Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

சொல்லக்கூசும் கவிதை

$
0
0

காதல் அணுக்கள் / அத்தியாயம் 18

(அதிகாரம் – நிறையழிதல்)

shutterstock_93326353குறள் 1251:

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

 

பொத்தி வளர்ந்தவளின்

வெட்கக்கரையுடைத்து

கற்பைக்கறையாக்கும்

காதல் பெருவெள்ளம்.

 

*

 

குறள் 1252:

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

 

தனித்த நிசியில்

தணியாத பசியில்

துணிக்குள் கனியும்

தீராப்பெருங்காதலி.

 

*

 

குறள் 1253:

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

 

தும்மல் அடக்கலாம்

சிறுநீர் அடக்கலாம்

தூமையை? அஃதே

காதல் வேட்கையும்!

 

*

 

குறள் 1254:

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

 

காமக்கடன்கள் பொருட்டல்ல

என்றே இறுமாந்திருந்தேன்,

கற்பில் கர்வமுற்றிருந்தேன்

ஒரு பிரிவு காணும் வரை!

 

*

 

குறள் 1255:

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

 

ஐந்தரை அடி உயரமும்

ஏங்கிப் பெருந்துயரமாகி

வராதவனிடமே போகும்

வெட்கங்கெட்ட மனசு.

 

*

 

குறள் 1256:

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

 

விட்டோடியவன் பின்னே

ஓட வேண்டும் என்பதே

உடலிடம் தோற்குமொரு

காதலின் விநோத விதி.

 

*

 

குறள் 1257:

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

 

பிடித்தவன் காமம்

திறந்து கிடக்கும்

தேகம் கொஞ்சம்

நாணம் மறக்கும்.

 

*

 

குறள் 1258:

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

 

உடையாத புலன்கள்

திமிறித் துகள் ஆகும்

உடையவன் உதிர்க்கும்

கனிவான மொழியினில்.

 

*

 

குறள் 1259:

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

 

மகத்தான பலவீனத்துடன்

கட்டிக் கொண்டு நிற்கவே

நேரிடுகிறது – அவனைத்

திட்ட எத்தனிக்கையில்.

 

*

 

குறள் 1260:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

 

அவன் தொடுகையில்

உருகி வழியும் என்

ஊடல் அத்தனையும்

நெருப்பு நைலானாய்.

 

***

 

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!