காதல் அணுக்கள் / அத்தியாயம் 20
(அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்)
கரப்பினுங்கையிகந்தொல்லாநின்உண்கண்
உரைக்கல்உறுவதொன்றுண்டு.
பிரிவை விரும்பாத
பிரியத்தின் ஒளியை
மறைக்கத் தகுமோ
இந்தக் கண்களால்!
*
குறள் 1272:
கண்ணிறைந்தகாரிகைக்காம்பேர்தோட்பேதைக்குப்
பெண்நிறைந்தநீர்மைபெரிது.
விழி தின்னும் விழி
சுழித்தோடும் மேனி
இதெல்லாம் கடந்து
பெண்மை பேரழகு!
*
குறள் 1273:
மணியில்திகழ்தருநூல்போல்மடந்தை
அணியில்திகழ்வதொன்றுஉண்டு.
முத்து மாலையின்
வெள்ளிக்கம்பியாய்
பெண்ணழகின் பின்
ஓர் அழைப்புண்டு.
*
குறள் 1274:
முகைமொக்குள்உள்ளதுநாற்றம்போல்பேதை
நகைமொக்குள்உள்ளதொன்றுண்டு.
வெடிக்காத மலரின்
ரகசிய வாசனையாய்
இவள் புன்னகையுள்
அவன் நினைவுகள்.
*
குறள் 1275:
செறிதொடிசெய்திறந்தகள்ளம்உறுதுயர்
தீர்க்கும்மருந்தொன்றுஉடைத்து.
கைவளையழகியின்
எனக்கு மட்டுமான
கள்ளச்சைகைகளில்
சேதமாகும் சோகம்.
*
குறள் 1276:
பெரிதாற்றிப்பெட்பக்கலத்தல்அரிதாற்றி
அன்பின்மைசூழ்வதுடைத்து.
ஓர் ஆத்மார்த்த அணைப்பு
காதலை உணர்த்துகிறது
காமத்தை உணர்த்துகிறது
பிரிவை உணர்த்துகிறது.
*
குறள் 1277:
தண்ணந்துறைவன்தணந்தமைநம்மினும்
முன்னம்உணர்ந்தவளை.
கலந்தவன் விலகுவான்
கவலைகள் தீட்டுவான்
நழுவும் வளையல்கள்
செப்பும் முன்னறிவிப்பு.
*
குறள் 1278:
நெருநற்றுச்சென்றார்எம்காதலர்யாமும்
எழுநாளேம்மேனிபசந்து.
நேற்று போனான்
உடலில் பரவிடும்
பிரிவுச்சாயையில்
நூற்றாண்டு ரணம்.
*
குறள் 1279:
தொடிநோக்கிமென்தோளும்நோக்கிஅடிநோக்கி
அஃதாண்டவள்செய்தது.
உடன் வருவாள்
என்று சொல்லும்
கழலும் வளையல்
சுழலும் கால்கள்.
*
குறள் 1280:
பெண்ணினால்பெண்மைஉடைத்தென்பகண்ணினால்
காமநோய்சொல்லிஇரவு.
பிரிய பயப்படுவது
மிகுபெண்மை வீசிக்
காதலை யாசிக்கும்
அந்த விழிகளுக்காக.
***