒருத்தருக்கு 4 பேர்… கணக்கு சரிதான். (போட்டோக்களையே வெறித்துப் பர்க்கிறார் கமிஷனர். போட்டோக்களைச் சுட்டிக்காட்டி) இது எனக்கு நடந்ததா நினைக்கிறேன். என்னை இப்படிப் பண்ணினதா நினைக்கிறேன். உங்களுக்கு 24 மணி நேரம் டயம் தர்றேன். அந்த 24 மணி நேரத்துக்குள்ள நீங்க என்ன செஞ்சாலும் உங்கள யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.. போங்க. நான் இங்க காத்துக்கிட்டிருப்பேன். போங்க…

காவலர்கள் சிறிது தயங்குகிறார்கள்.

கமிஷனர் : தைரியமா போங்க. மலைக்கிராமத்துல இருந்தவங்க சாலை கேட்டு அமைதியா போராடிக்கிட்டிருந்தவரை அவங்க பக்கம் நியாயம் இருந்தது. நாம எதுவும் செய்ய முடியலை. இப்ப நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல்வாதிகிட்ட கூட மோதலாம். ஆனா,  போலீஸ்காரன் கிட்ட மோதக்கூடாதுங்கறதை அவங்களுக்குப் புரியவைச்சாகணும். போலீஸ்காரன்னா தொப்பி வெச்சுக்கிட்டு தொந்தியைத் தள்ளிக்கிட்டு நிக்கறவன்னு நினைச்சிட்டானுங்க போல இருக்கு.

(சட்டென்று ரிவால்வரை உருவி குறி மேடையை நோக்கிச் சுடுகிறார்.) இதுவரை வெற்றுப் பலகையைச் சுட்டுப் பயிற்சி பெற்றிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு லைவ் மூவிங் டார்கெட்கள் தரப்படுகிறது. குறி பார்த்துச் சுடுபவர்களுக்குப் பரிசுகள் நிச்சயம்.

(புகைப்படங்களை மீண்டும் தொட்டுக் காட்டி)

இந்த அடி என் மார்பில் பட்டிருக்கிறது.

இந்த ரத்தம் என் ரத்தம்.

இந்த ஆண்குறி என் வாயில் திணிக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு 24 மணி நேரம் தரப்படுகிறது.

தயங்கி நிற்காதீர்கள்.

திரும்பிப் பார்க்காதீர்கள்.

நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுங்கள்.

துப்பாக்கிகள், லத்திகள், கேடயங்கள், ஹெல்மெட்டுகள் எடுத்துக்கொண்டு திமுதிமுவென காவலர்கள் மலைப் பகுதியை நோக்கி வெறியுடன் புறப்படுகிறார்கள்.

 காட்சி எண் 3

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: காலை 9.00 மணி

மலைப் பகுதியில் மேகங்கள் பனிபோல் படர்ந்திருக்கின்றன. அதனூடே காவலர்கள் மெல்ல அணிவகுத்து வருகின்றனர். கிளைப்பாதைகளில் பிரிந்து சென்று அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைக்கின்றனர். மக்கள் இந்தப் பயங்கரம் எதுவும் தெரியாமல் தங்கள் நிலங்களில் வேலைகளில் ஈடுபட்டபடி இருக்கின்றனர். திடீரென்று, ‘அட்டாக்’ என்று ஒரு குரல் காற்றைக் கிழித்தபடி மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கிறது. வானை நோக்கி துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் பயத்தில் பறந்து செல்கின்றன. வீடுகளுக்குள் இருப்பவர்கள் வெளியில் வருகிறார்கள். சுற்றி வளைத்து அவர்களைக் காவலர்கள் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களது வீடுகளை இடிக்கிறார்கள். சிதறி ஓடுபவர்கள் ஒரு வாழைத் தோட்டத்தில் கூடுகிறார்கள். காவலர் நான்கு பக்கத்திலிருந்து வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். கண் மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு விட நடுவில் மக்கள் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோட சேர்ந்து காவலர்கள் அவர்களையும் வெட்டுகிறார்கள். ரத்தம் வழிய எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள். வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு ஓடுகிறார்கள். ஒரு பெண் மூளை வளர்ச்சி குன்றிய தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டு காட்டுச் செடிகளை விலக்கியபடியே ஓடுகிறாள். அவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்படுகிறது. இரும்பைத் தேடி ஓடுகிறாள். எதிரில் ரத்தம் கசியும் அருவாளுடன் ஒரு காவலன் வருகிறான். தன் மகனின் நிலையைச் சொல்லிக் காப்பாற்றும்படிக் கெஞ்சுகிறாள். பின்னாலேயே வரும் வேறு சில காவலர்களும் சேர்ந்து கொண்டு அவளைக் கேலி செய்கிறார்கள்.

“நான் உனக்குக் கத்தியைத் தருவேன்… நீ என்ன என்ன தருவே…?” என்றபடியே காவலர்கள் அவளைச் சுற்றி வளைக்கிறார்கள்.

“என் புள்ளயக் காப்பாத்துங்கய்யா… என்ன என்ன வேணா செஞ்சுக்கோங்கய்யா” என்று கதறுகிறாள்.

“உன் புள்ள முன்னாலேயே உன்ன என்ன வேணா செய்யலாமா? அது ரொம்பத் தப்பு. இப்படி ஓரமா நீயே வா பாப்போம்” என்று அவளைத் தள்ளிக் கொண்டு போகிறான் ஒரு காவலன்.

காவலன் :  எங்க உன் பொடவையை நீயா அவுத்துப் போடு பாப்போம்…

பெண்  :   ஐயா முதல்ல எம் புள்ளயக் காப்பாதுங்கய்யா.

காவலன் :   டாக்டரக் கூப்பிடுடி… வருவான். அவன் பின்னால போனீங்களேடீ… வரச் சொல்லு அவன. கொடி பிடிச்சுக்கிட்டுப் போறயாக்கும்… உனக்கெல்லாம் வீட்டோட அடைஞ்சு கெடக்க முடியலை இல்லை.

பெண்  :  ஐயா தெரியாம செஞ்சுப்புட்டோமய்யா… என் புள்ள செத்துக்கிட்டிருக்கான்யா… முதல்ல அவனக் காப்பாத்துங்கய்யா… உங்களுக்குப் புண்ணியமாப் போகும்….

காவலன் :   நான் நிறைய புண்ணியம் செஞ்சவன்டி… இனிமே பாவம்தான் பண்ணணும்… ஒவ்வொண்ணா நீயா அவுத்துப் போடறியா… இல்லை நான் அவுக்கட்டுமா…

திமிறியபடி ஓட முற்படுபவளைக் கீழே தள்ளி விட்டு, அவள் மீது மூர்க்கமாகப் பாய்கிறான். “என் புள்ள என் புள்ள” என்றபடியே கதறுகிறாள் அந்தப் பெண்.

காவலன் :  அதுக்குத்தானடி நானும் சோலி பாக்கறேன். கத்தாத…

காவலன் எழுந்து சென்றதும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டு தன் மகனை நோக்கி ஓடுகிறாள். மகனின் கையில் கத்தியைத் தருகிறாள். ஆனால், அவனோ சிறிது நேரத்தில் அம்மாவின் மடியில் தலை வைத்தபடியே இறந்து போகிறான். தன் மகனைக் கட்டி அணைத்தபடி கதறி அழும் அவளைக் காவலர்கள் சூழ்கிறார்கள்.

 காட்சி : 4

இடம் : மலைக்கிராமம்

நேரம் : காலை

ரத்தம் வழிய பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் ஓடி ஒளிபவர்களை சிந்திய ரத்தத் துளிகளை வைத்து தடம் கண்டுபிடித்து வெளியில் இழுத்துவந்து அடிக்கிறார்கள். பக்கத்தில் இருந்த வாழைத்தோப்புக்குள் போராட்டக்காரர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். காவலர்கள் நான்கு பக்கத்தில் இருந்தும் வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் வெட்டி வீழ்த்தப்பட மக்கள் நடுவில் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோடு சேர்த்து மக்களையும் வெட்ட ஆரம்பிக்கிறார்கள் காவலர்கள்.

அருகில் இருந்த கோவில் கருவறைக்குள் சிலர் ஒளிந்து கொள்கிறார்கள். ஷூ அணிந்திருப்பதால் உள்ளே நுழையாமல் கோவிலைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர் காவலர்கள். கர்ப்பக்கிரக இருளில் சிலர்  பயந்து ஒடுங்கிக் கொள்கின்றனர். கருவறை ஜன்னல் வீசும் காற்றில் மெல்ல மெல்லத் திறந்து மூடுகிறது. ஒரு காவலன் கசியும் சிறு வெளிச்சத்தினூடாக உள்ளே எட்டிப் பார்கிறான். ஜன்னல் கதவை முழுவதுமாகத் திறக்கிறான். உள்ளே நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறான். நாலைந்து காவலர்களை அழைத்து காண்பிக்கிறான். உள்ளே இருப்பவர்கள் பயந்து அலறி அடித்து வெளியே ஓடுவதற்குள் காவலர்கள் வாசலை மறித்தபடி சூழ்ந்துவிடுகிறார்கள். கோவிலின் கதவை மெதுவாக மூடுகிறார்கள். முற்றாகக் கவிழ்ந்த இருளில் மயான அமைதி நிலவுகிறது. பூட்ஸ் கால் சத்தம் மட்டுமே கேட்க காவலர்கள் உள்ளே நுழைகின்றனர். கருவறையில் சிலையின் பின்னால் போராட்டக்காரர்கள் பயந்து ஒடுங்கிக்கொள்கிறார்கள். காவலர்கள் கருவறைக்குள்ளும் நுழைகிறார்கள். ஜன்னல் கதவைச் சாத்துகிறார்கள். அகல் விளக்கு ஒன்றை ஏற்றுகிறார்கள். அந்த வெளிச்சத்தில் பயந்து ஒடுங்கி இருப்பவர்களின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. கேமரா மெதுவாக வெளியே நகர்கிறது. அபிஷேக தீர்த்தம் வரும் மடை வழியாக ரத்தம் சொட்டுச் சொட்டாக வழியத் தொடங்குகிறது.

காட்சி எண் : 5

இடம் : மலை அருவி

நேரம் : காலை

சிறுமி ஒருத்தியைத் தோளில் சுமந்தபடி அருவிக்குப் பக்கத்தில் இருக்கும் பாறைக்குள் மார்பளவு நீரில் மறைந்து நின்று கொண்டிருக்கிறான் ஒருவன். பாறையில் பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தம் கேட்கிறது. குழந்தையின் அழுகைகுரல் கேட்டுவிடக்கூடாதே என்று பயந்து சிறுமியின் வாயை இறுக மூடுகிறான். பதட்டத்தில் மூக்கையும் சேர்த்துப் பொத்திவிடவே சிறுமிக்கு மூச்சு முட்டுகிறது. தந்தையின் கைகளில் இருந்து திமிறி நீரில் விழுகிறாள். பிடிமானாமாகப் பற்றிக்கொள்ளும் பாறைகள் வழுக்கிவிடவே நீரில் அடித்துச் செல்லப்படுகிறாள். மகளைக் காப்பற்ற தந்தையும் பின்னாலேயே பாய்ந்து செல்கிறார். அவரைப் பார்த்துவிடும் காவலர்கள் நீண்ட லத்தியால் அவரது தலையில் அடிக்கிறார்கள். மண்டை உடைந்து ரத்தம் வழிய நீரிலேயே மயங்கி விழுகிறார். கீழே ஒரு மூலையில் மரத்தின் வேர் ஒன்றைப் பற்றியபடி மறைந்து கொண்டிருக்கும் சிறுமியின் முன்னால் ரத்தம் கலந்த நீர் வழிந்தோடுகிறது. தலையில் அடிபட்டு மயங்கிய தந்தையின் உடல் அவளுக்கு முன்பாக வந்து பாறையில் சிக்கி நிற்கிறது. சிறுமி பயத்தில் ஒடுங்கிக் கொள்கிறாள். ஓடும் நீர் தந்தையின் கையை மெல்ல மெல்லத் திருப்பிப் போடுகிறது. இறுதியில் கை விறைத்துப் போகிறது. சிறுமி தந்தையின் உடலின் மீது மயங்கிச் சரிகிறாள்.

காட்சி எண் : 6

இடம் : மலை கிராமம்

நேரம் : காலை

pic1வாழைத்தோட்டங்கள் வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. ரத்தக் கறை மரங்களிலும் தரையிலும் சிதறிக் கிடக்கின்றன. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வீதியில் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. சில வீடுகள் தீ வைக்கப்பட்டு எரிந்து கிடக்கின்றன. கால் ஊனமுற்ற பாட்டி ஒருத்தி இடிபாடுகளினூடே நடந்து போகிறாள். அவளது தாங்கு கட்டையின் சப்தம் மட்டுமே அந்த வனாந்திரத்தில் கேட்கிறது. தள்ளாடித் தள்ளாடி ஒரு வீட்டுக்குள் போகிறாள். கட்டில்கள் பீரோக்கள் உடைத்துப் போடப்பட்டிருக்கின்றன. வீட்டில் இருந்த படங்கள் அடித்து உடைக்கப்பட்டிருக்கின்றன. படங்களில் அம்பேத்கர் படம் வெகு மோசமாகத்  தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதை கையில் எடுக்கிறாள் பாட்டி. போட்டோவில் இருந்து ஏதோ ஒரு திரவம் கீழே சொட்டுகிறது. லேசாக முகர்ந்து பார்க்கும் பாட்டி அதன் வாடை தாங்காமல் கீழே  போடுகிறாள். அவளுக்கு அழுகை பொங்கி வருகிறது. அடக்கிக் கொள்கிறாள். கண்களில் இருந்து கண்­ணீர் வழிகிறது. மெல்ல வீட்டை சுத்தம் செய்கிறாள். அடுப்பை சோதித்துப் பார்க்கிறாள். அது அதிக சேதம் இன்றி இருக்கிறது. பத்த வைக்கிறாள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு அரிசி எடுக்க பானைக்குள் கையை நுழைக்கிறாள். கையை மெதுவாக வெளியே எடுகையில் ரத்தம் கசிய அவளது இரண்டு கரங்கள் அவளது கழுத்தை நெரிக்க வருவது போல் வெளியே வருகிறது. பயந்து அலறியபடியே கிழே விழுகிறாள். கைதட்டி பானை கீழே விழுகிறது. உடைந்து போன பானைக்குள் கண்ணாடித் துண்டுகள் போடப்பட்டிருப்பது தெரிகிறது. ரத்தம் தோய்ந்த கரங்கள் அவள் கழுத்தை நெறிக்க வருவதுபோல் மனப் பிரமையில் சித்தம் கலங்கி கதறியபடியே ஓடுகிறாள்.

 காட்சி எண் : 7

இடம்: மலைப்பகுதி மருத்துவமனை

நேரம்: மதியம்

மலையின் ஒவ்வொரு கிளைப் பாதையின் வழியாகவும் பெண்களைத் தரதரவென்று இழுத்தபடி காவலர்கள் மருத்துவமனை முன் கூடுகின்றனர். பிடித்து வரப்பட்ட பெண்களை கூட்டமாக உட்கார வைக்கின்றனர். சுற்றி சுற்றி வந்து காவலர்கள் அவர்களை அடித்தும் மிதித்தும் திட்டியும் அவமானப்படுத்துகின்றனர்.

காவலர்கள்     :        அப்படி என்னத்தடி டாக்டர் கிட்ட கண்டுட்டீங்க. சிவப்பா இருக்கானேன்னு அவன் கூடப் படுக்கவாடி போறீங்க. உங்களுக்கெல்லாம் உங்க புருஷன் சோலி பாக்கறது பத்தலையாடீ… எங்க கிட்ட சொன்னாப் போதுமே… டே ஷிப்ட், நைட் ஷிப்ட் போட்டு நாங்க வந்து சோலி பாப்போமேடி…

இந்தக் கையாலே தானடி கொடி பிச்ச

இந்த வாய் தானடி கோஷம் போட்டுச்சுது

இந்த மார்ல தானடி கொடியைக் குத்தின..

ஒரு போலீஸ்காரனக் கொன்னு போடற அளவுக்கு உங்களுக்கு கொழுப்பு  கூடிப் போச்சாடி…

என்ன ஆட்டம் போட்டீங்கடி.. வக்காலி போலீஸ்ன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சாடி உங்களுக்கு…

எங்கடீ உங்க புது மாப்பிள்ளை…

பொட்டப் புள்ள மாதிரி எங்கடி ஒளிஞ்சிருக்கான். புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கீங்களாடி..

நீங்க கத்தற கத்துல ஒக்காலி அவன் ஆம்பளையா இருந்தா இங்க வரணும்டி…

எவன் அந்தப் போலீசைக் கொன்னானோ அவன் இந்த இடத்துக்கு வந்து சேரணும்டி…

இல்லைன்னா இங்க ஒரு மயிராண்டியும் உயிரோட இருந்திட முடியாது…

கத்துங்கடி… இன்னும் பலமாக் கத்துங்கடி… கோஷம் போடும் போது மட்டும் கத்தத் தெரியுதுல்ல…

சுற்றிச் சுற்றி வந்து அடிக்கின்றனர்.

பெண்களின் கதறல் மலைப் பகுதியில் எல்லா பகுதிகளிலும் பட்டு எதிரொலிக்கிறது.

0

Share/Bookmark

புத்தர்: ஒரு மனிதனின் கதை

$
0
0

buddhaபுரட்சி / அத்தியாயம் 5

இந்தியத் தத்துவவியல் குறித்தும் தொன்மம் குறித்தும் ஆய்வு செய்து வந்த எமிலி செனார்ட் (Emile Senart) என்னும் பிரெஞ்சு மாணவி புத்தர் குறித்து வாசித்துக்கொண்டிருந்தபோது திகைப்படைந்தார். ‘பௌத்தப் புனித நூல்கள் அவரைப் பற்றிக் கணக்கற்ற புராணக் கதைகளை அளிக்கின்றன. இவற்றை ஏற்கவேண்டுமானால் மாயங்களும் அதிசயங்களும் நிறைந்த ஓர் உலகில் அசாதாரணமான முறையில் அவர் வாழ்ந்தார் என்பதையும் ஏற்கவேண்டிவரும்.’ இதன் நீட்சியாகத் தவிர்க்கவியலாதபடி அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.‘உண்மையில் புத்தர் என்பவர் வாழ்ந்தாரா?’ அவருடைய விடை. ‘நிச்சயம் இல்லை.’

எமிலியைப் போலவே பௌத்தத்தை ஆராயப் புகுந்த எம் செனார்ட் என்பவருக்கு இந்தச் சந்தேகம் எழுவில்லை. புத்தரைச் சூழ்ந்திருந்த மாயங்களையும் அதிசயங்களையும் கண்டு மயங்கி உள்ளது உள்ளவாறே மேற்கத்திய வாசகர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தினார். ‘பிறப்பதற்கு முன்பே புத்தர் ஒரு கதாநாயகர். அவர் கடவுள்களின் கடவுள். புத்தருக்குத் தந்தை இல்லை. அவர் சொர்க்கத்தில் இருந்து ஒரு கன்னித் தாயின் கருப்பைக்கு அனுப்பப்பட்டவர். அவர் தோன்றியபோது பூமியில் ஒளி உண்டாயிற்று. தக்க தருணத்தில் அவரது சக்தி வெளிப்பட்டது. பலவிதமான அரக்கர்களுடன் அவர் போரிட்டார். தேவதைகளும் தேவ கன்னிகைகளும் அவருடன் வலம் வந்தனர். ஆயிரம் ஒளிக்கற்றைகளை வீசும் சக்கரம் ஒன்று அவரிடம் இருந்தது. அசாத்திய ஆற்றலும் சொர்க்கத்துக்கு நீந்திச் செல்லும் திறனும் காடுகளில் அலைந்து திரிவதற்கான திராணியும் அவரிடம் இருந்தன. தன் வாழ்வின் இறுதியில் அவர் மோட்சம் அடைந்தார்.’

புத்தரை அணுகுவதில் நமக்கு ஏற்படும் முதல் பெரும் சிக்கல் இதுவே. புத்தர் குறித்த செய்திகளில் எது சுவையான கற்பனை, எது வரலாறு என்று பிரித்துணரமுடியாதபடி பல்வேறு இழைகளும் சரடுகளும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்தப் பிரதிகளைக் கொண்டு புத்தர் என்றொருவர் இருந்ததேயில்லை என்னும் முடிவுக்குச் சிலரும் புத்தர் என்பவர் சாமானியரே அல்ல என்னும் முடிவுக்கு வேறு சிலரும் வந்து சேர்ந்தனர்.

ஓரிடத்தில் புத்தர் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்துகொள்கிறார். ‘புத்தர்களில் நான் ஒருவன். எனக்கு முன்னால் பல புத்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். எனக்குப் பிறகும் புத்தர்கள் தோன்றுவார்கள். தீமையும் வன்முறையும் பெருகும்போது புத்தர் தோன்றுவார், உலகை நல்வழிப்படுத்துவார்.’ கிறிஸ்தவ மற்றும் இந்து மத இலக்கியங்களிலும் இத்தகைய பிரகடனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பொது யுகத்துக்கு முன் 412ல் புத்தர் இறந்திருக்கலாம் என்கிறார் டி.டபிள்யு. ரைஸ் டேவிட்ஸ். ‘கி.மு. 485க்கு சில ஆண்டுகளுக்கு முன்போ பின்போ தனது 80வது வயதில் புத்தர் மரணமடைந்தார்’ என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. திபெத்தியர்கள் பொயுமு 2422 தொடங்கி 546 வரை பதினான்கு வெவ்வேறு கணக்குகளை அளிக்கிறார்கள். பொயுமு 543ல் புத்தர் மறைந்திருக்கலாம் என்கிறார் மாக்ஸ் முல்லர்.

பாலி, சமஸ்கிருதக் குறிப்புகள், இந்து மதப் புராணங்களில் காணப்படும் செய்திகள், ஜைனர்களின் குறிப்புகள், கிரேக்கத்தின் பண்டைய வரலாறுகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் வாயிலாக புத்தர் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. புத்தரின் உபதேசங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை. எழுத்துபூர்வமான படைப்புகள் எதையும் புத்தர் விட்டுச் செல்லவில்லை.

புத்தர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்களில் பொதுவாகக் காணப்படும் குறிப்புகளின் வரிசை இது. புத்தர் பிறந்தபோது மிகப் பெரிய ஒளி தோன்றியது. குருடர்கள் பார்வை பெற்றனர்; செவிடர்கள் கேட்கும் திறன் பெற்றனர்; கூனர்கள் நிமிர்ந்து நின்றனர். கடவுள்கள் வானிலிருந்து தலை தாழ்த்தி குனிந்து புத்தருக்குப் பணிவிடைகள் செய்தனர். பல்வேறு மூலைகளில் இருந்தும் அரசர்கள் திரண்டு வந்து குழந்தையை வரவேற்றனர். வளர்ந்ததும் சித்தார்த்தனுக்கு மூன்று விதமான மாளிகைகள் தயார் செய்யப்பட்டன. உரிய காலத்தில் போர்ப் பயிற்சியும் தத்துவப் பாடங்களும் அளிக்கப்பட்டன. திருமணமும் நடந்து முடிந்தது. ஒரு நாள் மாளிகையைவிட்டு சாமானிய மக்கள் வசிக்கும் தெருவில் நடைபோட்ட புத்தர் முதியவர் ஒருவரைக் கண்டார். இரண்டாவது நாள் நோயாளியையும் மறுநாள்ஒரு சடலத்தையும் கண்டார். இந்தக் காட்சிகள் கௌதம சித்தார்த்தனைப் புத்தராக மாற்றியது. புத்தரின் வாய்மொழி உபதேசங்கள் அவருடைய சீடர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டன.

கிறிஸ்து பிற்காலத்தில் சொல்லநேர்ந்ததையெல்லாம் புத்தர் முன்கூட்டியே போதித்துவிட்டார் என்கிறார் வில் ட்யூரண்ட். உதாரணத்துக்கு, கோபத்தை அமைதியால் எதிர்கொள்ளவேண்டும் என்றும் எதிரியை சாந்தத்துடன் அணுகவேண்டும் என்றும் தீமையை நன்மையால் வெல்லவேண்டும் என்றும் புத்தர் போதித்தார். ‘வெறுப்பு வெறுப்பால் வீழ்த்தப்படுவதில்லை. நேசத்துக்கு மட்டுமே அந்த ஆற்றல் உண்டு.’ புத்தரின் போதனைகளில் எளிமையான அதே சமயம் ஆழமான தத்துவக் கூறுகளும் தரிசனங்களும் காணக்கிடைக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

புத்தரை எதிர்கொள்வதில் உள்ள அடுத்த பிரதான சிக்கல் இது குறித்துதான் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. ‘புத்த மதம் பற்றிய எந்த நூலும் அவர் காலத்தைச் சேர்ந்தவையல்ல. பழங்கால புத்த மத இலக்கியங்கள் அனைத்தும் பேச்சுகள், உபதேசங்கள், கவிதைகள், கதைகள், நடத்தை விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.’ பாலி மொழியில் எழுதப்பட்ட இவை மூன்று பெரும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிடகம் என்றால் கூடை அல்லது திரட்டு என்று பொருள்கொள்ளலாம்.

வினயபிகடம் என்பது கட்டுப்பாடு பற்றிய பகுதியாகும். புத்த பிட்சுக்களின் சங்கங்களைச் சேர்ந்த பிட்சுகளும் பிட்சனிகளும் பின்பற்றவேண்டிய ஒழுக்கநெறிகளை இது விவரிக்கிறது. சுத்தபிடகம் புத்தர் மற்றும் அவருடைய சீடர்களின் மதம், தர்மம் இவற்றின் ஆதாரம் பற்றியது. உரைநடையிலும் கவிதையிலும் எழுதப்பட்டுள்ள இந்தப் பகுதி பௌத்த இலக்கியங்களில் முக்கியமானது. மூன்றாவது, அதிதர்மபிடகம் என்று அழைக்கப்படுகிறது. இலக்கியச் செறிவுள்ள வகையில் எழுதப்பட்டுள்ள மற்றொரு சுத்தபிடகம் என்று இதனை அழைக்கலாம்.

இந்த மூன்றும் மதம் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே இவற்றில் எவையெல்லாம் புத்தரின் அசலான போதனைகள், எவை மத நோக்கத்துடன் பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை என்பதைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. பௌத்த மத நம்பிக்கையாளர்களுக்கும் பௌத்தத்தை ஒரு தத்துவமாக ஆராய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் இடையில் இதுகுறித்து ஒருமித்த கருத்து பொதுவாக நிலவுவதில்லை.

ஆனாலும் இவற்றைவிட்டால் புத்தரை அணுக வேறு மார்க்கமில்லை என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. ‘பிற்கால இடைச்செருகல்களையும் இவற்றில் விடுபட்டுப் போன புத்தரின் போதனைகளையும் ஒப்புக்கொண்ட போதிலும், இந்தப் பாலி திரிபிடகங்களின் நம்பகத்தன்மையை ஏற்பதைத் தவிர வேறு மாற்று நமக்குத் தெரியவில்லை. இல்லையெனில் புத்த மதத்தின் அசல் கொள்கை ஒருவகையில் ஒன்றும் புரியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும்.’

ஆக, புத்தரைப் பற்றியும் நமக்கு அதிகம் தெரியாது. புத்தரின் போதனைகள் பற்றியும் தீர்க்கமாகவும் திட்டவட்டமாகவும் அதிகம் தெரியாது. இந்தப் போதாமைகளைக் கடந்துதான் புத்தரை நாம் அணுகவோ ஆராயவோ மதிப்பிடவோ வேண்டியிருக்கிறது. புத்தர் மறுபிறப்புகளை ஏற்றாரா, ஆன்மாவை மறுத்தாரா, கடவுளை முற்றிலும் நிராகரித்தாரா, வேதங்களோடு முரண்பட்டாரா போன்ற முக்கியமான கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் அவரவர் பின்னணியில் இருந்தே பதிலளிக்கிறார்கள்.

இந்த ஒப்பீடு சரியானதாக இருக்காது என்றாலும் ஸ்பார்டகஸுக்கும் புத்தருக்கும் இடையில் சில பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளமுடிகிறது. இருவரைப் பற்றியும் குறைவாகவே நமக்குத் தெரியும். வர்க்கச் சார்பு கொண்டே இருவரும் மதிப்பிடப்படுகிறார்கள். இருவருக்கும் எதிரிகள் அநேகம். இகழ்பவர்களால் மட்டுமல்ல புகழ்பவர்களாலும்கூட இருவருடைய சாதனைகளும் திரிக்கப்படுகின்றன. எதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்களோ அதற்கு எதிரானவர்களாக அவர்களை முன்னிறுத்துவதற்கு ஒரு சாரார் தொடர்ந்து முயற்சி செய்து வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

ரைஸ் டேவிட்ஸ் எழுதுகிறார். ‘கௌதமர் ஒரு வெற்றிகரமான அரசியல் சீர்திருத்தவாதி என்ற வகையில் வசதியானவர்களையும், முன்னுரிமை பெற்ற வர்க்கத்தினரையும் எதிர்த்து ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். சாதியத்தை ஒழிக்கும் செயலில் ஈடுபட்டார்…(இருந்தும்) வேறு சில எழுத்தாளர்கள் புத்தரைக் கடுமையாக விமரிசிக்கிறார்கள்… அவர் சாதிய விதிகளின் தீவிரத்தை ஒழிப்பதற்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. பரிதாபத்துக்குரியவர்களையும், எளிய மக்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை.’

புத்தரை அவருடைய காலத்தில் பொருத்திப் பார்த்து மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. அவ்வாறு நோக்கும்போது அவர் வந்தடைந்த முடிவு இதுவே.‘சமூகவியல் நலனில் அக்கறை கொண்ட பழங்கால இந்தியாவின் ஒரே சிந்தனையாளர் அவர் மட்டும்தான். இதைச் சந்தேகிப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.’

புத்தர் வேறு, நாம் இன்று அறிந்திருக்கும் பௌத்தம் என்பது வேறு. ‘பௌத்தம் அரசு மதமான பிறகு புத்தரின் அடிப்படையான செய்தி அதற்கு எதிர்மறையாக மாறிவிட்டது’ என்கிறார் சட்டோபாத்தியாயா. புத்தர் ஏன் இன்று நினைவுகூரப்படவேண்டியவர்? ‘புத்தரை அவரது காலச் சூழ்நிலையைக் கொண்டு பார்க்கும்போது அவர் ஓரளவு மதச் சார்பற்றவராக இருந்தார். மேலும், அவர் பழங்கால இந்தியாவில் இயக்கவியல் பார்வை கொண்ட, உணர்வுபூர்வமாகச் செயல்படும் ஒரே சிந்தனையாளராக இருந்தார். இதனால் வர்க்கமாகப் பிளவுபட்ட சமூகத்தில் மக்களுக்குத் தேவையான ‘ஆறுதலளிக்கும் தீர்வாக’ உள்ள புரிதலுக்கு நெருக்கமாக வந்தார்.’

புத்தர் மனிதர்களின் தடுமாற்றங்களையும் தீங்கு செய்யும் இயல்பையும் நேரடியாகக் கண்டவர். தன்னைச் சுற்றியுள்ள பிரச்னைகளையும் அவற்றின் தோற்றுவாயையும் அறிந்துகெள்ளமுடியுமா என்று ஆராய முற்பட்டவர். தனக்குத் தெரிந்த, தான் உண்மை என்று நம்பிய விஷயங்களைப் பிறருக்கும் உணர்த்த விரும்பியவர். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து துயரங்களுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் இ ருந்தது. ஆனால், புத்தர் அந்தத் தீர்வை ஏற்கவில்லை. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘அவர் மிகவும் யதார்த்தவாதி என்பதால் அவரால் கடவுளை நம்ப முடியவில்லை.’ எனவே, புத்தர் வேறு வழிகளில் சிந்திக்கத் தொடங்கினார்.

அடுத்த பகுதி – புத்தர் : ஒரு சிந்தனையாளரின் கதை

Share/Bookmark

உங்கள் ரோல்மாடல் யார்?

$
0
0

father-role-model.jog_ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 7

சென்ற ஆண்டு மலேசியாவில் கெண்டிங் தீவுகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அரங்கத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய உரையை முடித்தவுடன் வழக்கமாக நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்வு
நடைபெற்றது.

அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று….

‘நீங்கள் மிகப் பெரிய சாதனையாளர். எத்தனையோ பேருக்கு வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு உந்துதலாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு யார் ரோல் மாடல்?‘ என்பதுதான்.

அதற்கு நான் ‘எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ‘ரோல் மாடல்’ என்று பார்த்தால் எனக்கு நான் தான் ’ரோல் மாடல்’, என்று சொன்னேன்.  உடனே பலத்த கைதட்டல்.

இன்ஸ்பிரேஷன் நமக்கு பலர் இருக்கலாம். உதாரணத்துக்கு சினிமா பாடகர்களில்
எஸ்.பி.பி., கே.ஜே.ஜேசுதாஸ், கிளாசிக்கல் பாடல்களில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பி.எச்.அப்துல் ஹமீது, இப்படி பல்வேறு துறையில் பல
சாதனையாளர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்.

ஆனால் ரோல் மாடல் என்கிற கேள்வி வரும்போது… எனக்கு நான்தான் ரோல் மாடல் என்று சொன்னேன். அந்த பதிலை யாரும் எதிர்பார்க்காவிட்டாலும் அதை நான் சொன்னபோது மிகவும் ரசித்தார்கள் என்பது அப்போது எழுந்த கைத்தட்டல்களில் இருந்து புரிந்தது.

இதை நான் சொல்வதற்குக் காரணம்… தலைக்கனத்தின் காரணமாகவோ அல்லது தற்பெருமையினாலோ இல்லை. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்கிற மமதையான நினைப்பினாலும் இல்லை.

என்னை நான் ரோல் மாடலாக முன்மாதிரியாக நினைத்துக்கொள்ளும்போதுதான், என்
வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். விழவும்
பயமில்லை.. விழுந்த சுவடு தெரியாமல் எழுந்திருக்கவும் தயக்கமில்லை.

என்னை நானே ரோல் மாடலா நினைத்துக்கொள்ளும்போதுதான், ‘நான் அந்த நிகழ்வின்போது என்ன செய்தேன்? அந்த நேரத்தில் நான் எப்படி நடந்துகொண்டேன்? இதற்கு முன்பு அப்படியோர் சம்பவம் நடந்திருக்கிறதா? நடக்கவில்லையா? இப்போது நாம் என்ன செய்யலாம்? இதை ஒரு ரோல் மாடல் சம்பவமாக நமது வாழ்க்கையில் பதிவு செய்துவிடவேண்டுமானால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.

நான் இப்படிச் சொல்வதனால் உங்களுக்குப் பிடித்த சாதனையாளர்களை ரோல்மாடலா வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்குப் பிடித்த நற்குணங்கள் நிரம்பிய
ஒரு சாதனையாளரை நிச்சயம் நீங்கள் ரோல் மாடலாக வைத்துக்கொள்ளலாம். கொள்கைப்
பிடிப்புடன் வாழும் ஒரு சாதனையாளர் சொன்னால் நான்கு பேர் கேட்பார்கள் என்ற நிலை இருப்பது நல்லதுதான். ஏனெனில் அவர்களுடைய அந்த ஐடியாலஜி இதன்மூலம் பரவும். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு நீங்களே ரோல் மாடல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம்.

இது ஏன் என்றால், நீங்கள் உங்கள் ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் செய்வது எல்லாம் சரி என்று அர்த்தம் கிடையாது. உங்கள் அபிமான சாதனையாளர் செய்வதில் எது சரி எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் காலப்போக்கில் உங்களுக்கு வந்துவிடும். அந்த நிலை வரும்போது நீங்களே உங்களுக்கு ரோல் மாடலாகிவிடுங்கள். அப்போது நீங்கள் இன்னும் உயரத்துக்கு செல்வீர்கள்.

வாழ்க்கையில் ரோல் மாடலைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த அளவுக்கு சிரத்தை எடுப்போமோ அந்த அளவுக்கு கவனமும், எச்சரிக்கையும் பரிட்சைகளும் தேர்ந்தெடுக்கும் ரோல்மாடலுக்கும் அவசியம்.

 

Share/Bookmark

நாகர்கள் யார்?

$
0
0

nagasபறையர்கள் / அத்தியாயம் 7

நகர்: நகர்தல் = மெல்ல இடம் பெயர்தல், விரிவடைதல். நகர் = குடி பெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகமென்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம். மக்கள் பெருக்கத்தால் சிற்றூர்கள் பேரூர்களாவதும், பேரூர்கள் நகரங்களாவதும் இயல்பு. நகர்தல் என்பது பெயர்தல் அல்லது தள்ளுதல். மக்கள் நெருக்கம் பற்றி ஒரு மனையிலுள்ளார் நகர்ந்து புதுமனை புகுவதும், ஒரு தெருவிலுள்ளோர் நகர்ந்து புதுத்தெரு புகுவதும் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறு ஊர் ஒன்று சிறிது சிறிதாக நகர்ந்து நாளடைவில் நகராகிறது.

நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. ‘நகரகம்’ என்னும் சொல் ‘நகரிகம்’, ‘நாகரிகம்’ என மருவி வரும். நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரிலிருந்து வந்தது. நாகர்கள் என்பவர்கள் நாகநாடு என்னும் கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாகருடைய நாடு நாக நாடு.
நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் ஸ்நேக் என்பது இதே பொருள் பற்றியது.

நகர் என்ற சொல் மரபும் – நாகரிகம் என்ற சொல் மரபும் தரும் இந்த விளக்கம் கீழையுலகிலும், மேலையுலகிலும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளது. நாகரிகம், நகர் என்ற சொற்கள் தமிழருக்கேயுரிய தனித்தமிழ்ச் சொற்கள்.

நாகர் வடக்கே இமயம் வரையும், தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவி வட இந்தியாவில் நக்காரா (Naggharah) என்று கூறப்படுகிறது. ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒரு புறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. அதன் எடை 2.47 கிராம்.

குமரிக்கண்டம் இந்துமா கடலுள் மூழ்கியபிறகு தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு இருந்தது. அங்கே நாவல் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்ததால் அது நாவலந்தீவு (சம்புத்தீவு) என்று பெயர் பெற்றது. நாவலந்தீவின் பகுதியாக இருந்து காலப்போக்கில் கடலால் பிரிக்கப்பட்ட யாழ்குடாவுக்கு நாவலந்தீவு என்ற பழம் பெயர் நிலைத்திருந்ததாகத் தெரிகிறது. யாழ்குடா மிக ஆரம்பத்திலிருந்தே திராவிடக் கலாசாரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. யாழ் குடாவிலிருந்து திராவிடர்கள் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பரவலாயினர். இவ்வாறு தமிழர்கள் பரவி வாழ்ந்த பகுதிகளில் அன்று ஆதி குடிகளான நாகர்களும் பரவி வாழ்ந்துள்ளனர். அன்று ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த பகுதி (யாழ்குடாப்பகுதி) நாகதீபம் என அழைக்கப்பட்டது.

இலங்கையில் நாகர் குடிகளின் தோற்ற வளர்ச்சிகளை மகாவம்சத்தில் காணலாம். விஜயனும் தோழர்களும் (கி.மு. 483 அளவில்) இலங்கையை அடைந்த காலத்தில் எஞ்சிய இலங்காபுரி இயக்கர் ஆட்சியிலிருந்தது என்பதனை மகாவமிசம் குறிப்பிடுகின்ற குவேனியின் கதையிலிருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்றாசிரிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆரம்பித்த சுதேசக் குடிமக்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களும் சிறப்பாக இயக்கர் என்பார். இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று அர்ஹத் மகிந்தரால் வெல்லப்பட்டு வேலைக்கு அர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பௌத்த நூலும் இயக்கர்களை அர்ஹர் மகிந்தர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணிய மக்கள். புத்தருடைய காலத்தில் நாகர்கள் பௌத்தத்தைத் தழுவினர். மேலும் நாகர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையின் வடபாகத்தில் மட்டுமின்றி வடமேற்குப் பகுதியில் களனியாவரை பரவி வாழ்ந்தனர். விஜயனுடைய காலத்தில் பின்னரே இந்நாகர்கள் கிழக்குப் பகுதி வழியாக பரவலாயினர்.
முதலில் நாகர்கள் இலங்கையின் மேற்கு, வடமேற்கு, வடக்குப் பகுதிகளில் வாழ்ந்து பின் கிழக்குக் கரையூடாகத் தென்னிலங்கை வரை பரவினர் என்பதற்கு மகாவம்சம் மட்டுமின்றி டாலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. டாலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெளிவாகின்றது.

எச்.டி.சில்வா, நாகதீபம் என்பது வடபிரிவினைக் குறிக்கும் என்று கூறுகிறார். காசி செட்டி என்பவர் யாழ்குடாவே நாகதீபம் எனக் கூறுகிறார். ஹெச்.பாக்கர் என்பவர் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், சிறப்பாக வடபகுதியிலும் நாகர்கள் வாழ்ந்தனர் என்றும் ஆனால் வடபகுதியே வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நாகதீபம் என அழைக்கப்பட்டு வந்ததெனவும் கூறுவார். மேலும் அவர், புத்தரால் நாகர்கள் மதமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பற்றிய குறிப்புகள் தெளிவாக வரலாற்று நூல்களில் இல்லையெனவும், நாகதீபம் என்ற பெயரே இங்கு ஒரு காலத்தில் நாகர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதக்கூடிய சான்றாக அமைகின்றது என்றும் குறிப்பிடுகிறார். நாக வழிபாட்டையுடைய நாகர் குடிகள் ஆரம்பகாலத்தில் திருகோணமலைப் பகுதியில் வாழ்ந்திருப்பார்கள் என்பதை வற்புறுத்துவதோடு, நாகத்தீவு எனப்பட்டது இலங்கையின் வடபகுதி (கிழக்கு, மேற்குப் பகுதி உட்பட) முழுவதையும் உள்ளடக்கியிருந்ததென்றும் அதன் தென்னெல்லையை நிச்சயித்துக் கொள்வது முடியாது என்றும் செ.குணசிங்கம் கூறுகிறார்.

நாகர்கள் பௌத்தத்தைத் தழுவ காலப்போக்கில் அதன் தாக்கம் யாழ்குடா முழுவதும் ஏற்பட்டது. இந்நிலையில் நாகர் கலாசாரமும், தமிழ்க் கலாசாரமும் ஒன்றோடொன்று கல்ந்துவிடுகின்ற நிலையையும் நாம் அவதானிக்கலாம். பழந்தமிழர்களும் பௌத்தத்தைத் தழுவுகின்ற நிலை ஏற்படுகின்றது. விஜயன் காலத்துக்குப் பின்னர் தமிழ்க் கலாசாரத்துடன் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட நாகர்கள் அரசியல், வர்த்தக முயற்சிகள் காரணமாக மத்திய இலங்கை ஊடாக ஊடுருவிக்கொண்டு, கிழக்குக் கரையாகத் திஸ்ஸமகாராம வரை பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. அன்று நாகர்களும், பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே, இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பிரதேசங்களாகக் காணப்படுகின்றன.

0

Share/Bookmark

முழுமையான உரையாடல்

$
0
0

AsuraLordபேசு மனமே பேசு / அத்தியாயம் 7

மனத்தோடு நாம் எத்தகைய உரையாடல்களை நடத்தினால் அது சரியான உரையாடலாக இருக்கும் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இனி நாம் தெரிந்துகொள்ளப்போவது மனத்தோடு நடத்தப் போகும் முழுமையான உரையாடலை. எந்த விஷயமாக இருந்தாலும், அது முழுமையாக நடைபெற வேண்டுமானால், அதைக் குறித்து முழுத் தகவல்கள் தேவைப்படுகிறது. எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் முறையிடும்போதும், வரம் கேட்கும்போதும்கூட, முழுமையான வேண்டுதல்களாக இருக்க வேண்டும். புராணங்கள் அனைத்திலும், அரக்கர்கள் அழிவது, இறைவனின் ஆற்றல் மட்டுமின்றி அவர்களது அவசர புத்தியும், முழுமையாக சிந்திக்காததும்தான், என்பது அவற்றை நன்கு படித்தால் விளங்கும்.

பிரகலாதனின் தந்தையும், சகலவிதமான சக்திகள் மற்றும் அதிகாரங்களைப் பெற்றவனுமான இரண்யனும் அழிந்ததுகூட அரைகுறையான சிந்தனை (உரையாடல்கள்) கொண்டிருந்ததால்தான். பல காலம் தவமிருந்து ஆண்டவனின் தரிசனத்தைப் பெற்ற இரண்யன், தன்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும்படியான வரத்தைக் கேட்டான். காலங்கள், பருவங்களின் விளைவுகள், மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய அம்சங்களால் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது என்று கேட்டுப் பெற்றான். ஆனால் அவன் யோசிக்காமல் விட்ட மாலை நேரமும், மனிதனும் விலங்கும் சேர்ந்த உருவமும் தான், இரண்யன் மரணமடையக் காரணமாக இருந்தது.

எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் வரம் கேட்கும்போதுகூட முழுமையாக முறையிட வேண்டும் என்றால், நாம் சொல்வதை, நினைப்பதை மட்டுமே நம்புகிற, அதன் அடிப்படையில் மட்டுமே செயல்பட வைக்கும் நம் மனதுக்கு, முழுமையான தகவல்களைத் தராதபோது அதனால் ஒழுங்காக முடிவெடுக்க முடியாது. ஆழ் மனம் எடுக்கும் முடிவுகள் எண்ணங்களாக மாறும். இவைதான் மூளைக்குச் செல்லும் தகவல்களாக, ஆணைகளாக, மாற்றம் பெறும். இதன்படிதான் வாழ்க்கையும் அமையும். இத்தகைய காரணங்களால், எந்த விஷயமாக இருந்தாலும் முழுமையான தகவல்களுடன் தன்னுடன் பேசுதல் நிகழ வேண்டும்.

நம்மில் பல பேர் வாழ்க்கையில் முன்னேறாததற்குப் பல காரணங்கள் சொல்கிறோம். நமக்கு அமைந்த வேலை, தொழில், படிக்க முடிந்த படிப்பு, அமைந்த மனைவி மற்றும் பிள்ளைகள், பெற்றோர், பின்னணி, கிடைக்காத உதவிகள் போன்றவற்றைக் காரணமாகச் சொல்லி சமாதானம் அடைவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இவைதான் முன்னேறாமல் இருப்பதற்கு, முன்னேற முடியாததற்குக் காரணங்களாக, ஆழ் மனதுக்கு சொல்லப்படுகிறது. இதனால் உருவாகும் எண்ணங்களின்படி (உரையாடல் பதிவுகளின்படி) வாழ்க்கையும் நடக்கிறது. இதை மாற்றுவது எப்படி?

‘சிறு வயதில் பல்வேறு காரணங்களால், ஏழ்மைநிலை இருந்தது உண்மைதான். அதை இனி தொடர விட மாட்டேன். அதற்காக செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து செயல்படுவேன்’ என்று சொல்ல ஆரம்பித்து, என்ன யோசனை என்பது பற்றியும் முடிவு செய்து, செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிடும்போது, நமது தற்போதைய நிலை, என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் போன்றவற்றை சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

வெகு காலம் கழித்து, விழித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து, அவசரமோ, ஆதங்கமோ பட்டால், அனைத்தும் கெட்டுப் போகும். உணர்ச்சிகரமான மன நிலையிலும் சுற்றுச் சூழலை கணக்கெடுத்துச் செயல்படுபவர்கள், ஆபத்துகளைத் தவிர்த்து, வேண்டியதையும் பெறுகின்றனர்.

காட்டில் உள்ள ஒரு ஓடையில் தண்ணீர் அருந்துவதற்கு சிங்கமும், சிறுத்தைப் புலியும் ஒன்றாக வந்தன. இரண்டும் சம வலிமை உடைய விலங்குகள் மட்டுமின்றி ஆக்ரோஷமான மனோபாவத்தையும் இயற்கையாகப் பெற்றவை. இதனாலேயே தண்ணீரை யார் முதலில் குடிப்பது என்பது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சச்சரவு பெரிதாகி, அவரவர் நிலைப்பாட்டில் மேலும் பிடிவாதமாக வாதம் செய்தனர். விட்டுக் கொடுப்பதைவிட, சண்டையிட்டுச் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருவர் மனத்திலும் தோன்றியது. ஆத்திரம் தலைக்கேறி, இரண்டும் சண்டையிடத் தொடங்கின. அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த மரங்களில் சலசலப்பு பெரிதாகத் தோன்றியது. இரண்டு விலங்குகளும், மேலே பார்த்தன. மரங்களுக்கு சற்றுமேல், கூட்டமாகக் கழுகுகள் வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன. யார் சண்டையில் இறந்து போகிறார்களோ, அதைக் கொத்தித் தின்னத் தயாராக இருந்தன. இதைப் பார்த்த இரு விலங்குகளும், சண்டையிட இது நேரமல்ல என்பதை உணர்ந்து நிறுத்திக் கொண்டன. மனத்தில் ஆத்திரம் இருந்தாலும், சூழ்நிலை சரியில்லாததைப் புரிந்துகொண்டு, செயல்பட்டதால், இரு விலங்குகளும் தப்பித்தன.

இது கதையாக இருந்தாலும், உணர்ச்சியின் வசத்துக்குப் போய்விட்ட மனநிலையிலும், தங்களது சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு இருந்தால், உணர்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருப்போம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

பிரச்னையைத் தீர்க்க முழுமையான உரையாடலாக மாற்றங்களை நிகழ்காலத்தில் நடப்பதுபோல சொல்லிப் பழக வேண்டும். இவ்வாறான நிலை இல்லாதபோதும், நடந்துகொண்டு இருப்பது போல மனத்தில் உருவகப்படுத்தி, உரையாடல் நடக்க வேண்டும். இம்மாதிரியான பொய்யான நிலையை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். நாம் இதுவரையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்த நமது, கடந்த காலத்தை வைத்து, எதிர் காலமும் வேறு எப்படி இருக்கப் போகிறது? என்ற முடிவில் மனத்தில் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறோம். இதனால் மனத்தில் நம்பிக்கையின்மை, சோர்வு, பயம், வெளியிடத் தெரியாத ஆத்திரம் போன்றவை உருவாகி நம் வாழ்க்கையை நடத்துகின்றன.

கற்பனையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்களுக்கு பலம் இருப்பதுபோல, அதே கற்பனையில் உருவாக்கப்படும், சரியான, நேரான, நிகழ்காலத்தில் நடப்பது போன்ற எண்ணங்களுக்கும் அதே வலிமை கண்டிப்பாக இருக்கும். இதுதான் இயற்கை நியதி. ‘கான்சர்’ என்கிற புற்றுநோயைப் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, கான்சர் செல்கள் மிகவும் பலவீனமானவை. அவற்றிற்கு பலம் கொடுப்பது மனித எண்ணங்களும் (சுய உரையாடல்களும்) அவற்றால் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களும்தான்.

எண்ணங்களுக்கு, அதாவது நமக்குள் நடக்கும் உரையாடல்களுக்கு அந்த அளவுக்கு வலு அதிகம். இந்த அறிவியல் உண்மையை நமது முன்னேற்றத்துக்கு உபயோகப்படுத்திக்கொண்டால், முன்னேற்றம் நிச்சயம்.

எது எப்படியிருந்தாலும், நமக்குள் சிறு தயக்கம், சலனம். இத்தகைய அவநம்பிக்கையை, மிக இயல்பாக நல்ல விஷயங்களில் புகுத்தி விடுகிறோம். உதாரணமாக, கடவுளை நம்புவோம். பிரார்த்தனைகளையும் செய்வோம். ஆனாலும் உள்ளுக்குள்ளேயே ஒரு பெருமூச்சு. ஹூம், நாமும்தான் வேண்டிக்கொண்டே இருக்கிறோம். கடவுள்தான் கண்களை திறக்க மாட்டேன் என்கிறார்…. என்கிற ரீதியில் பலரும் ‘பக்தியாக’ இருக்கிறார்கள். இவர்களது மனத்தில், கடவுளிடம் கேட்க வேண்டியவைகளைக்கூட முழுமையாகத் தோன்ற அனுமதிக்க மாட்டார்கள். பயம், நடுக்கம், கெட்ட சக்தி போன்றவை மீது நம்பிக்கை உடனடியாக வலுப்பெறக் காரணமே, அவற்றைப் பற்றி மிக வேகமாக, முழுமையாக சிந்திப்பதால்தான். நேர்மறையான, சரியான நிகழ்கால உரையாடல்களை எப்படி நிகழ்த்திக் கொள்வது? இதன் ஆரம்பம் பின்வருமாறு இருக்கலாம்.

வழக்கமாக நாம் நினைப்பது…

நான் எப்போதுமே அப்படித்தான்… எனக்கு எப்போதுமே துரதிருஷ்டம்தான்.. போன்ற புலம்பல்களுக்குப் பதிலாக, ‘இந்த கணத்திலிருந்து நான் உற்சாகமான மனிதன்…’

‘இந்த கணத்திலிருந்து நான் அதிர்ஷ்டசாலி…’

‘நான் அதை எப்படியும் செய்து விடுவேன் என்ற ‘உறுதி’ மொழிக்குப் பதிலாக,
‘அந்தப் பிரச்னைகளுக்கு மாற்று வழி இதுதான், இதில் இப்போதிலிருந்து பயணப்படுவேன்’… என்கிற ரீதியில் நமது உரையாடல்களைத் தெரிந்தே நிகழ்கால வழியில் நடத்த வேண்டும். பலன் வெகுவிரைவில் கிடைக்கும்.

0

Share/Bookmark

பாலியல் குற்றம் என்பது என்ன?

$
0
0

fear-of-female-victim-of-domestic-violenceகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.

பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.

நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.

மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்

திராவகம் வீசுதல் 

மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

பாலியல் தொந்தரவு செய்தல் (Sexual Harassment)- இ.த.ச 354 ஏ

  1. தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்
  2. வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்
  3. மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி
  4. பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்
  5. வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்
  6. மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்

3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.

பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி

மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி

ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.

இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு நபரை அவரது விருப்பத்துக்கு மாறாக பின் தொடர்தல் (Stalking) – இ.த.ச 354 டி

ஒருவருக்கு விருப்பம் இல்லாத போதும் அவரை பின் தொடர்தல் அல்லது இணையத்தின் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை தொடர்வதோ (தொந்தரவு செய்வதோ) அல்லது வேவு பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்துவதில் ஈடுபட்டால் அவர் மேற்சொன்ன குற்றத்தை இழைத்தவர் ஆவார்.

குறிப்பிட்ட குற்றத்தை இழைத்தவருக்கான தண்டனை ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

ஆள் கடத்துதல் – Human Trafficking – இ.த.ச 370

யாரேனும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவோ, அல்லது அடிமைப்படுத்துவதற்காகவோ, அல்லது கட்டாயமாக உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவோ ஆள் கடத்துதலில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை (கடத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பொருத்து) சிறை தண்டனை விதிக்கப்படும். கடத்தப்பட்ட நபரை வேலைக்கு ஆட்படுத்துவதும் குற்றமாகும்.

இந்த சட்ட திருத்தங்களில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது கற்பழிப்பு குற்றத்தில் தான். இது நாள் வரை கற்பழிப்பு (rape) என்று சொல்லப்பட்ட குற்றம் சட்ட திருத்தத்திற்கு பிறகு பாலியல் தாக்குதல் Sexual Assault என்று அழைக்கப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்ற குற்றம் விரிவாக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ’கற்பழிப்பு’,’பலாத்காரம்’, ’வன்புணர்ச்சி’என்றால், என்ன மாதிரியான குற்றம் என்று அனைவருக்கும் தெரிந்த விதத்திலிருந்து மேலும் சில விவகாரங்களை உட்சேர்த்து பாலியல் தாக்குதல் என்றால் என்ன? என்று திருத்தப்பட்ட சட்டம் ஒரு பெரிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

Sexual Assault: Sexual assault means –

(a) The introduction (to any extent) by a man of his penis, into the vagina(which term shall include the labia majora), the anus or urethra or mouth of any woman or child–

(b) the introduction to any extent by a man of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a woman

(c) the introduction to any extent by a person of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a child.

(d) manipulating any part of the body of a child so as to cause penetration of the vagina (which term shall include labia majora) anus or the urethra of the offender by any part of the child’s body;

In circumstances falling under any of the six following descriptions:

Firstly – Against the complainant’s will.

Secondly – Without the complainant’s consent.

Thirdly – With the complainant’s consent when such consent has been obtained by putting her or any person in whom the complainant is interested, in fear of death or hurt.

Fourthly – With the complainant’s consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant’s consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.

Fifthly – With the consent of the complainant, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by the offender personally or through another of any stupefying or unwholesome substance, the complainant is unable to understand the nature and consequences of that to which such complainant gives consent.

Sixthly – With or without the complainant’s consent, when such complainant is under eighteen years of age. Provided that consent shall be a valid defence if the complainant is between sixteen years and eighteen years of age and the accused Person is not more than five years older.

இந்தப் பாலியல் தாக்குதல் சாதரணமானதாக இருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஏழாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதே அந்தக் குற்றம் பெரியதாக இருந்தால் பத்தாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் தாக்குதலினால் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அந்த தாக்குதலின் காரணமாக ஒருவர் நடைபிணமாக ஆனார் என்றால், அத்தகைய குற்றத்தை இழைத்தவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.

கூட்டாக சேர்ந்து பாலியல் தாக்குதலில் (gang rape) ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்காகவும் புணர் நிர்மானத்திற்காகவும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

ஆனால் அனைவரும் விறுவிறுப்போடு எதிர்பார்த்த, காரசாரமாக விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரம் மேற்சொன்ன சட்ட திருத்தத்தில் இல்லை அதுதான்  “விவாக கற்பழிப்பு’ – Marital rape.

அது என்ன விவாக கற்பழிப்பு? திருமணமான தம்பதிகளிடையே, அதாவது கணவன், மனைவியின் விருப்பதிற்கு மாறாக கட்டாயமாக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பெயர்தான் விவாக கற்பழிப்பு. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையில் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை. காரணம்? மதம் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் மனைவி கணவனுக்கு கட்டுபட்டே ஆகவேண்டும் (அனைத்து விவகாரத்திலும்) என்ற சம்பிரதாயம் உள்ளது. அதனால் எதற்கடா வம்பு, ஏற்கனேவே நிலைமை சரியில்லை, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்க வேண்டாம், அதனால் விவாக கற்பழிப்பை குற்றமாகி மாட்டிகொள்ள வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவில்லை.

 (ஆழம் மே 2013 இதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத முழு வடிவம்).

Share/Bookmark

விசாரணை கமிஷன் / பகுதி 2

$
0
0

ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5 

காட்சி எண் 8

judgeஇடம்: மக்கள் கண்காணிப்பு அலுவலகம்

நேரம்: மதியம் 12.00 மணி

யாருமில்லாத அறை ஒன்றில் தொலைபேசி ஒலிக்கிறது. சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து தொலைபேசியை எடுக்கிறார்.

எதிர்முனை : ஐய்யா… செந்தமிழ் நகர்ல இருந்து பேசறோம் ஐய்யா… எங்களை போலீஸ்காரங்க சுற்றி வளைச்சு அடிக்கறாங்கய்யா… உடனே புறப்பட்டு வாங்க…. இல்லைன்னா எல்லாரையும் கொன்னு பொதைச்சிடுவாங்க…

தொலைபேசியை எடுத்தவர் : என்னது போலீஸ்காரங்க அடிக்கறாங்களா…

எதிர்முனை : ஆமாம் ஐய்யா….

தொலைபேசியை எடுத்தவர் : சரியா சொல்லுங்கம்மா…. வேற யாரோ கும்பல் உங்களை அடிக்கறாங்க… போலிஸை அனுப்பனும் அதுதான… நீங்க போலீஸ் ஸ்டெஷனுக்குப் போன் போடறதுக்கு பதிலா எங்களுக்குப் போட்டிருக்கீங்க. நாங்க ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்..

எதிர்முனை : இல்லை ஐய்யா… நாங்க சரியாத்தான் சொல்லறோம். போலீஸ்தான் எங்களை விரட்டி அடிக்குது. எங்க டாக்டர் ஐய்யாதான் எதுனா பிரச்னைன்னா உங்க கிட்ட போன் போடச் சொல்லியிருந்தாரு…

தொலைபேசியை எடுத்தவர் : சரி. சரி… பதற்றப்படாதீங்க. நாங்க உடனே புறப்பட்டு வர்றோம். தைரியமா இருங்க.

தொலைபேசியை வைத்தவர் உடனே காவல் நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறார்.

மக்கள் கண்காணிப்பு இயக்கப் பிரமுகர் :   ஹலோ சார் நான் வின்சன்ட் பேசறேன்.

சப்-இன்ஸ்பெக்டர்      :        என்னடா இது இன்னும் உன்கிட்ட இருந்து போன் வரலையேன்னு பாத்தேன். புறப்பட்டு வந்து சேரு.

வின்சன்ட்       :        புறப்பட்டாச்சு சார். உங்ககிட்ட தகவல் சொல்லிட்டுப் போலாமேன்னுதான்… அப்பறம் இன்னொரு உதவி பண்ணணும் நீங்க.

சப்-இன்ஸ்பெக்டர்      :        சொல்லு. நீ கேட்டு மாட்டேன்னு சொல்லுவேனா நான். உன்னை மாதிரியான மக்களுக்குச் சேவை செய்யத் தானப்பா நாங்களெல்லாம் இருக்கோம்.

வின்சன்ட்       :        ஆமாம். ஆமாம். ஊர்ல எல்லாம் இப்படித்தான் பேசிக்கறாங்க. வேற ஒண்ணுமில்ல. நம்ம சண்டைக்காரங்கறது கொஞ்சம் வெளிப்படையா தெரிஞ்சா நல்லதுன்னு தோணுது.

சப்-இன்ஸ்பெக்டர்      :        அதான நீ மீட்டிங்ல எல்லாம் போலீசோட ரிப்போர்ட்டர்களைப் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கறியே.

வின்சன்ட்      :        (சிரித்தபடியே) அது இருக்கு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் காட்டமா வேணும். நீங்க எங்கள அந்த இடத்துக்குப் போக விடாம தடுக்கணும். அவ்வளவுதான்.

சப்-இன்ஸ்பெக்டர்      :        அவ்வளவுதான… பண்ணிட்டாப் போச்சு. வேணும்னா ரெண்டு அடி அடிக்கணும்னாலும் சரி செய்யறேன். எனக்கு பிரச்சனையில்ல. வசதி எப்படி?

வின்சன்ட்       :        (போலியாக நடுங்கியபடியே) ஐய்யய்யோ, அதெல்லாம் வேண்டாம். லேசா தடுத்தாப் போதும். நாலஞ்சு கோஷங்களப் போட்டுட்டு நாங்க திரும்பிடுவோம். புள்ள குட்டிக்காரங்க. பாத்துப் பண்ணுங்க.

(போனை வைக்கிறார். அவர் சொன்னது போலவே சம்பவ இடத்துக்குள் அவர்களை நுழைய விடாமல் தடுக்கிறார்கள். அவர்களும் தங்கள் கண்டனத்தை எழுப்பி விட்டுத் திரும்புகிறார்கள்).

 காட்சி எண் 9

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: காலை 11.00 மணி

டாக்டரும் மக்களும் கூட்டமாகக் கூடி இருக்கிறார்கள். நிருபர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல் துறை அதிகாரியும், வீடியோ கிராஃபரும் வந்து சேருகிறார்கள். அவர்கள் அமர்வதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எல்லோரும் அமர்கிறார்கள். சிறிது நேரத்தில் தேநீர் வருகிறது. அருந்திய பின் அதிகாரிகள் சேதங்களைப் பார்வையிடப் புறப்படுகிறார்கள். டாக்டர் ஒவ்வொன்றையும் விளக்கியபடியே வருகிறார். வீடியோ கிராஃபர் டாக்டர் சொல்லும் இடங்களை விட்டு விட்டு சேதம் குறைவாக இருக்கும் பகுதிகளைப் படம் பிடிக்கிறார். டாக்டர் அது குறித்து காவல் துறையினரிடமும், அதிகாரிகளிடமும் முறையிடுகிறார். “எல்லா இடங்களையும் கவர் பண்ணுப்பா” என்று உத்தரவிடுகிறார் காவல்துறை அதிகாரி. வீடியோகிராஃபர் சிரித்தபடியே டாக்டர் சுட்டிக் காட்டும் இடங்களையும் படம் எடுக்கிறார். ஆனால், தந்திரமாக கேமராவை ஆன் செய்யாமல் படம் பிடிப்பது போல் பாவனை செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியா அழைத்து வந்து தங்கள் கண்ணீர் கதைகளைச் சொல்லச் சொல்லி பதிவு செய்து கொள்கிறார்கள். எல்லாம் முடிந்தபின் அதிகாரிகளும் நிருபர்களும் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

 காட்சி எண் 10

இடம்: மக்கள் கண்காணிப்பு இயக்ககம்

நேரம்: மாலை 4.00 மணி

காவல் துறையைச் சார்ந்த இருவரும் வீடியோ கிராஃபரும் மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவரும் பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றில் காவல் துறைக்கு எதிராக இருக்கும் காட்சிகளை வெட்டி எறிகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த கண்ணீர் வாக்குமூலங்கள் முற்றாகச் சிதைக்கப்படுகின்றன. இறுக்கமான முகங்களுடன் எடிட்டிங் அறையை விட்டு வெளியே வருகிறார்கள். இனி கவலை இல்லை என்பது போல் ஒரு புன்னகை அவர்கள் முகத்தில் படர்கிறது. காவலர்கள் தங்கள் உயர் அதிகாரிக்கு அங்கிருந்தே போன் செய்து தகவலைத் தெரிவிக்கிறார்கள். மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவரும் பேசுகிறார். எல்லாம் முடிந்தபின் இரண்டு காவலர்களும் கை குலுக்கி விடை பெற்றுச் செல்கிறார்கள்.

 காட்சி எண்  11

இடம்: மலைப் பகுதி கிராமம்

நேரம்: இரவு

ஊர் மக்கள் கூட்டமாகக் குழுமி இருக்கிறார்கள். மக்கள் கண்காணிப்பு குழுவின் வக்கீல்கள் அவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கிறார்கள். மக்கள் நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். வக்கீல்கள், நீதிபதி முன் தைரியமாகப் பேசத் தயார்படுத்துகிறோம் என்ற போர்வையில் அவர்களது பேச்சின் ஜீவனை மட்டுப்படுத்தி தட்டையான மொழியாக ஆக்குகிறார்கள்.

வக்கீல் :        என்னம்மா நடந்தது?

பெண்  :        போலீஸ்காரங்க எங்களை நாயை அடிக்கற மாதிரி வெரட்டி வெரட்டி அடிச்சாங்கய்யா.

வக்கீல் :        அதாவது போலீஸ்காரங்க உங்கள அடிச்சாங்க. அப்படித்தான…

பெண்  :        ஆமாங்கய்யா.

வக்கீல் :        அவங்க போலீஸ்தான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

பெண் : இது என்ன கேள்வி ஐய்யா… காக்கி சட்டை போட்டுட்டு லத்தியை எடுத்துக்கிட்டு வேற யாருங்க வருவாங்க.

வக்கீல் : அப்படிச் சொல்ல முடியாதும்மா… போலீஸ்காரங்க மேல பழியைப் போடறதுக்காக வேற ஆட்களும் அப்படி வந்திருக்கலாம்ல…

அந்தப் பெண் குழம்புகிறார்.

வக்கீல் : சரி அதை விடுங்க. ஏம்மா அடிச்சாங்க.

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் :        அதைப் போலீஸ்கிட்ட போய் கேளுங்கள்.

வக்கீல் :        (திடுக்கிட்டுப் பின் சுதாரித்து) யாருப்பா அது இப்படிப் பேசறது நாளைக்கு ஜட்ஜ் ஐயா முன்னாலயும் இப்படித்தான் பேசுவியா.

(சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்கள்).

வக்கீல் :        வந்தவங்க ஏம்மா அடிச்சாங்க? நீங்க என்ன பண்ணீங்க?

பெண்  :        நாங்க எதுவுமே பண்ணலைய்யா. ரோடு போட்டுக் கொடுங்கன்னு கேட்டோம், காண்ட்ராக்டர் ஐயா தப்புத் தண்டா பண்றாரு, மாத்துங்கன்னு சொன்னோமய்யா. அதுக்குப் போய் இப்படிப் பண்ணிட்டாங்கய்யா. அவங்கள நிக்க வச்சுச் சுடணுங்கய்யா…

வக்கீல் :        இங்கப் பாருங்கம்மா. நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. இப்ப நடக்கப் போறது விசாரணை. அதாவது என்ன நடந்ததுன்னு விசாரிக்கப் போறாங்க. ஜட்ஜ் ஐயா தான் முடிவு பண்ணனும். தப்பு நடந்திருக்கா, யார் பண்ணினாங்கன்னு நீங்களே தீர்ப்பு சொல்லக் கூடாது. சரியா?

பெண்  :        இன்னும் என்னத்தய்யா விசாரிக்க வேண்டிக் கிடக்கு… அதான் பாக்கறீங்களே.

வக்கீல் :        அதில்லைம்மா எதுவுமே முறைப்படி நடக்கணும்.

கூட்டத்தில் இருப்பவர்  :        என்னய்யா முறை. உயிருக்குப் பயந்து ஓடறவனை வெரட்டி வெரட்டி அடிக்கறதுதான் முறையா. கூடி நிக்கறவங்கள ஒரு எச்சரிக்கைகூட செய்யாம சுட்டு விரட்டறதுதான் முறையா. முறையைப் பத்தி எங்ககிட்ட வந்து பேசாதீங்க. அங்க போய் பேசுங்க.

வக்கீல் :        இப்படி ஆத்திரப்பட்டுப் பேசறதால ஒண்ணும் பிரயோசனமில்லை. ஜட்ஜ் ஐயா கிட்ட பேசும் போது நிதானமா, கோபப்படாம பேசணும். அழக்கூடாது. நடந்தத மட்டும் சொல்லணும்.

பெண்  :        நாங்க என்னய்யா வேணும்னா அழறோம். நடந்தத நினைச்சுப் பார்த்தா அழுகதான்யா வருது. கோபம்தான்யா வருது.

வக்கீல் :        வரக் கூடாது. அப்படிச் செய்யக் கூடாது. உங்களுக்கு நீதி கிடைக்கணுமா வேண்டாமா?

பெண்  :        கிடைக்கணும்.

வக்கீல் :        நஷ்ட ஈடு கிடைக்கணுமா? வேண்டாமா?

பெண்  :        கிடைக்கணும்.

வக்கீல் :        அப்படின்னா நாங்க சொல்றபடி கேளுங்க. உங்களுக்கு நல்லது செய்யத்தான் நாங்க இருக்கோம். காவல்துறையில இருக்கறவங்களை அடையாளம் காட்டினா என்ன பண்ணுவான். நம்ம மேல இன்னும் கோபப்படுவான். ஏற்கெனவே ஐம்பது வீடு தாக்கப்பட்டிருக்கு. நாம கூட பத்திருபது வீட்டை வேற அடிச்சுப் போட்டு கணக்கைக் கூட்டிக் காட்டியிருக்கோம். அது அவங்களுக்குத் தெரிசிருச்சு.

பெண் : நாங்க அதெல்லாம் வேண்டாம்னுதான சொன்னோம். உங்க ஆளுங்கதான் வந்து அப்படிப் பண்ணிணீங்க.

வக்கீல் : அதெல்லாம் முடிஞ்ச கதை. இப்ப நாங்க சொல்றபடி கேளுங்க.  ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லட்சம் நஷ்ட ஈடு. செத்துப்போனவங்களுக்கு ஏதாவது வேலைகூட வாங்கித் தர முயற்சி செய்திட்டிருக்கோம். பொறுமையா இருங்க.

உரையாடல் தொடர்கிறது.

 காட்சி எண் 12

இடம்: அச்சகம்

நேரம்: மாலை 5.00 மணி

மக்கள் கண்காணிப்பு இயக்கத்தின் தலைவரும் உறுப்பினர்கள் சிலரும் அச்சகத்தில் அமர்ந்திருக்கின்றனர். அவர் முன்னால் இருக்கும் மேஜையில் ஒரு போஸ்டர் பிரதி விரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவர் சில திருத்தங்கள் சொல்கிறார். திருத்தப்பட்ட போஸ்டர் அச்சாகி வந்து சேர்கிறது. போஸ்டர்களை எடுத்துக் கொண்டு ஒருவன் செல்கிறான். பின்னாலேயே பசை வாளியை எடுத்துக் கொண்டு சிலர் உடன் செல்கிறார்கள். நகரின் முக்கியமான இடங்களில் எல்லாம் அந்தப் போஸ்டரை ஒட்டுகிறார்கள்.

காவல் துறையின் அராஜகத்தைக் கண்டித்தும்

உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லவும்

மக்கள் காண்காணிப்புக் குழுவின் சார்பில்

விசாரணைக் கமிஷன்.

(மக்கள் தீர்ப்பே… மகேசன் தீர்ப்பு)

பங்குபெறுவோர்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரமேஷ் கெளரிகர்

காவல் துறை ஆணையர் திரு. நல்லசிவம்

வருவாய் துறை ஆணையர் திரு. பாஸ்கரன்

பொது மக்கள் அனைவரும் தவறாமல் வருக.

அவர்கள் ஒட்டி விட்டுப் போன சிறிது நேரத்தில் அவற்றின் மேல் புதிய திரைப்படம் ஒன்றின் போஸ்டர் ஒட்டப்படுகிறது.

காட்சி எண் 13

இடம் : பத்திரிகை அலுவலகம்

நேரம் : காலை

தேங்கி நிற்கும் பெரிய குட்டைக்கு அருகில் இருக்கிறது அந்தப் பத்திரிகை அலுவலகம். அதன் பெரிய கிரில் கேட் முடப்பட்டே இருக்கிறது. நடந்து வருபவர்களும் சைக்கிள், பைக்கில் வருபவர்களும் சின்ன இடுக்கு ஒன்றின் வழியாக உடலை நெளித்து நுழைந்து செல்கின்றனர். தொழிலாளர்களின் சங்கக் கொடி கேட்டை ஒட்டி ஒரு ஓரமாக பயந்து பயந்து பறந்து கொண்டிருக்கிறது. துரத்தில் ஒரு கார் ஹார்னை ஒலித்தபடியே விரைந்து வருகிறது. அந்த ஒலியைக் கேட்டதும் அலுவலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது. செக்யூரிட்டிகள் விரைந்து ஓடிப் போய் கிரில் கேட்டை அகலத் திறக்கின்றனர். கார் மெதுவாக உள்ளே நுழைகிறது. மூடிய கார் கதவுகளுக்கு சல்யூட் வைக்கின்றன அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும். வாசலில் காத்துக் கொண்டிருந்த ஒரு சீருடை அணிந்தவர் கார் கதவைத் திறந்துவிடுகிறார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதம் இறங்கியவர் செல்போனில் யாருடனோ பேசியபடியே நடக்க ஆரம்பிக்கிறார். அவர் நடந்து செல்லும் பாதையில் குறுக்கிட்ட கதவுகள் உடன் வந்த சீருடைப் பணியாளரால் திறந்துவிடப்படுகிறது. எதிரில் நடந்து வந்தவர்கள் ஒதுங்கி வழிவிடுகின்றனர். நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்கின்றனர்.

அவர்கள் தெரிவித்த வணக்கத்துக்கு செல்போனில் பேசியபடியே அலட்சியமாக கை அசைத்தபடி நடக்கிறார் காரில் வந்தவர். ஒரு இடத்தில் பத்திரிகையின் நிறுவனரின் உருவப்படம் பிரமாண்டமாக ப்ளோஅப் செய்யப்பட்டிருக்கிறது. அதன் முன்னால் கண்ணை மூடியபடி சிறிது நேரம் நிற்கிறார். பின் மேனேஜிங் டைரக்டர் என்று எழுதப்பட்டிருந்த அறைக்குள் நுழைகிறார். அவரது லாப்டாப் கம்பூட்டரை ஒரு கையிலும் பிளாஸ்கை இன்னொரு கையிலும் பிடித்தபடியே சீருடைப் பணியாளரும் உள்ளே நுழைகிறார். அறையின் வாசலில் ஒருவர் பெரிய பேப்பர் ஒன்றை கையில் வைத்தபடி காத்துக் கொண்டிருக்கிறார். வாசலில் அமர்ந்திருந்த பி.ஏ. இண்டர்காம் ஒலித்ததும் எடுத்துப் பேசிவிட்டு உள்ளே நுழைகிறார். சிறிது நேரத்தில் கையில் பேப்பருடன் நின்று கொண்டிருந்தவரை உள்ளே அழைக்கிறார். அது ஒரு பெரிய போஸ்டர்… மேஜையில் அதை விரிக்கிறார். அருகில் இருந்தவரிடம் எம்.டி. சில திருத்தங்களைச் சொல்கிறார். பி.ஏ. பக்கம் திரும்பி எடிட்டரை வரச் சொல்லு என்கிறார். பி.ஏ. போய் அவரை அழைத்து வருகிறார். வரும் எடிட்டர் மேஜையில் இருக்கும் போஸ்டரைப் பார்க்கிறார்.

எம்.டி. : இது இவ சொன்னதுதான…?

எடிட்டர் : ஆமாம் சார்…

எம்.டி. : கேஸட் நீங்க கேட்டீங்கள்லயா…

எடிட்டர் : ஆமாம் சார்.

எம்.டி. : தெளிவா ரெக்கார்டிங் ஆகியிருந்தது இல்லையா…

எடிட்டர் : ஆமா சார். கொஞ்சம் தைரியமான பொண்ணுதான். அதுவும் போக மார்கெட்டைத் தக்க வெச்சுக்க இந்த மாதிரி பேசறது செய்யறது சகஜம் தான…

எம்.டி. : எனக்கு என்ன சந்தேகம்ன்னா இப்பயும் அதைத்தான செய்யறா…

எடிட்டர் சத்தம் போட்டுச் சிரிக்கிறார்.

எம்.டி : கொஞ்சம் தள்ளிப் பிடி என்கிறார் பணியாளரிடம். அவர் அதை எடுத்துக் கொண்டு போய் எதிர் சுவரில் இருந்த போர்ட் ஒன்றில் பிரஸ் பட்டன் மூலம் ஒட்டுகிறார்.

நான் நடிக்க வந்திருக்காவிட்டால் விபச்சாரியாகி இருப்பேன்- நம்பர் ஒன் நடிகையின் நம்பர் ஒன் பேட்டி என்று கொட்டை எழுத்துகளில், எழுதப்பட்டிருக்கிறது. மேலே ஒரு நடிகை கோன் ஐஸ் ஒன்றை ரசித்து ருசித்துச் சாப்பிட்டபடி இருக்கிறாள்.

எம்.டி. தன் மேஜையில் சென்று அமர்கிறார். எடிட்டர் முன்னால் இருக்கும் நாற்காலியில் அமர்கிறார்.

அப்போது அறைக் கதவு தட்டப்படுகிறது.

எம்.டி: யெஸ்… கமின்.

ஒரு பெண் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறாள்.

எடிட்டருக்கும் எம்.டிக்கும் குட்மர்னிங் சொல்கிறாள்.

பெண் : விசாரனைக் கமிஷன் கவர் பண்ணப் போறேன் சார்…

எம்.டி.: கூட யார் வர்றா…

பெண் : ஜெனிஃபரும் எழிலும் சார்.

எம்.டி. சிறிது நேரம் அவளையே கூர்ந்து பார்க்கிறார்.

எம்.டி.: யார் இந்த அசைன்மென்ட்ட உங்களுக்கு அலாட் பண்ணினது…

பெண் : சிவகுமார் சார்தான் சார்.

எம்.டி. : சிவாவை வரச் சொல்லிட்டுப் போ…

பெண் : ஓ.கே.சார். அப்போ நாங்க பொறப்படலாம் இல்லையா…

எம்.டி. : எத்தனை மணிக்கு ஆரம்பம்

பெண் : 9.00 மணிக்கு சார். இப்ப மணி 7.30 ஆகிறது. இப்ப புறப்பட்டுப் போனாத்தான் சரியா இருக்கும்.

எம்.டி. : கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் சிவாகிட்ட சொல்லி அனுப்பறேன்.

பெண் : சரி சார்.

பெண் போன சற்று நேரத்தில் சிவா பயந்தபடியே உள்ளே நுழைகிறார்.

சிவா : வளர்மதியையும் ஜெனிஃப்ரையும் தவிர வேற யாரும் இப்போ இல்லை சார். அதான்…

எம்.டி: (பெருமுச்சு விட்டபடியே) : இந்த கமிஷன் இன்னிக்குன்னு உங்களுக்கு எப்ப தெரியும்..?

சிவா தலை குனிந்தபடியே நிற்கிறார்.

எம்.டி.: பதில் சொல்லுங்க சிவா… நான் உங்க கிட்டதான் கேக்கறேன்.

சிவா: ஒரு வாரத்துக்கு முன்னாலயே தெரியும் சார். கல்யாணியையும் அருணையும் அனுப்பறதாதான் இருந்தேன். நேத்திக்கு முடிய வேண்டிய ஒரு அசைன்மென்ட் கொஞ்சம் இழுத்திடுச்சு… எப்படியும் நாம பாத்தப் பெறகுதானே பிரிண்ட் ஆகப் போறதுன்னு…

எம்.டி. ஓ.கோ. அப்படியா… இட் ஈஸ் அ நியூஸ் ஃபார் மீ. (எடிட்டர் பக்கம் திரும்பி) அப்போ ரிப்போர்ட்டர்கள் எழுதறது அப்படியே பிரிண்ட் ஆறது இல்லையா… நாம பாத்துட்டுத்தான் பிரிண்ட் ஆறதா எல்லாம். எத்தனை நாளா இப்படி நடக்கறது…?

எடிட்டர் மெல்லச் சிரிக்கிறார்.

சிவா : வேற யாரையாவது அனுப்பறேன் சார்…

எம்.டி. கம்ப்யூட்டரில் எதையோ மும்மரமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்.

சிறீது நேரம் கழித்து சிவா தயங்கியபடியே. : அப்போ நான் போகலாமா சார்…

எம்.டி நிமிர்ந்து பார்த்து : நீங்க இன்னும் போகலையா… (மீண்டும் கம்ப்யூட்டரில் ஆழ்கிறார்)

சிவா வணங்கிவிட்டு பின்பக்கமாக நடந்தபடியே வெளியேறுகிறார்.

காட்சி எண் 14

இடம் : உதவி ஆசிரியர் அறை

நேரம் : காலை

ஜெனிஃபரும் வளர்மதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

சிவா தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்.

சிவா : நேரா நீங்க ரெண்டு பேரும் அங்க போய் சேந்துடுங்க. நான் ஃபோட்டோகிராபரை அனுப்பி வைக்கறேன். அட்ரஸ் தெரியும்லியா… இல்லைனா வளர் கிட்ட கேட்டுக்கோ. ஓ.கே.

எதிர்முனை : எத்தனை பக்கத்துக்கு மேட்டர் வெணும் சார்…

சிவா : நாலு பக்கம் அலாட் ஆகி இருக்கு. விளம்பரம் வர்றதைப் பொறுத்து மாறும். நீ வளவளன்னு எழுதாத. 9.00 மணிக்கு ஆரம்பிச்சுடும். நீ போய் சேந்துடுவ இல்லையா…

எதிர்முனை : ஆமா… சார். எங்க வீட்டுல இருந்து பக்கம்தான். அருண் வந்ததும் பொறப்பட்டுப் போயிடுவேன்.

சிவா : அவனுக்காக நீ காத்திருக்க வேண்டாம். நேரா ஹாலுக்குப் போயிடு. அவனை அங்க வரச் சொல்லிடு. சரியா…?

போனை வைத்துவிட்டு வளர்மதி, ஜெனிபர் பக்கம் திரும்புகிறார்.

சிவா : உங்களுக்கு வேற ஒரு வொர்க் வந்திருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் கூப்பிடறேன். அப்பறம் அந்த விசாரணைக் கமிஷன் நடக்கற இடத்தோட அட்ரஸை கல்யாணிக்கு போன் பண்ணிச் சொல்லிடு.

ஜெனிஃபர் : கல்யாணியை அனுப்பறதுக்கு பேசாம அந்த மேட்டரைப் போடாமலே இருக்கலாம்.

சிவா : ஓ.கே. இட்ஸ் ஆல் இன் த கேம். வேற என்ன பண்ண..? நீங்க வெயிட் பண்ணுங்க. ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு கூப்படறேன். எங்கயும் போயிட வேண்டாம்.

காட்சி எண் 15

இடம் : முதலமைச்சர் அறை

நேரம் : காலை

ஒரு நீண்ட மேஜையின் இரு பக்க நாற்காலிகளும் காலியாக இருக்கின்றன. நடுவில் இருக்கும் நாற்காலியின் மேல் ஒரு மஞ்சள் துண்டு போடப்பட்டிருக்கிறது. பின்னணியில் கண்ணகி நீதி கேட்கும் போஸில் முதலமைச்சர் ஆவேசமாக கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ப்ளோஅப் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.

குரல் மட்டும் கேட்கிறது.

நிருபர் : உங்களோட ஆட்சியில இப்படி நடந்ததுங்கறதைப் பார்க்கும் போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.

முதலமைச்சர் : என் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சதி வேலை இது.

(ப்ளோ அப் செய்யப்பட்ட படம் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகிறது)

நிருபர் : மலைப்பகுதியில் நடந்த அராஜகத்துக்கு நீதி கேட்டு அணிதிரண்ட போராட்டக்காரர்கள் அமைதியாகத்தானே இருந்தார்கள். காவல்துறைதானே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. பேரணிக்கு வந்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். வெளி ஊர்களில் இருந்து வந்த கட்சிப் பிரமுகர்களின் வாகனங்கள் எல்லாம் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டுத்தான் அனுப்பப்பட்டிருந்தன. அனைவரும் நிராயுதபாணியாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் : போராட்டக்காரர்கள் அமைதியாகத்தான் போராடினார்கள். ஆனா கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து விட்டிருந்தனர். அவர்கள்தான் திசை திருப்பிவிட்டார்கள்.

(ப்ளோ அப் படத்தில் திராவிட பாணியில் அமைந்த வேஷ்டி பிராமண பாணியில் மாறுகிறது.) போராட்டத் தலைவரைக் கொல்லக்கூட அன்று அவர்கள் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் கிடைத்திருந்தன. அதனால்தான் அன்றைய பேரணிக்கு நான் அனுமதி தரவே மறுத்திருந்தேன்.

(படத்தில் அவர் அணிந்திருந்த சட்டை மறைந்து போகிறது.)

பெண் காவலர்களிடம் மிக மோசமாகப் பலர் நடந்து கொண்டிருக்கின்றனர். தேனியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற காவலரையும் அவருடன் இருந்த வேறு சிலரையும் கையைப் பிடித்து இழுத்து மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

(திறந்த மார்பில் ஒரு பூணூல் முளைக்கிறது)

அவர்கள் உண்மையிலேயே போராட்டக்காரர்கள் அல்ல. போராட்டத்தை திசை திருப்ப எதிர்கட்சியினரால் அனுப்பப்பட்டவர்கள். காவல்துறை ஆணையர் கூட அது போன்ற ஆட்களின் மீது மட்டுமே பலத்தைப் பிரயோகித்துள்ளார்.

நிருபர் : மலைப்பகுதியில் வீடு புகுந்து அடிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தீ வைக்கபட்டுள்ளன. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன…

முதலமைச்சர் : இவை எல்லாம் காவலர்கள் செய்தவை அல்ல. பரிதாபத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்றும் பிரச்னையைப் பெரிதாக்க வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் நடத்தும் நாடகம். கலவரம் நடந்ததாகச் சொல்லப்பட்ட உடனேயே அங்கு சென்ற புகைப்படக்காரர்களும் விடியோகிராபர்களும் எடுத்த படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நீங்கள் சொல்லும்படியான விஷயங்கள் எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லையே…

(நெற்றியில் நாமம் ஒன்று தீட்டப்படுகிறது. தலை முடி மழிக்கப்பட்டு குடுமி முளைக்கிறது)

23THEDPAGE_SKETCH_1404322eநிருபர் : அப்படியானால் பாதிக்கப்பட்ட மக்களே தங்கள் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொண்டிருக்கிறர்கள் என்று சொல்லவருகிறீர்களா…?

முதலமைச்சர் : அப்படிச் சொல்லவில்லை. எதிர்க்கட்சியினரின் கைப்பாவையாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்.

நிருபர் : முதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அதிக சேதம் எதுவும் தெரியவில்லையே என்று சொல்கிறீர்கள். அப்படியானால் நஷ்ட ஈடு மட்டும் ஏன் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று அறிவித்தீர்கள்… சேதம்தான் பெரிதாக இல்லையே…

முதலமைச்சர் : நான் என் மக்களின் மீது அதிக கருணையோடு நடந்து கொள்வதுகூடத் தவறாகவே பார்க்கப்படுகிறது. மிகுந்த வேதனையைத்தான் தருகிறது இது.

(இப்போது முழுப் படமும் காட்டப்படுகிறது. திராவிடத் தலைவர்,  அப்பட்டமான கள்ள பார்ப்பானாகிவிட்டிருக்கிறார்).

0

Share/Bookmark


முட்டுச்சந்தில் பா.ம.க : ஆழம் ஜூன் 2013

$
0
0

june-2013

ஆழம் ஜூன் 2013 இதழில் வெளிவந்துள்ள படைப்புகள் குறித்து ஓர் அறிமுகம்.

கவர் ஸ்டோரி

பாமக : முன்னேற்றமா முட்டுச்சந்தா? – ஆர். முத்துக்குமார்

  • சாதியப் பாதை, கூட்டணிப் பாதை, மாற்றுப்பாதை என்று பா.ம.க இதுவரை தேர்ந்தெடுத்து பயணம் செய்துள்ள மூன்று பாதைகளையும் அலசும் கட்டுரை. பா.ம.கவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்? டாக்டர் ராமதாஸ் அரசியல் அரங்கிலிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டாரா?

‘தப்பு செய்தவன் விசாரணை கோருவானா?’ கவிஞர் ஜெயபாஸ்கரன் பேட்டி – வித்தகன்

  • பா.ம.க. தரப்பு நியாயங்களை முன்னிறுத்துகிறார் அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயாகஸ்கரன்.

கலவரங்களும் இழப்புகளும் – எஸ். சம்பத்

  • ஒவ்வொருமுறை சாதிக் கலவரம் (அல்லது வேறு கலவரங்கள்) வெடிக்கும்போதும் பேருந்துகள் தாக்கப்படுவது வழக்கம். இதற்கு யார் நஷ்ட ஈடு தருகிறார்கள்? பதிவுசெய்யப்படும் வழக்குகள் என்ன ஆகின்றன?

சாதிக்கட்சி தேவையா? – சி. இராஜாராம்

சாதியை முன்வைத்து டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்துள்ள போராட்டம் தமிழகத்தை எங்கே அழைத்துச் செல்லும்? வரலாறு என்ன சொல்கிறது? வரலாற்றில் இருந்து நாம் பாடங்கள் கற்கிறோமா அல்லது அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறோமா?

விளையாட்டு / ஊழல்

ஐபிஎல் சூது கவ்வும் – ச.ந. கண்ணன்

  • கிரிக்கெட்டுக்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்பையும் இதற்கு முன்னால் சர்ச்சையில் சிக்கியவர்களையும் விவரிக்கும் கட்டுரை.

பேட்டி 

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை! – வசந்தி தேவி

  • இன்றைய கல்விமுறையில் உள்ள பிரச்னைகள் குறித்து முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியுடன் பி.ஆர். மகாதேவன் மேற்கொண்டுள்ள உரையாடல்.

அரசியல் / சமூகம்

  • கர்நாடகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – ஜனனி ரமேஷ்
  • சிபிஐ சுதந்தரமானதா? S.P. சொக்கலிங்கம்
  • குழந்தைகள்மீதான வன்முறைகள் குறித்து ரஞ்சனி நாராயணன்
  • டெல்லி குற்றத் தலைநகர் ஆனது ஏன் என்பதை ஆராய்கிறார் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ருஷ்தா நக்வி.
  • மின்சாரப் பற்றாக்குறையைச் சரிசெய்வது எப்படி? தமிழகம் குஜராத்திடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள் என்னென்ன? புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் லஷ்மண பெருமாள்.
  • 2002 குஜராத் கலவரம் மட்டும்தான் இந்தியாவில் நடைபெற்ற ஒரே வன்முறைச் சம்பவமா, மோடி மட்டும்தான் ஒரே வில்லனா என்று கேள்வி எழுப்புகிறார் மகாதேவன்.
  • சாரதா நிறுவனத்தின் சீட்டுப் பண மோசடி பற்றி விரிவாக அலசுகிறார் ரமணன்.
  • நேருவின் தவறு தொடர்கிறது : EPW இதழில் நெவில் மாக்ஸ்வெல் எழுதிய இந்திய-சீன போர் அபாயம் குறித்த கட்டுரையின் தமிழாக்கம்.

0

ஆழம் இணையத்தளம்.

ஆழம் முந்தைய இதழ்கள் pdf வடிவில்.

சந்தா விவரம்.

Share/Bookmark

புத்தர் : ஒரு சிந்தனையாளரின் கதை

$
0
0

புரட்சி / அத்தியாயம் 6

buddhaமதம் தொடர்பான சமூகவியல் துறையின் தந்தை என்று கருதப்படும் மாக்ஸ் வெபர் பௌத்தத்தை கீழ்வருமாறு மதிப்பிடுகிறார். ‘பௌத்தத்தை ஒரு சமூக இயக்கம் என்று சொல்லமுடியாது. அரசியல்ரீதியாகவோ சமூகரீதியாகவோ பௌத்தத்துக்கு எந்தவித லட்சியங்களும் இல்லை. … வேற்றுலகைச் சேர்ந்த ஒரு மதம் என்றுதான் பௌத்தத்தை அழைக்கமுடியும்.’

மார்க்சிய வரலாற்றாசிரியரான டி.டி. கோசாம்பி இந்த வாதத்தை மறுக்கிறார். ‘மாக்ஸ் வெபர் போன்றவர்கள் பௌத்த மூலநூல்களை ஆழ்ந்து கற்கவில்லை என்பது தெரிகிறது. ஆரம்ப கால பௌத்தம் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட பொருளாதார, அரசியல் தத்துவங்களை உள்ளடக்கியிருந்தது’ என்கிறார் கோசாம்பி. பௌத்தம் என்பது துறவிகளுக்கான மதம், அதைச் சாமானியர்கள் புரிந்துகொள்ளமுடியாது என்னும் வாதத்தையும் கோசாம்பி மறுக்கிறார். புத்தர் ஒரு தலைசிறந்த அரசியல் முற்போக்காளர் என்கிறார் சி.எஃப். கொப்பென். பௌத்தத்தில் கடவுள் என்பது இல்லை என்பதால் அனைத்து மதங்களையும் கடுமையாக விமரிசித்த கார்ல் மார்க்ஸ் பௌத்தத்தை மட்டும் தொடாமல் விட்டுவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார் ட்ரெவார் லிங்.

பௌத்தம் என்பது ஒரு சமூகத் தேவையை ஒட்டி மலர்ந்த கொள்கை என்கிறார் எம்.என். ராய். இதைப் பற்றி மேலதிகம் பார்ப்பதற்கு முன்னால் புத்தர் வாழ்ந்த காலகட்டம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. புத்தர் யாரை எதிர்த்து அல்லது யாரை ஆதரித்து தன் கொள்கைகளை வடிவமைத்துக்கொண்டார் என்பதை முதலில் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் அறிமுகம் இது. ‘அக்காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் கொடிய அடக்குமுறை காணப்பட்டது. குறிப்பாக மகதம், கோசலம் ஆகிய நாடுகளில் பழங்குடி சமுதாயம் அழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பேராசை, வெறித்தனமான காம இச்சை, கீழ்த்தரமான பேராசை, பொதுச் சொத்துகளைச் சூறையாடுதல், வரிப்பளு, ஊதாரித்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்றவை மக்களின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரைத் தோற்றுவித்தன… மல்லர்கள், வஜ்ஜிகள், சாக்கியர்கள் போன்றோர் இன்னமும் பழங்குடியினரின் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். புத்தர் சாக்கிய மரபைச் சேர்ந்தவர். அவர் தனது பழங்குடிப் பெருமையை எப்போதும் மறக்கவில்லை.’

புத்தர் தன்னை ஒரு பழங்குடியினராகவே அடையாளம் கண்டார் என்பதையும் தனது மரபின்மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். சுதந்தரம், சமத்துவம் போன்ற கொள்கைகள்மீது பற்றுள்ளவர்களாக பழங்குடிகள் இருந்தனர். ஆனால் அந்தக் கொள்கைகள் ஆளும் அரசுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. நிலத்துக்கான தேவைகள் பெருகியபோது இன்று நடப்பதைப் போலவே அன்றும் பழங்குடிகள்மீது அரசு போர் தொடுத்தது. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘அரசை விரிவுபடுத்த வனத்தை அழிப்பதைப் போலப் பரந்துபட்ட அளவிலிருந்த பழங்குடிகளை அழித்தனர். அரசுகள் பழங்குடியினரை அடிமைப்படுத்தவும், அழிக்கவும் முற்பட்டன. புத்தர் காலத்தில் வாழ்ந்த கோசல மன்னன் விதூதபன் சாக்கியர்களைக் கொடூரமாகக் கொன்று குவிந்தான். புத்தருடைய உறவினர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதே கதிக்கு ஆளாயினர். ’

வாழும் மக்களை விரட்டியடித்து நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் பேராசை புத்தரை உலுக்கியெடுத்திருக்கவேண்டும். பேராசை கொண்டவர்களை அந்த ஆசையே அழித்தொழிக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ‘ஒரு மன்னன் உலகிலுள்ள ராஜ்ஜியங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டாலும், கடலுக்கு அப்பாலுள்ள நிலத்தையும் அபகரிக்கவேண்டுமென்ற ஆசை அவனுக்கு வரும்.’ என்றார் புத்தர்.

புதிய வரிகள், அடிமைத்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல், அடமானம் வைத்தல், வட்டி, ஊதாரித்தனம் போன்ற பழக்கங்கள் அப்போது நிலவிவந்தன என்பது புத்த ஜாதகக் கதைகள்மூலம் தெரியவருகின்றன. ‘புத்தரே இவை அனைத்தையும் கண்டார். ஆனால் என்ன செய்யமுடியும்? அவரால் கடவுளை நம்பமுடியவில்லை. தன்னைச் சுற்றிக் காணப்படும் துன்பங்களுக்குப் பிரார்த்தனைகளும் யக்ஞங்களும் எவ்வித பலனையும் அளிக்காது என்று புத்தர் கருதினார்.’ என்கிறார் தேவிபிரசாத். தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே புத்தரின் அணுகுமுறையாக இருந்தது. பிரச்னைகள் யதார்த்தமானவை. நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று புத்தர் நினைத்தார். ‘புத்தர் முன்வைத்த கடவுள் மறுப்பு அல்லது நாத்திகவாத கருத்துகளை அஸ்வகோஷர் எடுத்துச் சொல்கிறார். துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் புத்தர். உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார்.’

அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார். தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர். வாழ்க்கைக்குத் தொடர்பற்ற தத்துவார்த்த கேள்விகள் கேட்கப்பட்டபோது புத்தர் மௌனம் சாதித்தார். அவரைப் பாதித்த அம்சம் ஒன்றுதான். எங்கு நோக்கிலும் துன்பங்கள் காணப்படுவது ஏன்?

உலகிலுள்ள பிரச்னைகள் மெய்யானவை என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. இதற்கு தீர்வு என்ன? ‘வரலாற்றுரீதியான வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி மனித உற்பத்திச் சக்தியைப் பிரம்மாண்டமான அளவுக்குப் பெருக்கி, அனைவருக்கும் அனைத்தையும் அளிக்கவேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் உற்பத்திச் சக்தி பெருகி, அதன் காரணமாக சுரண்டலும் அதிகரித்து, துயரம் தாங்கொணா நிலைமைக்கு வளர்ந்ததுதான் புத்தர்காலச் சூழல்.’

சுரண்டலை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்னும் புரட்சிகரமானத் தீர்வை புத்தர் முன்வைக்கவில்லை. அவர் சற்றே அடக்கத்துடன் தனிநபர் சிந்தனை சார்ந்து ஒரு யோசனையை முன்வைத்தார். ‘உள்ளத்தில் உருவாகும் போதைகளான ஆசைகளை அடக்கவேண்டும்.’ ஏன் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவில்லை என்னும் கார்ல் மார்க்ஸின் புரட்சிகரமான கேள்வியை புத்தரால் எழுப்பமுடியாமல் போனதற்காக அவரைக் குற்றம் சொல்லமுடியாது.

புத்தர் உலகைத் தார்மிகரீதியில் மாற்றியமைக்க விரும்பினார். நம்பிக்கை, உறுதி, நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற மதிப்புகளை மீட்டெடுக்க விரும்பினார். தன் காலத்தில் இத்தகைய மதிப்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதை அவர் கண்டார். அடிப்படை ஒழுக்கம் இல்லாத, பகுத்தறிவு தொலைத்த ஒரு சமூகத்தை அவர் வெறுத்தார். அதே சமயம் சமூக மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவருவதில் உள்ள சிரமங்களையும் அவர் அறிந்திருந்தார். ஒரே நாளில் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிடமுடியும் என்று அவர் நம்பவில்லை. தீமைகள் நிறைந்த சமூகத்தில் இருந்து வெளியேறி சங்கங்களில் மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் கட்டளையிட்டார்.

இந்தச் சங்கங்கள் எந்த வகையில் சமூகத்தில் இருந்து மாறுபட்டிருந்தன? ஏன் அங்கே மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் விரும்பினார்? தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா பதிலளிக்கிறார். ‘பிட்சுக்கள் வாழும் சங்கங்களில் நிலைமைகள் வேறாக இருந்தன. அது பழங்குடியினரின் கூட்டு வாழ்க்கை போல் இருந்தது. அந்தச் சங்கங்களில் தனிச்சொத்து இல்லை. முழு அளவில் சமத்துவமும், ஜனநாயகமும் நிலவின. இவற்றில் பழங்காலச் சமுதாயத்தின் பெருமையைக் கொண்டுவரமுடியும் என்றார் புத்தர். இச்சங்கங்கள் வர்க்க சமுதாயத்துக்குள் வர்க்கமற்ற சமுதாயமாக, இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைõயின் ஆன்மாவாகவும் இருந்தன.’

முதலாளித்துவச் சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் சாத்தியமில்லை, எனவே நமக்கான சமூகத்தை நாமே கட்டியமைத்துக்கொள்ளலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். வர்க்கச் சுரண்டலை ஒழித்து, உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் ஆக்கி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டவேண்டியதன் அவசியத்தை மார்க்சியம் பின்வரும் காலங்களில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியது. புத்தர் தன் காலத்துச் சமூகச் சிக்கல்களுக்கு மாற்றாகச் சங்கங்களை சுட்டிக்காட்டினார். மார்க்ஸைப் போலவே புத்தர் தனிச்சொத்துரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பௌத்த சங்கங்களில் தனிச்சொத்துரிமை மறுக்கப்பட்டது.

தனிச்சொத்துரிமையை புத்தர் ஏன் தீவிரமாக எதிர்த்தார் என்பதை பௌத்தக் கோட்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ஸ்ட்செர்பார்ஸ்கி (Stcherbatsky விளக்குகிறார். ‘தனிநபர் ஒருவர் எங்கு உள்ளாரோ அங்கு அவருக்குச் சொத்து உள்ளது. எங்கு நான் இருக்கிறேனோ அங்கு என்னுடையதும் இருக்கிறது. எங்குத் தனிச்சொத்து இருக்கிறதோ, அங்கு அதன்மீது ஏதோ ஒரு வடிவில் கட்டாயம் பாசம் வரும். தனிச்சொத்தின் மீதான இந்த ஈடுபாடே அனைத்து தீமைகளுக்கும் மூலவேராகும். ஒவ்வொரு தனித்த செயல்பாடுகளுக்கும், சமூக அநீதிக்கும் மூலகாரணமாகும்… தனிநபர் இல்லாதபோது தனிநபர்ச் சொத்துரிமை எவ்வாறு இருக்கமுடியும்? எனவே தனிநபர்ச் சொத்துரிமையை, சாதாரண சொத்துகளை மட்டுமல்ல, குடும்பம், வீடு போன்றவற்றையும் என்றென்றைக்கும் யார் ஒருவர் கைவிடுகிறாரோ அவரே உண்மையான பௌத்தராக இருப்பார். உலக மதங்களின் வரலாற்றில் (கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவற்றில்) சொத்துரிமை மறுப்பு மற்றும் அவற்றைக் கைவிட வலியுறுத்தும் கோட்பாடுகளை ஆங்காங்கே நாம் காணலாம். ஆனால், பௌத்தம் இப்பிரச்னையைத் தீவிரமாக அணுகியது.’

தனிச்சொத்துரிமை குறித்த புத்தரின் கருத்தாக்கத்தை நீட்டித்தால் புரட்சிகரமான தத்துவம் ஒன்றும் நமக்கும் கிடைக்கும். அதை தேவிபிரசாத் வார்த்தைகளில் கேட்போம். ‘மனிதனின் விடுதலைக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்கச் சுரண்டலில் இருந்து விடுதலை பெற உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையை ஒழிப்பதுதான் அடிப்படையான முன் நிபந்தனை. எனவே, சமுதாயத்தின் வர்க்கக் கூட்டமைப்பைத் தூக்கியெறிவது ஒன்றே சரியான வழி.’ புத்தர் தனிச்சொத்துரிமையை நிராகரிக்க மட்டுமே சொல்கிறார். சொத்துரிமை கொண்டிருக்கும் சமூகத்தைத் தூக்கியெறிந்துவிடச் சொல்லவில்லை. இருந்தாலும், புத்தரின் அணுகுமுறை தனிச்சொத்துரிமையைக் கொண்டிருப்பதன் முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில், அவர் காலத்தில் அது ஒரு புரட்சிகரமான கொள்கை. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘தனிச்சொத்துரிமையை ஒழிப்பது என்ற புத்தரின் கோரிக்கை சமுதாயத்தில் தனிப்பட்ட சில பகுதிகளில் மட்டும் உள்ளவற்றை ஒழிப்பதாகும். இது வரலாற்றுரீதியாகப் பக்குவமடையாத நிலை. தனிச்சொத்துடைமையை சமுதாயத்திலிருந்து அறவே ஒழிக்கக்கூடிய நிலைமை அங்கு வரவில்லை.’

செல்வம் எப்படிச் சேர்கிறது? போர்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் துன்மார்க்கத்தின்மூலம் என்கிறார் புத்தர். இந்த வழிகளில் மட்டுமே செல்வம் சேர்கிறது என்று இன்றைய தேதியில் கொள்ளமுடியாது என்றபோதும் பெரும்செல்வம் சேர்வதற்கு இவையே பிரதான வழிகள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்று உலகின் வளர்ந்த நாடுகள் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதையும் ஏழைமை நாடுகள் ஏன் அவ்வாறு இருக்கின்றன என்பதையும் வரலாற்று நோக்கில் ஆராய்ந்தால் இரண்டுக்கும் இடையிலான தொடர்பும் வேறுபாடும் புரியவரும். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்கா அடிமை நாடாகவும் பின்தங்கிய இருண்ட கண்டமாகவும் இருந்ததற்கு ஆப்பிரிக்கா மட்டுமேவா காரணம்?

இதைத் தொடர்ந்து புத்தர் வந்தடைந்த முடிவு புரட்சிகரமானது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் போலவே செல்வத்துக்கும் ஒரு முடிவு வரும். அனைத்தையும் போல் செல்வமும் மறைந்துவிடும். இதைத் தடுக்கமுடியாது. எனவே, நிலையற்ற இந்த செல்வத்தைத் தேடி வாழ்வை வீணாக்கவேண்டாம், சொத்துகளைக் குவித்துக்கொள்ளும் பொருட்டு போரிட்டுச் சாகவேண்டாம் என்றார் புத்தர். புத்தர் தனியுடைமையை நிராகரிப்பது என்பது ஆன்மாவையும் தனிப்பட்ட சொத்துரிமையையும் நிராகரிப்பது என்ற முடிவின் விளைவு என்கிறார் ஸ்ட்செர்பார்ஸ்கி.

குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் எங்கெல்ஸ் கீழ்வருமாறு எழுதுகிறார். ‘கேவலம் சொத்து தேடும் வாழ்க்கை மனித குலத்தின் இறுதியான தலைவிதி அல்ல. நாகரிகம் தொடங்கியதிலிருந்து கழிந்திருக்கிற காலம் இருக்கிறதே, அது சென்ற காலத்திலிருந்து மனிதன் வாழ்ந்திருந்த காலத்தில் ஒரு சிறு பகுதியே ஆகும். பின்னால் வரப்போகும் யுகங்களின் ஒரு சிறு பகுதியே ஆகும். சமுதாயத்தின் மறைவு என்பது சொத்தையே குறிக்கோளாகவும் இலக்காகவும் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் முடிவுதான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சுயநாசத்துக்குரிய அம்சங்களைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறது.’

புத்தர் தன் காலச்சூழலுக்கு ஏற்றவாறு இதைச் சொன்னார். ‘சாதாரண சொத்து மனித குலத்தின் இறுதி லட்சியமாக இருக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அது தோன்றுவதும் எதிர்காலத்தில் அது உதிர்வதும் தவிர்க்கவியலாதது.’

 (அடுத்த பகுதி – புத்தர் : ஒரு போராளியின் கதை)

Share/Bookmark

யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள்?

$
0
0

mirrorஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  8

சமீபத்தில் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். சுமார் 4000 பேர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசினேன்.

அப்போது நடைபெற்ற கேள்வி-பதில் பகுதியில், ஒருவர்: ‘நீங்கள் மிகப் பெரிய
சாதனைகள் செய்திருக்கிறீர்கள். பலருக்கும் மிகப் பெரும் தன்னம்பிக்கை உண்டாக்கக்கூடிய மனிதராக இருக்கிறீர்கள். அநேகர் உங்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக ஒரு கேள்வி. உங்களுக்கு எதிர்காலத்தில் அதிசயமாக vision வந்தால் யாரை முதலில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த நான் : ‘உங்கள் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆனால் அதில் அடக்கத்தோடு ஒரு சின்னத் திருத்தம். எனக்கு vision வரவேண்டும்
என்கிற அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. sight தான் இல்லை.’ என்றேன்.

நிறைய பேர் இந்தக் கேள்விக்குப் பதிலாக, என் அம்மாவையோ, அப்பாவையோ, சகோதர சகோதரிகளையோ, உற்ற நண்பர்களையோ சொல்வேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் அவர்களையெல்லாம் ஏற்கெனவே பார்த்துக்கொண்டு இருப்பதாகத்தான் உணர்கிறேன். பார்வையிருந்தால்தான் பார்க்க முடியும் என்றில்லையே.

நான் சொன்னேன். ‘அப்படி ஒருவேளை எனக்கு ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் பார்வை
திரும்பக் கிடைத்தால், நான் முதலில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைத்தான்
கேட்பேன்.’

அந்தப் பதிலை எவரும் எதிர்பார்க்கவில்லை. கைதட்டல் அடங்க கொஞ்சம் நேரம் பிடித்தது.

இந்தப் பதிலை கேட்கும் சிலருக்கு நான் ஏதோ தற்பெருமை பிடித்தவன் என்று கூட
தோன்றலாம். அப்படி அல்ல… முதலில் நாம் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
புரிந்துகொள்ளவேண்டும். சுயமுன்னேற்றத்தின் அடிப்படை விதியே ‘நீ முதலில் உன்னைத் தெரிந்துகொள்’ என்பது தான்.

நான் ஏற்கெனவே என்னைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். அப்படி இருக்க ஏன் என்னைப் பார்க்க கண்ணாடி வேண்டும் என்று கேட்டேனென்றால்… எனது தோற்றத்தைப் பற்றிய சுய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறேன். அதை இதன் மூலம் உறுதி செய்துகொள்வேன். இறுதி செய்துகொள்வேன். மேலும், முதலில் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதில்தான் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்….
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கும் வரிகள் எத்தனை பொருள் பொதிந்தவை!

விஷன் மற்றும் சைட் இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டையும் இங்கேயே பார்த்துவிடுவோம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர். (குறள் 427)

பொருள் : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சைட் என்பது பெரு பிரதிபலிப்பு, அவ்வளவே. விஷன் என்பது அப்படியல்ல. அதையும் தாண்டி ஊடுருவி தொலைநோக்கோடு பார்ப்பது.

எனவே பார்வையுடையவர்கள் அனைவரும் vision-ம் பெறவேண்டும் என்பதே என் ஆசை!

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், நீங்கள் மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை எல்லாம் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு உங்களைப் பற்றிய உங்கள் சுயமதீப்பீடு என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அது சரிதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் தெரிந்துகொண்டால்தான் இந்த உலகில் தொலைந்துபோகாமல் இருக்க முடியும். அதாவது உங்கள் தனித் தன்மையை இழக்காமல் இருக்கமுடியும்!

0

Share/Bookmark

வரலாற்றில் நாகர்கள்

$
0
0

Naga182பறையர்கள் / அத்தியாயம் 8

வட இந்தியாவில் ஆரியர் வருகை பல கட்டங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக நாகர்கள் வடமாநிலங்களிலிருந்து தென்னோக்கிப் பரவத் தொடங்கினர். இதனால் இமயம் முதல் காஷ்மிர், தச்சிலா, கங்கைச் சமவெளிப் பிரதேசங்கள், பனாரஸ், பிகார், மேற்கிந்தியா, தென்னிந்தியா, இலங்கை வரை இவர்கள் நகர்ந்தனர். இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் பரவிய நாகர்கள் பெரும் ராஜ்ஜியங்களை ஆண்டவர்கள்.

டாலமியின் காலம் வரை (கி.பி.150) சோழ ராஜ்ஜியமும், காஞ்சியை ஒட்டிய பகுதிகளும் நாக குலத்தோரால் ஆளப்பட்டு வந்தன என்கிறார் சர்க்கார் என்பவர். சோழ, பாண்டிய நாடுகளில் நாகரின் செல்வாக்கை வெளிப்படுத்தும் நகரங்களான ‘உரகபுரம்’ என்றழைக்கப்பட்ட நகரங்கள் இருந்ததையும் இவர்கள் ஆதித்தமிழ்க் குடிகளுடன் இப்பகுதிகளில் கூடி வாழ்ந்தனர் என்பதையும் இவர் வலியுறுத்துகிறார்.

ஆதி சோழர்களுள் ஒருவரான முசுகுந்த சோழன் நாகர்களை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தியபின் தமிழகத்தில் நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. எனினும் காலப்போக்கில் சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார். மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழர் குடிகளே என்பார் கனகசபைப்பிள்ளை.

தமிழகத்து நாகர்களின் வரலாற்றின்படி, இவர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர். இதன் பின்னரே தமிழகத்தில், நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் பரவலாகக் கிடைக்கின்றன. அப்போது முதல் நாகர்கள் தமிழ்க் கலாசாரத்தைத் தமதாகத் தழுவிப் பேணித் தமிழரசுகளை அங்கீகரித்துக்கொண்டனர் எனத் தெரிகின்றது. அதனால் நாகர் வழிபாடுகள் சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. நாகர் குடிவந்த தமிழ்ப்புலவர் பலர் சங்க இலக்கியப் பாடல்களை இயற்றியவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் இலங்கை நாகர்களும், தென்னிந்திய அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

0

நாகநாடு என்பது இலங்கைத் தீவின் வடபகுதிக்குப் பண்டைக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர். மகாவம்சத்தில் இந்தப் பகுதி நாகதீபம் எனறே கூறப்படுகிறது. நாகதீபம் என்பது தீவு அல்ல. மணிமேகலை நாக நாடு என்று கூறும் இலங்கையின் வட பகுதியைத்தான் மகாவம்சம் நாகதீபம் என்கிறது. நாகநாடு என்றும், நாகத்தீவு என்றும் ஏன் பெயர் பெற்றது என்றால், இங்கு நாகர் என்னும் இனத்தவர் அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். தமிழ்நாட்டிலும் நாகர் இனத்தினர் இருந்தனர் என்பதனைச் சங்க நூல்களால் அறிகிறோம். ‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை.

நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள்.

கி.மு. 13ம் நூற்றாண்டு வாக்கில் கங்கைக்கும், யமுனைக்கும் இடையே உள்ள பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிறோம். திங்கள் மரபைச் சேர்ந்த ஆரியர்கள் தற்போது தில்லி இருக்குமிடத்தில் புதியதொரு துணைத்தலைநகரை அமைக்க விரும்பியபோது, அவ்விடத்தில் தங்கி வாழ்ந்த நாகர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
அர்ஜுனன் நாடு கடந்து வாழ்ந்த காலத்தில் முதலில் உலிபி என்ற நாக இளவரசியையும், அதன்பின் மணிபுரத்தை ஆண்ட நாக அரசன் சித்திரவாகனன் புதல்வியாகிய சித்திராங்கதையையும் மணம் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி.மு 6ம் நூற்றாண்டில் காண்கிறோம். அப்போது ஒரு நாக மரபினர் மகதத்தை ஆண்டனர். இம்மரபைச் சார்ந்த ஆளும் மன்னனாகிய அஜாத சத்துருவின் ஆட்சியிலேயே கௌதமபுத்தர் தம் புதிய கோட்பாட்டை வகுத்துரைத்தார். அது நாகர்களின் பேராதரவைப் பெற்றது.

இலங்கை வரலாற்று நூல்கள் யாவுமே நாகர்களைப் பற்றிய செய்திகளுடன் தொடங்குகின்றன. இவற்றிலிருந்து கி.மு. 6ம் நூற்றாண்டில் தீவின் மேற்குக் கரையில் வல்லமை வாய்ந்த நாக அரசுகள் நிலவின என்றும், அந்தக் காரணத்தால் தீவு ‘நாகத்தீவு’ என்று அழைக்கப்பட்டதென்றும் அறிகிறோம்.

1800 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பண்டைய அமராவதிச் சிற்பங்களிலும் அதுபோன்ற பிற இடங்களிலும் தலைக்குமேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன. இவை நாகர் உருவங்களே. இந்தச் சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச் சின்னமாகப் பின்புறம் ஐந்து தலை அல்லது எழு தலை நாகம் உள்ளது. நாக இளவரசியருக்கு இதுபோல முத்தலை நாகங்கள் உள்ளன.

ஆற்று வெளியிலேயே மனித நாகரிகம் முழுவளர்ச்சியடைந்தது. வேளாண்மை தலைத் தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர் எனப்பட்டனர். இந்த வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர், உழவர் ஆகிய மூல வகுப்புகளும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய கிளை வகுப்புக்களும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை மன்னரும் ஏற்பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டையும் அதைச் சார்ந்த சிற்றூர்களும் மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு நாடு ஆயின. இந்தத் தொடக்கக்கால நாட்டை மேனாட்டு வரலாற்று நூலாசிரியர் ‘நகர் நாடு’ என்பர். தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது.

நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும், நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.

நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், தலைசிறந்த பண்பாட்டு மக்களென மணிமேகலை கூறுகிறது. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.

இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மைய, தென் இந்தியப் பகுதிகளிலும் நாம் நாகர்களைக் காண்கிறோம். குறிஞ்சிப் பகுதியில் குகைவாசிகளிடம் நாக வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். நாக வழிபாடு முருக வழிபாட்டுடன் இணைக்கப்பட்டுப் பின்னர் முருகனும் ஆரிய சுப்ரஹ்மண்யனுடன் இணைந்தான். இன்றும் தன்னை வழிபடுவோர் முன் சுப்பிரமணியன் பாம்பாகத்தான் உருக்கொண்டு வருகின்றான்; பாம்பு கண்ணில் பட்டால் வேண்டுதலை முருகன் ஏற்றுக்கொண்டான் எனக்கொள்கின்றனர். நாக வழிபாட்டிலிருந்து சிவன், தான் அணியும் பாம்புகளைப் பெற்றான்.

நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள்.
கடித்தவுடன் கொல்லும் பாம்பு (நாகம்) உலகெங்கும் கடவுளாக வழிபடப்பட்டது. சிவன், விஷ்ணு வழிபாடுகள் உருவான பின்னரும் நாக வழிபாட்டினராகவே இருந்தவர் நாகர் என்று அழைக்கப்பட்டனர்.

நாகர் அரசுகளைவிடப் பழமை வாய்ந்த அரசுகள் எதுவும் இருந்ததில்லை என்று தோன்றுகிறது. காவிரிப்பட்டிணமும் நாகர்களின் பழைய வாழ்விடமாக இருந்தது என்று சொல்கிறார்கள்.

கி.பி. 150ல் டாலமி தனது நூலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆய நாட்டவர், கரையர், பாண்டியர், சோழர், பதோய் (பரதர்), அருவாளர், பசர் நாகர் போன்ற இனக்குழு மக்கள் பெயர்களையே குறிப்பிடுகிறார். இதில் பசர் நாகர் என்பது நாக இனத்தைக் குறிக்கிறது.
நாகர்களில் அயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய பல கிளையினர் இருந்தனர். இவர்களில் மறவரே மிக வல்லமை வாய்ந்தவராகவும், போர்த் திறன் மிக்கவராகவும் இருந்தனர். தமிழருக்குப் பெரும் பகைவராக விளங்கியவர்களும் இவர்களே. நாலைகிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.

நாக மரபினரிடையே எயினர் அல்லது வேடர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்க கொள்ளையும் கொலையுமே தொழிலாக இருந்தது. அவர்கள் அச்சம் தரும் காளியை வணங்கினர். தம் கொள்ளையில் துணையைப் பெற அவர்கள் காளி கோயில்களில் எருமைகளைப் பலியிட்டனர். சூறையாடுவதற்குப் புறப்படும் முன், அவர்கள் புட்குறிகளும் பறவைகளும் ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும் பற்றிய அறிவுரை கேட்டனர். அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள் பண்புக்கேற்றபடி கள்ளர் அல்லது கள்வர் என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர்.

நாகரின் இன்னொரு மரபினர் ஒளியர். இவர்கள் கரிகால் சோழனால் வென்றடக்கப்பட்டனர் என்று தெரிகிறது. மாமல்லபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டில் அவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டுவரை கூட வலிமையுடன் இருந்தனர் என்று அறிகிறோம். ஒளி நாகரல்லாமலும், நாகரினத்திலேயே சங்க நாகர், முகுளிநாகர் ஆகிய பிரிவினர் 11ம் நூற்றாண்டில் இருந்தனர் என்று தெரியவருகிறது.

அருவாளர் என்பவர்கள் அருவாநாடு, அருவா வடதலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாகரின் இடச்சார்பான பெயர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும், ஏனைத் தமிழரசர் வலிமையும் தாற்காலிகமாகச் சிலகாலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஓவியர் எயிற்பட்டினத்தில் ஆண்டதுடன் மாவிலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர்.

மேலங்கியின் அரசர் என்று டாலமியால் குறிப்பிடப்பட்ட பஸர்நாகர் பெரும்பாலும் இந்த ஓவியராகவே இருக்க வேண்டும்.

டாலமி கூற்றிலிருந்து சோழர் தலைநகராகிய உறையூரிலும், சோழர் குடிக்கும் நாகர் குடிக்கும் ஏற்பட்ட இனக்கலப்பின் மரபில் வந்த சோரநாகரே சோழர்களை அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டுமென்று கருத இடமேற்படுகிறது.

இதே காலத்தில் இலங்கையிலும் நாகர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றியிருந்தனர் என்று கருதவேண்டியிருக்கிறது.

பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவு கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.

0

Share/Bookmark

இரு புதிய தொடர்கள்

$
0
0

தமிழ்பேப்பரில் மேலும் இரண்டு புதிய தொடர்கள் ஆரம்பமாகவிருக்கின்றன.

என். சொக்கன் எழுதும்…

Amma Aadu

  • எளிய, இனிய இலக்கணக் கையேடு.
  • ஜூன் 8 ஆரம்பம்.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வெளிவரும்.

எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதும்…

Pandaya nagarigangal1

  • ஒரு வரலாற்றுப் பயணம்
  • ஜூன் 10 ஆரம்பம்
  • ஒவ்வொரு வாரமும் திங்கள் வெளிவரும்.

 

தமிழ்பேப்பரில் வெளியாகும் தொடர்களின் முழுமையான பட்டியல்.

  1. திங்கள் : ஜெயிப்பது நிஜம் / இன்ஸ்பயரிங் இளங்கோ
  2. திங்கள் : பண்டைய நாகரிகங்கள் / எஸ்.எல்.வி. மூர்த்தி
  3. செவ்வாய் : பறையர்கள் / சி. இராஜாராம்
  4. புதன் : பேசு மனமே பேசு / டி.ஐ. ரவீந்திரன்
  5. வியாழன் : ஒரு கனவின் வரைபடம் / B.R. மகாதேவன்
  6. வெள்ளி : புரட்சி / மருதன்
  7. சனி : அம்மா ஆடு இலக்கணம் / என். சொக்கன்

 

Share/Bookmark

Viewing all 405 articles
Browse latest View live