Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

கவனம் இங்கே தேவை

$
0
0

shoppingஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 29

எதையாவது இலவசமாகவோ அல்லது டிஸ்கவுண்ட் என்ற பெயரில் சிறிது விலையைக் குறைத்து கொடுத்தாலோ மட்டுமே ஒரு பொருளை வாங்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. சொல்லும் விலையைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது திருப்தி ஏற்படுவதில்லை. தங்கமாக இருந்தாலும் சரி, குண்டூசியாக இருந்தாலும் சரி.

ஒரு பொருள் விற்கப்படும் பொழுது அதனால் விற்பவருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பொருள் தொழிலுக்குரிய தகுதியை இழந்து விடுகிறது. அப்படியென்றால் டிஸ்கவுண்ட் எப்படிக் கொடுக்கப்படுகிறது? நேர்மையற்ற சிலர் பொருளின் விலையை அதிகப்படுத்தி பின்னர் சிறிது குறைக்கின்றனர். இன்னும் சிலர், தங்களுடைய லாபத்தில் இருந்து குறைத்துக்கொண்டு அதன் பங்கை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள். இதுவே சரியான நடைமுறையாகும்.

பெரிய ஷாப்பிங் மால்களில் ஃபிக்ஸட் பிரைஸ் எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட விலைப் பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த வகை கடைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்காது. வாடிக்கையாளர்களும் மௌனமாக சொன்ன விலைக்குப் பொருள்களை வாங்கிச் சென்றுவிடுவார்கள். பேரம் பேசுவது எல்லாம் சிறு வியாபாரிகளிடம் மட்டும்தான்.

உண்மையில், நிர்ணயித்த விலையைக் காட்டிலும் மிக அதிக அளவில் விலைக் குறைப்பு செய்தால், நாம் உற்சாகப்படக்கூடாது. உஷாராகவேண்டும். ஸ்டாக் க்ளியரன்ஸ் என்று சொல்லி சரக்குகளைத் தீர்ப்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது வியாபார உத்திகளே. விற்பனையாகாத அல்லது கொள்முதல் ஆகாத பொருள்களே இவ்வாறு கவர்ச்சிகரமாகத் தள்ளிவிடப்படுகின்றன. எந்தப் பொருள் அதிகம் விற்பனையாகிறதோ அதன் விலையைக்கூட்டி விற்காத பொருளை இலவசம் என்று இணைத்து விற்றுவிடுவார்கள்.

நிறுவனங்களை மக்கள் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மக்கள் நிறுவனங்களைப் புரிந்துகொள்வதும். பல கார்பரேட் நிறுவனங்கள் இதற்காக மார்கெட் ரிசர்ச் பிரிவுக்குப் பல கோடிகள் செலவு செய்கின்றன. மக்களின் மனநிலையையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்பவே ஒரு நிறுவனம் தன் பொருள்களைச் சந்தைப்படுத்துகின்றன. ஒரு பொருள் யாருக்குத் தேவைப்படுகிறது? (டார்கெட் ஆடியன்ஸ்) அவர்களுடைய சமூகப் பின்னணி என்ன? வயது என்ன? பொருளாதாரப் பின்னணி என்ன? எவ்வளவு விலை வைத்தால் அவர்களால் வாங்கமுடியும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

திரைப்படத் துறையினர் இந்த ரீதியில் வெற்றி பெறுவதை நாம் பார்க்கமுடியும். திறமையான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தியே திரைப்படங்களின் வெற்றி இன்று உறுதி செய்யப்படுகிறது. சமீபத்திய கொலைவெறி பாடல் ஹிட் ஆனதை இங்கே பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

சில தொழில்கள் அபாரமான வெற்றிகளை அடையாவிட்டாலும்கூட, உயிரோட்டமாக மினிமம் கியாரண்டியுடன் தங்கள் பொருள்களை விற்று சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்கின்றன. பல குறுந்தொழில்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

0

சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் மட்டுமே எந்தவொரு தொழிலையும் தொடங்கி நடத்தவேண்டும். சிலர் பெயர் பலகை இல்லாமல், உரிய முறையான சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொள்ளாமல் தமது வேலையில் ஈடுபட்டிருப்பர். பின்னர் வளர்ச்சி அடையும் நிலையில், முன்னரே உரிய பதிப்புகள் மேற்கொள்ளாத காரணத்தால்,சில நல்ல பயன்களை அடையத் தவறிவிடுவர். தமது நிறுவனத்தின் இருப்பிடத்தை வணிக வளாகம் என்ற பிரிவின் கீழ் மின்சார வாரியத்தில் பதிவு செய்யாமல் இருத்தல், அரசாங்கத்துக்குரிய வரிகளைச் சரிவரச் செலுத்தாது இருத்தல் ஆகியவை பின்னாள்களில் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

சரிவர முறையாகச் செயல்படாததால், அரசாங்கம், சுங்கம், மின்சார வாரியம் ஆகிய பிரிவுகளிலிருந்து திடீர் சோதனைகள் நடைபெற்றால் பிடிபட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் பணம், நேரம் இரண்டையும் மிக அதிகம் செலவு செய்து தவறுகளைச் சரிசெய்துகொள்ள நேரிடும். தேவையற்ற மனச்சோர்வும் ஏற்படும்.

அதேபோல சிறுதொழில் (எஸ்எஸ்ஐ), தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), ப்ரொப்பரைட்டர் கன்சர்ன் ஆகியவற்றை உரிய முறையில் பதிவு செய்யவேண்டும். விற்பனை வரி, சேவை வரி, TDS  போன்ற வரிகளைச் சரியான முறையில் செலுத்தவேண்டும்.

தொழிலுக்குப் பொருத்தமான தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதும் நன்மை அளிக்கும். அக்மார்க், ஐஎஸ்ஐ போன்ற தரக்கட்டுப்பாடுகள் அவசியம் எனில், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

0

சிறுதொழில்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அதில் முதன்மையானது உலகமயமாக்கலின் தாக்கம். இன்றைய சூழலில் மிகக் குறிப்பிட்ட சில தொழில்களைத் தவிர, அனைத்தும் தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. சுதேசி இயக்கத்தைப் போற்றி முன்னிறுத்திய நம் நாடு இன்று பல நாடுகளின் தொழில்நுட்பத்தை நம்பியே இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்வது அவசியம்.

அந்த வகையில் சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த தொழில் நுட்பம் எந்த வகையில் எல்லாம் மாறி வருகிறது என்பதையும், அந்தந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும், தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு இணையதளம் பெரிதும் பயன்படும். உலகளவில் நடக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு, பொருட்களின் ஏற்றுமதி அல்லது இறக்குமதி சார்ந்த முடிவெடுக்கலாம்.

பிறநாட்டு நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை.
ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் அயல்நாட்டு வணிகத்தில் பெரும் ஈடுபாடு காட்டினாலும், தாங்கள் யாருடன் தொழில் உறவில் ஈடுபடப் போகிறார்களோ, அவர்களுடைய பின்னணியைத் தெரிந்து கொண்ட பின்னரே, தொழில் செய்யத் தொடங்குவர். அதேபோல், நாமும் அந்தந்த நிறுவனத்தின் பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

எந்தவொரு நிறுவனத்தின் பணபலத்தைவிட, அவர்கள் தங்கள் நாட்டில் பெற்றிருக்கும் நற்பெயரும், வியாபார நாணயமும்தான் மற்றவர்களை ஈர்க்கும். இன்று பிரபலமான பல நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கிடையே உள்ள நிறுவனங்களை ஒன்றிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில நிறுவனங்கள் இதற்கென உள்ள வணிகச் சந்தையை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, தாங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுடைய பலம், பலவீனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தொழில் தொடர்பை விரிவுபடுத்துகின்றன.

தொழிலில் நிலைநிற்பதற்கு அல்லது தொடர்ந்து செல்வதற்கு, நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு அச்சப்படாமல், அந்த ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நம் தொழில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் மறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் நம் தொழில் நம் கண்முன்பே நொடித்துப்போகும்.

நாம் எந்தந்த நாட்டுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றோமோ, அந்தந்த நாட்டின் வியாபாரக் குறிக்கோள்கள், வியாபார உத்திகள், கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். எந்த நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த நிறுவனத்தின் மனிதர்களோடு பழகுகிறோம். அந்தச் சூழலுக்கும், புதிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை எடைபோட்டுப் பார்த்தும், நம் அணுகுமுறையைத் தக்கவாறு மாற்றிக்கொண்டும் செல்வது இன்றியமையாதது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களின் வாங்கும், விற்கும் பொருளைப்பற்றி நாம் எவ்வாறு ஆராய்கிறோமோ, அதே போல் கொண்டு செல்லும், கொண்டு வரும் வழிவகைகளையும் நுணுக்கமாக ஆராய்வது முக்கியம். உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு நாம் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது கொண்டு செல்லும் மார்க்கங்கள் என்ன? கடல்வழி மார்க்கமா? தரைவழி மார்க்கமா? சுங்கத் தீர்வின் அளவு என்ன? எப்படி பேக்கேஜ் செய்வது? என்று பல கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!