Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

‘பாட்டா? அதெல்லாம் உனக்கு வராது!’

$
0
0

ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  4

musicநான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவம் இது.

எங்களுக்கு மியூசிக் பாடம் உண்டு. அதில் எக்ஸாமும் உண்டு. கர்நாடக சங்கீதம்,
ஹார்மோனியம் வாசிப்பது, வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லித் தருவார்கள்.

ஒரு முறை இன்டெர்னல் எக்ஸாமுக்காக நாங்கள் எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த போது, எனக்கு ஆவேரி ராகம் பாட வேண்டும் என்று ஆசை எழுந்தது. அதை சொல்லிக் கொடுக்கச் சொல்லி நான் எங்கள் வாத்தியாரிடம் கேட்டபோது அவர், ‘என்னது ஆவேரி ராகமா? அதெல்லாம் உனக்கு வராது. இந்த ஆசையே வேண்டாம் விட்டுடு’ என்று கூறிவிட்டார்.

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.இதற்காக நான் அவர் வீட்டுக்கேகூட சென்று கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். ஆனால் அவர் எனக்கு அந்த ராகம் வராது என்பதில் உறுதியாக இருந்தார். அதைவிட அந்த ராகத்தை எனக்கு சொல்லித் தரக்கூடாது என்பதில் மேலும் உறுதியாக இருந்தார்.

ஆனால், என்னைவிடச் சுமாராக இசையறிவு கொண்ட பையன் ஒருவனுக்கு அவன் வீட்டுக்கே போய் சொல்லிக்கொடுத்தார். அதற்கொரு காரணம் இருந்தது. ஆனால் நான் அதை இங்கே சொல்ல விரும்பவில்லை.

வாத்தியார் ஆவேரி கற்றுக்கொடுக்க மறுத்து விட்டபோதும் என் ஆர்வம் குறையவில்லை. எப்படியாவது அதைக் கற்றுக்கொண்டு பாட வேண்டுமென்று ஆசை மிகுந்தது.

ஒரு நாள் டாக்டர். பால முரளி கிருஷ்ணா அவர்கள் ‘ஆல் இந்தியா ரேடியோ’ வில் (அகில பாரத வானொலி) மேற்படி ஆவேரி ராகத்தில் கீர்த்தனைகள் பாடுவதைக் கேட்டேன். நான் வீட்டில் இருக்கும்போது ரேடியோவில் அவருடைய பாடல்களை விடாமல் கேட்பது வழக்கம்தான். அன்று அவர் ஆவேரி பாடியபோது நான் அதை அப்படியே என்னுடைய டேப் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டேன். அதை டேப் தேய்கிற அளவுக்கு திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு ப்ராக்டீஸ் செய்தேன். எத்தனைமுறை எத்தனை நாள் என்று கணக்கே இல்லை. அத்தனைமுறை போட்டுக் கேட்டேன்.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பில் லோயர் கிரேட் எக்ஸாம்  வந்தது. இன்டெர்னலுக்காக வேறொரு ஸ்கூலுக்கு எங்கள் ஆசிரியர்களோடு போயிருந்தோம். எல்லோரும்
அவரவர் முறைக்காகக் காத்திருந்தோம். எங்களுக்கு எக்ஸாமினராக
வந்தவர் அறைக்கு ஒவ்வொரு மாணவராகப் போய் டெஸ்ட் அட்டென்ட் செய்து வந்துகொண்டிருந்தோம். உள்ளே அவர் சொல்கிற ராகத்தில் பாடவேண்டும். நான் என்னுடைய முறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கொஞ்சம் படபடப்பாகவும் தவிப்பாகவும் இருந்தது.

என்னோட முறை வந்தது. உள்ளே போனேன். அங்கே ஒரு பெரியவர் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கார். அவர் என்னை ஏதாவது பாடச் சொல்கிறார். எனக்கு நல்லா தெரிஞ்ச
பாட்டுகள் சிலவற்றைப் பாடினேன். பிறகு அவர் கேட்டார். ‘ஆவேரில உனக்கு ஏதாவது
தெரியுமா?’

பழம் நழுவி பாலில் விழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே பஞ்சாமிருதத்தில்
விழுந்தது போல இருந்தது எனக்கு.

உடனே பாடினேன். பாடி முடித்தும் ஒரே பின் டிராப் சைலண்ட். அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பதினைந்து நொடிகளுக்குப் பிறகு அவர் தன் சீட்டில் இருந்து எழுந்து வந்தார்.

நான் கீழே அமர்ந்திருந்தேன். வந்தவர் என் தோளைத் தட்டி ‘சபாஷ்… நல்லா பாடினேப்பா… வெரி குட்! வெரி குட்!’ என்றார்.

எனக்கு தலைகால் புரியவில்லை. காற்றில் மிதப்பது போல் இருந்தது.

வெளியில் பல பள்ளிகளைச் சேர்ந்த வாத்தியார்கள் காத்திருந்தார்கள். உள்ளே சென்ற தன் மாணவன் எப்படி பாடுகிறான் என்பதை அவர்களால் வெளியில் இருந்தபடியே கேட்க முடிந்தது.

என்னுடைய வாத்தியார் சுப்ரமணியமும் வெளியில்தான் இருந்தார்.

நான் வெளியே வந்ததும், ‘நீ எப்போடா கத்துக்கிட்டே ஆவேரியை? நல்லா பாடினேடா’
என்று சர்டிபிகேட் கொடுத்தார். அதற்கு மேல அவரால் பேசமுடியவில்லை.

என் இசைப்பயணம் எங்கே சென்று முடிந்தது தெரியுமா?

நான் லயோலாவுல படிக்கும் போது ஃபிலிப்ஸ் நிறுவனம் நடத்திய லைட் மியூசிக்
போட்டியில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கினேன்.

சில வருடங்களுக்கு முன் சன் டிவி.யின் அப்துல ஹமீது சார் நடத்திய பாட்டுக்கு
பாட்டு நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்துகொண்டேன்.

இப்பொழுது நான் சொந்தமாக ஒரு ம்யூசிக் ட்ரூப் வைத்திருக்கிறேன்.  என்னால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 2000 பன்மொழிப் பாடல்களை ராகங்களோடு முழுவதுமாகப் பாடமுடியும்.

மாபெரும் சாதனைகள் வலிமையால் நிகழ்த்தப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் என்று ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு. எத்தனை அருமையான ஆழமான கருத்து!

எந்த ஒரு செயலையும் அது எத்தனை கடினமாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் அது நிச்சயம் ஒருநாள் சாத்தியப்படும்.

 

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!