Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

இரா. முருகன் நாடகங்கள் – அரங்கேற்றம்

$
0
0

Group_photoஷ்ரத்தா என்னும் நாடக அமைப்பினர் எழுத்தாளர் இரா. முருகனின் மூன்று நாடகங்களை அரங்கேற்ற உள்ளனர். ஆழ்வார், எழுத்துக்காரர், சிலிக்கன் வாசல் ஆகிய மூன்றும் இரா. முருகனின் சிறுகதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

சென்னை நாரத கான சபாவில் நவம்பர் 14 தொடங்கும் இவருடைய நாடகங்கள் 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

நாவல், சிறுகதை, திரைக்கதை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருபவர் இரா. முருகன். இதுவரை 22 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவருடைய அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய நாவல்கள் கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதா, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட விருதுகள் பெற்றிருக்கிறார். இந்தி, மலையாளம்,ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.

தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் நாவல் ஆங்கிலத்தில் ‘கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.

கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009), அஜீத் குமாரின்  பில்லா 2 (2011) ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

இடம் : நாரத கான சபா அரங்கம், ஆழ்வார்பேட்டை

தேதி : நவம்பர் 14, 16, 17 மற்றும் 19.

நேரம் : மாலை 7 மணி.

மேலதிக விவரங்களுக்கு : www.theatreshraddha.org

 

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!