Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

தாகத்தை விதைத்தால் லாபம் நிச்சயம்

$
0
0

பி. சாய்நாத் எழுதி தி ஹிந்துவில் மார்ச் 27 அன்று வெளியான Tankers and the economy of thirst கட்டுரையின் அனுமதி பெற்ற தமிழாக்கம்.

27TH-opedSainat_27_1408808eமராத்வாடாவில் தண்ணீர் வியாபாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜால்னா நகரில் மட்டும் கொள்கலன் வாகனம் (tanker) வைத்திருக்கும் முதலாளிகள் ஒவ்வொரு நாளும் தண்ணீர் வியாபாரத்தின்மூலம் ரூபாய் 6 முதல் 7.5 கோடி பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர்.

இந்தப் பருவத்தில் மராத்வாடாவின் மிக உயர்ந்த பயிர் தண்ணீர்தான்.  கரும்பை மறந்து விடுங்கள்.  தாகம் என்பது மனிதர்கள், தொழிற்சாலைகள் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அந்த மாநிலம் முழுவதும் தாகத்தை அறுவடை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் ஒவ்வொரு நாளும் வணிகம் நடைபெறுகிறது.  சாலைகளில் வேன்களில் நீங்கள் பார்க்கும் கரும்பு சக்கைகள் கால்நடைகளுக்கு தீவனமாக முடிகிறது.  எண்ணிக்கையிலடங்கா கொள்கலன் வாகனங்கள் அதே சாலை வழியாக கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீரை விற்று லாபம் பார்க்கின்றன.  தண்ணீர் வியாபாரம் அங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது. பெரிய கொள்கலன் வாகனங்கள் அவற்றின் அடையாளமாக திகழ்கின்றது.

மராத்வாடாவில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களின்மூலம் தண்ணீர் எடுப்பதும், பல இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பதும் நடந்து வருகிறது.  அதில் அரசாங்கத்தின் மூலமான ஒப்பந்தத்தில் இருப்பது மிகச் சில மட்டுமே. அதுவும்கூட காகித அளவில் மட்டுமே. ஆனால் தனியார்மூலம் நடைபெற்றுவரும் தண்ணீர் வியாபாரம்தான் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களாக மாறிய பெரு முதலாளிகளும் இந்த வணிகத்தில் உள்ளனர்.  குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இந்தக் கொள்கலன் வாகன பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.  உயர் அலுவலர்கள் பலரும் இந்த வணிகத்தில் நேரடியாகவோ பினாமி மூலமாகவோ ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் வணிகம்

கொள்கலன் வாகனம் என்பது என்ன?  மெல்லிய இரும்புத் தகடுகளை வளைத்து உருவாக்கப்படும் கலன்.  10,000 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன் தயாரிக்க 5 x 18 அடி தகடுகள் மூன்று தேவைப்படும். அவற்றைச் சேர்த்து ஏறக்குறைய 198 கிலோ எடையில் கலன் உருவாகும். அவ்வாறு உருளையாக வளைக்கப்படும் தகடுகள் பற்றவைக்கப்பட்டபின் சிறியதிலிருந்து பெரியது வரையில் அதனதன் அமைப்பிற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்படும்.

மாட்டு வண்டி, திறந்த நிலை 3 சக்கர வாகனம், சிறிய லாரி, பெரிய லாரி போன்றவற்றில் 500 லிட்டர் கொள்ளளவிலிருந்து 5000 லிட்டர் வரை கலன்கள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து கொண்டே செல்வதால், மாநிலம் முழுவதிலும் தினசரி இத்தகைய கொள்கலன் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  ஜால்னா மாவட்டத்தில் ஜால்னா நகரில் மட்டும் 1200 கொள்கலன்கள் வெவ்வேறு அளவுகளில் பெரிய, சிறிய வாகனங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவை தண்ணீர் சேகரிக்கும் இடத்துக்கும், தண்ணீர் தேவையான இடங்களுக்கும் இடையில் தொடர்ந்து இயங்கிவருகின்றன.  அதன் ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களிடம் கைப்பேசி மூலம் பேரம் பேசுகின்றனர்.  இருப்பினும் பெரும்பகுதி தண்ணீர் என்பது மொத்தமாக வாங்கப்படும் தொழிற்சாலைகளுக்குத்தான் விற்கப்படுகிறது.  லோக்சத்தா என்ற மராத்திய தினசரி பத்திரிகையை சேர்ந்த திரு லஷ்மண் ரவுத், கொள்கலன் வாகனங்களின் உரிமையாளர்களால் தினமும் ரூ 6 முதல் 7.5 கோடி வரை விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என்கிறார்.  எனவே இந்த ஒரு ஊரில், இந்த வணிகம்தான் மிகப்பெரும் சந்தையை கைப்பற்றுகிறது.  திரு ரவுத் மற்றும் அவருடன் பணியாற்றும் சில பத்திரிகை நிருபர்கள் கடந்த பல வருடங்களாக இந்தத் தண்ணீர் வணிகம் பற்றிய செய்திகளை பின்பற்றிய வண்ணம் உள்ளனர்.

கொள்கலன் தொழில்நுட்பம்

கொள்கலன்களின் அளவுகள் வேறுபட்டவை.  ஆனால் இந்த நகரின் சராசரி கொள்கலன் அளவு 5000 லிட்டர்.  இப்படி 1200 வாகனங்கள் ஒரு நாளைக்கு 3 நடைகள் இயக்குகின்றன.  எனவே மொத்தத்தில் 24 மணி நேரத்தில் 18 கோடி லிட்டர் தண்ணீர் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.  1000 லிட்டருக்கு ரூ 350 வீதம் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 6 கோடி வருகிறது.  இந்தக் கொள்கை என்பது வீட்டு உபயோகம், அல்லது அத்தியாவசிய தேவை, அல்லது தொழிற்சாலைகளுக்கு என்கிற தேவையை பொறுத்து மாறுபடும். பற்றாக்குறை என்பது கொள்கலன் வாகனப் பொருளாதாரத்தை இயக்குகிறது.

ஜால்னா செல்லும் வழியில் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள ராஹூரியில் ஒரு தொழிற்சாலை சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. இங்கு 10,000 லிட்டர் கொள்ளளவு கலன் வடிவமைப்பதற்கு 30,000 வரை செலவாகிறது.  பின்னர் அதைப் போல இரு மடங்கு விலைக்கு அவை விற்கப்படுகின்றன.  ராஹூரியின் சிறிய தொழிற்சாலையில் கொள்கலன் வாகன தொழில்நுட்பம் பற்றி எங்களுக்கு ஒரு விரைவு வகுப்பே எடுக்கப்பட்டது.  அந்த வடிவமைப்பு தளத்தின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் மேலாவானே ஒவ்வொரு 5 x 18 அடி தகடும் 3.5 மி.மீ தடிமனாக (10 கேஜ் அளவு) இருக்குமென விவரித்தார்.  எங்களிடம் அவர் தகட்டை உருளை வடிவமாக்கும் உருளை இயந்திரத்தை காண்பித்தார்.

10,000 லிட்டர் கலன் என்பது 800 கிலோ எடை அளவில் இருக்கும் என்றார் அவர்.  3 தகடுகள் என்பவை உத்தேசமாக ரூ 27,000 ஆகும் என்றார்.  வடிவமைப்பு, பற்றவைத்தல், கூலி போன்ற வகையில் ரூ 3000 கூடுதலாகும்.  ஒரு 10,000 லிட்டர் கொள்கலன் வடிவமைக்க ஒரு நாளாகும் என்றார் அவர்.  இந்தப் பருவகாலம் எங்களுக்கு பணி மிகுதியாக உள்ளது.  3 மாதத்தில் வெவ்வேறு அளவுகளில் 150 கொள்கலன்கள் தயாரித்துள்ளோம்.  ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் இதே போல் நான்கு சிறிய உற்பத்திக் கூடங்கள் உள்ளன என்பதுடன், அவற்றிலிருந்தும் இதே அளவு கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  அஹமத் நகரில் 3 கி.மீ. சுற்றளவில் ஏறக்குறைய 15 தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன என்கிறார் அவர்.

மேலாவானே மேலும் கூறுகையில், பெரிய அளவு கலன் என்பது 20000 லிட்டர் கொள்ளளவில் தயாரிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன என்கிறார்.  10000 லிட்டர் அளவு கலன்கள் பெரிய நகரங்களுக்குச் செல்லும்.  சிறியது என்பது 1000 லிட்டர் அளவில் இருக்கும். அவை பெரும்பாலும் சிறிய விவசாயப் பண்ணைகளுக்கு அனுப்பப்படும்.  பெரும்பாலும் பரங்கி பயிரிடுவோர் சொட்டு நீர் பாசனம் செய்ய இயலாது என்பதால் சிறிய கொள்கலன்கள் வாங்குவார்கள்.  அவர்கள் அந்த கலன்களை மாட்டு வண்டியில் வைத்து தண்ணீர் சேகரித்து வருவார்கள்.

கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள் மற்றும் நீர்நிலைகள்

ஆக எங்கிருந்து தண்ணீர் வருகிறது?  நிலத்தடி நீரை அதிகமான அளவில் உறிஞ்சுவதன்மூலம்.  தனியார் ஆழ்துளை கிணறுகள், அதுவும் பற்றாக்குறையை வணிகமாக பயன்படுத்த சமீபத்தில் தோண்டப்பட்டவை.  நிலத்தடி நீர் இருப்பு உள்ளது என்பது மோசமடைந்து வருவதால் இதுவும் முடிந்து போகலாம்.  இந்த வணிகத்தை சூதாட்டமாக எண்ணுபவர்கள் நீர் இருப்பு உள்ள ஆழ்துளை கிணறுகளை விலைபேசி வாங்குகின்றனர்.

ஜால்னா நகரில் பாட்டில்களில் நீர் அடைத்து விற்கும் சில நிறுவனங்கள், ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாகவுள்ள விதர்பா மாவட்டத்தின் புல்தானாவிலிருந்து தண்ணீர் வரவழைக்கின்றனர்.  எனவே பற்றாக்குறை என்பது விரைவில் பிற மண்டலங்களுக்கும் பரவ உள்ளது.  சிலர் உயர்நிலை நீர் தொட்டிகள் மற்றும் நீர் தேக்கங்களிலிருந்து நீரை சட்ட விரோதமாகத் திருடி விற்கின்றனர்.

கொள்கலன் வாகன உரிமையாளர் 10000 லிட்டர் தண்ணீரை ரூ 1000 முதல் 1500 விலையில் வாங்கி ரூ 3500 வரை விற்று 2500 வரை லாபம் சம்பாதிக்கிறார்.  அவரே நீர் கிடைக்கும் வகையில் ஒரு ஆழ்துளை கிணறு அல்லது வெட்டப்பட்ட கிணறு வைத்திருப்பாரானால் அவரின் தண்ணீருக்கான செலவினம் குறையும்.  அவரே பொது சேமிப்பிலிருந்து திருடி விற்பாரானால் செலவு என்பது “இல்லை” தான்.

இந்த வருடம் 50,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பிரசாத் தான்புரே.  ஏற்கெனவே செயலில் உள்ள ஆயிரக்கணக்கான கொள்கலன் வாகனங்கள் முந்தைய ஆண்டுகளிலேயே செயல்பாட்டில் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.  எத்தனை வாகனங்கள் இயங்கி வருகின்றன என்பது யாருக்காவது தெரியுமா? நீண்டகால அரசியல்வாதி தான்புரே இந்த வணிகத்தைப் பற்றி நன்கறிந்தவர்.  மற்றவர்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் அளவில் புதிய கொள்கலன் வாகனங்கள் இயங்கி வருகின்றன என்கின்றனர்.

50,000 என வைத்துக்கொண்டால்கூட அதன் வடிவமைப்பு தொழிற்கூடங்கள் மாநிலம் முழுவதிலும் இந்த வணிகத்தில் மட்டும் சில மாதங்களில் 2 கோடி அளவில் சம்பாதித்துள்ளனர்.  இன்னும் சொல்லப்போனால் இந்த தயாரிப்பு மிகுதியினால் இரும்பு சட்டங்கள், தூண்கள் போன்ற வடிவமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் கட்டடம் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார் மேலாவானே.

பலர் இந்தக் கொள்கலன் தயாரிப்பு வணிகத்துக்குள் குதித்துள்ளனர்.  ஜால்னாவில் 100 கலன் தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏறக்குறைய 90 பேர் இதற்கு முன் இந்த பணியை மேற்கொண்டிராதவர்கள் என்கிறார் சுரேஷ் பவார். ஜால்னா மாவட்டம் ஷெல்காவுன் கிராமத்தில் உள்ளூர் அரசியல்வாதியாக இருக்கும் விவசாயி தீபக் அம்போர் ஒரு நாளைக்கு ரூ 2000  வீதம் தண்ணீருக்காகச் செலவழிக்கிறார்.  நான் தினமும் எனது 5 ஏக்கர் விதையில்லா திராட்சை தோட்டம் உள்ளிட்ட 18 ஏக்கர் நிலத்துக்காக 5 கொள்கலன்கள் தண்ணீர் வாங்குகிறேன்.  ஏன் இவ்வளவு காசு கொடுத்து வாங்க வேண்டும் என்றால், இன்றளவும் எனது பழத்தோட்டத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதற்காக என்கிறார் அவர்.  இங்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் என்பது 24 சதவீதம் மற்றும் அதற்கு மேல்தான் உள்ளது.

நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  ஆனால் இன்னும்கூட மோசமடையவில்லை.  ஜால்னாவில் இதற்கு முன் இது போன்ற கொள்கலன் வாகனங்கள் இல்லாத நிலையிலும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.  ஆனால் தற்போது எண்ணிக்கையில் அதிகமான கொள்கலன் வாகனங்கள் என்பதுதான் பற்றாக்குறையை மிகைப்படுத்தி காண்பிக்கிறது.

மிக மோசம் என்ற நிலையடைய இன்னும் சற்று தொலைவு உள்ளது.  அது மழையளவு குறைதல் என்பதை சார்ந்து மட்டும் இல்லை.  இங்கு ஒரு அரசியல் தலைவர் நிலைமையின் தீவிரத்தை இவ்வாறு சொல்கிறார். ‘நான் 10 கொள்கலன் வானங்களுக்கு உரிமையாளராக இருப்பின், இந்த ஆண்டும் வறட்சி தொடரட்டும் என வேண்டிக்கொள்வேன்.’

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!